நான் வெப்பமான தென்புற பட்டணங்களிலேயே வளர்ந்ததால், வடபுறம் இடம் பெயர்ந்த போது பல மாதங்களாக பனிபடர்ந்து காணப்படும் நீண்ட சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டக் கற்றுக்கொள்ள பல நாட்களாயின. நான் முதல் முறையாக, கடினமான குளிர்காலத்தைச் சந்தித்தபோது மூன்று முறை பனிக்குள் சிக்கி, வெளியேற வழிதெரியாமல் திகைத்தேன்! ஆனால், பல ஆண்டு அநுபவத்திற்குப் பின், பனி நேரங்களிலும் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்குக் கற்று கொண்டேன். பனிச்சூழலில் மிகவும் நன்றாக கார் ஓட்டக் கற்று கொண்டேனென என்னைக் குறித்து சற்று அதிகமாகவே நினைத்துக் கொண்டேன். நான் மிகவும் விழிப்பாக, நிறுத்தினேன், அப்பொழுது கருமையான இருப்பதை ஒரு பனிக் குவியலின் மீது மோதி, வழுக்கி சாலையோரமிருந்த ஒரு டெலிபோன் கம்பத்தில் மோதினேன்.

நல்ல வேளை, ஒருவரும் காயப்படவில்லை. ஆனால், அன்று நான் ஒன்றினைக் கற்றுக்கொண்டேன். நான் நன்றாகத்தான் ஓட்டுகிறேன் என்று எத்தனை ஆபத்தை விளைவிக்கின்றது என்பதைத் தெரிந்து கொண்டேன். கவனமாயிருப்பதற்குப் பதிலாக, காரை தானாக ஓட்டும் ஒரு (Auto Pilot) போட்டிருந்தேன்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் இத்தகைய விழிப்புணர்வை செயல்படுத்துவது அவசியமாயிருக்கின்றது. வாழ்க்கையில் சிந்தனையில்லாமல் வழுக்கிக் கொண்டு செல்லும் நிலையை கவனமற்றிருப்பது விசுவாசிகள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதென பேதுரு எச்சரிக்கின்றார். விழிப்பாயிருங்கள் என்கின்றார் (1 பேது. 5:8). பிசாசானவன் நம்மை அழிப்பதற்கு சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றான். எனவே நாமும் சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும், விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும் விழிப்பாயிருக்க வேண்டும் (வச. 9) ஆனால், இது நம்முடைய சுயபெலத்தினால் செய்யக் கூடிய ஒன்றல்ல. “சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலை நிறுத்துவார்” (வச. 10) அவருடைய வல்லமையால் நாம் விழிப்பாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி தேவனைப் பற்றிக்கொள்வோம்.