2018ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பாரததும், அனைவரையும் வாயடைத்து நிற்கச்செய்த காரியம் என்னவெனில், செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த உலக வீராங்கனை எஸ்தர் லீடெக்கா மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றாள். அது பனிச் சறுக்கல்! அதில் அவள் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றாள். யாராலும் செய்ய முடியதென கருதியிருந்த ஒரு போட்டியில், பனிக்சறுக்கலில் 26வது வீராங்கனையாக களமிறங்கிய அவள், நம்ப முடியாத அளவு முன்னிலைப் பெற்றாள்.

லீடெக்கா பெண்களுக்கான சூப்பர்-ஜி சறுக்கலுக்கும் வியத்தகு வகையில் தேர்வு செய்யப்பட்டாள். இந்த விளையாட்டு கீழ் நோக்கிய சறுக்கலையும், தடை சறுக்கலையும் உள்ளடக்கியது. இதில் அவள் தான் கடனாக வாங்கிய சறுக்குப் பலகைகளோடு .01 வினாடி முன்னிலையில் வெற்றி பெற்றாள். அங்கிருந்த செய்தியாளர்களும், பிற வீரர்களும் வேறு சில பிரசித்தி பெற்ற பனிசறுக்கர்களையே வெற்றிபெற  எதிர்பார்த்திருக்க லீடெக்கா அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள்.

உலகம் எதிர்பார்ப்பது இப்படித்தான். வெற்றி பெறுபவர்களே மேலும் வெற்றி பெறுவர் என்றும், மற்றவர்கள் தோற்றுவிடுவர் என்று தான் உலகம் எதிர்பார்க்கும், இயேசு, “ஐசுரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதென்று… (மத். 19:23) சொன்ன போது, அவருடைய சீடர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. இயேசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகின்றார். ஐசுரியவான் (வெற்றி பெற்றவன்) எப்படி ஒரு தடைக் கல்லாக இருக்க முடியும்? நாம் பெற்றிருப்பவற்றின் மீது நம்பிக்கையை வைக்கும் போது, நம்மால் எதைச் செய்யமுடியுமோ அல்லது நாம் எப்படியிருக்கின்றோமோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் போது தேவன் மீது நம்பிக்கையை வைப்பது கடினமானது மட்டுமல்ல, இயலாததாகவும் மாறி விடுகின்றது.

தேவனுடைய இராஜ்ஜியம் நம்முடைய சட்ட திட்டங்களின்படி செயல்படுவதல்ல. “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச. 30). நீ முதலிலோ அல்லது கடைசியிலோ எங்கிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதே உண்மை அது, தகுதியற்ற நமக்கு தேவனால் அருளப்பட்ட கிருபை.