பன்றி இறைச்சியும் முட்டைகளும்
கற்பனைக் கதை ஒன்றில் கோழியும், பன்றியும் ஆகிய இரு விலங்குகள் சேர்ந்து உணவகம் ஒன்று துவங்குவது குறித்து பேசிக் கொண்டன. உணவு வகைகளைக் குறித்து அவை திட்ட மிட்ட போது, கோழி, பன்றி இறைச்சியும், முட்டையும் பரிமாறலாம் எனக் கூறியது. பன்றி இதனை மறுத்து “நன்றி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் முழுமையாக அர்பணிக்கப்பட வேண்டும்.” ஆனால், நீ இதில் கலந்து கொள்ள மாத்திரம் செய்யலாம் என்று கூறியது.
அந்த பன்றி தன்னை தட்டில் பரிமாறப்படுவதற்கு கவலைப்படவில்லை, தான் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. இயேசுவை முழுமனதோடு பின்பற்றவேண்டும் என்ற பாடத்தை எனக்குக் கற்று கொடுத்தது.
யூதாவின் ராஜாவாகிய ஆசா தன் ராஜ்ஜியத்தை காத்துக் கொள்வதற்காக தன் அரண்மனை மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியையும், பொன்னையும் எடுத்து சீரியாவின் ராஜா பெனாதாத்திடம் அனுப்பி இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும், அவனுக்கும் இருக்கும் உடன்படிக்கையை முறித்துப் போடும்படி அனுப்பினான். பெனாதாத் இதற்கு சம்மதித்து, இருவரும் இஸ்ரவேலை எதிர்த்தனர் (2 நாளா. 16:2).
ஆனால், கர்த்தருடைய தீர்க்கதரிசி அனானி ஆசாவிடத்தில் வந்து, கர்த்தர் ஏராளமான பகைஞர்களின் கைக்கு உம்மை விடுவித்திருந்தும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளாமல் சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு மதிகேடாய் நடந்து கொண்டீர் என்றான். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9).
நாம் நமது போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்கும் போது கர்த்தரே நமக்கு சிறந்த துணை என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் முழுமனதோடு அவருக்கு பணிசெய்ய அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.
கடைசியில் இருப்பது முதன்மையாகிறது
சமீப காலத்தில் நான் விமான பயணிகளின், முன் பதிவு எண் இல்லாதோரின் வரிசையில் கடைசியாக நின்றுகொண்டிருந்தேன். விமான இறக்கையின் அருகில் அமைந்த மத்திய வரிசையில் ஒரு இருக்கையை கண்டுபிடித்தேன். ஆனால், எனது கைப் பையை வைப்பதற்கு கடைசி வரிசையின் மேலுள்ள விரிவில்தான் இடம் இருந்தது. அப்படியானால் நான் அனைவரும் வெளியேறும் மட்டும் காத்திருந்து, கடைசியில் தான் எனது கைப்பையை எடுக்கமுடியும்.
நான் எனக்குள்ளாக சிரித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். அப்பொழுது “நீ காத்திருக்க வேண்டிய நேரம் உன்னை துக்கப்படுத்தாது அது உனக்கு நன்மையே செய்யும்” என்ற தேவனுடைய வார்த்தை எனக்குள்ளே தோன்றியது. எனவே விமானம் தரையிறங்கியதும், மிஞ்சிய நேரத்தை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள நான் தீர்மானித்து, சக பயணிகளின் உடைமைகளை கீழே இறக்குவதற்கும், விமான பணியாளரோடு சேர்ந்து சுத்தப்படுத்தவும் ஆரம்பித்தேன். சக பயணி ஒருவர் என்னை விமான பணியாளர் என்று எண்ணியபோது நான் மறுபடியும் சிரித்து கொண்டேன். வேளை வந்தபோது என் பையை எடுத்துக் கொண்டு இறங்கினேன்.
அந்த நாளின் அநுபவம் இயேசு தன் சீடர்களிடம் கூறிய வார்த்தையை நினைவுபடுத்தியது. “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” (மாற். 9:35).
நான் காத்திருக்க வேண்டிய அவசியமானதால் காத்திருந்தேன். ஆனால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்படி தங்களை வலிய ஈடுபடுத்திக் கொள்ளுபவர்களுக்கு, ‘கீழானவற்றை மேலாக்கும்’ தேவனுடைய ராஜ்ஜியத்தில் கனமுள்ள ஓர் இடமுண்டு.
‘நான் தான் முதல்” என முந்திக் கொள்ளும் இந்த அவசர உலகில் “இயேசுவும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28).
நாம் பிறருக்கு ஊழியம் செய்தலே தேவனுக்குச் செய்யும் சிறந்த ஊழியமாம். நாம் எவ்வளவு தூரம் நம்மைத் தாழ்த்துகிறோமோ அவ்வளவு தூரம் நாம் தேவனை நெருங்குகிறோம்.
குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது
ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.
ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.
இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).
இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.
பிறர் உணர்வை நமதாக்கிக் கொள்ளுதலின் வல்லமை
R70i என்னும் ஆடை முதுமை எப்படியிருக்கும் என்பதை செயற்கையாகக் காட்டும் ஓர் வகை ஆடை. அதில் ஒரு விசேஷித்த தலைக்கவசம் உண்டு. அதிலுள்ள கண்ணாடிகள் அதை நீங்கள் அணிந்தவுடனேயே உங்கள் பார்வையை மங்கச் செய்யும். அதிலுள்ள ஒலிபெருக்கிகள் காதுகள் சரியாகக் கேட்க விடாது, நடமாட்டத்தையும் குறைத்து விடும். அந்த உடையைப் போட்டுக்கொண்டால் இன்னும் நாற்பது வருடங்களில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும். வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் முதியோரின் பலவீனங்களையும் பிரச்சனைகளையும் அனுபவிக்கச்செய்து, அதன்மூலம் வயதானவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட முடியும். பத்திரிக்கையாளர் “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” நிருபர் ஜெப்ரி ஃபவுலர் ஒருமுறை இதை அணிந்து பார்த்து விட்டு “முதிர் வயதடைவது என்பது மறக்கமுடியாததும், சில வேளைகளில் சோர்வுக்குள்ளாக்கும் அனுபவம் மட்டுமல்ல, இந்தக் கருவி (ஆடை) முதுமையின் உண்மைத் தன்மையையும் அவர்களின் உணர்வுகளை நமதாக்கிக் கொள்ளும் பண்பைக் கற்றுத்தந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகை வேறு கண்ணோட்டத்துடன் பாக்கச் செய்கிறது என்றார்.
ஒருவரது உணர்வுகளைஅறிந்து அவரோடு அதைப் பகிர்ந்துகொள்வது என்பது ஓர் திறமை. இயேசுவைப் பின் பற்றினவர்களுக்கு கொடுமையான உபத்திரவம் வந்தபொழுது, எபிரெய நிருப ஆக்கியோன், விசுவாசிகளை “கட்டப்பட்டவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள் போல அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்:” என்று எழுதினார் (13:3).
இதைத்தான் நமது இரட்சகர் நமக்குச் செய்தார். இயேசு நம்மைப் போல் மாறினார் “…எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:17-18).
நம்மைப்போன்ற மனிதனாக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாடுபடுகிறவர்களோடு, அவர்கள், பாடுபடுகையில் நாமும் பாடுபடுகிறவர்கள் போல அவர்களுடன் நிற்க நம்மை அழைக்கிறார்.
நமது வல்லமையுள்ள தேவன்
ஒரு நாள் கடற்கரையில் நின்றுகொண்டு, கடலில் சறுக்குப்பலகைகளில், தங்கள் கைகளில் பாராசூட் போன்ற பட்டங்களைப் பிடித்துக்கொண்டு, காற்றினால் ஒவ்வொரு அலையாகத் தாண்டித்தாண்டி விளையாடியவர்களைக் கண்டு ரசித்தேன். கரைக்கு வந்த ஒருவனிடம், பெரிய பட்டத்தைப் பிடித்துக்கொண்டு சறுக்கும் அனுபவம் கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, சறுக்குப்பலகைகளில் அலைகளைத் தாண்டுவதைவிட இது எளிதாக உள்ளது. ஏனென்றால், காற்றின் வலிமையைக் கட்டுப் படுத்துகிறேன்” என்றான்.
அதன் பின், சறுக்குபவர்களைத் தள்ளுவது மட்டுமன்றி, என் முடியையும் கலைத்து முகத்தில் அறைகிற காற்றின் வலிமையை நினைத்துக்கொண்டே கடற்கரையில் நடந்தேன். தீடீரென்று நின்று நமது வல்லமையுள்ள சிருஷ்டிகரை நினைத்து அதிசயித்தேன். ஆமோஸ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி “தேவன் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றை சிருஷ்டித்தவரும் விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவருமாயிருக்கிறார்” (வச. 13)
இந்தத் தீர்க்கதரிசியின் மூலம், தேவன் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்தில் திரும்பி வர அழைக்கும் பொழுது தம்முடைய வல்லமையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (வச. 13). அவர்கள் அவருக்குக் கீழ்படியாமற்போனாலும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். இந்த இடத்தில் அவருடைய நியாயாத்தீர்ப்பை அறிந்தாலும் வேதத்தின் மற்ற பகுதிகளில் தம்முடைய குமாரனை பலியாக அனுப்பின அவருடைய தியாகமான அன்பைக்குறித்து வாசிக்கிறோம் (யோவா. 3:16).
தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வீசிய காற்றின் வலிமை தேவனுடைய மகத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இன்றைக்கு அப்படியொரு காற்று வீசுமானால் நாம் இன்று வல்லமையுள்ள தேவனை ஏன் தியானிக்கக்கூடாது?
இன்னும் மேலாக அறிதல்
நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.
அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).
வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.
தேவனுக்குத் தெரியும்
வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களால் துக்கத்தோடிருந்த ஒரு வாலிபப் பெண்ணை டீப்ட்டி ஆலயத்தில் சந்தித்தபொழுது. இவளது இருதயம் அவள்மேல் மனதுருகி, ஏதாவது உதவி செய்ய நினைத்தாள். ஒவ்வொரு வாரமும் அவளுக்கு ஆலோசனை கூறி அவளோடு ஜெபித்தாள். டீப்ட்டி அவளுக்கு நம்பிக்கையூட்டும் முன்மாதிரி. சபைத்தலைவர்கள் டீப்ட்டி எடுத்த முயற்சிகளை அறியாமல், அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆலோசகரை நியமிக்க தீர்மானித்தார்கள். ஒருவருமே அந்தப் பெண்ணைக்குறித்து அக்கறை கொள்ளவில்லையென்றும் குறை கூறினார்கள்.
தனக்கு எந்தப் புகழையோ பேரையோ டீப்ட்டி விரும்பவில்லையென்றாலும், அவளுக்குள் ஒரு சோர்வு உண்டானதை அவளால் தடுக்க முடியவில்லை. தான் எதுவுமே செய்யாததுபோல் இருக்கிறது என்று என்னிடம் கூறினாள்.
ஒருநாள், அந்த வாலிபப் பெண் டீப்ட்டியைக் சந்தித்து, ‘நீங்கள் எனக்களித்த ஆறுதலுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என்றாள். டீப்ட்டி உற்சாகமடைந்தாள். “நீ அவளுக்காகச் செய்ததை அறிந்திருக்கிறேன்” என்று தேவனே சொல்வதுபோலிருந்தது. டீப்ட்டி அந்தப் பெண்ணை தொடர்ந்து ஒழுங்காக சந்தித்து வந்தாள்.
சில வேளைகளில் நமது முயற்சிகளை ஒருவரும் கவனிக்காமலும் பாராட்டமலும் இருந்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், நாம் செய்வதை தேவன் அறிந்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. மற்றவர்கள் பார்க்காததை தேவன் பார்க்கிறார். மனிதரின் புகழ்ச்சிக்கென்று செய்யாமல், தேவனுக்கென்றே செய்யும் பொழுது, தேவன் நம்மேல் பிரியப்படுகிறார்.
ஆதனால்தான் இயேசு ரகசியமாய் தர்மம் செய்வதை உதாரணமாய் சொல்லியிருக்கலாம், “அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதாதாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” (மத். 6:4) என்றார். மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ளாமலும் பாராட்டாமலும் இருந்தாலும் பரவாயில்லை; நாம் தேவனுக்கும் பிறருக்கும் உண்மையாய்; ஊழியம் செய்வதை தேவன் பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம்.
மனிதத் தன்மையோடிருத்தல்
சட்டத்தை மீறுகிறவர்களும் மதிக்காதவர்களுமான சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறை அதிகாரியிடம் உங்கள் பொறுப்பை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, தன் அந்தஸ்த்திற்குரிய அதிகாரத் தோரணையோடு பேசாமல், “நாமெல்லாரும் நெருக்கத்திலிருக்கிற மனிதர்கள் மத்தியில் பணிபுரியும் மனிதர்கள்” என்று பதிலுரைத்தார்.
மற்றவர்களோடு தன்னை சமமாக்கி தன்னைத் தாழ்த்தினது, எனக்கு ரோமப்பேரரசால் கொடுமைப்படுத்தப்பட்ட முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு எழுதியதை நினைவுபடுத்தினது. “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களாகவும், மனதுருக்கமுள்ளவர்களாகவும், இணக்கமுள்ளவர்களாகவும் இருங்கள் என்று எழுதினான் (1 பேது. 3:8). நெருக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம், மனிதத்தன்மையோடிருப்பதேயாகும் என்று பேதுரு ஒருவேளை சொல்லியிருக்கக் கூடும். அதாவது நமக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே, நமக்கு உதவும்பொருட்டு குமாரனைப் பிதா ஒரு மனிதனாக பூமிக்கு அனுப்பினபொழுது செய்தது இதுதானோ? (பிலி. 2:7).
விழுந்துபோன மனிதனின் பாவ இருதயத்தின் ஆழத்தை மட்டும் நோக்கும் பொழுது மனிதனின் தகுதியை அலட்சியமாய் நினைக்கத் தோன்றலாம். ஆனால், மனுஷீகமாக இவ்வுலகிற்கு நாம் ஆற்றிய பங்கை நினைத்தால் என்ன தோன்றும்? நாமெல்லாரும் ஒரே தன்மையுடையவர்கள் என்பதை நினைத்து பிறருக்குப் பணிவிடை செய்வதே பூரணமான மனிதத்தன்மை என்று இயேசு போதித்தார். தேவன் நம்மை மனிதனாக நம்முடைய சாயலில் உருவாக்கி நிபந்தனையற்ற தம் அன்பினால் நம்மை மீட்டுக்கொண்டார்.
பல போராட்டங்களில் சிக்கியுள்ள மனிதர்களை இன்று நாம் சந்திப்பது நிச்சயம். நெருக்கங்களிலிருப்பவர்களோடு, நாமும் அவர்களைப் போன்றவர்களே என்கிற எண்ணத்தோடு அவர்களிடம் மனித நேயத்தைக் காட்டுவோமென்றால், நாம் மாபெரும் வித்தியாசத்தை உண்டாக்குவோம் என்பதை சிந்தியுங்கள்.
இதயத்தின் உண்மையான உறைவிடம்
நாங்கள் வெஸ்ட் ஹைலாண்ட் டெபியர் நாயைப் பல வருடங்களாக வளர்த்துவந்தோம். அது மிகவும் முரட்டுத்தனமான, உயர் ஜாதி நாய். பொந்துகளில் வசிக்கும் இவ்வின நாய்கள், இவை மரநாய்களின் பொந்துகளில் நுழைந்து அவற்றுடன் சண்டைபோடும். எங்கள் வெஸ்ட்டி பல தலைமுறைகளாக, அதன் இனத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தபோதிலும் அதன் பிறவிக் குணம் போகவில்லை. ஒரு சமயம், எங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள பாறைக்கடியில் குழிதோண்டி வசிக்கும் “கிரிட்டர்” பிராணியைப் பார்த்துவிட்டது. விடாப்பிடியாக அதைப்பிடிக்க பல அடி நீளமுள்ள ஒரு பொந்தைத் தோண்டியது. ஒன்றும் அதைத் தடுக்க முடியவில்லை.
இப்பொழுது இந்தக் கேள்வியை ஆராய்ந்து பாருங்கள். மனிதர்களாகி நாம் ஏன் ஏதோ வொன்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயன்று முயன்று பார்க்கிறோம்? ஏன் ஒருவரும் ஏறாத மலைச்சிகரங்களுக்கு ஏற முயற்சிக்கிறோம்? செங்குத்தான சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாடுவது ஏன்? பயங்கரமான வேகமாய், பாறைகளினூடாய் பாயும் ஆபத்தான மலை ஓடைகளில் படகை ஓட்டுவதேன்? இயற்கையின் சீற்றங்களுக்கு எதிராய் போராடுவது ஏன்? ஒன்று தன் ஆத்ம திருப்திக்காக ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவது. ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது. ஆதாவது, சாகசம்புரியும் தேவனை அறியும் ஆசை அது நமக்குள்ளாக பிறவியிலேயே புதைந்து கிடக்கும் ஆவல். நம்மால் தேவனைத் தேடாமல் இருக்கவே முடியாது.
நாம் அதை அறியாமலிருக்கிறோம். ஏதோ ஒன்றிற்கு ஆசைப்படுகிறோம் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ‘அது என்னவென்று தெரியாவிட்டாலும், நீ ஏதோ ஒன்றிற்கு ஆசைப்படுகிறாய். ஆனால் அதை அடைய நீ உயிரை பணயம் வைக்கவும் ஆயத்தமாயிருக்கிறாய்’ என்று பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் கூறியுள்ளார்.
தேவனே நமது இருதயத்தின் உண்மையான உறைவிடம். பரிசுத்த அகஸ்டினின் மிகப் பிரபலமான கூற்றாகிய ”தேவனே, நீர் எங்களை உமக்கென்று உருவாக்கினீர்; எங்கள் இருதயம் உம்மில் இளைப்பாறும்வரை, எங்களுக்கு இளைப்பாறுதலில்லை”.
இருதயம் என்பதென்ன? அது நமக்குள்ளிருக்கும் தேவன் மாத்திரம் நிரப்பக்கூடிய வெற்றிடம்.