செப்டம்பர், 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2017

உள்ளும் புறமும்

சில  ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெருந்தவறொன்றைச் செய்தார். சந்தையில் பல ஆண்டுகளாக விற்பனையாகிவந்த ஒரு புத்தகத்தை அதின் ஆசிரியர் புதுப்பித்து மறுபதிப்பு செய்ய விரும்பினார். அவர் அந்தப்புத்தகத்தை திருத்தியெழுதி வெளியிட்டாரிடம் கொடுத்தார். அவர் அழகான மேலுறையைத் தயரித்தார். மறுபதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு பெருந்தவறு நடந்துவிட்டது. புதிய உறைக்குள் பழைய புத்தகத்தையே வைத்துவிட்டார். வந்தது மறுபதிப்பல்ல.

புதிய வெளிப்புறம். ஆனால், பழைய உட்புறம் இந்த மறுபதிப்பு புதியதல்ல!

இதே மாதிரியான காரியம் சில மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். சில வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றமுண்டு. ஆனால். இருதயத்தில் ஒரு மாற்றமுமில்லை. புதிய வெளிப்புறம், பழைய உட்புறம் தேவன் மட்டுமே உள்ளான மாற்றத்தைத்தர முடியுமென்பதை அவர்கள் அறியவில்லை.

இயேசு தேவனிடத்திலிருந்து வந்ததால்தான் (வச. 2) வித்தியாசமான போதனைகளைத் தருகிறார் என்பதை நிக்கொதேமு அறிந்துகொண்டதை, யோவான் 3ல் காண்கிறோம். இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதிலிருந்து மறுபிறப்பையே கேட்கிறார் என்று அறிந்து கொண்டான் (வச. 4). புதிதாக வேண்டுமென்றால் அவன் (வச. 7) மறுபடியும் பிறந்தேயாக வேண்டும் என்றுணர்ந்தான்.

இந்த மாற்றம் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமெ ஏற்படுகிறது. அப்பொழுதுதான் “ பழையவைகள் எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது நடக்கும். உங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா? உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மேல் வையுங்கள். அவர்தான் உங்கள் இருதயத்தை மாற்றி எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர்.

புதிய விசுவாசம்

என் மகன் ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக்கொண்டிருந்தான். அந்த நேரம் எங்கள் அனுபவம், இதே பிரச்சனையிலுள்ள குடும்பங்களை உற்சாகப்படுத்தக்கூடும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கடினமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கும்போது, இந்த சூழலில் தேவன் நன்மை தருவார் என்று காண்பது எளிதல்ல.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அப்போஸ்தலனாகிய தோமாவின் விசுவாசத்திற்குப் பெரிய சவாலாயிருந்தது. இந்த மரணத்தின் மூலம் தேவன் நன்மை செய்யக்கூடுமென்று தோமா நம்பவில்லை. இயேசு சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, தோமா அங்கே இல்லை. அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு அந்தக்காயத்திலே என் விரலையிட்ட என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான் (வச. 25). எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோமாவுக்குத் தன்னைக் காண்பித்தபோது அவனது அவிசுவாசம் மறைந்து “என் ஆண்டவரே! என் தேவனே என்றான் (வச. 28). அது ஒரு அற்புதமான விசுவாச அறிக்கை தன் முன் நிற்பவர் மாம்சத்தில் வந்த தேவன் என்ற சத்தியத்தை அறிந்து சொன்ன அறிக்கை. இது பின்வரும் அநேகரை இயேசுவை தேவன் என்று விசுவாசிக்க உற்சாகப்படுத்தும்.

நாம் கொஞ்சமும் எதிர்பாராத நேரங்களில் தேவன் புது விசுவாசத்தை நமது இருதயங்களில் உருவாக்குகிறார். அவருடைய உண்மையை எப்பொழுதும் நம்பலாம். எதுவும் அவருக்கு கூடாததுல்ல!

நான் ஜெபிக்க முடியாத நாள்

நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!

காலங்களுக்கேற்ற ஆடைகள்

நான் வாங்கிய குளிர்கால ஆடையின் விலைச்சீட்டை அகற்றிய போது அதன் பின் பக்கத்தில் “எச்சரிக்கை! இந்த ஆடை உங்களை வெளியேபோய் அங்கேயே இருக்க விரும்பச் செய்யும்.” சரியான ஆடை அணிந்திருந்தால், மாறுகிற எந்தக் கடினமான கால நிலையையும் தாங்கவும் அதில் சுகமாயிருக்கவும் முடியும்.

இதே வழி முறை நமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் பொருந்தும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, எந்த கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளை தேவன் வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி. ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:12-13).

தேவன் தரும் இரக்கம், தாழ்மை, சாந்தம் ஆகிய ஆடைகள் நம்மைப் பகை, குற்றம்சாட்டப்படல் ஆகியவற்றை, பொறுமை, மன்னிப்பு, அன்புடன் எதிர்கொள்ளச் செய்கின்றன. அவைகள் நமது வாழ்க்கைப்புயல்களில் நிலைத்து நிற்க பெலன்தருகின்றன.

நம்மை எதிர்க்கும் சூழ்நிலைகள் வீட்டிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ வரும்பொழுத, தேவனுடைய ஆடைகளை அணிந்துகொண்டால், அவை நம்மைப் பாதுகாத்து ஒரு நம்பிக்கையுள்ள மனப்பான்மையைத் தருகின்றன. “இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 14).

தேவனுடைய ஆடைகளைத்தரிப்பது, காலநிலையை மாற்றாது. ஆனால், தரித்திருப்பவனை பெலப்படுத்துகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.

மாற்றத்தின் விளையாட்டு

1963 ஆம் ஆண்டு மார்ச் இரவில், இரண்டு கல்லூரி கூடைப்பந்து வீரர்கள் கருப்பு வெள்ளை பிரிவினைவாதத்தின் வெறுப்பை மீறிக் கைகுலுக்கி, மிசிசிப்பி மாநில வரலாற்றில் முதல் முறையாக முழு வெள்ளை ஆண்கள், ஒருங்கிணைந்த அணிக்கு எதிராக விளையாடியது. லயோலா பல்கலைக்கழகம் சிகாகோவிற்கு எதிராக  "மாற்றத்தின் விளையாட்டு" என்றழைக்கப்பட்ட அந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அவர்களின் மாநிலத்தை விட்டு வெளியேற வீரர்களைத் தடுக்க மிசிசிப்பி மாகாண குழு முயன்றது. அதேபோல லயோலாவின் கறுப்பின வீரர்கள் இதற்கிடையில், அனைத்து போட்டிகளிலும் இன அவதூறுகளை அனுபவித்தனர். நொறுக்குத்தீனிகளையும், பனிக்கட்டிகளையும் அவர்கள் மீது மற்றவர்கள் வீசினார்கள், மேலும் பயணத்தின் போது பல எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.

ஆனாலும் இளைஞர்கள் விளையாடினார்கள். லயோலா அணியினர், மிசிசிப்பி அணியினரை 61-51 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தனர், மேலும் லயோலா இறுதியில் தேசிய பட்டத்தையும் வென்றது. ஆனால் அந்த இரவில் உண்மையில் வென்றது எது? வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி நகர்தலே வென்றது. இயேசு போதித்தது போல், "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்" (லூக்கா 6:27) என்ற தேவனுடைய அறிவுரை வாழ்க்கையை மாற்றும் கருத்தாக இருந்தது.

கிறிஸ்து கற்பித்தபடி நம் எதிரிகளை நேசிக்க, மாற்றத்திற்கான அவரது புரட்சிகரமான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். பவுல், "ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்றது போல, நம்மில் உள்ள பழையதை அவருடைய புதிய வழி எப்படித் தோற்கடிக்கிறது? அன்பினால்தான்.  ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதின் மூலம் இறுதியாக அவரைக் காணலாம்.

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).