Archives: பிப்ரவரி 2016

ஜீவ இரத்தம்

மேரி ஏன் தேவனையும் அவர் குமாரனாகிய இயேசுவையும் விசுவாசித்தாள். ஆனால், இரட்சிப்பைக் கொடுக்க ஏன் இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள அவளுக்குத் தயக்கம் ஏற்பட்டது. ஏதேனும் ஒன்றை இரத்தத்தின் மூலம் கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நியாயப் பிரமாணத்தின்படி, கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும். என்று வேதம் கூறுகிறது (எபிரேயர் 9:22). மேரி ஆனின் கருத்துப்படி அது அவளை வெறுப்புக்குள்ளாக்குகிறது.

ஒரு சமயம் அவள் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அவள் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை…

மேலும் வளருதல்

என் பேரனும் அவனது நண்பர்களும் டி-பந்து விளையாடுவதைப் பார்ப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியையளிக்கும். இந்த பேஸ்பால் போன்ற விளையாட்டில் அதிகம் பயிற்சி பெறாத இளம் விளையாட்டு வீரர்கள், தவறான பகுதிக்கு ஒடுவார்கள் அல்லது பந்தைப் பிடிக்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அறியாது திணறுவார்கள். பேஸ்பால் விளையாட்டையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் விளையாடும் பொழுது இப்படிப்பட்ட தவறுகள் வினோதமாகக் காணப்படாது.

இவற்றில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியடைவதே காரியம்.

என்ன செய்வதென்று அறியாமல் அல்லது எல்லாவற்றையும் மிகச் சிறந்த முறையில் செய்யத் தெரியாத நிலையில் - இவ்வாறு…

உற்று கவனித்தல்

நான் என் வீட்டின் ஓர் நிகழ்ச்சிக்காக, என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, வரும் விருந்தினர் நான் சுத்தம் செய்தவற்றை பார்க்காமல், நான் சுத்தம் செய்யாதவற்றை மாத்திரம் பார்ப்பார்கள் என்று எண்ணி மனம் தளர்ந்து போனேன். இந்த எண்ணம் வேதாந்தரீதியாகவும், ஆத்தும ரீதியாகவும் ஓர் கேள்வியை எழுப்பியது. ஏன் மக்கள் சரியானதைப் பார்க்காதவாறு, சீக்கிரம் தவறான காரியங்களையே பார்க்கிறார்கள் என்பதே. நாம் அநேகமாக அன்பான காரியங்களை ஞாபகத்தில் வைக்காமல் கொடூரமான காரியங்களையே ஞாபகத்தில் வைக்கிறோம். குற்றங்களே நம் மனதை ஈர்க்கிறதேயன்றி தயாளமான செயல்களை…

எவ்வாறு முதுமை அடைய வேண்டும்?

இன்று எப்படி இருக்கிறீர்கள் அம்மா? என்று நான் சாதாரணமாக 84 வயதுள்ள என் சிநேகிதியை விசாரித்த பொழுது, மூட்டுக்களில் உள்ள வேதனைகளையும், வலிகளையும் காண்பித்து, “முதுமை என்பது கடினம்! ஆனால் தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார்” என்று மெல்லிய குரலில் பதிலளித்தார்கள்.

“என் வாழ்க்கையில் முதுமை அடைவது என்பது எனக்கு மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று “வீட்டை நெருங்கி” என்ற நூலில் பில்லி கிரகாம் கூறுகிறார். “நான் இப்பொழுது ஓர் வயது முதிர்ந்தவன். இது ஓர் இலகுவான காரியம் அல்ல என்று என்னை நம்புங்கள்.”…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?