எனக்கும் என் மனைவிக்கும் பாரீஸிலுள்ள (லூவருக்குச் செல்ல வாய்ப்பு) கிடைத்தது. என் பதினொரு வயது பேத்தியை போனில் அழைத்து மிகப்பிரபலமான மோனலீசா படத்தைப் பார்த்ததைச் சொன்னேன். உடனே  “அவள் புன்னகைகிக்கிறாளா?” என்று கேட்டாள்.

இந்தப் படத்தைக் குறித்த மிகப்பெரிய கேள்வியே அதுதானே? லியோனார்டோ டாவின்சி சுமார் 600 வருடங்களுக்கு முன்னே இச்சித்திரத்தை வர்ணந்தீட்டியிருந்தாலும். அந்தப்பெண் சிரிக்கிறாளா, இல்லையா என்பது இன்றும் ஒரு தீராத புதிராகவே இருக்கிறது. அந்தச் சித்திரத்தின் அழகில் மயங்கினாலும், மோனலீஸா என்ன செய்கிறாள் என்று யாராலும் சொல்லவே முடியவில்லை.

அந்தச் சித்திரத்தின் புதிரில் “புன்னகை” ஒரு பகுதி. ஆனால், அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? புன்னகையைக் குறித்து வேதாகமத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? உண்மையில் வேதாகமத்தில் ஐந்திற்கும் குறைவாகவே இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், நாம் அதைச் செய்ய வேண்டுமென்பதுபோலக் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், நகைப்பிற்கு வழிநடத்தும் மனப்பான்மையைக் குறித்துச் சொல்லுகிறது. அதுவே மனமகிழ்ச்சி எனும் வார்த்தை, கிட்டத்தட்ட 250 தடவைகள் வருகிறது. தேவனை நினைக்கும் பொழுது என் இருதயம் களிகூறுகிறது (சங். 28:7), நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் (சங். 33:1). உம்முடைய சாட்சிகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி (சங். 119:111); கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம் (சங். 126:3).

கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பதன் மூலம் கொடுக்கும் மகிழ்ச்சி, நமது முகத்தில் புன்னகையை வருவிக்குகிறது.