பள்ளத்தாக்கினூடே
ஹே வூ (அது அவளுடைய சொந்த பெயரல்ல) வட கொரியாவிலுள்ள தொழிலாளர் கேம்பில் சிறையிலடைக்கப்பட்டாள். அவள் அந்நாட்டு எல்லையைத் தாண்டி சீனாவிற்குள் செல்ல முயற்சித்ததால் பிடிபட்டாள். அங்கு அவள் இரவும் பகலும் பல கொடுமைகளைச் சகித்தாள். மிருகத்தனமான காவலாளிகளாலும், முதுகை உடையச் செய்யும் வேலையாலும், பனி போல குளிரும் தரையில் பூச்சிகள் பேன்களோடும், எலிகளோடும் போராடி குறைந்த நேரமே தூங்க முடிந்தததாலும் மிகவும் துன்பப்பட்டாள். ஆனால், தேவன் ஒவ்வொருநாளும் அவளோடிருந்து அவளுக்கு உதவினார். அந்தச் சூழலிலும் தேவன், எந்த கைதிகளோடு நம்மோடு பேச முடியும் என்பதைக் காட்டி, அவர்களோடு தன்னுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள உதவினார்.
அந்த காப்பகத்திலிருந்து விடுதலை பெற்ற பின்பு தென் கொரியாவில் வாழ்ந்தாள். வூ தான் சிறையிலிருந்த நாட்களைக் குறித்து எண்ணிப்பார்த்தாள். தன்னுடைய வாழ்வின் அநுபவம் முழுவதும் சங்கீதம் 23ல் தொகுக்கப்பட்டுள்ளது என்றாள். அவள் ஓர் இருளடைந்த பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்டிருந்தாலும் இயேசு அவளுடைய மேய்ப்பனாக இருந்து சமாதானம் கொடுத்தார். “சாவின் பள்ளத்தாக்கு போன்ற ஓரிடத்தில் தான் தங்க நேர்ந்தாலும் நான் எதைக் குறித்தும் அஞ்சவில்லை. ஒவ்வொரு நாளும் தேவன் என்னைத் தேற்றினார்” அவள் தேவனுடைய நன்மையையும் அன்பையும் ருசித்தபடியால், தேவன் அவளுக்கு தான் தேவனுடைய அன்பு மகள் என்ற உறுதியைக் கொடுத்தார். “நான் ஒரு பயங்கரமான இடத்திலிருந்தேன். ஆனாலும் தேவனுடைய நன்மையையும் அன்பையும் நான் உணர்ந்தேன்” என்றாள். அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பதாக அறிந்து கொண்டாள்.
வூவின் கதையைக் கேட்கும் போது நமக்கு அது ஊக்கத்தையளிக்கின்றது. அவள் பயங்கரமான சூழலிலிருந்த போதும் தேவனுடைய அன்பையும் வழிநடத்துதலையும் உணர முடிந்தது. தேவன் அவளைத் தாங்கி அவளுடைய பயத்துக்கு விலக்கிக் காத்தார். நாமும் இயேசுவைப் பின்பற்றுவோமாயின், அவர் நம்முடைய துன்பங்களின் வழியே நம்மை மென்மையாக நடத்துவார். நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், “நாம் கர்த்தருடைய விட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்” (23:6)
சொல்ல வேண்டிய நற்செய்தி
“உன்னுடைய பெயரென்ன?” அர்மான் என்ற ஈரானிய மாணவன் கேட்டான். நான் அவனிடம் என் பெயர் எஸ்டரா என்றேன். அவன் முகமலர்ச்சியோடு, “எங்களுடைய பெர்சியாவிலும் இத்தகைய ஒரு பெயருண்டு. அது ஸெட்டரே” என்றான். இந்த ஒரு சிறிய தொடர்பு ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவகுத்தது. நான் அவனிடம் வேதாகமத்திலுள்ள ஒரு நபர் எஸ்தர். அவள் பெர்சியாவிலிருந்த ஒரு யூத அரசி (தற்சமயம் ஈரான்) அவளுடைய கதையில் ஆரம்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி வரைக்கும் அவனுக்குச் சொன்னேன். எங்களுடைய உரையாடலின் விளைவாக அர்மான் எங்களுடைய வாரந்திர வேதாகம பாட வகுப்பிலும் கலந்து கொண்டு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள முற்பட்டான்.
இயேசுவின் சீடனான பிலிப்பு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, ரதத்தில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரியிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது, அது ஓர் உரையாடலுக்கு வழிவகுத்தது. “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” (அப். 8:30) என்று கேட்டான். அந்த எத்தியோப்பியன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கான அர்த்தம் விளங்கவில்லை. அப்பொழுது பிலிப்புவினுடைய கேள்வி சரியான நேரத்தில் வந்தது. அவன் உடனே பிலிப்புவை தன்னுடனே ரதத்தில் அமருமாறு அழைக்கின்றான். தாழ்மையோடு கவனிக்கின்றான். இது எத்தனை ஆச்சரியமான வாய்ப்பு என்பதை பிலிப்பு உணர்ந்துகொண்டு, பேசத் தொடங்கி இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான் (வச. 35).
பிலிப்புவைப் போன்று நாமும் நற்செய்தியைச் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம். நாம் வேலை செய்யுமிடத்தில், கடைகளில் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நபர்கள், இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படவும் நம்மை வழிநடத்தவும் தேவையான வார்த்தைகளை நமக்குத் தரவும் நாம் வேண்டுவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும், நாம் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.
எதிர்பாராத வெற்றியாளர்கள்
2018ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பாரததும், அனைவரையும் வாயடைத்து நிற்கச்செய்த காரியம் என்னவெனில், செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த உலக வீராங்கனை எஸ்தர் லீடெக்கா மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றாள். அது பனிச் சறுக்கல்! அதில் அவள் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றாள். யாராலும் செய்ய முடியதென கருதியிருந்த ஒரு போட்டியில், பனிக்சறுக்கலில் 26வது வீராங்கனையாக களமிறங்கிய அவள், நம்ப முடியாத அளவு முன்னிலைப் பெற்றாள்.
லீடெக்கா பெண்களுக்கான சூப்பர்-ஜி சறுக்கலுக்கும் வியத்தகு வகையில் தேர்வு செய்யப்பட்டாள். இந்த விளையாட்டு கீழ் நோக்கிய சறுக்கலையும், தடை சறுக்கலையும் உள்ளடக்கியது. இதில் அவள் தான் கடனாக வாங்கிய சறுக்குப் பலகைகளோடு .01 வினாடி முன்னிலையில் வெற்றி பெற்றாள். அங்கிருந்த செய்தியாளர்களும், பிற வீரர்களும் வேறு சில பிரசித்தி பெற்ற பனிசறுக்கர்களையே வெற்றிபெற எதிர்பார்த்திருக்க லீடெக்கா அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள்.
உலகம் எதிர்பார்ப்பது இப்படித்தான். வெற்றி பெறுபவர்களே மேலும் வெற்றி பெறுவர் என்றும், மற்றவர்கள் தோற்றுவிடுவர் என்று தான் உலகம் எதிர்பார்க்கும், இயேசு, “ஐசுரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதென்று… (மத். 19:23) சொன்ன போது, அவருடைய சீடர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. இயேசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகின்றார். ஐசுரியவான் (வெற்றி பெற்றவன்) எப்படி ஒரு தடைக் கல்லாக இருக்க முடியும்? நாம் பெற்றிருப்பவற்றின் மீது நம்பிக்கையை வைக்கும் போது, நம்மால் எதைச் செய்யமுடியுமோ அல்லது நாம் எப்படியிருக்கின்றோமோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் போது தேவன் மீது நம்பிக்கையை வைப்பது கடினமானது மட்டுமல்ல, இயலாததாகவும் மாறி விடுகின்றது.
தேவனுடைய இராஜ்ஜியம் நம்முடைய சட்ட திட்டங்களின்படி செயல்படுவதல்ல. “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச. 30). நீ முதலிலோ அல்லது கடைசியிலோ எங்கிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதே உண்மை அது, தகுதியற்ற நமக்கு தேவனால் அருளப்பட்ட கிருபை.
மாற்றம் வரலாம்
ஒரு சனிக்கிழமை மாலையில் எங்கள் ஆலயத்திலுள்ள சில இளைஞர்கள் பிலிப்பியர் 2:3-4ல் குறிப்பிட்டுள்ளவற்றைக் குறித்து ஒருவரையொருவர் சில கடினமான கேள்விகளைக் கேட்கும்படி கூடி வந்திருந்தனர். “நீங்கள் ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” சில கடினமான வாதங்கள் என்னவென்றால். எவ்வளவு அடிக்கடி நீ மற்றவர்கள் மீது கரிசனையுடையவனாயிருக்கின்றாய்? மற்றவர்கள் உன்னைக் குறித்து எப்படி விமர்சிக்கின்றனர்? பெருமையானவனென்றா? தாழ்மையானவனென்றா? ஏன்?
நான் அதனை கவனித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய வெளிப்படையான பதில்கள் என்னுடைய ஆர்வத்தை ஈர்த்தன. இளைஞர்கள் தங்களுடைய குறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்களை மாற்றிக் கொள்வது கடினமான காரியம் என ஒத்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள் மாற வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது. ஓர் இளைஞன், “தன்னலம் என்பது என்னுடைய இரத்தத்திலேயேயுள்ளது” எனப் புலம்பினான்.
இயேசு கிறிஸ்துவின் ஆவி நமக்குள்ளே வாசம் பண்ணினால், அவர் மூலமாக நமக்குள்ளேயுள்ள தன்னலமான எண்ணங்கள் மறைந்து, பிறருக்குப் பணி செய்பவராக நம்மை மாற்ற முடியும். எனவேதான் பவுல், பிலிப்பி சபையினரிடம் தேவன் அவர்களுக்குச் செய்துள்ளவற்றையும், அவர்களை தேவன் மாற்றியுள்ளதையும் குறித்துச் சிந்திக்கச் சொல்கின்றார். தேவன் அவர்களை கிருபையாக ஏற்றுக் கொண்டார். தமது அன்பினால் அவர்களைத் தேற்றினார். அவர்களுக்கு உதவும்படி பரிசுத்த ஆவியை அவர்களுக்குள் கொடுத்துள்ளார் (பிலி. 2:1-2). அவர்களும், நாமும், நம்மைத் தாழ்த்துவதேயன்றி, வேறெவ்வாறு அந்த கிருபையை பெற பதில் செய்ய முடியும்?
ஆம், நம்முடைய மாற்றத்திற்குக் காரணமானவர் தேவனே. அவராலேயே நம்மை மாற்றமுடியும். ஏனெனில் தேவனே நம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (வச. 13) நாமும் நம்மீது கவனம் செலுத்துவதை விட்டு, தாழ்மையோடு பிறருக்குப் பணிசெய்வோம்.
சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.
இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).
ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.
ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.
ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.
புது இருதயம் தேவையா?
என்னுடைய தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவருடைய மருத்துவர், அவருடைய இருதயத்தை நன்கறிய ஒரு சோதனை செய்தார். விளைவு? மூன்று இரத்த நாளங்களிலே அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 14 ஆம் நாள் மூன்று இடங்களில் துணைப்பாதை அமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய நிர்ணயிக்கப்பட்டது. என்னுடைய தந்தை அந்த நாளை ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் நாளாக எதிர்பார்த்தார். “வாலன்டைன்ஸ் தினத்தன்று நான் ஒரு புதிய இருதயத்தைப் பெற்றுக் கொள்வேன்” என்றார். அதுவும் நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை நன்றாகச் செய்யப்பட்டது. போராடிக் கொண்டிருந்த அவருடைய இருதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் நடைபெறும்படி புதுப்பிக்கப்பட்ட புது இருதயத்தைப் பெற்றுக் கொண்டார்.
என்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை, தேவன் நமக்குக் கொடுக்கின்ற புதிய வாழ்வை நினைவுபடுத்தியது. ஆவிக்குரிய குழாய்களை பாவம் அடைத்துக் கொள்வதால் நாம் தேவனோடு உறவுகொள்ள தடுமாறுகின்றோம். இந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை தேவை.
எசேக்கியேல் 36:26ல், தேவன் இதனையே தமது ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். இஸ்ரவேல் ஜனங்களிடம், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து… கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” மேலும், “நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்” (வச. 25), “உங்கள் உள்ளத்தில் என் ஆவியை வைத்து… (வச. 27). நம்பிக்கையிழந்த ஒரு ஜனத்திற்கு ஒர் புதிய துவக்கத்தைத் தருகின்றார். வாழ்வைப் புதிதாக்குகின்றார்.
இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இந்த வாக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. நாம் அவரை விசுவாசிக்கும் போது புதிய ஆவியுள்ள இருதயத்தைப் பெற்றுக் கொள்வோம். அந்த ஆவியானவர் நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் நீக்கி, நம்மைச் சுத்தமாக்கி புதிய இருதயத்தைத் தருகின்றார். தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்ட நம்முடைய புதிய இருதயம், வாழ்வுதரும் கிறிஸ்துவின் புதிய இரத்தத்தினால் இயங்குகின்றது. நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாய் வாழ்வோம் (ரோம. 6:4)
விழிப்பாயிரு
நான் வெப்பமான தென்புற பட்டணங்களிலேயே வளர்ந்ததால், வடபுறம் இடம் பெயர்ந்த போது பல மாதங்களாக பனிபடர்ந்து காணப்படும் நீண்ட சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டக் கற்றுக்கொள்ள பல நாட்களாயின. நான் முதல் முறையாக, கடினமான குளிர்காலத்தைச் சந்தித்தபோது மூன்று முறை பனிக்குள் சிக்கி, வெளியேற வழிதெரியாமல் திகைத்தேன்! ஆனால், பல ஆண்டு அநுபவத்திற்குப் பின், பனி நேரங்களிலும் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்குக் கற்று கொண்டேன். பனிச்சூழலில் மிகவும் நன்றாக கார் ஓட்டக் கற்று கொண்டேனென என்னைக் குறித்து சற்று அதிகமாகவே நினைத்துக் கொண்டேன். நான் மிகவும் விழிப்பாக, நிறுத்தினேன், அப்பொழுது கருமையான இருப்பதை ஒரு பனிக் குவியலின் மீது மோதி, வழுக்கி சாலையோரமிருந்த ஒரு டெலிபோன் கம்பத்தில் மோதினேன்.
நல்ல வேளை, ஒருவரும் காயப்படவில்லை. ஆனால், அன்று நான் ஒன்றினைக் கற்றுக்கொண்டேன். நான் நன்றாகத்தான் ஓட்டுகிறேன் என்று எத்தனை ஆபத்தை விளைவிக்கின்றது என்பதைத் தெரிந்து கொண்டேன். கவனமாயிருப்பதற்குப் பதிலாக, காரை தானாக ஓட்டும் ஒரு (Auto Pilot) போட்டிருந்தேன்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் இத்தகைய விழிப்புணர்வை செயல்படுத்துவது அவசியமாயிருக்கின்றது. வாழ்க்கையில் சிந்தனையில்லாமல் வழுக்கிக் கொண்டு செல்லும் நிலையை கவனமற்றிருப்பது விசுவாசிகள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதென பேதுரு எச்சரிக்கின்றார். விழிப்பாயிருங்கள் என்கின்றார் (1 பேது. 5:8). பிசாசானவன் நம்மை அழிப்பதற்கு சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றான். எனவே நாமும் சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும், விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும் விழிப்பாயிருக்க வேண்டும் (வச. 9) ஆனால், இது நம்முடைய சுயபெலத்தினால் செய்யக் கூடிய ஒன்றல்ல. “சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலை நிறுத்துவார்” (வச. 10) அவருடைய வல்லமையால் நாம் விழிப்பாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி தேவனைப் பற்றிக்கொள்வோம்.
நீண்ட கால ஜெபம்
நீண்ட கால ஜெபம்
சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு
கிறிஸ்மஸ் விடுமுறையின் போது எங்கள் குடும்பத்தின் ஐந்து பேரும் ரோம் நகருக்குச் சென்றிருந்தோம். ஒரே இடத்தில் இத்தனை அதிகமான ஜனக்கூட்டம் நிரம்பியிருக்கும் காட்சியை நான் இதற்குமுன் கண்டதேயில்லை. கூட்டத்தினூடே நாங்கள் ஊர்ந்து சென்று வாட்டிக்கன், கொலிசியம் போன்ற இடங்களைப் பார்வையிட்டோம். நான் என்னுடைய குழந்தைகளிடம் சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வோடு இருக்குமாறு அடிக்கடி வலியுறுத்திக் கொண்டேயிருந்தேன். நீ எங்கிருக்கின்றாய்,
யார் உன்னைச் சுற்றியிருக்கின்றார்கள், உன்னைக் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பனவற்றின் மீது கவனமாயிருக்கும்படி கூறிக் கொண்டேயிருந்தேன். நாம் இருக்கின்ற இடமும், நம்மைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாப்பானவையல்ல எனக் கூறும்படியான ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அலைபேசிகளையும் காதில் வைக்கும் மைக்ரோ போன்களையும் பயன்படத்திக் கொண்டிருப்பதால் பெரும்பாலான சிறியவர்கள் (பெரியவர்களும்) தன்னைச் சுற்றியிருப்பவற்றைக் குறித்து விழிப்போடிருக்க பழகிக்கொள்வதில்லை.
சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு என்பதை பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்காக பவுல் ஏறெடுத்த ஜெபத்தில் காணலாம். பிலிப்பியர் 1:9-11ல் உள்ளது. பவுல் அவர்களின் மீது கொண்டுள்ள ஆவல் என்னவெனில் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும், எங்கிருக்கின்றோம், எப்படிப்பட்ட சூழலிலிருக்கின்றோம் என்பதைக் குறித்த ஓர் எண்ணத்தை நாளுக்கு நாள்; அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்;காக ஓர் இலக்கினை ஏற்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் மேலான ஒரு நோக்கத்தோடு பவுல் ஜெபிக்கின்றார். தேவனுடைய அன்பைப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஜனங்கள் தங்களைப் பரிசுத்தமும் குற்றமற்றவர்களாகவும் காத்துக் கொண்டு தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி கிறிஸ்து இயேசுவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக, இடறலற்றவர்களாக வாழும்படி ஜெபிக்கின்றார். தேவன் நம் வாழ்வில் இருக்கின்றார். நாம் அவரையே மேலும் மேலும் சார்ந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் இத்தகைய வாழ்வு நமக்குள் துளிர்க்கும், நாம் தேவனையும் பிரியப்படுத்த முடியும். மேலும் நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்தவர்களாய் அங்கு அவருடைய அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.