ஹே வூ (அது அவளுடைய சொந்த பெயரல்ல) வட கொரியாவிலுள்ள தொழிலாளர் கேம்பில் சிறையிலடைக்கப்பட்டாள். அவள் அந்நாட்டு எல்லையைத் தாண்டி சீனாவிற்குள் செல்ல முயற்சித்ததால் பிடிபட்டாள். அங்கு அவள் இரவும் பகலும் பல கொடுமைகளைச் சகித்தாள். மிருகத்தனமான காவலாளிகளாலும், முதுகை உடையச் செய்யும் வேலையாலும், பனி போல குளிரும் தரையில் பூச்சிகள் பேன்களோடும், எலிகளோடும் போராடி குறைந்த நேரமே தூங்க முடிந்தததாலும் மிகவும் துன்பப்பட்டாள். ஆனால், தேவன் ஒவ்வொருநாளும் அவளோடிருந்து அவளுக்கு உதவினார். அந்தச் சூழலிலும் தேவன், எந்த கைதிகளோடு நம்மோடு பேச முடியும் என்பதைக் காட்டி, அவர்களோடு தன்னுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள உதவினார்.

அந்த காப்பகத்திலிருந்து விடுதலை பெற்ற பின்பு தென் கொரியாவில் வாழ்ந்தாள். வூ தான் சிறையிலிருந்த நாட்களைக் குறித்து எண்ணிப்பார்த்தாள். தன்னுடைய வாழ்வின் அநுபவம் முழுவதும் சங்கீதம் 23ல் தொகுக்கப்பட்டுள்ளது என்றாள். அவள் ஓர் இருளடைந்த பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்டிருந்தாலும் இயேசு அவளுடைய மேய்ப்பனாக இருந்து சமாதானம் கொடுத்தார். “சாவின் பள்ளத்தாக்கு போன்ற ஓரிடத்தில் தான் தங்க நேர்ந்தாலும் நான் எதைக் குறித்தும் அஞ்சவில்லை. ஒவ்வொரு நாளும் தேவன் என்னைத் தேற்றினார்” அவள் தேவனுடைய நன்மையையும் அன்பையும் ருசித்தபடியால், தேவன் அவளுக்கு தான் தேவனுடைய அன்பு மகள் என்ற உறுதியைக் கொடுத்தார். “நான் ஒரு பயங்கரமான இடத்திலிருந்தேன். ஆனாலும் தேவனுடைய நன்மையையும் அன்பையும் நான் உணர்ந்தேன்” என்றாள். அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பதாக அறிந்து கொண்டாள்.

வூவின் கதையைக் கேட்கும் போது நமக்கு அது ஊக்கத்தையளிக்கின்றது. அவள் பயங்கரமான சூழலிலிருந்த போதும் தேவனுடைய அன்பையும் வழிநடத்துதலையும் உணர முடிந்தது. தேவன் அவளைத் தாங்கி அவளுடைய பயத்துக்கு விலக்கிக் காத்தார். நாமும் இயேசுவைப் பின்பற்றுவோமாயின், அவர் நம்முடைய துன்பங்களின் வழியே நம்மை மென்மையாக நடத்துவார். நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், “நாம் கர்த்தருடைய விட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்” (23:6)