வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களால் துக்கத்தோடிருந்த ஒரு வாலிபப் பெண்ணை டீப்ட்டி ஆலயத்தில் சந்தித்தபொழுது. இவளது இருதயம் அவள்மேல் மனதுருகி, ஏதாவது உதவி செய்ய நினைத்தாள். ஒவ்வொரு வாரமும் அவளுக்கு ஆலோசனை கூறி அவளோடு ஜெபித்தாள். டீப்ட்டி அவளுக்கு நம்பிக்கையூட்டும் முன்மாதிரி. சபைத்தலைவர்கள் டீப்ட்டி எடுத்த முயற்சிகளை அறியாமல், அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆலோசகரை நியமிக்க தீர்மானித்தார்கள். ஒருவருமே அந்தப் பெண்ணைக்குறித்து அக்கறை கொள்ளவில்லையென்றும் குறை கூறினார்கள்.

தனக்கு எந்தப் புகழையோ பேரையோ டீப்ட்டி விரும்பவில்லையென்றாலும், அவளுக்குள் ஒரு சோர்வு உண்டானதை அவளால் தடுக்க முடியவில்லை. தான் எதுவுமே செய்யாததுபோல் இருக்கிறது என்று என்னிடம் கூறினாள்.

ஒருநாள், அந்த வாலிபப் பெண் டீப்ட்டியைக் சந்தித்து, ‘நீங்கள் எனக்களித்த ஆறுதலுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என்றாள். டீப்ட்டி உற்சாகமடைந்தாள். “நீ அவளுக்காகச் செய்ததை அறிந்திருக்கிறேன்” என்று தேவனே சொல்வதுபோலிருந்தது. டீப்ட்டி அந்தப் பெண்ணை தொடர்ந்து ஒழுங்காக சந்தித்து வந்தாள்.

சில வேளைகளில் நமது முயற்சிகளை ஒருவரும் கவனிக்காமலும் பாராட்டமலும் இருந்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், நாம் செய்வதை தேவன் அறிந்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. மற்றவர்கள் பார்க்காததை தேவன் பார்க்கிறார். மனிதரின் புகழ்ச்சிக்கென்று செய்யாமல், தேவனுக்கென்றே செய்யும் பொழுது, தேவன் நம்மேல் பிரியப்படுகிறார்.

ஆதனால்தான் இயேசு ரகசியமாய் தர்மம் செய்வதை உதாரணமாய் சொல்லியிருக்கலாம், “அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதாதாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” (மத். 6:4) என்றார். மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ளாமலும் பாராட்டாமலும் இருந்தாலும் பரவாயில்லை; நாம் தேவனுக்கும் பிறருக்கும் உண்மையாய்; ஊழியம் செய்வதை தேவன் பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம்.