தன்னலமற்ற சேவை
ஒரு சிறிய கூட்ட மக்கள் திரண்டு நின்று அங்கு புல்தரையில் சரிந்துகிடந்த ஒரு பெரிய மரத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதிய பெண்மணி தன் ஊன்றுகோலில் சாய்ந்து நின்றபடி, முந்திய இரவில் வீசிய புயல் காற்று, நெடுநாட்களாக வளர்ந்திருந்த எங்களுடைய எல்ம் மரத்தைச் சாய்த்து விட்டதை விளக்கினார். மேலும் அவள் நடுங்கிய குரலோடும், உணர்ச்சி வசத்தோடும் “அது எங்களுடைய அழகிய கல்சுவரை உடைத்து விட்டது. நாங்கள் திருமணமாகி வந்தபோது என் கணவர் இந்த சுவரைக் கட்டுவித்தார். இந்தக் சுவரை அவர் மிகவும் நேசித்தார். நானும் அதனை நேசித்தேன். இப்பொழுது அவரைப் போன்று இதுவும் போய்விட்டது” என்றாள்.
அடுத்த நாள் காலை மரம் வெட்டும் குழுவினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியைச் செய்வதை அவள்பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பு மலர்ந்தது. அந்த மரக்கிளைகளினூடே ஒரு பையன் அவளுடைய புல்தரையை சரி செய்து கொண்டிருந்தான். மேலும் இரு நபர்கள் அவள் நேசித்த அந்த கல் சுவரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.
நம்மைச் சுற்றியிருப்போரின் சோர்ந்த இருதயத்தைத் தூக்கி விடுதல் போன்றச் செயலை தேவன் அங்கீகரிக்கும் செயலாகத் தீர்க்கன் ஏசாயா விளக்குகின்றார். அந்த முதிய பெண்மணிக்கு அவள் விரும்பிய கல்சுவரை சரிசெய்து கொடுத்ததைப் போன்று, வெறுமனே ஆவிக்குரிய ஆராதனைசெய்வதைக் காட்டிலும் தன்னலமற்ற சேவைகளைப் பிறருக்குச் செய்வதை தேவன் அதிகம் விரும்புகின்றார் என இப்பகுதி நமக்குப் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை செய்யும் அவருடைய பிள்ளைகள் மீது தேவன் இருவகையான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். முதலாவது நம்முடைய மனப்பூர்வமான சேவையை நலிந்தோரும், தேவையுள்ளோரும் பெறுமாறு பயன்படுத்துகின்றார் (ஏசா. 58:7-10). இரண்டாவது தேவன் இத்தகைய சேவையில் முனைந்திருப்போரை கனப்படுத்துகின்றார். நம்முடைய சேவை மனப்பான்மையை மேலும் உருவாக்கி, அவருடைய .ராஜ்ஜியத்தில் வல்லமையான கருவியாக பயன்படுத்துவார் (வச. 11-12). இன்றைய நாளில் என்ன செயலைச் செய்யப்போகின்றாய்?
நிறைவற்ற முழுமை
நான் எதையும் ஒரு குறைவுமின்றி முடிக்க முயற்சித்து அதனால் எல்லாவற்றையும் தள்ளிப்போடும் குணத்தை, என்னுடைய கல்லூரி பேராசிரியர் கண்டறிந்து, எனக்கு ஞானமுள்ள சில ஆலோசனைகளைக் கூறினார். “குறைவற்ற செயல் நன்மைக்கு எதிரியாக அமையும்படி விட்டுவிடாதே” என்றார். ஒரு குறைவில்லாத நிகழ்ச்சியை அமைக்க கடினமாக உழைக்கும்போது, அது நம் வளர்ச்சியைத் தடை செய்கின்றது என்றார். என்னுடைய வேலையிலுள்ள சில குறைபாடுகளை நான் ஏற்றுக் கொள்ளும்போது, அது நான் சுதந்திரமாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பாகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் இன்னும் ஆழமான காரணங்களை விளக்குகின்றார். நாம் குறையில்லாதவர்களாக இருக்க சொந்த முயற்சியை எடுக்கும்போது, அந்த இடத்தில் கிறிஸ்துவின் செயல் தேவை என்பதை உணர முடியாதவர்களாகிவிடுகிறோம்.
இதனை பவுலும் கடினமானப் பாதையில் தான் கற்றுக் கொண்டார். பல ஆண்டுகளாக கடினப்பட்டு தேவனுடைய சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிய போராடிக் கொண்டிருந்த போது, இயேசுவின் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது (கலா. 1:11-16). தேவனுடைய பார்வையில் நம்மைக் குற்றமற்றவர்களாகக் காண்பிக்க நம்முடைய சொந்த முயற்சி போதுமானதாக இருப்பின்
“கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே” (கலா. 2:21) எனப் பவுல் உணர்ந்தார். நம்முடைய சுயத்தை சிலுவையில் அறைந்து மரிக்க ஒப்புக்கொடுக்கும் போது இயேசு அவனுக்குள் வாழ்வதை உணர முடியும் (வச. 20). நம்முடைய குறைவுகளில்தான் தேவனுடைய பூரணப்படுத்துதலை உணரமுடியும்.
ஆதலால் நாம் பாவத்திற்கு எதிர்த்து நிற்க முடியாது என்று அர்த்தமில்லை (வச.7). நாம் ஆவியில் வளர்ச்சியடைவதற்கு நம் சுய பெலத்தைச் சார்ந்திருத்தலை விட்டு விடவேண்டும் என்பதே அதன் பொருள் (வச. 20).
நம் வாழ்நாள் முழுவதும் நாம் வேலை செய்து கொண்டேயிருக்கிறோம். ஆனால், நம்முடைய இருதயம் குறைகளற்ற இயேசுவின் உதவி நமக்கு எப்பொழுதும் தேவை என்பதைத் தாழ்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இயேசு நம் இருதயத்தில் வாசம் பண்ணுவார் (எபே. 3:17). நீங்கள் அவருடைய அன்பில் வேரூன்றி நிலை பெற்றவர்களாகி சகல பரிசுத்தவான்களோடும் கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து “அறிவுக் கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக” வேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன் (வச. 17-19).
ஏனென்பது இயேசுவுக்குத் தெரியும்
என்னுடைய நண்பர்களில் சிலர் சிறிதளவு சுகம் பெற்றிருக்கின்றனர். ஆனால், இன்னமும் அந்த வியாதியின் வேதனையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். வேறு சில நண்பர்கள் தங்களுடைய குடிபழக்கத்திலிருந்து விடுவிக்கப்படடிருந்தும், அந்த தூண்டுதலிலிருந்தும், உள் உணர்விலிருந்தும் முற்றிலும் விடுபடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவன் ஏன் இவர்களை முற்றிலுமாக சுகப்படுத்தாமல் இருக்கின்றார்? என நினைத்து ஆச்சிரியப்பட்டதுண்டு.
மாற்கு 8:2-26ல் வாசிக்கும்போது இயேசு ஒரு பிறவிக் குருடனை சுகப்படுத்தின நிகழ்ச்சியை வாசிக்கின்றோம். முதலாவது இயேசு அவனை அந்த கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார். பின்னர் அவனுடைய கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா? எனக் கேட்டார். அவன், “நடக்கிற மனுஷரை மரங்களைப் போலக் காண்கின்றேன்” என்றான். இயேசு மறுபடியும் அவன் கண்களின் மேல் கைகளை வைத்தார். இப்பொழுது அவன் யாவரையும் தெளிவாகக் கண்டான்.
இயேசுவின் ஊழியகாலத்தில் இயேசுவின் வார்த்தைகளும், செயல்களும் மக்களையும், அவருடைய சீடர்களையும் அதிசயிக்கவும் குழப்பமடையவும் செய்தது (மத். 7:28, லூக். 8:10; 11:14) சிலரை அவரைவிட்டு ஓடும்படியும் செய்தது (யோவா. 6:66-66). இந்த இரு கட்ட அற்புதமும் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவனை உடனடியாக சுகப்படுத்தவில்லை?
ஏனென்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மனிதனுக்கும் அவனுடைய சுகத்தைக் கண்ட அவருடைய சீடர்களுக்கும் அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அவர் அறிவார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில், இன்னும் நெருங்கி வர நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதாயினும், நம் வாழ்விலும், நாம் நேசிக்கின்றவர்களின் வாழ்விலும் தேவன் செயல்படுகின்றார் என்பதை நம்புவோம். நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற நமக்குத் தேவையான பெலனையும், தைரியத்தையும், தெளிவையும் அவர் தருவார்.
விழிப்புடன் கவனித்தல்
என்னுடைய மகன் பள்ளிக்குச் செல்வதற்கு கதவைத் தாண்டி ஓடும்போது, நான் அவனை பற்களைத் துலக்கினாயா எனக் கேட்டேன். மீண்டும் இக்கேள்வியைக் கேட்டதோடு உண்மை பேசுவதின் முக்கியத்துவத்தையும் அவனுக்கு நினைப்பூட்டினேன். என்னுடைய அறிவுரையைக் குறித்துச் சற்றும் பாதிப்படையாமல், கிண்டலாக குளியல் அறையில் ஒரு பாதுகாப்பு கேமரா பொருத்துவதே உங்களுக்குத் தேவை என்றான். அப்படியென்றால் நானே நேரடியாக அவன் பல்துலக்கியதை உறுதிப்பண்ணிக் கொள்ள முடியும், அவனும் பொய் சொல்ல தூண்டப்படமாட்டான்.
ஒரு பாதுகாப்பு கேமரா, நாம் சட்டங்ககளைக் கைக்கொள்ள நம்மை நினைவுபடுத்தலாம், ஆனால், நம்மை யாரும் கவனிக்கமுடியாத இடங்களும், நம்மையாரும் பார்க்கக்கூடாத வழிகளும் உள்ளன. ஒருவேளை நம்முடைய புத்திசாலித்தனத்தால் இந்த பாதுகாப்பு கேமராவை தவிர்த்துவிடலாம். ஆனால், நாம் தேவனுடைய பார்வையைவிட்டு விலகிவிட்டோமென்று நினைத்தால், நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.
“எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ?” என்று கர்த்தர் கேட்கின்றார் (எரே. 23:24). அவருடைய இந்தக் கேள்வியில் ஓர் ஊக்கப்படுத்துதலும், ஓர் எச்சரிப்பும் இருக்கின்றது.
எச்சரிப்பு என்னவெனில், நாம் ஓடி ஒளிந்து கொள்ளவோ, அவரை ஏமாற்றவோ முடியாது. நாம் செய்யும் எல்லா காரியங்களும் அவர் பார்வையில் தெளிவாக இருக்கின்றது.
அவர் தரும் ஊக்கம் என்னவெனில், இப்புவியிலோ அல்லது வானத்திலோ எங்கிருந்தாலும் நம்முடைய பரலோகத் தந்தையின் விழிப்போடுள்ள பாதுகாப்பிற்குள் இருக்கின்றோம் என்பதே. நாம் தனிமையில் இருப்பதாக எண்ணினாலும் தேவன் நம்மோடிருக்கின்றார். இன்று நாம் எங்கு சென்று கொண்டிருந்தாலும் இந்த உண்மை நம்மை அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து அவர் தரும் ஆறுதலைப்பெற்றுக்கொள்ள அழைக்கின்றது. அவர் நம்மை விழிப்புடன் கவனிக்கின்றார்.
நமக்கொரு நம்பிக்கையுண்டு
1988 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான செய்திகளை நான் எங்கள் அனுதின அப்பம் என்ற பத்திரிக்கைக்கு எழுதியிருந்த போதும், ஒரு சில மட்டும் என் மனதில் பதிந்துள்ளன. அந்தச் செய்திகளுள் ஒன்றினை 1990 ஆம் ஆண்டில் நடுவில் எழுதினேன். அப்பொழுது என்னுடைய மூன்று பெண் குழந்தைகளும் வெளியே ஒரு கூட்டத்திற்கோ அல்லது ஓர் ஊழியத்திற்காகவோ சென்றிருந்தனர். எனவே என்னுடைய ஆறு வயது மகன் ஸ்டீவ்வும் நானும் மட்டும் இருக்க நேர்ந்தது.
எனவே, நாங்கள் ஒரு விமான நிலையத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். அப்பொழுது ஸ்டீவ் என்னிடம், “மெலிசா இல்லாமல் இது அத்தனை மகிழ்ச்சியாக இல்லை” என்றான். அவனுடைய எட்டு வயது அக்காவையும் அவளுடைய குறும்புகளையும் விரும்பினான். இந்த வார்த்தைகள் எத்தனை ஆழ்ந்த அர்த்தமுள்ளவையென எங்கள் இருவருக்குமே அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. மெல் 17 வயதில் ஒரு வாகன விபத்தில் மரித்ததிலிருந்து பல ஆண்டுகளாக எங்களுடைய வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாகவேயில்லை. காலத்தின் ஓட்டம் ஒருவேளை அந்த வேதனையை சற்று குறைத்திருக்கலாம். ஆனால், அந்த வேதனையை ஒருவராலும் முழுவதும் நீக்க முடியவில்லை. காலம் அந்த காயத்தை குணப்படுத்தவில்லை. ஆனால், இங்கு சில காரியங்கள் நமக்கு உதவியாயிருக்கும். ஆறுதலின் தேவன் நமக்குத் தந்துள்ள ஆறுதலின் வாக்குத்தத்தங்களை நாம் கவனித்து, தியானித்து கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்.
கவனி: நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம். 3:22)
தியானி: தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். (சங். 27:5)
ருசித்திடு: அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. (சங். 119:50)
நாம் மிகவும் நேசித்த ஒருவரை இழந்தபின்னர் வாழ்க்கை ஒருபோதும் முந்தியது போலாகாது. ஆனால், தேவனுடைய வாக்குகள் நமக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் தரும்.
புயலுக்கு அடைக்கலம்
நான் ஒக்லஹோமாவில் வாழ்ந்த போது எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் சுழல் காற்று வீசும்போது அதைத் தொடர்ந்து செல்வார். ஜான் என்ற அந்த நண்பர் ரேடியோ, பிற புயல் தொடர்பாளர்கள், அருகிலுள்ள ரேடார் ஆகியவற்றோடு தொடர்புகொண்டு கவனமாகக் கேட்டு, அந்தப் புயலின் பாதையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒரு பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு, புயலின் அழிவுப் பாதையை பார்த்து அதன் பாதையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை மக்களுக்கு உடனடியாகத் தெரிவிப்பார்.
ஒருமுறை புனல் வடிவ மேகம் திடீரென அதன் பாதையை மாற்றிவிட, ஜான் மிகப் பெரிய ஆபததில் மாட்டிக் கொண்டார். ஆனால், நல்ல வேளை, அவர் ஒரு அடைக்கலத்தைக் கண்டு பிடித்து தப்பிக்கொண்டார்.
ஜானுடைய இந்த அனுபவம் மற்றொரு அழிவுப் பாதையைக் குறித்தச் சிந்திக்க வைத்தது. அது நம் வாழ்விலுள்ள பாவம். “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும் போது மரணத்தைப் பிறப்பிக்கும் (யாக். 1:14-15) என வேதாகமம் சொல்கின்றது.
இங்கேயொரு தொடர்ச்சியான நிகழ்வுகளைக் காண்கின்றோம். பாவம், முதலில் ஆபத்தில்லாதது போல தோன்றினாலும், திடீரென கட்டுப்படுத்த முடியாதபடி சுழன்று நொறுக்கி அழிவைக் கொண்டுவரும். ஆனால், சோதனை வந்து நம்மை பயமுறுத்தும் போது, தேவன் வரப்போகும் புயலுக்கு நமக்கு அடைக்கலம் தருகின்றார்.
தேவன் நம்மை ஒருபோதும் சோதிப்பதில்லையென்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றது. நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள் நமது தெரிந்தெடுப்பேயொழிய தேவனுடையதல்ல. “நாம் சோதிக்கப்படும் போது சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையொடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும். உண்டாக்குவார்” (1 கொரி. 10:13). சோதனை நேரங்களில் நாம் அவரிடம் திரும்பி, அவரை நோக்கி உதவிக்காகக் கூப்பிடும் போது, சோதனையை மேற்கொள்ள வேண்டிய பெலனைத் தேவன் நமக்குத் தருகின்றார். எப்பொழுதும் நமக்கு அடைக்கலமாயிருப்பவர் இயேசு ஒருவரே.
இனிமையான இல்லம்
“நாம் ஏன் நம்முடைய வீட்டை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று என்னுடைய மகன் கேட்டான். ஓர் ஐந்து வயது சிறுவனுக்கு வீடு என்பது என்ன என்பதை விளக்குவது சற்றுக் கடினம். நாங்கள் எங்கள் இருப்பிடத்தைத் தான் மாற்றுகின்றோம். எங்கள் வீட்டையல்ல. வீடு என்பது நமக்கு அன்பானவர்கள் இருக்கும் இடம். ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் நாம் திரும்பிவர ஏங்கும் ஓர் இடம் அல்லது ஒரு நாளின் கடின வேலைக்குப்பின் திரும்பி வர எண்ணும் இடம் தான் நம் வீடு.
இயேசு மரிப்பதற்கு முன்னதாக ஒரு மேல் வீட்டறையில் இருந்த போது தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார் (யோவா. 14:1) இயேசுவின் சீடர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில், இயேசு தான் மரிக்கப்போவதை அவர்களுக்கு முன்னறிவித்தார். ஆனால், இயேசு தன்னுடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடிருக்கும் எனவும், மீண்டும் அவரைக் காண்பார்களெனவும் உறுதியளித்திருந்தார். “என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; … நான் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார் (வச. 2) அவர் பரலோகத்தைக் குறிப்பிவதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாம் நன்கு பயன்படுத்தும், நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வீடு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார். அங்கு இயேசுவும் நாம் நேசிக்கும் நபர்களும் இருப்பார்.
சி.எஸ். லூயிஸ் “நம்முடைய தந்தை, நம்முடைய பயணத்தின் போது நம்மைச் சில மகிழ்ச்சியான தங்கும் விடுதிகள் மூலம் நம்மை பெலப்படுத்துகின்றார். ஆனால், நாம் அவற்றை நிரந்தரமாகத் தங்கும் இடமென நினைத்துவிடக் கூடாது” என எழுதுகின்றார். தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியான விடுதிகளுக்காக அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால், நம்முடைய நிலையான வீடு பரலோகத்திலிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். அங்கு “நாம் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். (1 தெச. 4:17)
சிலுவையின் வழியே
என்னுடன் பணிபுரியும் டாம் தன்னுடைய மேசையின் மீது 8’’க்கு12’’ அளவு கொண்ட கண்ணாடியினாலான சிலுவையொன்றறை வைத்திருக்கின்றார். அவனுடைய நண்பன் பில்லும் டாமைப் போன்று புற்று நோயிலிருந்து மீண்டவன். அவன் இந்தச் சிலுவையை, அதன் வழியே எல்லாவற்றையும் பார்க்க உதவியாயிருக்கும் எனக் கூறி, அதை டாமுக்குக் கொடுத்தான். அந்தக் கண்ணாடியினாலான சிலுவை அவனுக்கு தேவனுடைய அன்பையும், தேவன் அவனுக்கு வைத்திருக்கும் நல்ல நோக்கங்களையும் நினைவுபடுத்துவதாகக் கூறினான்.
இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் தங்களுடைய கஷ்டமான நேரங்களில் இது ஒரு சவாலானத் திட்டமாக இருக்கின்றது. தேவனுடைய அன்பின் மீது நமது நோக்கத்தைச் செலுத்துவதைவிட நம்முடைய பிரச்சனைகளின் மீது நம் எண்ணங்களைச் செலுத்துவது யாவருக்கும் எளிதானது.
பவுல் அப்போஸ்தலனின் வாழ்வு சிலுவை வடிவிலான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அவர் துன்பப்படும் நேரங்களில் தான், “துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை”
(2 கொரி. 4:9) என்கின்றார். மேலும் “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது” (வச. 17-18) என்கின்றார்.
காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு என்பது நம்முடைய பிரச்சனைகளை குறைத்துக் கொண்டோம் என்பதல்ல. பவுல் பார்நெட் என்பவர் இப்பகுதியைக் குறித்து “தேவன் நமக்கு வைத்திருக்கும் உறுதியான நோக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ வேண்டும் அல்லது நாம் அமைதலோடு ஏற்றுக்கொண்டு நம்முடைய வேதனையை நம்பிக்கை கலந்த வலியோடு வெளிப்படுத்த வேண்டும்” என விளக்குகின்றார்.
இயேசு அவருடைய வாழ்வையே நமக்காகத் தந்தார். அவருடைய அன்பு ஆழமும், தியாகமும் நிறைந்தது. நாம் நம் வாழ்க்கையை சிலுவையின் வழியாய் பார்க்கும் போது அவருடைய அன்பையும், உண்மையையும் காண முடியும். அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் வளரும்.
உன்னுடைய பேராவல் எது?
நான் செல்லும் வங்கியில் பணிபுரியும் ஒருவர் தன்னுடைய ஜன்னலின் அருகில் ஷெல்பை கோப்ரா ரோட்ஸ்டர் காரின் புகைப்படத்தை வைத்திருந்தார். (கோப்ரா என்பது போர்ட் கம்பெனியின் ஓர் உயர்தர கார்).
ஒரு நாள் நான் வங்கியில் என்னுடைய தொழில் சம்பந்தமான வேலையை செய்துகொண்டிருந்த போது, நான் அவரிடம் இந்த புகைப்படத்திலுள்ளது. அவருடைய காரா? எனக் கேட்டேன். “இல்லை” என பதிலளித்தார். “அது என்னுடைய பேராவல். நான் ஒவ்வொரு நாள் காலையும் எழுந்து வேலைக்குச் செல்வதே அதற்காகத்தான். ஒருநாள் நான் அந்தக் காரின் சொந்தக்காரனாவேன்” என்றார்.
நான் அந்த இளைஞனின் பேராவலைப் புரிந்து கொண்டேன். என்னுடைய நண்பர் ஒருவர் கோப்ரா கார் வைத்திருக்கின்றார். ஒரு சமயம் நான் அதனை ஓட்டினேன். அது ஒரு சாதாரண இயந்திரம்! உலகிலுள்ள அநேகக் காரியங்களைப் போன்றே கோப்ராவும் ஒன்று. அதற்காகவே வாழ்கின்ற வாழ்க்கை அர்த்தமற்ற ஒன்று, அளவிற்கு விலையேறப்பெற்றதன்று. தேவனை விட்டு விட்டு பிற பொருட்களை நம்புகிறவர்கள் “முறிந்து விழுந்தார்கள்” (சங். 20:8) என சங்கீதக்காரன் குறிப்பிடுகின்றார்.
ஏனெனில், நாம் தேவனுக்கென்று உருவாக்கப்பட்டோம். நம் அனுதின வாழ்வில் நாம் உண்மையென நம்பியிருக்கும் வேறெதுவும் நிலையானதல்ல. நாம் அதையும், இதையும் வாங்குகின்றோம். ஏனெனில், இவை நமக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தருமென நாம்’ நினைக்கின்றோம். ஒரு குழந்தையைப் போன்று, ஒரு டஜன் அல்லது அதற்கும் மேலாக கிறிஸ்மஸ் பரிசுகளைப் பெற்றிருந்தாலும் “இவ்வளவு தானா?” என நமக்குள்ளே கேட்கின்றோம். எப்பொழுதும் ஏதோ ஒன்று இல்லாதது போலவே தோன்றுகிறது.
இவ்வுலகிலுள்ள எந்தவொரு மிகச் சிறந்த பொருளாலும் நம்மை முழுவதும் திருப்திப்படுத்த முடியாது. அவற்றில் ஏதோ ஓர் அளவு இன்பம் இருக்கலாம். ஆனால், அந்த மகிழ்ச்சி சீக்கிரத்தில் மறைந்து விடும் (1 யோவா. 2:17) “தேவனிடமிருந்தேயன்றி, வேறோன்றின் மூலமாகவும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற முடியாது”. அப்படித் தரக் கூடிய ஒரு பொருளும் இல்லை என சி.எஸ். லூயிஸ் கூறுகின்றார்.