ஓவிகி ஆற்றில் பெரிய பழுப்புநிற பெரிய ட்ரவுட் மீன்கள் முட்டைகளிடும் வழக்கத்தை செய்து கொண்டிருந்தன. வேறு சில ட்ரவுட் மீன்கள் கூடு கட்டும் செயலை செய்து கொண்டிருந்தன. அவைகள் கூழாங்கற்கள் நிறைந்த ஆழமற்ற பகுதிகளில் தோண்டி கூடுகளை அமைத்துக் கொண்டிந்தன.

மீன்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மீனவர்கள், மீன்கள் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கும் சமயம் எது என்பதை நன்கு அறிந்திருந்ததினால், மீன்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள். முட்டைகளை நசுக்கிவிடாமல் இருப்பதற்காக கற்களாலான திட்டுக்களில் நடப்பதையும், மீன்களின் கூடுகளை குப்பை கூளங்கள் மூடி விடாமல் இருப்பதற்காக கடல் நீரில் நடப்பதையும் தவிர்த்து விடுவார்கள். ட்ரவுட் மீன்கள் அவைகளின் கூடுகளின் அருகில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அவற்றைப் பிடிக்க மாட்டார்கள்.

இந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மீன் பிடித்தலுக்கான ஒழுக்க நெறிகளை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், இதைவிட ஆழமான மிகவும் அர்த்தமுள்ள ஒரு காரணம் உண்டு.

இந்த பூமியை ஆண்டுகொள்ளுமாறு மனிதனுக்கு தேவன் அதை அளித்துள்ளார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (ஆதி. 1:28-30). இந்தப் பூமியை பயன்படுத்த தேவன் இதை நமக்கு சொந்தமாக கொடுத்துள்ளார். ஆனால், நாம் அதை அதிகமாக நேசிப்பவர்களாக அதை பயன்படுத்த வேண்டும்.

தேவனுடைய கரத்தின் கிரியைகளைப் பற்றி என் மனதில் ஆழ்ந்து சிந்திக்கிறேன். பள்ளத்தாக்கின் மறுபக்கத்திலிருந்து ஒரு கவுதாரி கூப்பிடுகிறது. ஒரு ஆண் கலை மான் சண்டைக்கு ஆயத்தமாகி சத்தமிடுகிறது. தூரத்தில் ஒரு கூட்ட நிண்ட கால்களையுடைய மான்கள் காணப்படுகின்றன. நீரோடையில் பல நிற வண்ணப் புள்ளிகளுடைய ட்ரவுட் மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு நீர் நாய் அதன் குட்டிகளோடு நிரோடையில் விளையாடிக் கொண்டிருக்கிறது இவை பரலோகப்பிதா தம்முடைய அளவற்ற அன்பினால் எனக்கு அளிக்கும் கொடைகளாகும். ஆகவே அவற்றை எல்லாம் நான் நேசிக்கிறேன்.

நான் எவற்றை நேசிக்கின்றேனோ அவற்றை பாதுகாக்கின்றேன்.