வகை  |  odb

யார் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்?

2016ம் ஆண்டு ரியோ டி ஜெனரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கச் செல்லும் விளையாட்டு வீரர்கள் அந்த ஊரில் எங்கு இருந்தாலும் இயேசுவைக் காணலாம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த ஊரில் 2310 அடி உயரமுள்ள கார்க்வோடா என்ற மலையின் உச்சியில், 100 அடி உயரமுள்ள கிறிஸ்து எனும் மீட்பர் என்ற மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கைகள் இரண்டையும் விரித்தபடி நிற்கும் இந்த பெரிய இயேசுவின் சிலை விரிந்து பரவிக்கிடக்கும் அந்த ஊரின் எந்தப் பகுதியிலிருந்தும், இரவும் பகலும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

கான்கிரீட்டாலும், சோப்புக்கல்லாலும்…

பூரணரல்ல

டேவிட் நாசர் தீயின் வழியாக குதித்தல் (Jumping Through Fires) என்ற அவரது புத்தகத்தில், அவரது ஆன்மீக பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இயேசுவோடு கூட அவரது உறவைத் துவங்கும் முன்பாக ஒரு கிறிஸ்தவ பதின் வயதுடைய குழுவினர் அவரோடு சிநேகிதர் ஆனார்கள். பொதுவாக அந்த சிநேகிதர்கள் தாராள மனதுடனும், நல் நடத்தையுடனும் எதைக்குறித்தும் தீர்ப்புச் சொல்லாமல் இருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் அவனது பெண் தோழியிடம் பொய் கூறினதை டேவிட் பார்த்தான். பொய் கூறின அவனது தோழன் பின்பு மனதில் குத்தப்பட்டவனாக அந்தப் பெண்ணிடம்…

நாம் கற்பனை செய்வதற்கும் மேலாக

எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த விளையாட்டுப் பொருட்களாகக் கருதப்பட்டவை எவை? ஒரு குச்சி, ஒரு பெட்டி, நூல், அட்டையினாலான ஒரு குழாய், தூசி, மண் இவைகள் தான் என்று யோனத்தான் H. லியு கருத்து தெரிவித்துள்ளார். இவைகள் அனைத்துமே எளிதாகக் கிடைக்கக் கூடியவைகள், பல்வேறு பயன் கொண்டவைகள், எல்லா வயதினருக்கும் தகுதியானவைகள், விலை குறைவானவைகள், மேலும் கற்பனா சக்தியினால் சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடியவைகள். இவைகள் செயல்பட பாட்டரிகள் தேவை இல்லை.

கற்பனா சக்தி நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, எபேசுவில் இயேசுவை…

ஒருபொழுதும் முயற்சியை விட்டு விடாதே

ஜூப் சோயிடிமெக், நெதர்லேண்டில் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுபவராக அறியப்பட்டிருந்தார். அவ்வாறு அவர் தலைசிறந்து விளங்கக் காரணம், அவரது முயற்சியை ஒருபொழுதும் இடையிலே கைவிடாதே, அவர் டூர் டி பிரான்ஸ் என்று நடைபெற்ற உலக புகழ் பெற்ற சைக்கிள் பந்தயத்தில் 16 முறை பங்கெடுத்தார். 5 முறை இரண்டாவது இடத்திலேயே வந்தும், அவர் விடாமுயற்சியோடு தொடர்ந்து பங்கெடுத்து 1980ல் முதல் இடத்தைப் பெற்றார். இதுதான் விடாமுயற்சி.

வெற்றி பெற்றவர்களில் அநேகர், “ஒருபொழுதும் முயற்சியை கைவிடாதே” என்ற சிறப்பான ஏணியின் மூலமாகத்தான் வெற்றியை அடைந்துள்ளார்கள். ஆயினும் அநேகர்…

மேலும் சிறப்பானது இனிமேல் தான் வர உள்ளது

உங்களது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்கள் கடந்த காலத்தில் இருந்ததா? அல்லது எதிர்காலத்தில் வரப்போகின்றதா? அந்தக் கேள்விக்குரிய பதிலும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் காலத்திற்கு ஏற்றபடி மாறுபடும். நாம் இளவயதுடையவர்களாக இருக்கும்பொழுது, நாம், நமது வளர்ச்சியைக் குறித்து எதிர்நோக்குகிறோம். நாம் முதியவர்கள் ஆனபொழுது கடந்த காலத்தை வாஞ்சித்து மறுபடியும் இளமையானவர்களாக மாற விரும்புகிறோம். நாம் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், தேவனோடு நடப்பவர்களாக இருந்தால், மேலும் சிறப்பான வாழ்க்கை இனிமேல் தான் வர இருக்கிறது.

மோசேயின் நீண்ட வாழ்நாள் காலத்தில் தேவன் செய்த அநேக அற்புதங்களை அவன்…

அனுமதிக் கட்டணம்

ஆண்டு தோறும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் லண்டனிலுள்ள தூய பவுல் பேராலயத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். 17ம் நூற்றாண்டின் பிந்திய காலத்தில் சர். கிறிஸ்டோபர் ரென் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அவ்வாலயத்தைப் பார்ப்பதற்கு வசூலிக்கும் அனுமதிக் கட்டணம் மிகவும் பொருத்தமானதே. கிறிஸ்தவ ஆராதனைக் கூடமான இதைச் சுற்றுலா பயணிகள் பார்ப்பது என்பது முக்கியமான ஒன்றல்ல. ஆனால் “பலதரப்பட்ட மக்கள் அப்பேராலயத்திற்குள் வரும்பொழுது இயேசு கிறிஸ்துவில் தேவனின் மறுரூபமாக்கும் பிரசன்னத்தை உணர்வடையச் செய்வது” தான் பிரதானமான நோக்கமாகும். அவ்வாலயக் கட்டடத்தை…

விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதல்

விசுவாசத்தை ஓர் மந்திர சூத்திரமாகக் கருதுவது ஓர் சோதனையாக இருக்கிறது. இதிலே நாம் வளர்ந்து பெருகினால் நாம் ஐசுவரியவான்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும், எல்லா ஜெபத்திற்கும் பதில் பெற்றுக்கொண்டவர்களாய் திருப்திகரமான ஓர் வாழ்க்கை வாழுவோம். ஆனால், எப்பொழுதுமே வாழ்க்கை நேர்த்தியான ஓர் சூத்திரமாக அமையாது. அதற்கு சாட்சியாக எபிரெய நிரூபத்தின் ஆக்கியோன் எபிரெயர் 11ம் அதிகாரத்தில் அனைவரையும் உலுக்கும் வகையில் பழைய ஏற்பாட்டில் “உண்மை விசுவாசத்தை” வெளிப்படுத்தும் வகையில் விசுவாச வீரர்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” என்று (எபி. 11:6)ல் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்.…

உன் அயலானை நேசி

மனித இன ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு குக்கிராமத்தில் பல மாதங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தன் பணியை முடித்தவராய் தன் அனுபவத்தைக் கூறுகிறார். தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக விமான நிலையம் செல்ல, ஓர் வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் பொழுது, நேரம் போவதற்காக சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு ஒன்றை நடத்த எண்ணினார். ஒரு மரத்திற்கருகாமையில் ஓர் பழக்கூடையையும், மிட்டாய்களையும் வைத்துவிட்டு அதை எடுக்க பிள்ளைகளிடம் ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். அவர்கள் ஓடுவதற்குரிய சைகையைக் காட்டியபொழுது முடிவு கோட்டை அடைய ஒருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ஓட முயற்சிக்கவில்லை. அதற்கு…

சிறந்த நண்பர் - எப்பொழுதும்

என் தந்தை அடிக்கடி எனக்குக் கூறும் ஞானமுள்ள ஆலோசனைகளில் நான் மதித்து ஏற்றுக்கொள்ளும் ஆலோசனை, “ஜோ, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஆகும்”. இது எவ்வளவு உண்மை! நல்ல நண்பர்கள் நமக்கிருக்கும் பொழுது நாம் ஒருபோதும் தனிமையாகவே இல்லை. அவர்கள் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கண்ணோக்கமாயிருப்பதுடன், உங்கள் சுக, துக்கங்களில் மிகவும் கரிசனையுடன் பங்கு கொள்வார்கள்.

இயேசு இவ்வுலகிற்கு வருவதற்கு முன் இரண்டு நபர்கள் மாத்திரம் தேவனின் சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது…