வகை  |  odb

சந்தோஷமும் நீதியும்

நான் ஆசியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது வந்த சில மணி நேரங்களுக்குள் என் கண்களைத் திறந்த இரண்டு உரையாடல்களைக் கேட்டேன். முதலாவதாக தன்மீது தவறாகச் சாட்டப்பட்ட கொலைக்குற்றத்திற்காக பதினொரு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டதையும், பின்பு குற்றமற்றவன் என்று விடுதலையானதையும் ஒரு போதகர் கூறினார். அடுத்து ஒருசில குடும்பங்கள் தங்கள் தங்கள் சொந்த தாய் நாட்டிலேயே மத வேற்றுமையினால் வந்த உபத்திவத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு கூட்டத்தினருக்கு அதிகமான பணம் கொடுத்தும் அவர்கள் தங்களை  காட்டிக்கொடுத்தாகவும், அதனால் அகதிகள் முகாமில் பலஅண்டுகள் அடைக்கப்பட்டு தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற நம்பிக்கையை இழந்ததாகவும் கூறினார்கள்.

இந்த இரண்டிலுமே நீதி அற்றுப் போனதால் அப்பாவிகள் உபத்திரவத்திற்குள்ளானார்கள். இது உலகம் அநீதியானது என்பதற்கோர் எடுத்துக்காட்டு. அனால், இந்த நீதியற்ற நிலைமை நிரந்தரமானதல்ல!

சங்கீதம் 67 நம்மைத் துன்புறுத்தும் உலகிற்கு தேவனை அறிவிக்க தேவனுடைய ஜனங்களை அழைக்கிறது. அதன் விளைவு, மகிழ்ச்சி தேவனுடைய அன்பினால் மட்டுமல்ல, அவருடைய நீதியினாலும் உண்டாகும் சந்தோஷமாயிருக்கும். தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 4). நிதானமும் நீதியும் நேர்மையும் தேவனுடைய அன்பின் முக்கிய பகுதி என்பதை வேதத்தின் ஆசிரியர்கள் அறிந்திருந்தாலும் அது வருங்காலத்தில்தான் முற்றிலும் உணரப்படும்; என்றும் அறிந்திருந்து அதுவரை… வரக்கடவது (ஆமோ. 5:24). அதுவரை, நம் அநீதி நிறைந்த உலகிற்கு நம்முடைய தேவனின் நீதியை சுட்டிக்காட்டும் பணியைத் தொடர்வோமாக. நம்முடைய தேவனின் தேவ நீதியை அறிவிக்கும் பணியைத் தொடர்வோமாக. அவர் வரும்போது, “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது (ஆமோ. 5:24).

அந்த பிரசித்திபெற்ற மாயப்புன்னகை

எனக்கும் என் மனைவிக்கும் பாரீஸிலுள்ள (லூவருக்குச் செல்ல வாய்ப்பு) கிடைத்தது. என் பதினொரு வயது பேத்தியை போனில் அழைத்து மிகப்பிரபலமான மோனலீசா படத்தைப் பார்த்ததைச் சொன்னேன். உடனே  “அவள் புன்னகைகிக்கிறாளா?” என்று கேட்டாள்.

இந்தப் படத்தைக் குறித்த மிகப்பெரிய கேள்வியே அதுதானே? லியோனார்டோ டாவின்சி சுமார் 600 வருடங்களுக்கு முன்னே இச்சித்திரத்தை வர்ணந்தீட்டியிருந்தாலும். அந்தப்பெண் சிரிக்கிறாளா, இல்லையா என்பது இன்றும் ஒரு தீராத புதிராகவே இருக்கிறது. அந்தச் சித்திரத்தின் அழகில் மயங்கினாலும், மோனலீஸா என்ன செய்கிறாள் என்று யாராலும் சொல்லவே முடியவில்லை.

அந்தச் சித்திரத்தின் புதிரில் “புன்னகை” ஒரு பகுதி. ஆனால், அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? புன்னகையைக் குறித்து வேதாகமத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? உண்மையில் வேதாகமத்தில் ஐந்திற்கும் குறைவாகவே இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், நாம் அதைச் செய்ய வேண்டுமென்பதுபோலக் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், நகைப்பிற்கு வழிநடத்தும் மனப்பான்மையைக் குறித்துச் சொல்லுகிறது. அதுவே மனமகிழ்ச்சி எனும் வார்த்தை, கிட்டத்தட்ட 250 தடவைகள் வருகிறது. தேவனை நினைக்கும் பொழுது என் இருதயம் களிகூறுகிறது (சங். 28:7), நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் (சங். 33:1). உம்முடைய சாட்சிகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி (சங். 119:111); கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம் (சங். 126:3).

கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பதன் மூலம் கொடுக்கும் மகிழ்ச்சி, நமது முகத்தில் புன்னகையை வருவிக்குகிறது.

வல்லமையுள்ள குழந்தை

நான் அவனை முதல்முதலாகப் பார்த்தபொழுது அழுதுவிட்டேன். தன் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் போலிருந்தான். ஆனால், அவன் இனி இயேசுவின் கைகளில் இருக்கும்வரை ஒருபோதும் கண்விழிக்கப் போவதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

அவன் அநேக மாதங்களாக உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தான். பின்பு அவனுடைய தாயார் இருதயத்தைக் வேதனையடையச் செய்யும் ஒரு மின்னஞ்சல் மூலமாக அவன் மரணத்தை எனக்குத் தெரிவித்தாள். அவள் தனக்குள்ளே ஆழமாக, மிக ஆழமாக, முனகிக் கொண்டிருக்கும் வேதனையைக் குறித்து எழுதினாள். அதன்பின் அவள், அந்த சிறு குழந்தையின் குறுகிய வாழ்க்கையின்மூலம், தேவன் எங்கள் இருதயங்களில் எவ்வளவு ஆழமாகத் தம் அன்பின் கிரியையைப் பதித்திருக்கிறார்! அந்த வாழ்க்கை எவ்வளவு வல்லமையுள்ளதாயிருந்தது என்று சொன்னாள்!

வல்லமையா? அவள் எப்படி அதைச் சொல்ல முடியும்?

அந்தக் குடும்பத்தின் விசேஷித்த பையன் அவர்களுக்கும் - எங்களுக்கும் - எல்லாவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டினான். அதுவும், மிக மோசமான காரியங்கள் நேரிடும்போது! கடினமான ஆனால், ஆறுதலான சத்தியம் என்னவென்றால், தேவன்  நம்மை நம்முடைய வேதனைகளில் சந்திக்கிறார் என்பதே. ஒரு மகனை இழப்பதின் வேதனை அவருக்குத் தெரியும்.

நம்முடைய அழமான வேதனையின் நேரங்களில் நாம் தாவீதின் சங்கீதங்களை வாசிக்கிறோம்; ஏனென்றால் அவன் அவற்றை தன் சொந்த வேதனையின் அனுபவத்திலிருந்து எழுதியுள்ளான். “என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்?” என்று கேட்டான் (வச. 13:2). “நான் மரண நித்திரை அடையாதபடி என் கண்களைத் தெளிவாக்கும்” (வச. 3). ஆனாலும், தாவீது தன் மிகப்பெரிய கேள்விகளைக் தேவனிடத்தில் விட்டுவிட்டான். “நான் உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூறும்.

தேவனால் மட்டுமே நம் வாழ்வின் மிக துக்ககரமான நிகழ்வுகளுக்கு முடிவான அர்த்தம் கொடுக்க முடியும்.

யாரென்று வெளிப்படுத்தாமல் வாழ்வது

ஜேன் யோலன் எழுதிய “யாரென்றறியப்படாமலிருக்க முயற்சித்தல்” என்ற கட்டுரையில் தங்கள் உள்ளான மனதில் தாங்கள் யார் என்று அறியப்படாமல் தங்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தான் சிறந்த எழுத்தாளர்கள் என்று எழுதியிருந்தார். சொல்லப்படுகிற கதை தான் முக்கியம்; கதை சொல்பவரல்ல.

நாம் சொல்லுகிற கதை நமக்காக தன் ஜீவனையே கொடுத்த இரட்சகர் இயேசுவைப் பற்றியதே. மற்ற விசுவாசிகளோடு இணைந்து நாமும் அவருக்காக வாழ்ந்து அவருடைய அன்பை பிறருடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ரோமர் 12:3-21 இயேசுவைப் பின் பற்றுகிறவர்களுக்கிடையே உள்ள உறவில் ஊடுருவியிருக்க வேண்டிய தாழ்மையையும், அன்பையும் குறித்துப் போதிக்கிறது. உங்களைப் பற்றியும் உங்கள் முக்கியத்துவத்தைப் பற்றியும் மிதமிஞ்சி எண்ணிக்கொள்ள வேண்டாம். மாறாக, தேவன் நம்மெல்லாருக்கும் தந்திருக்கிற விசுவாசத்தின் வெளிச்சத்திலே நம்முடைய திறமைகளை சரியாக நிதானித்தறிய முயற்சிப்போமாக. “சகோதர சிநேகத்திலே ஒருவர்மெலோருவர் அன்பாயிருப்போமாக. கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்வோமாக” (வச. 3,10).

நம்முடைய கடந்தகால சாதனைகளைக் குறித்த பெருமை பிறருடைய தாலந்துகளைக் காணாதபடி குருடாக்கிப் போடும். கர்வம் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.

இயேசுவுக்குப் பாதையை செவ்வைப்படுத்தும் ஊழியத்தைப் பெற்ற யோவான் ஸ்நானகன், “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்றான். அது நம்மெல்லாருக்கும் தேவையான ஒரு சிறந்த குறிக்கோள் அதுவே.

இவர் யாரோ?

நான் மாணவனாயிருந்தபோது “உங்கள் சாய்வு மேஜைகளிலிருந்து எல்லாவற்றையும் அகற்றிவிட்டு ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்ற அச்சுறுத்தும் அறிவிப்பைக் கேட்டவுடனே, “பரீட்சை நேரம்” வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன்.

கடற்கரையில் போதனையோடு ஆரம்பித்த இயேசுவின் அன்றைய தினம் (மாற். 4:1) கடலில் ஒரு சோதனையான வேளையோடு முடிந்தது (வச. 35). இயேசுவின் பிரசங்க மேடையாகப் பயன்படுத்தப்பட்ட அந்தப் படகு இயேசுவையும் அவருடைய சில சீடர்களையும் கடலின் அக்கரைக்குக் கொண்டுபோகப் பயன்படுத்தப்பட்டது. களைப்படைந்த இயேசு படகின் பின்னணியத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். பயணத்தின்போது அவர்கள் ஒரு பலத்த சுழல்காற்றை எதிர்கொண்டனர் (வச. 37). அவைகளினால் முற்றிலும் நனைந்த சீடர்கள், “போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள் பின் இக்காரியம் நிகழ்ந்தது (வச. 38). காலையில் ஜனக்கூட்டத்தை பார்த்து “கேளுங்கள்” என்று அறிவுரை கூறியவர், ஒரு எளிய வல்லமையான கட்டளையை இயற்கைக் காற்றைப் பார்த்து காற்றுக்கு “இரையாதே, அமைதலாயிரு” என்றார் (வச. 39).

காற்றும் கீழ்ப்படிந்தது. மிகவும் பயந்த சீடர்கள் ஆச்சரியப்பட்டு “இவர் யாரோ?” என்றார்கள் (வச. 41). சீஷர்கள் இவர் யாரோ என்று கேட்ட கேள்வி நல்ல கேள்விதான் ஆனால், மெய்யாகவே இயேசு தேவனுடைய குமாரன்தான் என்று சரியாகக் கண்டுகொள்ள அவர்களுக்குச் சற்றுக் காலம் வேண்டியதாயிருந்தது.

இன்றைய காலக்கட்டத்திலும் இயேசுவைப்பற்றி திறந்த உள்ளத்தோடு உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ள அனுபவத்துடன் கேள்வி கேட்பவர்கள் இதே முடிவிற்குத்தான் வருவார்கள். அவர் நமக்கு போதனை செய்பவர்மட்டுமல்ல, ஆராதனைக்கும் உரிய தேவனானவர்.

ரூத்தின் கதை

ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.

புதிர்களை தெளிவுபடுத்துதல்

பீநட்ஸ் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய சார்லஸ் ஷல்ஸின் நகைச்சுவையையும், அறிவுத் திறனையும் கண்டு நான் அதிகம் மகிழ்ச்சியடைவதுண்டு. எங்களது ஆலயத்திலுள்ள வாலிபப் பிள்ளைகளைச் பற்றிய புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கேலிச் சித்திரம் காணப்பட்டது. அந்த படத்தில் ஒரு வாலிபன் அவன் கையில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் அவனது சினேகிதனிடம் “பழைய ஏற்பாட்டிலுள்ள புதிர்களை தெளிவுபடுத்துவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளேன்… அதை வாசிக்க ஆரம்பிக்கிறேன்” என்று கூறினான்.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் 119ம் சங்கீதத்தை எழுதியவருடைய அளவு கடந்த ஆவல் வெளிப்படுகிறது. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்; நாள் முழுவதும் அது என் தியானம்” (வச. 97). தேவனுடைய வார்த்தையின் மேலிருந்த அளவு கடந்த ஆவல் அதன் ஆசிரியர் ஞானத்தில், அறிவில் வளர்ச்சியடைந்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய அவரை வழிநடத்தினது (வச. 100).

வேதாகமத்தில் உள்ள புதிர்களை தெளிவுபடுத்த எந்தவித அதிசயமான செயல் திட்டங்கள் ஏதும் இல்லை. அந்த செயல் திட்டங்கள் மனரீதியானது மட்டுமல்ல, நாம் வாசிக்கும் பகுதிக்கும் ஏற்ப நாம் நடக்கவும் வேண்டும். வேதாகமத்தில் சில பகுதிகள் நம்மால் புரிந்துகொள்ள இயலாதவைகளாக இருக்கலாம். நாம் நன்றாக புரிந்து கொண்ட உண்மைகளை கடைபிடித்து, செயல்படுத்த “உம்முடைய வார்த்தைகள் என் நாவிற்கு எவ்வளவு இனிமையானவைகள் என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாய் இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். ஆதலால், எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்” (வச. 103-104)

ஆச்சரியமான கண்டுபிடிப்புகளுக்கான பயணம் தேவனுடைய வார்த்தையில் உள்ளது.

மொத்தத்திற்கும் நம்புங்கள்

நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.

ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.

உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும்  நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

தேவனில் வேர் கொள்ளுதல்

எனது சிநேகிதர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறினபொழுது, அவர்களது வேலியின் அருகில் விஸ்டிரியா என்ற செடியை நட்டு வைத்தனர். லாவண்டர் செடி ஐந்து அண்டுகளுக்குப் பின்தான் பூக்க ஆரம்பிக்கும். அதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்தச் செடியை சுத்தம்பண்ணி, உரம் போட்டு, நீரூற்றி நன்கு கவனித்து வந்ததால், அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த செடியின் அழகான பூக்களின் அழகை ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு முறை அவர்களது அண்டை வீட்டார் இந்தச் செடி இருந்த லேவிக்கு அருகில், அவர்களது தோட்டத்தில் களைக் கொல்லி மருந்தை பயன படுத்தினதினால், இவர்களது தோட்டத்தில் இருந்த அந்த லாவண்டர் செடி வாடிவிட்டது. அடுத்த வீட்டில் பயன்படுத்தின களைக்கொல்லியில் இருந்த விஷம் விஸ்டியா செடியின் வேர் மூலமாகச் சென்றதால், அந்தச் செடி செத்துவிட்டது என்று எனது சிநேகிதர்கள் எண்ணிவிட்டனர். ஆச்சரியப்படத்தக்கதாக, அடுத்த ஆண்டு அதே இடத்தில் இளம் விஸ்டீரியா செடியின் துளிர்கள் தோன்றின.

இவ்விதமாக தாவரங்கள் செழித்து வளர்வதையும், மடிந்து போவதையும், போல தேவனுடைய ஜனங்கள், தேவனைப் பின் பற்றும்போது செழித்தும், தேவனைபிட்டு விலகும்போது நெருக்கப்படுவதுமான நிலைமைக்கு எரேமியா தீர்க்கன் ஒப்பிடுகிறான். தேவனைப் பின் பற்றுகிறவர்களின் வேர்கள் தண்ணீரண்டைக்குச் செல்வதால் செழித்து வளர்ந்து, அதனதன் காலத்தில் கனி கொடுப்பவர்களாக இருப்பார்கள் (எரே. 17:8). ஆனால், அவர்களது சுய சித்தத்தை நம்பி, அதன் வழியில் நடப்பவர்கள். அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போல் இருப்பார்கள் (வச. 5-6). தேவனுடைய ஜனங்கள், ஜீவிக்கிற உண்மையான தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும். அவர்கள் கால்வாய் ஓரமாய் நடப்பட்ட மரங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி வாஞ்சித்தான் (வச. 8).

நமது பிதா திராட்சைத் தோட்டக்காரர் (யோவா. 15:1) என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மேலும் நாம் அவரை நம்பி அவர் மேல் நம்பிக்கையாக இருக்கலாம் (ஏரே. 17:8) என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றி என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய கனிகளைச் கொடுப்பவர்களாக இருப்போம்.