நான் ஆசியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது வந்த சில மணி நேரங்களுக்குள் என் கண்களைத் திறந்த இரண்டு உரையாடல்களைக் கேட்டேன். முதலாவதாக தன்மீது தவறாகச் சாட்டப்பட்ட கொலைக்குற்றத்திற்காக பதினொரு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டதையும், பின்பு குற்றமற்றவன் என்று விடுதலையானதையும் ஒரு போதகர் கூறினார். அடுத்து ஒருசில குடும்பங்கள் தங்கள் தங்கள் சொந்த தாய் நாட்டிலேயே மத வேற்றுமையினால் வந்த உபத்திவத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு கூட்டத்தினருக்கு அதிகமான பணம் கொடுத்தும் அவர்கள் தங்களை  காட்டிக்கொடுத்தாகவும், அதனால் அகதிகள் முகாமில் பலஅண்டுகள் அடைக்கப்பட்டு தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற நம்பிக்கையை இழந்ததாகவும் கூறினார்கள்.

இந்த இரண்டிலுமே நீதி அற்றுப் போனதால் அப்பாவிகள் உபத்திரவத்திற்குள்ளானார்கள். இது உலகம் அநீதியானது என்பதற்கோர் எடுத்துக்காட்டு. அனால், இந்த நீதியற்ற நிலைமை நிரந்தரமானதல்ல!

சங்கீதம் 67 நம்மைத் துன்புறுத்தும் உலகிற்கு தேவனை அறிவிக்க தேவனுடைய ஜனங்களை அழைக்கிறது. அதன் விளைவு, மகிழ்ச்சி தேவனுடைய அன்பினால் மட்டுமல்ல, அவருடைய நீதியினாலும் உண்டாகும் சந்தோஷமாயிருக்கும். தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார் (வச. 4). நிதானமும் நீதியும் நேர்மையும் தேவனுடைய அன்பின் முக்கிய பகுதி என்பதை வேதத்தின் ஆசிரியர்கள் அறிந்திருந்தாலும் அது வருங்காலத்தில்தான் முற்றிலும் உணரப்படும்; என்றும் அறிந்திருந்து அதுவரை… வரக்கடவது (ஆமோ. 5:24). அதுவரை, நம் அநீதி நிறைந்த உலகிற்கு நம்முடைய தேவனின் நீதியை சுட்டிக்காட்டும் பணியைத் தொடர்வோமாக. நம்முடைய தேவனின் தேவ நீதியை அறிவிக்கும் பணியைத் தொடர்வோமாக. அவர் வரும்போது, “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது (ஆமோ. 5:24).