என்னுடைய நண்பர்களில் சிலர் சிறிதளவு சுகம் பெற்றிருக்கின்றனர். ஆனால், இன்னமும் அந்த வியாதியின் வேதனையோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். வேறு சில நண்பர்கள் தங்களுடைய குடிபழக்கத்திலிருந்து விடுவிக்கப்படடிருந்தும், அந்த தூண்டுதலிலிருந்தும், உள் உணர்விலிருந்தும் முற்றிலும் விடுபடமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவன் ஏன் இவர்களை முற்றிலுமாக சுகப்படுத்தாமல் இருக்கின்றார்? என நினைத்து ஆச்சிரியப்பட்டதுண்டு.

மாற்கு 8:2-26ல் வாசிக்கும்போது இயேசு ஒரு பிறவிக் குருடனை சுகப்படுத்தின நிகழ்ச்சியை வாசிக்கின்றோம். முதலாவது இயேசு அவனை அந்த கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார். பின்னர் அவனுடைய கண்களில் உமிழ்ந்து, அவன் மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா? எனக் கேட்டார். அவன், “நடக்கிற மனுஷரை மரங்களைப் போலக் காண்கின்றேன்” என்றான். இயேசு மறுபடியும் அவன் கண்களின் மேல் கைகளை வைத்தார். இப்பொழுது அவன் யாவரையும் தெளிவாகக் கண்டான்.

இயேசுவின் ஊழியகாலத்தில் இயேசுவின் வார்த்தைகளும், செயல்களும் மக்களையும், அவருடைய சீடர்களையும் அதிசயிக்கவும் குழப்பமடையவும் செய்தது (மத். 7:28, லூக். 8:10; 11:14) சிலரை அவரைவிட்டு ஓடும்படியும் செய்தது (யோவா. 6:66-66). இந்த இரு கட்ட அற்புதமும் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் அவனை உடனடியாக சுகப்படுத்தவில்லை?

ஏனென்பது நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மனிதனுக்கும் அவனுடைய சுகத்தைக் கண்ட அவருடைய சீடர்களுக்கும் அந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அவர் அறிவார். நாம் தேவனோடு கொண்டுள்ள உறவில், இன்னும் நெருங்கி வர நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். அனைத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாதாயினும், நம் வாழ்விலும், நாம் நேசிக்கின்றவர்களின் வாழ்விலும் தேவன் செயல்படுகின்றார் என்பதை நம்புவோம். நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற நமக்குத் தேவையான பெலனையும், தைரியத்தையும், தெளிவையும் அவர் தருவார்.