கனிவான செயல்கள்
'எஸ்தர், உனக்கு நம்முடைய சிநேகிதி ஹெலனிடமிருந்து ஒரு பரிசு வந்தள்ளது" என பணியை முடித்து வீடு திரும்பிய என் தாயார் என்னிடம் கூறினார்கள். நாங்கள் வளர்ந்த பின்னர் பரிசுகள் அதிகம் வருவதில்லை. எனவே ஒரு பரிசை தபாலில் பெறுவது இரண்டாவது கிறிஸ்மஸ் போன்று மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அருமையான பெண்ணின் மூலம் தேவன் என்னையும் நேசிக்கின்றார், நினைக்கின்றார், என்னை கனப்படுத்தியுள்ளார்.
அந்த ஏழை விதவை தபித்தாள் (தொற்காள்) என்னைப் போன்ற அநேகருக்கு உடைகளை தயாரித்துக் கொடுத்தாள். அவள் யோப்பா பட்டணத்தில் வாழ்ந்து, இயேசுவைப் பின்பற்றி வந்த ஒரு பெண். அவளுடைய சமுதாயம் அவளின் அன்பின் கிரியைகளை நன்கு அறிந்திருந்தது. அவள் நற்கிரியைகளையும், தருமங்களையும், மிகுதியாகச் செய்து வந்தாள் (அப். 9:36). அவள் சுகவீனமாகி, மரித்துப்போனாள். அப்பொழுது பேதுரு அருகிலுள்ள ஒரு பட்டணத்திற்கு வந்திருந்தார். எனவே இரண்டு விசுவாசிகள் அவரிடம் சென்று அவரை யோப்பா பட்டணத்திற்கு வரும்படி வருந்திக் கேட்டுக்கொண்டனர்.
பேதுரு அங்கு வந்த போது விதவைகளெல்லாரும் 'தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து..." (வச. 39) அவளுடைய கனிவான செயல்களை எடுத்துரைத்தனர். அவர்கள் பேதுருவிடம் செயல்படுமாறு கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பேதுரு ஜெபித்தார். தேவன் அவளை உயிர் பெறச் செய்தார். தேவனுடைய இரக்கம் அதைச் செய்தது. 'இது யோப்பா பட்டணம் எங்கும் தெரிய வந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வச. 42).
நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் கனிவாக நடந்து கொண்டால், அதன் மூலம் அவர்கள் தேவனிடம் திருப்பப்படுவர். தேவனால் கனம் பெறுவர்.
தேவக்கிருபையில் மூழ்குதல்
கடைசியாக ஜனவரி 8 ஆம் தேதி 1964 ஆம் ஆண்டு பதினேழு வயது நிரம்பிய ராண்டி கார்ட்னர் பதினொரு நாள், இருபத்தைந்து நிமிடங்கள் தான் செய்யாத ஒன்றைச் செய்தான். அவன் தலை சாய்த்துத் தூங்கினான். அவன் கின்னெஸ் புத்தகத்தின் உலகப் பதிவை முறியடிக்க விரும்பினான். ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியமென காட்ட விரும்பினான். மென் பானங்களைக் குடித்தும், மைதானத்தில் பந்து விளையாடியும் பந்து வீசியும், கார்ட்னர் ஒன்றரை வாரத்திற்குத் தூக்கத்தை தள்ளி வைத்தான். கடைசியாக, அவன் நிலை குலைந்து போவதற்கு முன்பாக, அவனுடைய சுவை உணர்வு, நுகர்வு, கேட்கும் திறன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக இழந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் வன்மையான தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டான். அவன் உலகப் பதிவை நிர்ணயித்தான். அத்தோடு மனிதனுக்கு தூக்கம் மிக அவசியம் என்பதை உறுதிப்படுத்தினான்.
நம்மில் அநேகர் நிம்மதியான தூக்கத்தைப் பெற போராடுகின்றோம். கார்ட்னர் தன்னுடைய தூக்கத்தை வேண்டுமென்றே தடுத்துக் கொண்டதைப் போலல்லாமல், அநேக பல காரணங்களால் தூங்க முடியாமல் தவிக்கின்றோம். மலைபோல பதட்டங்கள், நாம் அடைய முயற்சிப்பதைக் குறித்த பயம், பிறருடைய எதிர்பார்ப்புகளின் மீது பயம், என பலவகையான கவலைகளால் நடுக்கத்தோடு வாழ்கின்றோம். இந்தக் கவலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு நிம்மதியாக ஓய்வெடுப்பது என்பது இயலாததாகிவிடுகின்றது.
'கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" என சங்கீதக்காரன் (சங். 127:1). நம்முடைய வீணான முயற்சிகளைக் குறித்து கூறுகின்றார். தேவன் நம்முடைய தேவைகளுக்குத் தராவிடில், நம்முடைய கடின உழைப்பும், கொடுமையான முயற்சிகளும் வீணானவை. ஆனால், தேவன் நம் தேவைகளுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பதால் நன்றி சொல்லுவோம். அவர் 'தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையளிக்கின்றார்" (வச. 2). தேவனுடைய அன்பு நம்மனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது. நம்முடைய பதட்டங்களையெல்லாம் தேவனிடம் கொடுத்து விட்டு, அவர் தரும் இளைப்பாறலிலும், கிருபையிலும் அமர்ந்திருக்குமாறு தேவன் நம்மை அழைக்கின்றார்.
எதிர்பாராத சந்தர்ப்பம்
நான் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்ற போது யாரோ என்னுடைய தோளைத் தட்டினார். நான் திரும்பிய போது ஒரு மலர்ந்த வாழ்த்தைப் பெற்றேன். எலைசா என்னை உனக்கு நியாபகமிருக்கின்றதா? நான் தெரிந்த வெவ்வேறு ஜோன்களை நினைவுப்படுத்தியது. ஆனாலும் இவளை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒருவேளை இதற்கு முந்தைய அண்டை வீட்டுக் காரியோ? அல்லது கடந்த காலத்தில் கூடப் பணியாற்றியவரா? எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய குழப்பத்தைப் புரிந்து கொண்ட ஜோன், ''எலைசா, நாம் இருவரும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் பயின்றோம்" என்றாள். இன்னும் என் நினைவை எழுப்பும்படி சில குறிப்புகளைத் தந்தாள். வெள்ளிக்கிழமை இரவு கால்பந்து விளையாட்டு, வெற்றியின் மீது மகிழ்ந்தது, என நினைவுபடுத்தினாள். அந்தச் சந்தர்ப்பம் விளக்கப்பட்டதும் நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன்.
இயேசுவின் மரணத்திற்குப் பின் மகதலேனா மரியாள் அதிகாலையில் கல்லறையினிடத்திற்கு வந்தாள். அங்கு கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். அவருடைய உடலையும் காணவில்லை (யோவா. 20:1-2). இவள் பேதுருவையும், யோவானையும் அழைத்து வர ஒடுகின்றாள். அவர்களோடு மீண்டும் வந்து அவருடைய கல்லறை வெறுமையாயிருக்கக் காண்கின்றாள் (வச. 3-10). மரியாள் வருத்தத்தில், அதேயிடத்திற்குள் அலைகின்றாள் (வச. 11). அப்பொழுது இயேசு அங்கு தோன்றினார். 'அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்" (வச. 14). அவரைத் தோட்டக்காரரென்று எண்ணினாள் (வச. 15).
எப்படி அவளால் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை? அவருடைய உயிர்த்தெழுந்த சரீரம் அவரைக் கண்டுபிடிக்க முடியாதபடி மாறியிருந்ததா? அவளுடைய துக்கம் அவளுடைய கண்களைக் காணக்கூடாதபடி மறைத்து விட்டதா? அல்லது என்னைப் போன்று, இயேசுவும் நினைவு கூரக் கூடிய சந்தர்ப்ப்பமில்லாமல் போய்விட்டாரா? அவரை மரித்தவராக கல்லறையில் தேடிக்கொண்டிருக்க, அவர் உயிருள்ளவராகத் தோட்டத்தில் நிற்பதால் அவளால் அடையாளம் காணமுடியவில்லையா?
நம்முடைய வாழ்வில் நாம் ஜெபிக்கும் போதும், வேதம் வாசிக்கும் போதும் இயேசு நம்முடைய இருதயத்தில் மெதுவாகப் பேசுவதை, நாமும் கூட கேட்கத் தவறிவிடுகின்றோமோ?
யுத்தம்
இராணுவ வாகனத்தோடு இணைக்கப்பட்ட பெரிய துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள், பூமியைப் பிளக்கும் ஓசையோடு அவனைச் சுற்றிலும் விழுந்தன. அந்த இளம் இராணுவ வீரன், உருக்கமாக ஜெபித்தான். ''கர்த்தாவே, நீர் என்னை இதிலிருந்து காப்பாற்றினால், நான் என்னுடைய தாயார் என்னிடம் விரும்பிக் கேட்டுக் கொண்ட வேதாகமப் பள்ளிக்குச் செல்வேன்" என்றான். தேவன் அவனுடைய ஜெபத்தை அங்கிகரித்தார். என்னுடைய தந்தை இரண்டாம் உலகப் போரில் தப்பித்து, மூடி வேதாகம நிறுவனத்திற்குச் சென்று, தன் வாழ்வை தேவ ஊழியத்திற்கென அர்ப்பணித்தார். மற்றொரு யுத்த வீரர் வேறுவகையான இக்கட்டைச் சந்தித்தார். அது அவனை தேவன் பக்கம் திருப்பியது. ஆனால், அவன் யுத்ததிற்குச் செல்வதைத் தவிர்த்த போது அவனுக்குப் பிரச்சனை ஆரம்பித்தது. தாவீது அரசனின் படைகள் அம்மோனியர்களுக்கெதிராக யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தபோது, தாவீது தன்னுடைய அரண்மனையில் இருந்தபோது, பிறனுடைய மனைவியைப் பார்த்தான். கேடான காரியங்களை நடப்பித்தான் (2 சாமு. 11). சங்கீதம் 39ல், தாவீது தான் செய்த பயங்கரமான பாவத்தினால் ஏற்பட்ட வேதனையிலிருந்து மீண்டுவருவதை வரிசையாக எழுதுகின்றார். 'என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது" (வச. 3) என எழுதுகின்றார்.
தாவீதின் உடைந்த உள்ளம் அவனைச் சிந்திக்க வைத்தது. 'கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும் (வச. 4) எனக் கேட்கின்றார். அவர் தன்னுடைய நம்பிக்கையையிழந்து விடவில்லை. தன்னுடைய கவனத்தை வேறெங்கும் திருப்பவும் இல்லை. 'இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்? நீரே என் நம்பிக்கை" (வச. 7) என்று கூறி தேவனிடம் திரும்புகின்றான். தாவீதும் அவனுக்குள்ளே ஏற்பட்ட யுத்தத்தில் பிழைத்துக்கொள்வேன். பின்னர் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி திரும்புவேன்.
நம்மை ஜெப வாழ்விற்குள் கொண்டு வந்தது எந்தக் காரியமாயிருந்தாலும் சரி, நம்முடைய கவனம் ஜெபத்திற்கு நேராகத் திரும்பட்டும். தேவனே நம்முடைய நம்பிக்கையின் ஊற்று. நம்முடைய இருதயத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ள அவர் நம்மை அழைக்கின்றார்.
தேவன் நம்மைக் காண்கின்றார்
நான் முதன்முதலில் பயன்படுத்திய கண்-கண்ணாடி, ஒரு சிறந்த உலகைக்காணும்படி என் கண்களைக் திறந்தது. நான் கிட்டப்பார்வையுள்ளவன். அப்படியென்றால் அருகிலுள்ள பொருட்களெல்லாம் துல்லியமாகவும், தெளிவாகவும் தெரியும். என்னுடைய கண்ணாடியில்லாமல் நான் பார்க்கும் போது, ஓர் அறையிலுள்ள பொருட்களும், தூரத்திலுள்ள பொருட்களும் மங்கலாகத் தெரியும், என்னுடைய பன்னிரண்டாம் வயதில், என்னுடைய முதல் கண்ணாடியை நான் அணிந்தபோது, கரும்பலகையிலுள்ள தெளிவான எழுத்துக்களையும், மரத்திலுள்ள சிறிய இலைகளையும், அதையும் விடமேலாக, பிறர் முகத்திலுள்ள பெரிய சிரிப்பையும் கண்ட போது இன்ப அதிர்ச்சியடைந்தேன்.
நான் நண்பர்களை வாழ்த்தும் போது, அவர்கள் சிரித்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நாம் பார்க்க முடிகின்ற ஆசீர்வாதத்தைப் போன்று, நாம் பார்க்கப்படுவதும் மிகச் சிறந்த ஈவு என்பதைக் கற்றுக் கொண்டேன்.
ஆகார் என்ற அடிமைப் பெண் தன் நாச்சியாரான சாராயின் இரக்கமற்றப் பார்வையால் பாதிக்கப்பட்டு அவளை விட்டு, ஓடிப் போனாள். அன்றைய கலாச்சாரத்தின் படி ஆகார் 'யாருமில்லை" என்ற நிலையிலிருந்தாள். கர்ப்பவதியான அவள், தனிமையில், வனாந்திரத்தின் வழியே, உதவியற்றவளாய், நம்பிக்கையிழந்தவளாய் ஓடிக்கொண்டிருந்தாள். தேவன் அவளைக்; கண்டார். அவளும் தேவனைக் காணும்படி வல்லமையைப் பெற்றாள். ஒரு மங்கிப் போன உண்மையாக அல்ல, தேவன் அவளுக்கு உண்மையாக வெளிப்பட்டார். அந்த உண்மை தேவனுக்கு அவள் எல்ரோயீ என்று பெயரிட்டாள். அதற்கு, 'நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று அர்த்தம், 'என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா" என்றாள் (ஆதி. 16:13).
நாம் தேவனைக் காண்பது என்பது நாம் ஒருவரையொருவர் காண்பதேயாகும். என்னை யாரும் காண்பதில்லை, நான் தனிமையிலிருக்கிறேன். ஒன்றுமில்லையென்றும்படி இருக்கிறேனே என்று உணருகின்றாயா? தேவன் உன்னையும் உன்னுடைய எதிர்காலத்தையும் பார்க்கின்றார். பதிலுக்கு நாம் அவரில் நம்முடைய நித்திய நம்பிக்கையையும், ஊக்கத்தையும், இரட்சிப்பையும், மகிழ்ச்சியையும் இப்பொழுதும் நம்முடைய எதிர்காலத்திலும் காண்போம். மெய்யான ஒரே ஜீவனுள்ள தேவனை நாம் காணும்படி அதிசயமானப் பார்வையைத் தந்த ஈவுக்காக தேவனைப் போற்றுவோம்.
தேவனுக்கு மகிமையைச் செலுத்துவோம்
1960 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சில வித்தியாசமான சித்திரங்கள் பிரசித்திப்பெற்றன. அவற்றில் மனிதர்களும், விலங்கினங்களும் பெரிய கவலை தோய்ந்த கண்களோடு வரையப்பட்டிருந்தன. சிலர் அந்த வேலையை விமர்சித்தனர், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனா. அந்த கலைஞரின் கணவன், தன் மனைவியின் படைப்புகளைப் பிரபலமாக்கிய போது, அவர்கள் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தனர். அந்த கலைஞரின் கையெழுத்தான மார்கரெட் கீன் என்பது அவளுடைய எந்தப் படைப்பிலுமே காணப்படவில்லை. அதற்குப்பதிலாக மார்கரெட்டின் கணவன் தன் மனைவியின் படைப்புகளைத் தன்னுடையது போல வெளியிட்டான். மார்கரெட் இந்த ஏமாற்று வேலையைக் குறித்து பயந்து, 20 ஆண்டுகள், தன்னுடைய திருமணவாழ்வு முற்றுப் பெறும் வரை அமைதியாயிருந்தார். பின்னர் ஒரு நீதிமன்ற அறையில் அவர்களிருவரும் சித்திரம் தீட்டி தங்களுடைய கலைத்திறனின் அடையாளத்தைக் நிரூபிக்குமாறு ஏற்பாடாயிற்று.
அந்த மனிதனின் ஏமாற்று வேலை முற்றிலும் தவறானது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் தேவன் நமக்குக் கொடுத்துள்ள தாலந்துகளின் பெருமைகளை நமக்குரியதாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். நாம் வெளிப்படுத்தும் தலைமத்துவ பண்பு, நாம் பிறரிடம் காட்டும் நற்செயல்கள் ஆகியவற்றை நம்முடையதாக்கிக் கொள்கின்றோம். ஆனால், இத்தகைய நற்குணங்களெல்லாம் தேவக் கிருபையாலேயே செயல்படுத்த முடியும். எரேமியா 9ல், தீர்க்கதரிசி, மக்களின் மனதில் தாழ்ச்சியும், குற்றத்தை உணரும் உள்ளமும் இல்லையெனப் புலம்புகின்றார். நம்முடைய ஞானத்தைக் குறித்தும், நம்முடைய பராக்கிரமத்தைக் குறித்தும் அல்லது நம்முடைய ஐசுவரியத்தைக் குறித்தும் நாம் மேன்மை பாராட்ட வேண்டாமெனவும், அவரே தேவனென்று புரிந்துகொண்டு 'பூமியிலே கிருபையையும், நியாயத்தையும், நீதியையும் செய்கிறவர் கர்த்தர்" (வச. 24) என்று அவரை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைப் பாராட்டக்கடவன் என்றும் கர்த்தர் சொல்கின்றார் என்று எரேமியா எழுதுகின்றார்.
நம்மைப் படைத்த உண்மையான கலைஞரை நாம் கண்டு கொண்டோமேயாயின், நம் உள்ளம் நன்றியால் நிரம்பும். 'நன்மையான எந்த ஈவும் பரிபூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக். 1:17). எல்லாத் துதியும் மகிமையும் நன்மையான ஈவுகளைத் தருகின்ற தேவனுக்கே உரியது.
உன் வாழ்வில் விளக்கு எரிந்து கொண்டேயிருக்கட்டும்
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வேலை என்னையும், என்னோடு பணிபுரியும் மற்றொருவரையும் 250 மைல்களுக்கப்பால் கொண்டு சென்றது. நாங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய போது மாலை அதிக நேரமாகிவிட்டது. வயது சென்றதாலும், கூரியபார்வை குறைந்து விட்டதாலும் இரவில் வாகனத்தை ஓட்டுவதில் சற்று சிரமமிருந்தது. இருந்த போதிலும் நானே முதலாவதாகச் செல்ல விரும்பினேன். என்னுடைய கரங்கள் திசை மாற்றுச் சக்கரத்தை நன்கு பற்றியிருக்க, என்னுடைய கண்கள் கவனமாக அந்த மங்கலான ஒளியில் சாலையை கவனித்தன. நான் ஓட்டிச் செல்கையில், அந்த நெடுஞ்சாலையில் எனக்குப் பின்னால் வந்த வாகனங்களிலிருந்து வந்த ஒளிக்கற்றை நான் அந்தச் சாலையை நன்கு பார்க்க உதவியது. என்னுடைய நண்பன் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிக் கொண்டு எனக்கு முன்னே வந்த போது நான் சற்று நிம்மதி அடைந்தேன். அவன் என்னிடம் வந்து, நான் முன் விளக்குகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பனிப்படல விளக்குகளை பயன்படுத்தி ஓட்டிக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினான்.
நம்முடைய அனுதின வாழ்விற்குத் தேவையான வெளிச்சத்தைத் தருவது தேவனுடைய வார்த்தைகளே (வச. 105) என முற்றிலும் புரிந்து கொண்ட ஒருவருடைய மிகச்சிறந்த படைப்புதான் சங்கீதம் 119. நான் அந்த நெடுஞ்சாலையில், அந்த இரவில் சந்தித்த பிரச்சனையைப் போன்று, நம் வாழ்விலும் எத்தனை, அடிக்கடி அப்படிப்பட்ட சூழல்களைச் சந்திக்கின்றோம். நாம் தெளிவாகப் பார்க்கும்படிக்கு நம்மை வருத்திக் கொள்கின்றோம், சில வேளைகளில் நல்ல பாதையைவிட்டு விலகி விடுகின்றோம். ஏனெனில், நாம் தேவன் தரும் ஒளியாகிய தேவனுடைய வார்த்தையை மறந்து விடுகின்றோம். சங்கீதம் 119 நம்மை முன் விளக்கின் சுவிட்சை அவிழ்த்து விடும்படி நம்மைத் தூண்டுகிறது. நான் அந்த விளக்கைப் போடும் போது என்ன நடக்கின்றது? நாம் சுத்தப்படுத்தப்படும்படி ஞானத்தைக் கண்டடைகிறோம் (வச. 9-11). நாம் வீணாக அலைந்து திரிவதைத் தவிர்க்கும்படி புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கண்டு கொள்கின்றோம் (வச. 101-102). நாம் வேதத்தின் வசனமாகிய வெளிச்சத்தில் வாழும் போது சங்கீதக்காரனின் துதியும் நம்முடைய துதியாக மாறும். 'உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" என்போமாக.
என்னுடைய உண்மை நிலையை கண்டுகொள்ளல்
நான் யார்? என்று ஒரு மங்கிப்போன, பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மை தன்னைக் கேட்டுக் கொண்டது. மைக் இங்க் பென் எழுதிய 'ஒன்றுமில்லை" என்ற குழந்தைகளின் புத்தகத்தில் இதனைக் காணலாம். ஒரு பரணின் மூலையில் தூசிபடிந்து கிடந்த அந்த மிருகத்தை அங்கு வந்த பொருட்களை அடுக்குபவர்கள் 'ஒன்றுமில்லை" என அழைத்ததால் 'ஒன்றுமில்லை" என்பதே தன்னுடைய பெயரென அது நினைத்துக் கொண்டது.
அது மற்ற மிருகங்களைச் சந்தித்த போது தன்னைப் பற்றிய நினைவைத் திரும்பப் பெற்றது. இப்பொழுது 'ஒன்றுமில்லை" தனக்கு ஒரு வாலிருந்தது, மீசை முடிகளிருந்தன, தன் உடலில் கோடுகள் வரையப்பட்டிருந்தன என்பதை நினைவு கூர்ந்தது. டாபி என்ற பூனையைச் சந்தித்தப் பின்னர் தான், தன்னுடைய வீட்டிற்கான வழியையும் தான் யாரென்பதையும் ஒன்றுமில்லையால் நினைவுபடுத்த முடிந்தது. உண்மையில் அது டோபி என்றழைக்கப்படும் ஒரு பஞ்சு பூனை பொம்மை. அதனுடைய எஜமானன் அன்போடு அதனைச் சேர்த்துக் கொண்டு, அதன் மீது புதிய காதுகளைத் தைத்தார், வாலையும், மீசை முடிகளையும், உடலின் கோடிகளையும் கொடுத்தார்.
நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம், நான் என்னுடைய அடையாளத்தைக் குறித்து சிந்தித்துக் கொள்வேன். நான் யார்? யோவான் விசுவாசிகளுக்கு எழுதும் போது, தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளென அழைப்பதைக் குறிப்பிடுகின்றார் (1 யோவா. 3:1). இந்த அடையாளத்தை நாம் முற்றிலுமாக புரிந்துகொள்வதில்லை. ஆனால், நாம் இயேசுவைப் பார்க்கும் போது நாம் அவரைப் போன்றிருப்போம் (வச. 2). டோபி என்ற அந்தப் பூனையைப் போல நாமும் நமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பெற்றுக் கொள்வோம். அந்த அடையாளம் இப்பொழுது பாவத்தால் மறைந்துவிட்டது. ஆனாலும், நாம் அந்த அடையாளத்தின் ஒரு பகுதியை நாம் தேவனுடைய சாயலாக இருப்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்க முடியும். ஒரு நாள் நாம் இயேசுவைக் காணும் போது. தேவன் நமக்கென்று வைத்துள்ள அடையாளத்தை முற்றிலும் மீண்டும் பெற்றவர்களாகக் காணப்படுவோம். நாம் புதிதாக்கப்படவோம்.
அன்பும் சமாதானமும்
வல்லமையுள்ள சமாதானம், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தேவ சமாதானம் நம்முடைய ஆழ்ந்த துயரத்தின் போது நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது (பிலி. 4:7), என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. நான் இதனை சமீபத்தில் என்னுடைய தந்தையின் நினைவு ஆராதனையில் உணர்ந்தேன். ஒரு நீண்ட வரிசையில், அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி மக்கள் கடந்து வந்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டபோது, நான் என் பள்ளித் தோழனைச் சந்தித்த போது வெகுவாக சமாதானம் பெற்றேன். ஒரு வார்த்தையும் பேசாமல், அவன் என்னை அணைத்துக் கொண்டான். அவனுடைய அமைதியான புரிந்து கொள்ளல், அந்தக் கவலையும் கஷ்டமும் நிறைந்த நாளில் என்னைச் சமாதானத்தால் நிரப்பிற்று. நான் நினைத்துக் கொண்டபடி தனிமையிலில்லை என்ற வலிமையான நினைவைத் தந்தது.
சங்கீதம் 16ல் தாவீது விளக்குவது போல, நம்முடைய வாழ்வின் கடினமான சூழல்களில் தேவன் தருகின்ற சமாதானமும், மகிழ்ச்சியும் நம்முடைய சொந்த பெலத்தினால் நாம் பெற்றுக் கொண்டதல்ல. ஆனால், அது நாம் தேவனிடத்தில் பாதுகாப்பைத் தேடும் போது நாம் அநுபவிக்கும்படி அவர் நமக்குத் தருகின்ற மிகப் பெரிய ஈ.வு. (வச. 1-2).
மரணம் கொண்டு வருகின்ற வேதனைகள் சில வேளைகளில் நம்மை வழிதவறச் செய்து, ஒருவேளை அந்நிய தேவர்களிடம் கொண்டு சென்றால், அங்கு இந்த வேதனைகளைத் தள்ளிவிடலாம் என்று எண்ணுவோமாயின் அது தவறு. அது இன்னும் அதிக வேதனையையே கொண்டு வரும் (வச. 4).
நாம் இதனைப் புரிந்து கொள்ளமுடியாவிடினும், நம்பிக்கையோடு தேவனிடம் திரும்புவோம். தேவன் நமக்குத் தந்த இந்த வாழ்வு வேதனை நிறைந்ததாயிருந்தாலும் அது இன்னமும் அழகாகவும், நல்லதாகவுமேயுள்ளது (வச. 6-8). நம்முடைய வேதனையின் வழியே நம்மை அன்போடு சுமந்து சென்று, மரணம் கூட எடுத்து விட முடியாத நித்திய சமாதானம், மகிழ்ச்சிக்குள் நம்மை அழைத்துச் செல்பவரின் அன்பு கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம் (வச. 11).