வகை  |  odb

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஆனைத்து தலைமுறையினரும்

உலகளாவிய பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில், 1933ஆம் ஆண்டு எனது பெற்றோருக்கு திருமணம் நடந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்ப முடியாத ஜனத்தொகை பெருக்கத்தில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. அக்காலத்தில்தான் நானும் என் சகோதரியும் பிறந்தோம். இளைய தலைமுறையைச் சார்ந்த 1970-1980களில் எங்களது நான்கு பெண்களும் பிறந்தார்கள். அப்படிப்பட்ட வேறுபட்ட காலங்களில் வளர்ந்த எங்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்து வேறுபட்ட கருத்துக்களை, நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கொண்டிருந்தோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பல்வேறு தலைமுறைகளில் வாழும் மக்கள், அவர்களது அனுபவங்களிலும், வாழ்க்கை மதிப்புகளிலும் மிக அதிக வேறுபட்ட எண்ணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். இது இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உண்மையாக இருக்கிறது. நாம் உடுத்தியிருக்கும் உடையில், நாம் கேட்டு மகிழும் பாடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மிடையே உள்ள ஆவிக்கேற்ற தொடர்பு அந்த வேறுபாடுகளைவிட பலமானது.

தேவனைத் துதித்துப்பாடும் சிறந்த பாடலான சங்கீதம் 145, நமது விசுவாசத்தின் பற்றுதியை அறிவிக்கிறது. “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்… அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியை கெம்பீரித்துப் பாடுவார்கள்” (வச. 4,7). பல்வேறு கால வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கு இருந்தாலும், நாம் ஒன்று கூடி “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவித்து” தேவனை கனப்படுத்துகிறோம் (வச. 11).

விருப்புகளும், வெறுப்புகளும் நம்மைப் பிரிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஊக்கம், ஒருவரையொருவர் போற்றுவது ஆகிய இவைகள் நம்மை ஒன்றாக இனைக்கிறது. நமது வயதும், வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டமும் வேறுபட்டிருந்தாலும், நாம் சிறந்த வாழ்க்கை வாழ ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு அனைவரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தலாம். “உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள்” (வச. 12).

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

மன்னிக்கப்பட்டாய் விட்டது

எனது சினேகிதன் நார்ம் குக் வேலை முடிந்து வீடு திரும்பும்பொழுது, சில சமயங்களில் அவனது குடும்பத்தாருக்கு எதிர்பாராத ஆச்சரியத்தைக் கொடுப்பான். அவன் முன் வாசல் வழியாக நுழையும் பொழுது “நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்” என்று உரத்தக்குரலில் சொல்லுவான். அவனது குடும்பத்தார் அவனுக்கு ஏதோ தீங்கு விளைவித்து, அதற்கான மன்னிப்பை அவனிடம் பெற வேண்டும் என்று அர்த்தமில்லை. அந்த நாள் முழுவதும் அவர்களை அறியாமலேயே அநேகப் பாவங்கள் செய்திருந்தாலும், தேவனுடைய கிருபையால் முற்றிலும் மன்னிக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர்களுக்கு அவன் ஞாபகப்படுத்தினான். “அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:7-9) என்று தேவனின் கிருபையைப் பற்றி யோவான் இந்த வசனங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஒளியில் நடப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதின் உருவகமாகும். தேவனுடைய ஆவியானவரால் இயேசுவைப்போல நடப்பது நாம் அப்போஸ்தலரோடு விசுவாசத்தின் ஐக்கியத்தில் இணைந்துவிட்டோம் என்பதற்கு அடையாளம் என்று யோவான் குறிப்பிட்டுக் கூறுகிறார். நாம் உண்மையான கிறிஸ்தவர்கள்தாம்; ஆனால் சில நேரங்களில் நாம் தவறானவற்றைத் தேர்ந்தெடுத்துவிடுவோம். ஆகவே நாம் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்றும் கூறுகிறார். ஆயினும் தேவ கிருபை நமக்கு அளவில்லாமல் அருளப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மன்னிப்பைப் பெறலாம்.

நாம் பாவமில்லாத பரிபூரணமானவர்கள் அல்ல ஆனால், இயேசுவால் மன்னிக்கப்பட்டவர்கள். அதுவே இன்றைக்குரிய நற்செய்தியாகும்.

இனிமையான தோழமை

முதியோருக்கான ஒரு சிறிய மருத்துவமனையிலிருந்த வயது சென்ற அந்தப் பெண், யாருடனும் பேசுவதுமில்லை, தனக்குக் தேவையான எதையும் கேட்டதுமில்லை. ‘கிரீச்’ என்று ஒலி எழுப்பக்கூடிய அவளது பழமையான அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக் கொண்டே தன் நேரத்தை கழிப்பாள். அவளைப் பார்க்க அதிக பார்வையாளர்களும் வர மாட்டார்கள். ஆகவே ஒரு இளம் தாதிப் பெண், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்வாள். அந்த வயது சென்ற பெண்ணிடம் கேள்விகள் கேட்டு அவளை பேச வைக்கவேண்டும் என்று முயற்சிக்காமல், அவளும் ஒரு அசைந்தாடும் நாற்காலியை அவள் அருகில் இழுத்துப்போட்டு, அந்தப் பெண்ணோடு இணைந்து ஆடுவாள். அநேக மாதங்களுக்குப் பின் அந்த வயதானப் பெண் “என்னோடுகூட சேர்ந்து நீ அசைந்தாடுவதற்கு நன்றி” என்று கூறினாள். அந்த இளம் தாதிப் பெண் அவளோடு கூட அமைதியாக நேரத்தைச் செலவிட்டு நட்புறவை பகிர்ந்து கொண்டதற்கு அவள் நன்றியோடிருந்தாள்.

இயேசு பரலோகத்திற்கு போகும்முன்பு அவருடைய சீஷர்களோடு என்றென்றும் இருக்கத்தக்கதாக ஒரு தேற்றரவாளனை அவர்களுக்கு அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். அவர் அவர்களை திக்கற்றோர்களாக விடப் போவதில்லை என்றும் அவர்களுக்குள்ளே என்றென்றும் வாசம் பண்ணத்தக்கதாக பரிசுத்த ஆவியை அனுப்பப்போவதாக வாக்குப் பண்ணினார் (யோவா. 14:17). இயேசுவை விசுவாசிக்கும் இன்றைய விசுவாசிகளுக்கும் அந்த வாக்குத்தத்தம் உண்மையாகவே உள்ளது. திரியேக தேவனாகிய அவர் நம்மில் வாசம் பண்ணுவதாக இயேசு கூறினார் (வச. 23).

நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு நெருக்கமான, உண்மையான, தோழராக கர்த்தர் இருக்கிறார். நமது போராட்டங்களில் அவர் நம்மை வழி நடத்தி நமது பாவங்களை மன்னித்து, நமது அமைதியான ஜெபங்களைக் கேட்டு நம்மால் சுமக்க இயலாத பாரங்களை அவரது தோள்களில் சுமப்பார்.

இன்று நாம் அவரது இனிய தோழமையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.

ஆழத்திலிருந்து

பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறி ஏதும் தோன்றுகிறதாவென்று அறிய, நீச்சல் குளத்தின் நீர்ப்பரப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நீச்சல் குளத்தில் உயிர்காப்புப் பணியாளராக அன்று, எனது ஆறு மணிநேர முறைமாற்று வேலையிலிருந்த நான், நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களது பாதுகாவல் குறித்து கண்காணிப்பதற்காக குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் நிற்கும் இடத்தைவிட்டு அகன்றாலோ அல்லது சற்று கவனக் குறைவாக இருந்தாலோ நீச்சல்குளத்திலிருப்பவர்களுக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும். காயத்தினாலோ அல்லது நீச்சல் திறமைக் குறைவினாலோ நீந்துபவர் நீரில் மூழ்கக்கூடிய ஆபத்திலிருந்தால், உடனே அவர்களை குளத்திலிருந்து தூக்கி பாதுகாப்பாக கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எனது பொறுப்பாகும்.

பெலிஸ்தர்களுக்கு எதிரான யுத்தத்தில் (2 சாமு. 21:15-22) தேவன் தாவீதுக்கு உதவி செய்த அனுபவத்தை “ ஆழமான தண்ணீரிலிருந்து” (வச. 22:17) தூக்கி எடுக்கப்பட்ட அனுபவத்தோடு தாவீது ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தாவீதின் வாழ்க்கையும், அவனோடுகூட இருந்த மக்களின் வாழ்க்கையும், அவர்களது சத்துருக்களால் ஏற்பட்ட ஆபத்துக்களால் நிறைந்திருந்தது. அழிவுக்குள் மூழ்கின தாவீதை தேவன் தூக்கி எடுத்தார். உயிர்காப்பாளர்கள் நீந்துபவர்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தேவனோ தாவீதின் மேலுள்ள பிரியத்தினால் (வச. 20) அவனைக் காப்பாற்றினார். தேவன் என்னை கண்காணித்து காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தினால் அல்லாமல் என்மேலுள்ள பிரியத்தினால், தேவன் என்னைக் காப்பாற்ற விரும்புவதை நான் உணரும் பொழுது, என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது.

நாம் நமது வாழ்க்கையின் போராட்டங்களினால் நாம் மேற்கொள்ளப்படும்பொழுது, நமது உயிர் காப்பாளரான தேவன் நமது போராட்டங்களை காண்கிறாரென்றும், நம்மேலுள்ள பிரியத்தினால் நம்மைக் கண்காணித்து காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.

நாம் திரும்ப கொண்டுவருவது என்ன?

நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு உலக நிகழ்ச்சிகளை சேகரிப்பதற்காக ஜான் F. பர்ன்ஸ் 40 ஆண்டுகளை செலவழித்தார். அவர் 2015ல் ஓய்வு பெற்றபின் எழுதின ஒரு கட்டுரையில் அவருடன் பணிபுரிந்த பத்திரிகையாளரும் புற்றுநோயினால் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவருமான அவரது நெருங்கிய நண்பரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து எழுதினார். “நீ எவ்வளவு தூரம் பயணம் செய்தாய் என்பது முக்கியமல்ல, ஆனால் நீ திரும்பி வரும்பொழுது என்ன கொண்டு வந்தாய் என்பதே முக்கியம் என்பதை மறந்துவிடாதே” என்று அந்த நண்பர் கூறினார்.

மேய்ப்பனாக இருந்த தாவீது போர் வீரனாக மாறி, இறுதியில் ராஜாவாகவும் ஆன அவனது வாழ்க்கைப் பயணத்தில், அவன் திரும்பிக் கொண்டு வந்தவைகள் அட்டவணையாக சங்கீதம் 37 இருக்கலாம். அந்த சங்கீதத்தில் நீதிமானுக்கும், பொல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை செய்யுள் வடிவத்தில் கூறுவதோடு, கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ அவரது கிருபை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும் பூண்டைப்போல் வாடிப் போவார்கள்” (வச. 1-2).

“நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்” (வச. 23,24).

“நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை” (வச. 25).

வாழ்க்கையில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின்மூலம், தேவன் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன? அவருடைய உண்மைத் தன்மையையும், அன்பையும் எவ்வாறு நாம் அனுபவித்துள்ளோம்?  நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் மூலம், தேவன் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன?  எந்த வகைகளில் தேவனுடைய அன்பு நமது வாழ்க்கையை உருவாக்கியுள்ளது?

நமது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடந்து வந்தோம் என்பது முக்கியமல்ல! நாம் திரும்ப கொண்டு வந்தது என்ன என்பதுதான் முக்கியமாகும்.

சமுதாயத்தைக் கட்டுதல்

நீங்கள் இணைந்து வாழ விரும்பாத ஒரு நபரோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைதான் “சமுதாயம்” என்று ஹென்ரி நவ்வென் கூறுகிறார். பொதுவாக நாம் நமக்குப் பிடித்தமான மக்கள் மத்தியில்தான் வாழ விரும்புகிறோம். அது சமுதாயமல்ல; அது ஒரு பொழுதுபோக்கு குழுவாக இருக்கலாம். அல்லது பிறருடன் சேர விரும்பாத சுயநலக் குழுவாக இருக்கலாம். ஒரு பொழுதுபோக்குக் குழுவை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த பண்பும், ஒருவரோடொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் தன்மையும், கடின உழைப்பும் தேவையாக உள்ளன.

சரித்திரத்திலேயே பலதரப்பட்ட மக்களை முதன் முதலாக ஒன்றாக இணைத்த நிறுவனம் கிறிஸ்தவ திருச்சபையாகும். ஆதித்திருச்சபையில் யூதர்களும், புறஜாதிகளும், ஆண்களும், பெண்களும்; அடிமைகளும், சுயாதீனர்களும் ஒரே சமமான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதைக் குறித்துப் பவுல் “தேவனுக்குள்ளே ஆதி காலமுதல் மறைந்திருந்த இரகசியம்” என்று வெகு தெளிவாக விளக்கியுள்ளார். திருச்சபையில் பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம், உலகத்தையும் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் ஈர்க்கத்தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று பவுல் கூறியுள்ளார் (எபே. 3:9-10).

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்றயத் திருச்சபை இச்செயலை செய்ய தவறிவிட்டது. ஆனாலும், நான் செல்லும் பல இடங்களில் திருச்சபையானது பல தலைமுறைகளை ஒன்றாக இணைக்கும் இடமாக உள்ளது. குழந்தைகளைக் கரங்களில் ஏந்தியுள்ள தாய்மார்கள், வேண்டாத நேரங்களில் புழுப்போல நெளிந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கும் சிறார்கள், எல்லா நேரங்களிலும் பொறுப்போடு நடக்கக்கூடிய பெரியவர்கள், போதகரது பிரசங்கம் நீண்டதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தால் உறக்கத்தில் ஆழ்ந்துபோகும் மக்கள் என்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியதுதான் திருச்சபை.

தேவன் நமக்கு அருளுகிற சமுதாய அனுபவத்தை நாம் பெற விரும்பினால், “நம்முடைய தரத்திற்கு ஒத்துவராத மக்களையும்”, நமது திருச்சபையிலே அங்கத்தினர்களாக சேர்த்துக்கொள்ளும் மனமுடையவர்களாக இருக்க வேண்டும்.