Archives: ஜனவரி 2016

அவர் உனக்காகவே வந்தார்

பிரான்ஸ் கஃப்கா (Franz Kafka 1883-1924) தன்னுடைய “சோதனையும், கோட்டை அரண்மனையும்” (The Trial and The Castle) என்னும் நாவலில், மனுக்குலம் தனிமனித அடையாளமோ, மதிப்போ இன்றி வெறும் முகங்களாகவே மாறும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ளும் மனிதத்தன்மையற்ற ஜீவியமாகவே இவ்வாழ்வை சித்தரித்துள்ளார். மேலும் கஃப்கா (Kafka) “ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுச் செல்லும் கண்வேயர் பெல்ட்டை (Conveyor Belt) போல இவ்வாழ்க்கை, நம்மை ஒரு உயிரினமாகக் கருதாமல் உயிரற்ற பொருளாகவே கருதி சுமந்து செல்கிறது” என கூறியுள்ளார்.…

அவருடைய நாமத்தை உச்சரிக்கும் பொழுது

ஞாயிறு ஆராதனை வேளையிலே, அந்த பாடகர் பாடத் துவங்கியதும் முழு சபையும் நிசப்தமாயிற்று. கார்டன் ஜென்சன் (Gorden Jensen) என்பவர் ஆத்மார்த்தமான வரிகளைக் கொண்டு இயற்றிய ஒரு பழைய பாடலை கனிந்த அடிக்குரலில் அவர் பாடத் துவங்கியதும், அனைவரின் கவனமும்; அவர் மேலேயேயிருந்தது. “அவருடைய நாமத்தை உச்சரிக்கும் தூரத்தில் அவர் நம் அருகில் இருக்கிறார்” என்கிற அப்பாடல் தலைப்பு வெளிப்படுத்தும் உண்மை, நாம் வயதாக ஆக இன்னும் விலையேறப்பெற்றதாய் மாறிவிடுகிறது.

நமக்கு பிரியமானவர்களின் பிரிவை அநேக முறை நாம் அனுபவித்துள்ளோம். உதாரணத்திற்கு மகனோ, மகளோ…

அவள் தந்தையின் மிருகக்காட்சி சாலை

ஜீன் வில்லியம்ஸ் (June Williams) நான்கு வயதாய் இருந்த பொழுது அவளுடைய தந்தை தடுப்புகளற்ற, மிருககாட்சிசாலை அமைக்கும் படியாய் ஏழு ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வாங்கினார். ஒரு வரையறைக்கப்பட்ட இடத்தில் காட்டு விலங்குகளை சுதந்திர உணர்வுடன் வாழ திறமையாய் செயல்பட்ட தன் தந்தையை குறித்து நினைவு கூர்ந்தாள். இன்று 110 ஏக்கர் பரப்பளவில் 11000 விலங்குகளுக்கு புகலிடமாக விளங்கும் செஸ்டர் மிருகக்காட்சிசாலை (Chester Zoo) இங்கிலாந்து நாட்டின் மிக பிரபலமான மிருகக்காட்சி சாலையாகும். விலங்குகள் மேம்பாடு, அதைக்குறித்தான கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து…

பிறரை அழைப்பதற்கு முன்பாக

சிறு பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பதால், சில நேரங்களில் எளிதாகப் பயந்துவிடுகிறேன். என்னுடைய மகனுக்க ஒவ்வாமை என்றாலோ அல்லது மகளுக்கு இருமல் என்றாலோ உடனடியாக என் தாயாரைத் தொலைபேசியில் அழைத்து நான் செய்ய வேண்டியதைக் குறித்துக் கேட்பேன்.

என் தாயார் எனக்கு பெரிய ஆதாரம், ஆனால் சங்கீதங்களைப் படித்தபோது, அநேகந்தரம் மனுஷனால் செய்யக்கூடாத உதவிகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தேன். தாவீது மகாப்பெரிய ஆபத்தின் மத்தியில் இருப்பதை சங்கீதம் 18 ஆம் அதிகாரத்தில் காணலாம். பயத்தின் மத்தியில், மரணத்தின் விளிம்பில், வேதனையின் மத்தியில் அவன் தேவனை நோக்கிக்…

இது என்ன?

பல ஆண்டுகளாக என் தாயார் ஞாயிறு வேதாகமப் பள்ளியில் பாடம் நடத்தியுள்ளார். ஒரு வாரம், தேவன் இஸ்ரவேலரை வனாந்தரத்திலே போஷித்ததை குறித்து விளக்க நினைத்தார். அக்குழந்தைகளுக்கு அக்கதை தத்ரூபமாய் இருக்க, “மன்னாவை” குறிக்கும்படியாய் ரொட்டியை சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் மேல் தேனைத் தடவினார். வேதத்தில், “அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (யாத் 16: 31) என்று மன்னாவைக் குறித்து குறிப்பிட்டிருந்தபடியால் அவர் அவ்வாறு செய்தார்.

வானத்திலிருந்து வந்த மன்னாவை இஸ்ரவேலர் முதன்முதலில் தங்கள் கூடாரங்களுக்கு வெளியே பனியைப்போல தரையிலே படர்ந்திருக்க கண்டனர்.…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.