மீட்கப்பட்ட நம்பிக்கை
சூரியன் கிழக்கில் உதிக்கிறதா? வானம் நீல நிறத்திலுள்ளதா? கடல் நீர் உப்பாயிருக்கின்றதா? கோபால்ட் கனிமத்தின் அணு எடை 58.9 தானே? சரி. நீ ஓர் அறிவியல் மேதை அல்லது எந்த ஒரு சிறிய காரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவனாயின் இந்தக் கடைசி கேள்விக்கு பதில் தெரிந்து வைத்திருப்பாய். மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்றே பதில் சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய கேள்விகளெல்லாம் கிண்டல் கலந்த கேள்விகளென்றே சொல்ல வேண்டும்.
நாம் சற்று கவனித்தோமாயின், இந்த நவீன காலத்தில் பழகிப் போன நம் செவிகள், இந்த செயலற்ற நிலையிலிருக்கும் அந்த மனிதனிடம் இயேசு கேட்கும் கேள்வியிலும் கிண்டல் கலந்திருக்கின்றது என்றே சொல்லக் கூடும். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” (யோவா. 5:6). நாம் எதிர்பார்க்கும் பதில் என்னவெனில், “என்னைக் கேலி செய்கின்றாயா? முப்பத்தெட்டு வருடங்களாக நான் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்!” என்பதே. ஆனால், இயேசுவின் கேள்வியில் எந்தக் கிண்டலும் இல்லை என்பதே உண்மை. இயேசுவின் வார்த்தைகள் எப்பொழுதும் கருணை நிறைந்தவை. அவருடைய கேள்விகள் எப்பொழுதும் நம்மை நன்மைக்கு நேராகவே வழிநடத்துகினன்றன.
அந்த மனிதன் சுகமடைய விரும்புகிறான் என்பதை இயேசு அறிவார். நீண்டகாலமாக ஒருவரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை என்பதையும் அவர் அறிவார். இந்த அற்புதத்திற்கு முன்பாக இயேசு இவனுக்குள் தணிந்து கிடந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வர விரும்பினார். எனவே தான் அவர் இந்த வெளிப்படையான கேள்வியைக் கேட்கின்றார். பின்னர் அவனுடைய நம்பிக்கையின்படி செயல்படத் தூண்டுகின்றார். “எழுந்திரு, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நட” (வச. 8) என்கின்றார். இந்த செயலற்ற மனிதனைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றோம். தேவன் நம்மை கருணையோடு பார்க்கின்றார். அவர் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ நம்மை அழைக்கின்றார்.
நீ அங்கிருக்கின்றாயா?
அவனுடைய மனைவி மீள முடியாதவகையில் நோய்வாய்ப்பட்டபோது, மைக்கேல் தான் தேவனோடு வைத்துள்ள உறவால் பெற்றுள்ள சமாதானத்தை தன் மனைவியும் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஏங்கினான். அவன் தன்னுடைய விசுவாசத்தை அவளோடு பகிர்ந்து கொண்டான். ஆனால், அவளோ அதில் எந்தவொரு ஆர்வத்தையும் காட்டவில்லை. ஒரு நாள் மைக்கேல் அருகிலுள்ள புத்தகக் கடைக்குள் சென்ற போது ஒரு புத்தகத்தின் தலைப்பு அவனுடைய கண்களை ஈர்த்தது. “தேவனே, நீர் அங்கிருக்கின்றீரா? என்பதே அப்புத்தகம். அந்த புத்தகத்திற்கு அவள் எவ்வாறு பதிலளிப்பாள் என்ற சந்தேகத்தோடு, அநேக முறை அந்த புத்தகக் கடைக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்த மைக்கேல் கடைசியாக அப்புத்தகத்தை வாங்கினார். என்ன ஆச்சரியம்! அவள் அந்த புத்தகத்தை ஏற்றுக் கொண்டாள்.
அந்தப் புத்தகம் அவளுடைய இருதயத்தைத் தொட்டது. அன்றிலிருந்து அவள் வேதாகமத்தையும் வாசிக்க ஆரம்பித்தாள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மைக்கேலின் மனைவி சமாதானமாக, தேவன் தன்னை விட்டு விலகவும், கைவிடவும் மாட்டார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டவளாய் மரித்துப் போனாள்.
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு வழிநடத்தும்படி மோசேயை தேவன் அழைத்தபோது, அவனுக்கு வல்லமையைத் தருவதாக தேவன் வாக்களிக்கவில்லை. மாறாக தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கும் என்றார். “நான் உன்னோடே இருப்பேன்” (யாத். 3:12) என்றார். இயேசு. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, அவருடைய சீடர்களிடம் கடைசியாக பேசிய போது தேவனுடைய மாறாத பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடு இருக்கும் எனவும், அதனை அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக் கொள்வர் எனவும் வாக்களித்தார் (யோவா. 15:26).
நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க தேவன் பல வகைகளில் நமக்கு உதவுகின்றார். உலகப் பிரகாரமான வசதிகளையும், சுகத்தையும், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தருகின்றார். சில வேளைகளில் அவர் பிரச்சனைகளை சரிசெய்கிறார். ஆனால் மிகச் சிறந்த ஈவாக அவர் தம்மையே தந்துள்ளார். இதுவே நாம் பெற்றுள்ள மிகப் பெரிய பாக்கியம். வாழ்வில் எது நடந்தாலும் அவர் நம்மோடிருக்கின்றார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.
செலவழிக்கப்படல்
வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களுடன் பிரான்ஸ் தேசத்தின் தெற்குப் பகுதியில், ஒரு குளிர்ந்த இரவில் அனல் அடுப்பினருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அந்த நெருப்பினை உற்று நோக்கிய அந்த முன்னாள் பிரதம மந்திரி, பைன் மரத்துண்டுகள் எரியும்போது வெடித்து, ஸ்ஸ் என்ற ஓசையுடன் கொப்பளித்ததைக் கண்டார். உடனே அவர் தன்னுடைய கனத்த குரலில் “ஏன் இந்த மரத்துண்டுகள் கொப்பளிக்கின்றன எனத் தெரிந்து கொண்டேன். செலவழிக்கப்படுவதென்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்”என்றார்.
நம்முடைய தவறான செயல்களால் வரும் துன்பங்களும், விரக்தியும், ஆபாயங்களும், துயரங்களும் நாம் செலவழிக்கப்படுவதைக் காட்டுகின்றன. சூழ்நிலைகள் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மெல்ல நம் இருதயத்தை விட்டு எடுத்துவிடும். தாவீது, தன்னுடைய பாவச் செயலால் தான் செலவழிக்கப்படுவதை உணர்ந்தபோது, “நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று… என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று” (சங். 32:3-4) என எழுதினார்.
இத்தகைய துன்ப நேரங்களில் நாம் யாரிடம் உதவி கேட்போம்? யார் நமக்கு நம்பிக்கை தருவார்? ஊழிய பாரத்தினாலும், உடைக்கப்பட்ட உள்ளத்தாலும் நிறைந்த அநுபவங்களைக் கொண்ட பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை;” என்றார் (2 கொரி. 4:8-9).
இது எப்படி சாத்தியமாகும்? நாம் இயேசுவைச் சார்ந்து வாழ்வோமாயின், நல் மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்து நம் ஆத்துமாவை மீட்டு (சங். 23:3) நம்முடைய பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய பெலனைத் தருவார். அவர் நம் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு நடந்து வருகின்றார் (எபி. 13:5).
சமாதானத்தால் நிறைந்த இருதயங்கள்
நாற்பத்தைந்து ஆண்டுகளாக, விளையாட்டையே தன் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்த வீரர் ஜெரி கிரேமர், விடுபட்டபோது, தன்னுடைய விளையாட்டுத் துறையில் (புகழின் உச்சநிலை மரியாதையை) அடையவில்லை. ஆனால், அநேக வேறுவகையான சாதனைகளையும், புகழ்ச்சியையும் அவர் பெற்றிருந்தார். இந்த துறையின் உச்ச விருது அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அந்த மரியாதைக்கு அவர் பத்துமுறை சிபாரிசு செய்யப்பட்டும், அது அவருக்கு வாய்க்கவேயில்லை. அவருடைய நம்பிக்கை அநேக முறை உடைக்கப்பட்ட போதும் கிரேமர், “தேசிய கால்பந்து கழகம் என்னுடைய வாழ்வில் நூறு பரிசுகளை வழங்கியுள்ளது. ஆனால், எனக்குத் தரப்படாத ஒன்றினைத் குறித்து நான் கோபப்படுவதும் மனம் வருந்துவதும் முட்டாள்தனம்” என்றார்.
யாராயிருந்தாலும், இத்தனை அதிக முறை தனக்குச் சேர வேண்டிய மரியாதையை மற்ற விளையாட்டு வீரருக்குச் சாதகமாக வழங்கிய போது தனக்குள் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக் கொள்ளக் கூடும். ஆனால், கிரேமர் அவ்வாறில்லை. அவர் நடந்து கொண்ட விதம், நாம் எவ்வாறு நம்முடைய இருதயத்தை பொறாமையான எண்ணங்களால் கறைபடாதபடி பாதுகாப்பது என்பதை விளக்குகின்றது. “பொறாமையோ எலும்புருக்கி” (நீதி. 14:30) என வேதாகமம் கூறுகின்றது. நமக்குச் சொந்தமல்லாத ஒன்றின்மீது அதிக நாட்டம் உடையவராய், அதனையே சிந்தித்துக் கொண்டு, நாம் பெற்றுள்ள பல நன்மைகளை உணராதிருப்போமாயின் தேவன் தரும் சமாதானத்தை இழந்து விடுவோம்.
பதினொன்றாவது முறை ஜெரி கிரேமர் தேர்வு செய்யப்பட்டபோது, தேசிய கால்பந்து கழகத்தின் மிக உயர்ந்த மரியாதையை பிப்ரவரி 2018ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். நம்முடைய உலக ஆசைகளும் இறுதிவரை நிறைவேற்றப்படாமலிருக்கலாம். தேவன் நமக்கு தாராளமாகத் தந்துள்ள அநேகக் காரியங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவோமாயின் தேவன் நமக்குத் தரும் அமைதியான இருதயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் எதை அடைய விரும்பினோம், எதை அடையவில்லை என்பது காரியமல்ல, தேவன் நம் வாழ்வில் கொண்டு வரும் சமாதானத்தைப் பெற்று அதில் மகிழ்ச்சியாயிருப்பதே சிறந்த வாழ்வு.
பள்ளத்தாக்கினூடே
ஹே வூ (அது அவளுடைய சொந்த பெயரல்ல) வட கொரியாவிலுள்ள தொழிலாளர் கேம்பில் சிறையிலடைக்கப்பட்டாள். அவள் அந்நாட்டு எல்லையைத் தாண்டி சீனாவிற்குள் செல்ல முயற்சித்ததால் பிடிபட்டாள். அங்கு அவள் இரவும் பகலும் பல கொடுமைகளைச் சகித்தாள். மிருகத்தனமான காவலாளிகளாலும், முதுகை உடையச் செய்யும் வேலையாலும், பனி போல குளிரும் தரையில் பூச்சிகள் பேன்களோடும், எலிகளோடும் போராடி குறைந்த நேரமே தூங்க முடிந்தததாலும் மிகவும் துன்பப்பட்டாள். ஆனால், தேவன் ஒவ்வொருநாளும் அவளோடிருந்து அவளுக்கு உதவினார். அந்தச் சூழலிலும் தேவன், எந்த கைதிகளோடு நம்மோடு பேச முடியும் என்பதைக் காட்டி, அவர்களோடு தன்னுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள உதவினார்.
அந்த காப்பகத்திலிருந்து விடுதலை பெற்ற பின்பு தென் கொரியாவில் வாழ்ந்தாள். வூ தான் சிறையிலிருந்த நாட்களைக் குறித்து எண்ணிப்பார்த்தாள். தன்னுடைய வாழ்வின் அநுபவம் முழுவதும் சங்கீதம் 23ல் தொகுக்கப்பட்டுள்ளது என்றாள். அவள் ஓர் இருளடைந்த பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்டிருந்தாலும் இயேசு அவளுடைய மேய்ப்பனாக இருந்து சமாதானம் கொடுத்தார். “சாவின் பள்ளத்தாக்கு போன்ற ஓரிடத்தில் தான் தங்க நேர்ந்தாலும் நான் எதைக் குறித்தும் அஞ்சவில்லை. ஒவ்வொரு நாளும் தேவன் என்னைத் தேற்றினார்” அவள் தேவனுடைய நன்மையையும் அன்பையும் ருசித்தபடியால், தேவன் அவளுக்கு தான் தேவனுடைய அன்பு மகள் என்ற உறுதியைக் கொடுத்தார். “நான் ஒரு பயங்கரமான இடத்திலிருந்தேன். ஆனாலும் தேவனுடைய நன்மையையும் அன்பையும் நான் உணர்ந்தேன்” என்றாள். அவள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருப்பதாக அறிந்து கொண்டாள்.
வூவின் கதையைக் கேட்கும் போது நமக்கு அது ஊக்கத்தையளிக்கின்றது. அவள் பயங்கரமான சூழலிலிருந்த போதும் தேவனுடைய அன்பையும் வழிநடத்துதலையும் உணர முடிந்தது. தேவன் அவளைத் தாங்கி அவளுடைய பயத்துக்கு விலக்கிக் காத்தார். நாமும் இயேசுவைப் பின்பற்றுவோமாயின், அவர் நம்முடைய துன்பங்களின் வழியே நம்மை மென்மையாக நடத்துவார். நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், “நாம் கர்த்தருடைய விட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம்” (23:6)
சொல்ல வேண்டிய நற்செய்தி
“உன்னுடைய பெயரென்ன?” அர்மான் என்ற ஈரானிய மாணவன் கேட்டான். நான் அவனிடம் என் பெயர் எஸ்டரா என்றேன். அவன் முகமலர்ச்சியோடு, “எங்களுடைய பெர்சியாவிலும் இத்தகைய ஒரு பெயருண்டு. அது ஸெட்டரே” என்றான். இந்த ஒரு சிறிய தொடர்பு ஒரு நீண்ட உரையாடலுக்கு வழிவகுத்தது. நான் அவனிடம் வேதாகமத்திலுள்ள ஒரு நபர் எஸ்தர். அவள் பெர்சியாவிலிருந்த ஒரு யூத அரசி (தற்சமயம் ஈரான்) அவளுடைய கதையில் ஆரம்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி வரைக்கும் அவனுக்குச் சொன்னேன். எங்களுடைய உரையாடலின் விளைவாக அர்மான் எங்களுடைய வாரந்திர வேதாகம பாட வகுப்பிலும் கலந்து கொண்டு கிறிஸ்துவைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள முற்பட்டான்.
இயேசுவின் சீடனான பிலிப்பு, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, ரதத்தில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த எத்தியோப்பிய மந்திரியிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது, அது ஓர் உரையாடலுக்கு வழிவகுத்தது. “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?” (அப். 8:30) என்று கேட்டான். அந்த எத்தியோப்பியன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதற்கான அர்த்தம் விளங்கவில்லை. அப்பொழுது பிலிப்புவினுடைய கேள்வி சரியான நேரத்தில் வந்தது. அவன் உடனே பிலிப்புவை தன்னுடனே ரதத்தில் அமருமாறு அழைக்கின்றான். தாழ்மையோடு கவனிக்கின்றான். இது எத்தனை ஆச்சரியமான வாய்ப்பு என்பதை பிலிப்பு உணர்ந்துகொண்டு, பேசத் தொடங்கி இந்த வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான் (வச. 35).
பிலிப்புவைப் போன்று நாமும் நற்செய்தியைச் சொல்ல கடமைபட்டிருக்கின்றோம். நாம் வேலை செய்யுமிடத்தில், கடைகளில் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நபர்கள், இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்படவும் நம்மை வழிநடத்தவும் தேவையான வார்த்தைகளை நமக்குத் தரவும் நாம் வேண்டுவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையையும், நாம் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.
எதிர்பாராத வெற்றியாளர்கள்
2018ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பாரததும், அனைவரையும் வாயடைத்து நிற்கச்செய்த காரியம் என்னவெனில், செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த உலக வீராங்கனை எஸ்தர் லீடெக்கா மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றாள். அது பனிச் சறுக்கல்! அதில் அவள் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றாள். யாராலும் செய்ய முடியதென கருதியிருந்த ஒரு போட்டியில், பனிக்சறுக்கலில் 26வது வீராங்கனையாக களமிறங்கிய அவள், நம்ப முடியாத அளவு முன்னிலைப் பெற்றாள்.
லீடெக்கா பெண்களுக்கான சூப்பர்-ஜி சறுக்கலுக்கும் வியத்தகு வகையில் தேர்வு செய்யப்பட்டாள். இந்த விளையாட்டு கீழ் நோக்கிய சறுக்கலையும், தடை சறுக்கலையும் உள்ளடக்கியது. இதில் அவள் தான் கடனாக வாங்கிய சறுக்குப் பலகைகளோடு .01 வினாடி முன்னிலையில் வெற்றி பெற்றாள். அங்கிருந்த செய்தியாளர்களும், பிற வீரர்களும் வேறு சில பிரசித்தி பெற்ற பனிசறுக்கர்களையே வெற்றிபெற எதிர்பார்த்திருக்க லீடெக்கா அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள்.
உலகம் எதிர்பார்ப்பது இப்படித்தான். வெற்றி பெறுபவர்களே மேலும் வெற்றி பெறுவர் என்றும், மற்றவர்கள் தோற்றுவிடுவர் என்று தான் உலகம் எதிர்பார்க்கும், இயேசு, “ஐசுரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதென்று… (மத். 19:23) சொன்ன போது, அவருடைய சீடர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. இயேசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகின்றார். ஐசுரியவான் (வெற்றி பெற்றவன்) எப்படி ஒரு தடைக் கல்லாக இருக்க முடியும்? நாம் பெற்றிருப்பவற்றின் மீது நம்பிக்கையை வைக்கும் போது, நம்மால் எதைச் செய்யமுடியுமோ அல்லது நாம் எப்படியிருக்கின்றோமோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் போது தேவன் மீது நம்பிக்கையை வைப்பது கடினமானது மட்டுமல்ல, இயலாததாகவும் மாறி விடுகின்றது.
தேவனுடைய இராஜ்ஜியம் நம்முடைய சட்ட திட்டங்களின்படி செயல்படுவதல்ல. “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச. 30). நீ முதலிலோ அல்லது கடைசியிலோ எங்கிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதே உண்மை அது, தகுதியற்ற நமக்கு தேவனால் அருளப்பட்ட கிருபை.
மாற்றம் வரலாம்
ஒரு சனிக்கிழமை மாலையில் எங்கள் ஆலயத்திலுள்ள சில இளைஞர்கள் பிலிப்பியர் 2:3-4ல் குறிப்பிட்டுள்ளவற்றைக் குறித்து ஒருவரையொருவர் சில கடினமான கேள்விகளைக் கேட்கும்படி கூடி வந்திருந்தனர். “நீங்கள் ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” சில கடினமான வாதங்கள் என்னவென்றால். எவ்வளவு அடிக்கடி நீ மற்றவர்கள் மீது கரிசனையுடையவனாயிருக்கின்றாய்? மற்றவர்கள் உன்னைக் குறித்து எப்படி விமர்சிக்கின்றனர்? பெருமையானவனென்றா? தாழ்மையானவனென்றா? ஏன்?
நான் அதனை கவனித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய வெளிப்படையான பதில்கள் என்னுடைய ஆர்வத்தை ஈர்த்தன. இளைஞர்கள் தங்களுடைய குறைகளை ஏற்றுக்கொண்டாலும், தங்களை மாற்றிக் கொள்வது கடினமான காரியம் என ஒத்துக் கொள்கின்றனர். அவர்களுக்குள் மாற வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கின்றது. ஓர் இளைஞன், “தன்னலம் என்பது என்னுடைய இரத்தத்திலேயேயுள்ளது” எனப் புலம்பினான்.
இயேசு கிறிஸ்துவின் ஆவி நமக்குள்ளே வாசம் பண்ணினால், அவர் மூலமாக நமக்குள்ளேயுள்ள தன்னலமான எண்ணங்கள் மறைந்து, பிறருக்குப் பணி செய்பவராக நம்மை மாற்ற முடியும். எனவேதான் பவுல், பிலிப்பி சபையினரிடம் தேவன் அவர்களுக்குச் செய்துள்ளவற்றையும், அவர்களை தேவன் மாற்றியுள்ளதையும் குறித்துச் சிந்திக்கச் சொல்கின்றார். தேவன் அவர்களை கிருபையாக ஏற்றுக் கொண்டார். தமது அன்பினால் அவர்களைத் தேற்றினார். அவர்களுக்கு உதவும்படி பரிசுத்த ஆவியை அவர்களுக்குள் கொடுத்துள்ளார் (பிலி. 2:1-2). அவர்களும், நாமும், நம்மைத் தாழ்த்துவதேயன்றி, வேறெவ்வாறு அந்த கிருபையை பெற பதில் செய்ய முடியும்?
ஆம், நம்முடைய மாற்றத்திற்குக் காரணமானவர் தேவனே. அவராலேயே நம்மை மாற்றமுடியும். ஏனெனில் தேவனே நம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (வச. 13) நாமும் நம்மீது கவனம் செலுத்துவதை விட்டு, தாழ்மையோடு பிறருக்குப் பணிசெய்வோம்.
சகிக்க முடியாத துயரங்களையும் தாங்கி வாழல்
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அனுபவ செயல் திட்டம் என்ற அலைவழித் தொடர்புடைய ஒரு மிகப் பெரிய சமுதாயம், அந்த இணையதளத்தில் பல கோடி மக்கள் தங்களுடைய ஆழமான வேதனை தரும் அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அந்த உள்ளம் உடைக்கும் அனுபவங்களை நான் வாசித்தபோது, தங்களுடைய வேதனைகளைப் புரிந்துகொண்டு தங்களைப் பார்க்கக்கூடியவர்கள் இருக்க மாட்டார்களா என ஏங்கிப் பரிதவிக்கும் இருதயங்களைக் குறித்துக் சிந்திக்கலானேன்.
இத்தகைய வாழ்வு தரும் கொடை எப்படி உதவ முடியும் என்பதை, ஆதியாகமத்தில் ஓர் இளம் பணிப்பெண் வெளிப்படுத்துகின்றாள். எகிப்தின் மன்னன் பார்வோன் ஆபிராமுக்கு கொடுத்த அடிமைப் பெண் ஆக ஆகார் இருக்கலாம். (ஆதி. 12:16,16:1). ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு பிள்ளையில்லாதிருந்தபடியால் அவள் ஆபிராமைத் தன்னுடைய அடிமைப் பெண் ஆகார் மூலம் தனக்கு பிள்ளை தரும்படி கேட்கின்றாள். இது நமக்கு ஏற்றுக் கொள்ள வருத்தமானதாக இறுப்பினும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. ஆகார் கர்ப்பவதியானபோது, அங்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. சாராய் அவளைக் கடினமாக நடத்தினபடியால் அவள் தன் நாச்சியாரைவிட்டு வனாந்திரத்திற்குத் தப்பி ஓடினாள் (16:1-6).
ஆகார் சங்கடமான சூழலிலிருக்கின்றாள். கர்ப்பிணியாயிருக்கின்றாள், தனிமையில் கடினமான பாலைவனத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஆனால். பரிசுத்தரின் கண்களுக்கு அவள் மறைவாயிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் ஆகாரைப் பார்த்து அவளோடு பேசி, அவளை ஊக்குவிக்கிறார். (வச. 7-12). இப்பொழுது அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வச. 13) என வெளிப்படுத்துகின்றாள்.
ஆகார் தன்னைக் கண்டவரைப் போற்றுகின்றாள். அதே தேவன் இயேசுவின் மூலம் இவ்வுலகில் வெளிப்பட்டபோது, “அவர் திரளான ஜனங்களைக் கண்டு பொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்தவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல்; மனதுருகினார்” (மத். 9:36). ஆகார் தன்னைப் புரிந்துகொண்ட தேவனைச் சந்தித்தாள்.
ஆகாரைக் கண்டு, புரிந்துகொண்ட தேவன் நம்முடைய வேதனைகளையும் காண்கின்றார் (எபி. 15-16) பரத்திலிருந்து நாம் தேற்றப்படுவதால், நம்மால் தாங்கக் கூடாத வேதனைகளையும் அவர் தாங்கக்கூடியதாக மாற்றுகின்றார்.