Archives: செப்டம்பர் 2017

உள்ளும் புறமும்

சில  ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெருந்தவறொன்றைச் செய்தார். சந்தையில் பல ஆண்டுகளாக விற்பனையாகிவந்த ஒரு புத்தகத்தை அதின் ஆசிரியர் புதுப்பித்து மறுபதிப்பு செய்ய விரும்பினார். அவர் அந்தப்புத்தகத்தை திருத்தியெழுதி வெளியிட்டாரிடம் கொடுத்தார். அவர் அழகான மேலுறையைத் தயரித்தார். மறுபதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு பெருந்தவறு நடந்துவிட்டது. புதிய உறைக்குள் பழைய புத்தகத்தையே வைத்துவிட்டார். வந்தது மறுபதிப்பல்ல.

புதிய வெளிப்புறம். ஆனால், பழைய உட்புறம் இந்த மறுபதிப்பு புதியதல்ல!

இதே மாதிரியான காரியம் சில மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். சில வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றமுண்டு. ஆனால். இருதயத்தில் ஒரு மாற்றமுமில்லை. புதிய வெளிப்புறம், பழைய உட்புறம் தேவன் மட்டுமே உள்ளான மாற்றத்தைத்தர முடியுமென்பதை அவர்கள் அறியவில்லை.

இயேசு தேவனிடத்திலிருந்து வந்ததால்தான் (வச. 2) வித்தியாசமான போதனைகளைத் தருகிறார் என்பதை நிக்கொதேமு அறிந்துகொண்டதை, யோவான் 3ல் காண்கிறோம். இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதிலிருந்து மறுபிறப்பையே கேட்கிறார் என்று அறிந்து கொண்டான் (வச. 4). புதிதாக வேண்டுமென்றால் அவன் (வச. 7) மறுபடியும் பிறந்தேயாக வேண்டும் என்றுணர்ந்தான்.

இந்த மாற்றம் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமெ ஏற்படுகிறது. அப்பொழுதுதான் “ பழையவைகள் எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது நடக்கும். உங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா? உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மேல் வையுங்கள். அவர்தான் உங்கள் இருதயத்தை மாற்றி எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர்.

புதிய விசுவாசம்

என் மகன் ஹெராயினுக்கு அடிமையாகி போராடிக்கொண்டிருந்தான். அந்த நேரம் எங்கள் அனுபவம், இதே பிரச்சனையிலுள்ள குடும்பங்களை உற்சாகப்படுத்தக்கூடும் என்று சொன்னால் நம்பியிருக்க மாட்டேன். கடினமான பிரச்சனைகளில் சிக்கியிருக்கும்போது, இந்த சூழலில் தேவன் நன்மை தருவார் என்று காண்பது எளிதல்ல.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம், அப்போஸ்தலனாகிய தோமாவின் விசுவாசத்திற்குப் பெரிய சவாலாயிருந்தது. இந்த மரணத்தின் மூலம் தேவன் நன்மை செய்யக்கூடுமென்று தோமா நம்பவில்லை. இயேசு சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது, தோமா அங்கே இல்லை. அவருடைய கைகளில் ஆணிகளாலுண்டான காயத்தை நான் கண்டு அந்தக்காயத்திலே என் விரலையிட்ட என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான் (வச. 25). எட்டு நாளைக்குப் பின்பு இயேசு தோமாவுக்குத் தன்னைக் காண்பித்தபோது அவனது அவிசுவாசம் மறைந்து “என் ஆண்டவரே! என் தேவனே என்றான் (வச. 28). அது ஒரு அற்புதமான விசுவாச அறிக்கை தன் முன் நிற்பவர் மாம்சத்தில் வந்த தேவன் என்ற சத்தியத்தை அறிந்து சொன்ன அறிக்கை. இது பின்வரும் அநேகரை இயேசுவை தேவன் என்று விசுவாசிக்க உற்சாகப்படுத்தும்.

நாம் கொஞ்சமும் எதிர்பாராத நேரங்களில் தேவன் புது விசுவாசத்தை நமது இருதயங்களில் உருவாக்குகிறார். அவருடைய உண்மையை எப்பொழுதும் நம்பலாம். எதுவும் அவருக்கு கூடாததுல்ல!

நான் ஜெபிக்க முடியாத நாள்

நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!

காலங்களுக்கேற்ற ஆடைகள்

நான் வாங்கிய குளிர்கால ஆடையின் விலைச்சீட்டை அகற்றிய போது அதன் பின் பக்கத்தில் “எச்சரிக்கை! இந்த ஆடை உங்களை வெளியேபோய் அங்கேயே இருக்க விரும்பச் செய்யும்.” சரியான ஆடை அணிந்திருந்தால், மாறுகிற எந்தக் கடினமான கால நிலையையும் தாங்கவும் அதில் சுகமாயிருக்கவும் முடியும்.

இதே வழி முறை நமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கும் பொருந்தும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நமக்கு, எந்த கால நிலைக்கும் ஏற்ற ஆடைகளை தேவன் வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “ஆகையால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும் மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடியபொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி. ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:12-13).

தேவன் தரும் இரக்கம், தாழ்மை, சாந்தம் ஆகிய ஆடைகள் நம்மைப் பகை, குற்றம்சாட்டப்படல் ஆகியவற்றை, பொறுமை, மன்னிப்பு, அன்புடன் எதிர்கொள்ளச் செய்கின்றன. அவைகள் நமது வாழ்க்கைப்புயல்களில் நிலைத்து நிற்க பெலன்தருகின்றன.

நம்மை எதிர்க்கும் சூழ்நிலைகள் வீட்டிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ வரும்பொழுத, தேவனுடைய ஆடைகளை அணிந்துகொண்டால், அவை நம்மைப் பாதுகாத்து ஒரு நம்பிக்கையுள்ள மனப்பான்மையைத் தருகின்றன. “இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 14).

தேவனுடைய ஆடைகளைத்தரிப்பது, காலநிலையை மாற்றாது. ஆனால், தரித்திருப்பவனை பெலப்படுத்துகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொடுப்பதில் மகிழ்ச்சி

கீதாவின் இளைய மகனுக்குத் தசைநார் சிதைவு தொடர்பான மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, தன் குடும்பச் சூழலால் ஏற்பட்ட மனச்சுமையைக் குறைக்க, வேறொருவருக்காக ஏதாகிலும் உதவி செய்ய விரும்பினாள். அதனால் அவள் தன் மகனின் சிறிதாய்ப்போன , நல்ல ஆடைகளை எடுத்து, ஒரு ஊழிய ஸ்தாபனத்திற்கு நன்கொடையாக அளித்தாள். இந்த காரியம், அவளது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டாரையும் இணைந்துகொள்ளும்படி தூண்டியது, விரைவில் 200க்கும் மேலான நல்ல பயன்படுத்த தகுதியான ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது!

ஆடைகளை கொடையளித்தது மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக இருந்தாலும், தனது குடும்பம் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டதாக கீதா உணர்ந்து, “இந்த முழு அனுபவமும் மெய்யாகவே எங்களுக்கு மிகவும் உற்சாகமூட்டியது ,பிறரிடம் எங்கள் கவனத்தைச் செலுத்த உதவியது” என்றாள்.

தாராளமாகக் கொடுப்பது இயேசுவின் சீடர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பவுல் புரிந்துகொண்டார். எருசலேமுக்குச் செல்லும் வழியில், அப்போஸ்தலன் பவுல் எபேசுவில் தங்கினார். அவர் அங்கு ஸ்தாபித்த சபையின் மக்களுடனான அவரது கடைசி சந்திப்பாக இது இருக்கலாம் என்று அவர் அறிந்திருந்தார். சபை மூப்பர்களுக்கான தனது பிரியாவிடை உரையில், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தான் எவ்வாறு ஜாக்கிரதையுடன் பணியாற்றினார் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (அப் 20:17-20) மேலும் அவர்களும் அதையே செய்யும்படி உற்சாகமூட்டினார் (வ.35) பின்னர், “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (வ.35) என்ற இயேசுவின் வார்த்தைகளோடு முடித்தார்.

நாம் விருப்பத்தோடும், தாழ்மையோடும் நம்மையே கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார் (லூக்கா 6:38). அவர் நம்மை வழிநடத்துவார் என்று நாம் நம்பும்போது, அதற்கான வாய்ப்புகளை அவர் நமக்கு வழங்குவார். கீதாவின் குடும்பத்தைப் போலவே நாமும் அதன் விளைவாக அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படலாம். 

 

தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்

என் தோழி, மன அழுத்தம் நிறைந்த மருத்துவமனை வேலையிலிருந்து விரைந்தாள்.அவளுடைய கணவரும் அதேபோன்ற வேலையிலிருந்து தான் வீடு திரும்புவான். அப்போது இரவு உணவிற்கு என்ன சமைப்பதென்று யோசித்தாள். அவள் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி சமைத்து, திங்கட்கிழமை மிச்சத்தைப் பரிமாறினாள். செவ்வாய்க்கிழமையன்று அவள் கண்டதெல்லாம் குளிர்சாதனப்பெட்டியிலிருந்த காய்கறிகள்தான், ஆனால் சைவ உணவு தன் கணவனுக்குப் பிடிக்காதென்றறிவாள். குறுகிய நேரத்தில் வேறு எதையும் சமைக்க இயலாததால், காய்கறிகளைச் சமைக்க முடிவு செய்தாள்.

அவள் உணவை மேசையில் வைத்தபோது, வீட்டிற்கு வந்திருந்த தன் கணவனிடம் சற்றே மன்னிப்புக் கேட்கும் தொனியில், “இது உங்களுக்குப் பிடிக்காதென்று அறிவேன்” என்றாள். அவள் கணவன் நிமிர்ந்து பார்த்து, “அன்பே, மேஜையில் நமக்கு உணவு இருப்பதற்கே நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அவருடைய மனப்பான்மை, தேவனிடம் நாம் பெரும் அனுதின பராமரிப்பிற்காக நன்றியுடனும் உவகையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை எனக்கு நினைவூட்டுகிறது; அவை எதுவாக இருந்தாலும் சரி. நமது அனுதின உணவோ, சிற்றுண்டியோ அதற்காக நன்றி செலுத்துவதே இயேசுவின் முன்மாதிரி. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தனது இரண்டு சீடர்களுடன், “அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்” (லூக்கா 24:30). அவர் முன்பு ஐயாயிரம் பேருக்கு “ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு சிறிய மீன்களை” (யோவான் 6:9) கொண்டு போஷித்தபோது, பிதாவிற்கு நன்றி செலுத்தியதுபோலவே செய்தார். நமது அனுதின உணவுக்காகவும் மற்ற பராமரிப்பிற்காகவும் நன்றி செலுத்துகையில், நம்முடைய நன்றியறிதல் இயேசுவின் வழிமுறைகளைப் பிரதிபலிக்கும், பரலோகத் தகப்பனைக் கனப்படுத்தும். இன்று தேவனுக்கு நன்றி செலுத்துவோம். 

 

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார்.