வகை  |  odb

வேதாகமம் பரிந்துரைக்கும் மருந்து

கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் தங்களுடைய நான்கு பள்ளி செல்லும் குழந்தைகளோடு “நகைச்சுவை இரவு” என்று ஓர் இரவைச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஓவ்வொரு குழந்தையும் தாங்கள் வாசித்த, கேள்விப்பட்ட அல்லது தாங்களே உருவாக்கிய நகைச்சுவைகளை இரவு உணவின் போது சொல்லும்படி கொண்டுவருவர். இந்த வழக்கம் மகிழ்ச்சியான நினைவுகளையும் வேடிக்கையையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள வழிவகுத்தது. அவர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் சிரிப்பு ஆரோக்கியத்தை கொடுத்ததாகவும், கடினமான நாட்களில் ஆவியில் புத்துணர்ச்சி அளிக்க சிரிப்பு உதவியதாக கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் உணர்ந்தனர்.

சாப்பாட்டு மேசையைச் சுற்றியமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொள்வதின் நன்மையை சி.எஸ்.லூவிஸ் “ஒரு வீட்டிலுள்ளவர்கள் சாப்பாட்டு வேளையின் போது சிரித்து மகிழ்வதற்கு இணையாக எந்தவொன்றையும் சூரியன் இப்புவியில் கண்டதில்லை” எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு மகிழ்ச்சியான உள்ளத்தைப் பெற்றுக்கொள்வதின் ஞானத்தைக் குறித்து நீதிமொழிகள் 17:22ல் மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்” என வாசிக்கின்றோம். இந்த நீதிமொழி சுகத்தையும், ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறது. நாம் நம்முடைய இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொண்டால் அது மிகப் பெரிய பலனைத் தரக் கூடிய, விலை குறைந்த மருந்து என்கின்றார்.

நம்மனைவருக்கும் வேதாகமம் கூறுகின்ற இந்த மருந்து அவசியம். நாம் நம்முடைய உரையாடல்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவோமேயாயின் அது நம் உரையாடல்களில் வரும் விவாதங்களைத் தவிர்த்துவிடும். பள்ளியில் மன அழுத்தத்தைத் தரும் தேர்வுக்குப் பின்னரும், ஒரு நாளின் கடின வேலைக்குப் பின்னரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவுகின்றது. குடும்ப நபர்களுக்கிடையேயும், நண்பர்களுக்கிடையேயும் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்போது. அந்த இடம் நாம் இங்கு நேசிக்கப்படுகின்றோம் என்று உணரக் கூடிய பாதுகாப்பான இடமாக மாறுகிறது.

உன்னுடைய வாழ்விலும் அதிக சிரிப்பை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உன்னுடைய ஆன்மாவிற்கு “நல்ல மருந்தைக்” கொடுக்க விரும்புகின்றாயா? ஒரு மகிழ்ச்சியான இருதயத்தை உருவாக்கிக் கொள்ளும்படி வேதாகமம் உன்னை ஊக்கப்படுத்துகின்றது என்பதை நினைவில் கொள்.

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்

என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும்  கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.

நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).

தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

அழகினை ரசித்தல்

ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சத்தைப் போன்று அந்தப் படம் என் கண்களைக் கவர்ந்தது. ஒரு பட்டணத்திலுள்ள பெரிய மருத்துவமனையின் நீண்ட வழியில் அது வைக்கப்பட்டிருந்தது. அழகிய வண்ணங்களால் சித்திரம் தீட்டப்பட்ட நவாஜோ என்ற அமெரிக்க பழங்குடியினரின் உருவங்கள் என்னைக் கவர்ந்து, அதன் அழகைக் கண்டு வியக்கும்படி செய்தது. “இதனைப் பாருங்கள்” என நான் என்னுடைய கணவன் டானை அழைத்தேன்.

அவர் எனக்குச் சற்று முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தார். நான் அங்கு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டு, தயங்கினபடியே இந்த ஒன்றினையே உற்று நோக்கி, “அழகாயிருக்கிறது” என முணுமுணுத்தேன்.

நம் வாழ்விலுள்ள அநேக காரியங்கள் மிகவும் அழகாயிருக்கின்றன. அவை தரம் மிகுந்த ஓவியங்கள், இயற்கை காட்சிகள் மனதைக் கவரும் கைவினைப் பொருட்கள், என பலப்பல இதேப் போன்றே ஒரு குழந்தையின் சிரிப்பும், ஒரு நண்பனின் ஹலோ என்ற சொல்லும், ராபின் பறவையின் நீல நிற முட்டைகளும் கடல் சிப்பியின் வலிமையான விளிம்புகளும் போன்று இன்னும் அநேகம். நம் வாழ்வு நமக்குக் கொடுக்கின்ற சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்படி, “ தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்கிறார்” (பிரச. 3:11) இந்த அழகில் நாம் தேவனுடைய நேர்த்தியான படைப்பின் ஒரு சிறிய பகுதியைக் காண முடிகிறது எனவும், வரப்போகிற அவருடைய மகிமையின் ராஜ்ஜியத்தின் ஒரு சிறிய காட்சியைக் காணமுடிகிறது எனவும் வேத வல்லுனர்கள் விளக்குகின்றனர்.

அவருடைய இராஜ்ஜியத்தின் நேர்த்தியான காட்சிகளை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும் எனவே தான் நாம் அதின் ஒரு சிறு பகுதியைக் கண்டு ரசித்துப் பார்க்கும்படி தேவன் இவ்வுலகின் அழகினைக் காட்டுகின்றார் இவ்விதமாக தேவன், “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கின்றார்” (வச. 11). சில நேரங்களில் நம் வாழ்வு மங்கிப்போய் பயனற்றுப் போனதைப் போன்று காணப்படும். ஆனால், தேவன் இரக்கமாக நம் வாழ்வின் அழகினை நாம் கண்டு ரசிக்கும்படியாகச் சில தருணங்களைத் தருகின்றார்.

நான் ரசித்த படத்தை உருவாக்கிய கலைஞன் ஜெரார்ட் கட்டிஸ் டிலானோ “தேவன் எனக்கு அழகினை உருவாக்கும் திறமையைக் கொடுத்துள்ளார். அதனையே நான் செய்யும்படியும் தேவன் விரும்புகின்றார்” எனக் கூறுகின்றார்.

இத்தகைய அழகினைப் பார்க்கும் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? தேவனுடைய மகிமையை நாம் கண்டு அநுபவிக்கும் போது வரப்போகின்ற நித்தியத்தை நினைத்து தேவனைத் துதிப்போம்.

தேவன் பார்ப்பதென்ன?

அதிகாலை வேளையில் நான் வேகமாக எங்களது முன் அறையின் ஜன்னல் வழியே எங்கள் வீட்டின் பின்புறமிருக்கும் அவாந்தரவெளியைப் பார்த்தபடியே கடந்து சென்றேன். அடிக்கடி, நான் ஒரு பருந்தையே அல்லது ஓர் ஆந்தையையோ மரக் கிளைகளில் அமர்ந்திருக்கக் காண்பேன். அவை அந்தப் பகுதி முழுவதையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் காலைப் பொழுதில், ஒரு மொட்டைத்தலை கழுகு உயர்ந்த கிளையொன்றில் அமர்ந்திருக்கக் கண்டு வியந்தேன். அது அந்தப் பகுதி ழுழுவதையும் தன்னுடைய எல்லைப்பகுதி என்ற எண்ணத்தோடு அதனைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது காலை உணவைத் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். அதனுடைய பார்வை ராஜபார்வையாயிருந்தது.

2 நாளாகமம் 16ல், ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி (தேவனுடைய தீர்க்கதரிசி) அரசனிடம், அவனுடைய செயல்களெல்லாம் ஒரு ராஜபார்வையால் கண்காணிக்கப்படுகின்றன என்கின்றார். அவன் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் “நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு இருக்கிறீர் (வச. 7). மேலும், “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9) என்றார். கர்த்தரைத் சார்ந்து கொள்ளாமல் மனிதரைச் சார்ந்து கொண்டபடியால் இது முதல் யுத்தங்கள் தொடர்ந்து வரும் என்றான்.

இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும் போது, தேவன் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு இரையின் மேல் பாய்கின்ற ஒரு பறவையைப் போல, நம்முடைய ஆபத்து நேரத்தில் அவர் நம்மீது பாய்ந்து நம்மைக் கவ்விக்கொள்வார் எனத் தவறாக உணர்ந்துவிடாதிருங்கள். அனானியின் வார்த்தைகள் நம்மை உண்மைக்கு நேராகக் கொண்டு செல்கின்றன. தேவன் நம்மைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்முடைய தேவையின் போது நாம் அவரைக் கூப்பிடும்படி அவர் காத்திருக்கின்றார் என்பதையே அனானி நமக்கு எடுத்துரைக்கின்றார்.

எங்களுடைய பின் வளாகத்தில் அமர்ந்திருந்த கழுகினைப் போல, கர்த்தருடைய கண்களும் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. உனக்குள்ளும், எனக்குள்ளும் உண்மையிருக்கிறதா எனக் கண்டறிய அவை பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. எப்படி அவரால் நமக்கு நம்பிக்கையையும், உதவியையும் கொடுக்க முடியும்?

நேற்றைய தினத்தைப் போன்றல்ல

என்னுடைய பேரன் ஜேய் சிறுவனாயிருந்தபோது, அவனுடைய பெற்றோர் அவனுடைய பிறந்தநாளின்போது அவனுக்கு ஒரு புதிய டீ-சட்டையை வாங்கிக் கொடுத்தனர். அவன் அதனை உடனடியாக அணிந்து கொண்டு, பெருமையாக அந்த நாள் ழுழுவதும் இருந்தான்.

மறுநாள் காலை அவன் அந்த டீ-சட்டையோடு காட்சியளித்தபோது அவனுடைய தந்தை அவனிடம், “ஜேய், இந்த டீ-சட்டை உனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றதா?” எனக் கேட்டார்.

“நேற்றைய தினத்தைப் போன்றில்லை” என்று பதிலளித்தான்.

பொருட்களைச் சேகரிப்பதும் இத்தகைய விளைவையே தரும். வாழ்வின் நல்ல பொருட்கள் கூட நாம் தேடுகின்ற ஆழ்ந்த, நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. நம்மிடம் அநேகப் பொருட்களிருந்தாலும் நாம் இன்னும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதில்லை.

புதிய ஆடைகள், புதிய வாகனம், நவீன அலைபேசி, கைக்கடிகாரம். என பொருட்களைக் சேகரிப்பதால் உலகத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். ஆனால், எந்தப் பொருளாலும் அது நேற்று தந்த மகிழ்ச்சியை இன்று தர இயலாது. ஏனெனில், நாம் தேவனுக்கென்று படைக்கப்பட்டவர்கள். எனவே எந்த உலகப் பொருளும் நம்மை நிரந்தர மகிழ்ச்சியைக் தராது. ஒரு நாள் இயேசுவும் தன்னுடைய உபவாசத்தை முடித்துக் கொண்டபோது பசியோடிருந்தார். சாத்தான் அவரிடம் வந்து அப்பங்களை உருவாக்கி தன்னுடைய பசியை ஆற்றிக்கொள்ளுமாறு சோதிக்கின்றான். இயேசு அவனிடம் உபாகமம் 8:3ல் சொல்லப்பட்டுள்ள, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வார்த்தையினால் பதிலளித்தார் (மத். 4:4).

அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ முடியாது. ஏனெனில் நாம் ஆவிக்குரிய மக்கள் என்ற உண்மையை இயேசு வெளிப்படுத்துகின்றார். எனவே உலகப் பொருட்களால் மட்டும் நாம் உயிர் வாழ முடியாது.

மிகச் மிகச் சிறியோருக்கு சேவை செய்தல்

அந்த  வீடியோ காட்சியில் ஒரு மனிதன் ஒரு கூட்டம் நிறைந்த ஒரு சாலையோரம் முழங்காலில் நின்றபடியே அருகிலுள்ள முட்புதரில் பற்றியெரிந்து கொண்டிருந்த நெருப்பினூடே கைகளைத்தட்டியும், கெஞ்சியும் ஏதோ ஒன்றினை வெளியே வரும்படி கேட்டுக் கொண்டிருந்தான். அது என்ன? ஒரு நாயாக இருக்குமோ? சில மணித்துளிகளில் முயலொன்று குதித்து வெளியே வந்தது. அந்த மனிதன், பயந்துகொண்டு வெளியே வந்த அந்த முயலை அள்ளி அணைத்தவாறு வேகமாகப் பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தார்.

எப்படி ஒரு சிறிய உயிரினத்தைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சி அந்த நாட்டின் மிகப்பெரிய செய்தியாக வெளிவந்தது? ஏதோ ஒன்று, இந்த சிறிய உயிரினத்தையும் அருமையாகக் கருதி இரக்கம் காட்டும்படிச் செய்தது. இத்தனை சிறிய உயிரினத்திற்கு இருதயத்தில் இத்தனை பெரிய இடம் கொடுப்பதென்பது எத்தனை பெரியது!

ஒரு மனுஷன் பெரிய விருந்து ஆயத்தம் பண்ணி விருப்பமுள்ள அனைவரையும் அழைத்ததைப் போன்று தேவனுடைய இராஜ்ஜியம் உள்ளது என்று இயேசு கூறினார். அந்த விருந்துக்கு மிகப் பெரிய முக்கியஸ்தர்களை மட்டுமல்ல, “ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக் கொண்டுவா” என்றார் (லூக். 14:21). நல்லவேளை, தேவன் பெலவீனரையும் சமுதாயத்தில் யாரும் கவனிக்காதவர்களையும் அழைத்து விருந்து சாலையை நிரப்பினார். இல்லையெனில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின் இழிவானவைகளையும் அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1 கொரி. 1:27-29).

என்னைப் போன்ற சிறிய மனிதனையும் இரட்சிக்கும்படி தேவன் எத்தனை பெரிய இருதயம் கொண்டுள்ளார்! இதற்குப் பிரதிபலனாக நான் எத்தனை பெரிய இருதயம் கொண்டிருக்க வேண்டும்? மிக எளிதாகச் சொல்ல முடியும், சமுதாயத்தில் மிகப் பெரியவர்களாகக் கருதப்படுகின்றவர்களை மனம் மகிழச் செய்வதன் மூலமாக அல்ல, சமுதாயம் மிகவும் அற்பமாகக் கருதும் நபர்களுக்குப் பணி செய்வதன் மூலமே, நான் பெரிய இருதயத்தைப் பெற முடியும்.