இரவில் கேட்ட பாடல்
என்னுடைய தந்தையின் வாழ்வு ஏக்கம் நிறைந்ததாகவேயிருந்தது. அவர் பார்க்கின்சன்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மனதிலும், உடலிலும் குறுகிக் கொண்டேயிருந்த போதிலும், அவர் ஒரு முழுமையைப் பெற ஏங்கினார், அவர் அமைதியைப் பெற விரும்பினார், ஆனால், மன அழுத்தத்தின் வேதனையால் அவதியுற்றார். அவர் அன்பைப் பெறவும், அனுபவிக்கவும் ஏங்கினார். ஆனால், எப்பொழுதும் தனிமையையேயுணர்ந்தார்.
அவர் தனக்கு விருப்பமான சங்கீதம் 42ன் வார்த்தைகளை வாசித்தபோது தன்னுடைய தனிமையுணர்விலிருந்து சற்றே விடுவிக்கப்பட்டார். அவரைப்போன்று சங்கீதக்காரனும் ஆற்றொணா ஏக்கத்தையும், சுகம் பெற வேண்டுமென்ற தீராத தாகத்தையும் அறிவார் (வச. 1-2). அவரைப் போன்று. சங்கீதக்காரனும் ஒருபோதும் தீராத துயரம் எப்படியிருக்கும் என்பதையறிவான் (வச. 3). உண்மையான மகிழ்ச்சியின் நாட்கள் என்பது என்றோ நடந்த ஒரு காரியம் என நினைக்கும்படி அவருடைய துயரம் இருந்தது (வச. 6). என் தந்தையைப் போன்று குழப்பத்தின் அலைகளும், வலியும் வேதனையும் அவரை மேற்கொண்டன (வச. 7). சங்கீதக்காரன் தான் தேவனால் கைவிடப்பட்டவனாக உணர்ந்து “ஏன்" எனக் கேட்கின்றான் (வச. 9).
இந்த சங்கீதத்தின் வார்த்தைகள் அவரின் துயரைத் துடைத்து, அவருக்குத் தான் தனிமைமையிலில்லை என்ற உறுதியைத் தந்தது. வேதனையின் மத்தியில் என்னுடைய தந்தைக்கு ஒரு சமாதானம் கிடைத்தது. ஓர் அன்பின் குரல் அவரைச் சூழ்ந்து கொண்டது. அக்குரல் அவருக்கு ஓர் உறுதியைக் கொடுத்தது, அவருக்குப் பதில் கிடைக்கவில்லையெனினும் அலைகள் அவர்மேல் புரண்டுவந்தாலும், அவர் இன்னமும் தேவனால் நேசிக்கப்படுகின்றார் (வச. 8).
எப்படியோ, இரவில் கேட்ட அந்த அன்பின்பாடல் அவருக்குப் போதுமானதாக இருந்தது, பற்றிக்கொள்ளும்படியான ஒரு சிறிய நம்பிக்கையை, அன்பை, மகிழ்ச்சியை என் தந்தைக்குக் கொடுக்கும்படி போதுமானதாக இருந்தது. அவருடைய எல்லா ஏக்கங்களும் நிறைவேறி திருப்தியைத்தரும் நாளுக்காக காத்திருக்கும்படி அவருக்குப் போதுமானதாக இருந்தது (வச. 5,11).
நம்பிக்கையே உறுதியான அஸ்திபாரம்
விசுவாசத்தைக் குறித்துப் பாடங்களை நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் நான் எனது 110 பவுண்டு எடையுள்ள, கருப்பு நிற, “கரடி” (டீநயச) என்று நான் பெயரிட்டுள்ள, லேப்ரடார் வகை நாயிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். தண்ணீர் குடிக்கும் பெரிய, உலோகப் பாத்திரம் சமையலறையில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். எப்பொழுதெல்லாம் அது காலியாகின்றதோ அப்பொழுதெல்லாம் அது குரைப்பதோ, தன் பாதங்களால் அதைச் சுரண்டுவதோ கிடையாது. ஆனால், அதனருகில் அமைதியாகப் படுத்து, காத்திருக்கும். சில நேரங்களில் நீண்ட நேரம் வரைக் கூட காத்திருக்க நேரிடும். ஆனால், கரடி நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொண்டது. நான் எப்படியும் அந்த அறைக்குள் வருவேன், அதனை அங்கு பார்த்து, அதற்குத் தேவையானவற்றைத் தருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும். அது என் மீது வைத்துள்ள அந்த விசுவாசம், என்னையும் என்னுடைய தேவைகளுக்காக தேவன் மீது நம்பிக்கையோடு காத்திருக்கக் கற்றுக் கொடுத்தது.
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபி. 11:1) என வேதாகமம் நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த நம்பிக்கை மற்றும் உறுதியான அஸ்திபாரம் தேவனே. அவர் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்" காண்கின்றோம். இயேசுவின் மூலம் தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களுக்கு, தேவன் தாம் வாக்களித்துள்ளவற்றை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்.
சில வேளைகளில் நாம் காணாதவைகளின் மீது விசுவாசமாயிருப்பது எளிதாகத் தோன்றாது. ஆனால். நாம் தேவனுடைய நன்மையின் மீதும் அன்பின் மீதும் அமர்ந்திருந்து, அவருடைய ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாய் விளங்கும் என்பதை நம்பி காத்திருக்க வேண்டும். அவர் சொன்னதை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார். நம்முடைய அழிவில்லாத ஆன்மாவைக் காப்பாற்றவும், நம்முடைய அனைத்து தேவைகளையும் இப்பவும், எப்பவும் சந்திக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
கிராடட் என்ற மீனினத்தின் அவலநிலை
என்னுடைய உறவினன் என்னை கிராடட் என்றழைக்கப்படும் கிரே மீன்களைப் ஒருவகை தண்ணீர் லாப்ஸ்டர்) பிடிக்க வரும்படி என்னை அழைத்தான். நான் மிகவும் ஆர்வத்தோடு சென்றேன். அவன் என்னிடம் ஒரு பிளாஸ்டிக் வாளியைக் கொடுத்தான். “மூடியில்லையா?" எனக் கேட்டேன்.
“அதற்குத் தேவையில்லை" என்றான். மீன் தூண்டில்களையும், ஒரு சிறிய பையில் தூண்டில் கொக்கியில் வைக்கத் தேவையான கோழி இறைச்சித்துண்டுகளையும் எடுத்துக் கொண்டோம்.
பின்னர், நான் அந்த சிறிய மீனினங்களைக் கவனித்த போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதி ஏறி தப்பிக்க நிறைவேறாத முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த வாளியில் நிரம்ப இருந்தும் அவைகளால் வெளியேற முடியவில்லை. அப்பொழுதுதான் ஏன் அதற்கு மூடி தேவையில்லையென்பதைப் புரிந்து கொண்டேன். எப்பொழுது ஒரு கிராடட் விளிம்பை எட்டுகிறதோ, உடனே மற்றவை அதனைக் கீழே இழுத்துவிடுகின்றன.
இந்த கிராடட்டின் அவலநிலை, என்னை சிந்திக்க வைத்தது. நம்முடைய சொந்த லாபத்தை மட்டும் நோக்கிக் கொண்டு, நம்முடைய சமுதாயத்தின் நலனை கருதவில்லையெனின் அது எத்தனை அழிவுக்குள்ளானது என யோசித்தேன். தெசலோனிக்கேயர் சபை விசுவாசிகளுக்குப் பவுல் எழுதும் போது, ஒருவரையொருவர் தூக்கிவிடுவதன் தேவையையும், ஒருவரையொருவர் சார்ந்து வாழுவதின் அவசியத்தையும் புரிந்து கொள்ளும்படிச் செய்கின்றார். “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்" எனப் போதிக்கிறார் (1 தெச. 5:14).
ஒருவர் மீது மற்றவர் அக்கறையோடிருக்கும், அவர்களுடைய நற்குணத்தைப் பாராட்டி (வச. 11), அவர்கள் இன்னும் அதிக அன்புடனும், சமாதான உறவிலும் வாழும்படி ஊக்குவிக்கின்றார் (வச. 13-15). அவர்களுக்குள் மன்னிப்பு, நீடிய சாந்தம், இரக்கம் போன்ற பண்புகளை உருவாக்கும்படியும், தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவிலும் பலப்படும்படியும் முயற்சிக்கின்றார் (வச. 18,23).
இத்தகைய அன்பின் ஒருமைப்பாடு இருக்கும்போது தான், சபை வளர்ச்சியடையும், கிறிஸ்துவுக்கு சாட்சிகளாயிருக்கவும் முடியும். விசுவாசிகள் தேவனை கனப்படுத்தி, பிறரைத் தூக்கிவிடும்படி தம்மை அர்ப்பணித்து, அவர்களைச் சோர்வடையச் செய்யும் வார்த்தைகளையும், செயலையும் தவிர்த்தோமாயின் நாமும் நம்முடைய சமுதாயமும் வளர்ச்சியடைய முடியும்.

இயேசு உன் பின்னாலேயே இருக்கிறார்
என்னுடைய மகள் வழக்கத்தைவிட சற்றுமுன்னதாகவே பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டாள். எனவே அவள், “நாம் போகிற வழியிலுள்ள காப்பி கடையில் நிற்கலாமா?" எனக் கேட்டாள். நான் சம்மதித்தேன். நாங்கள் வாகனம் செல்லக் கூடிய அந்த குறுக்குத் தெருவையடைந்த போது, “இன்று காலை ஏதோ ஒரு மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் போலுள்ளதா?" எனக் கேட்டேன். “ஆம், உறுதியாக" என்றாள்.
நாங்கள் எங்களுடைய தேவையைத் தெரிவித்த பின்னர் ஒரு ஜன்னல் அருகில் சென்று அமர்ந்தோம். அங்கு வந்த பணியாளர் நாங்கள் கொடுக்க வேண்டியத் தொகையைத் தெரிவித்தார்". நான், “எங்களுக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் அந்த இளம் பெண்ணின் தொகையும் சேர்த்து கொடுக்;க விரும்புகிறேன்” என்றேன். என்னுடைய மகளின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை தெரிந்தது.
நம்முடைய அநேக சிறப்பான பொருட்களுக்கிடையே ஒரு கோப்பை காப்பி ஒரு பெரிய விஷயமல்ல. இல்லையா? இயேசு நம்மிடம் இருக்க விரும்புகின்றபடி, “மிகவும் சிறியவர்களாகிய இவர்களில்..." (மத். 25:40). எனக் குறிப்பிடுவதை செயல்படுத்த இதுவும் ஒரு வழியாக இருக்க முடியமா என நான் வியந்தேன். இங்கு ஒரு யோசனை: நாம் ஒரு வரிசையில் நிற்கும் போது நமக்கு அடுத்ததாகவோ அல்லது பின்னாகவோ நிற்கும் ஒருவரைத் தகுதியுடையவராக நாம் கருதலாமே? எனவே “எதை வேண்டுமானாலும்" செய்யலாம். அது ஒரு கோப்பை காப்பியாகவும் இருக்கலாம். அதையும்விட மேலாகவும் இருக்கலாம். அதையும்விட குறைவாகவும் இருக்கலாம். இயேசு குறிப்பிட்டுள்ளபடி, “எதைச் செய்தீர்களோ?" (வச. 40) என்பது பிறருக்கு நாம் பணி செய்வதன் மூலம் இயேசுவுக்கு நாம் பணி செய்ய பெற்றுள்ள மிகப் பெரிய சுதந்தரத்தைப் பெற்றுள்ளோம்.
நாங்கள் வெளியேறியபோது, எங்களுக்குப் பின்புறமிருந்த அந்த இளம் பெண்ணின் முகத்தையும், அந்தப் பணியாளரின் முகத்தையும், அவர் காப்பியைக் கொடுத்தபோது கவனித்தோம். அவர்கள் காதோடு காதாக, சிரித்துக் கொண்டனர்.
முடிவில்லா பரிமாணங்கள்
நான் அந்த வினைல் பொதிந்த விரிப்பில் அசையாமல் படுத்துக்கொண்டு, என் மூச்சை அடக்கி கொண்டேன். அந்த இயந்திரம் சுழன்று முடித்து 'கிளிக்" என்ற ஒலியுடன் நின்றது. எம்.ஆர்.ஐ எடுத்துக் கொண்ட அநேகரை எனக்குத் தெரியும். தனியறையில் அடைக்கப்படும் போது, என்னைப் போன்று பயப்படுபவர்களுக்கு, நம்மை விடப் பெரிய ஒரு பொருளின் மீது அல்லது ஒரு நபரின் மீது தனிக்கவனம் செலுத்த அனுபவம் தேவை.
அப்பொழுது வேதாகமத்திலுள்ள ஒரு வாசகம் என் மனதில் வந்தது. “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து..." (எபே. 3:18) என்ற வார்த்தைகளை எண்ணியவாறே அந்த இயந்திரம் எழுப்பியதாளத்தோடு அசைந்தேன். எபேசு சபையினருக்காக பவுல் ஜெபிக்கும் போது, தேவனுடைய அன்பினையும், பிரசன்னத்தையும் விளக்க நான்கு பரிமாணங்களைப் பயன்படுத்துகின்றார். தேவனுடைய அன்பின் முடிவில்லாத அளவுகளை வலியுறுத்தும்படி அவ்வாறு விளக்குகின்றார்.
நான் அந்த எம்.ஆர்.ஐக்காக படுத்திருந்த போது என்னுடைய நிலை எனக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தந்தது. அகலம்: அந்தக் குழாயினுள்ளே உடலோடு இறுக பிணைக்கப்பட்ட புயங்களிலிருந்து ஒவ்வொரு புறமும் ஆறு அங்குலம்; நீளம்: அந்த உருளையின் இரு திறப்புகளுக்கிடையேயுள்ள தொலைவு - என் தலையிலிருந்து பாதங்கள் வரை, உயரம்: என் மூக்கிலிருந்து அந்தக் குழாயின் உட்புறம் வரை 6 அங்குலம், ஆழம்: தரையிலிருந்து அந்தக் குழாயின் தாங்கிகளின் உயரம் - எனக்குக் கீழே என்னைத் தாங்கியுள்ளது வரை. தேவனுடைய பிரசன்னம் நான்கு பரிமாணங்களிலும் என்னைச் சூழ்ந்திருந்து அந்த எம்.ஆர்.ஐ குழாயினுள் என்னைத் தாங்கிக் கொண்டது. அத்தோடு மட்டுமல்ல, என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னைத் தாங்கிவருகிறது.
தேவனுடைய அன்பு எல்லாவிடமும் நம்மைச் சூழ்ந்துள்ளது. அகலம்: அவர்தம் புயங்களை விரித்து எவ்விடத்திலுமுள்ள அனைவரையும் அணைத்துக் கொள்கின்றார். நீளம்: அவருடைய அன்பிற்கு முடிவேயில்லை. உயரம்: அவர் நம்மை உயர்த்துகின்றார். ஆழம்: அவர் நம்மைத் தம் கரங்களில் தாங்கியவாரே எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை மூழ்கச் செய்கின்றார். அவரிடமிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).
நம்மை வரவேற்கும் தேவன்
எங்களுடைய சபை, அருகிலுள்ள ஒரு பழைய மாணவியரை ஒருங்கிணைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என்று 1958 ஆம் அண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க நிதிமன்ற ஆணைக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும், பள்ளியை மூடிவிடலாம் என்று தீர்மானித்து அந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளி அது. முன்பு வெள்ளையர் மட்டுமே இப்பள்ளியில் பயின்று வந்தனர். வெள்ளையர் உலகில் திணிக்கப்பட்ட கருப்பர்களில் எல்வா என்ற மாணவியும் உண்டு. அடுத்த ஆண்டு இப்பள்ளியைத் திறந்த போது எல்வா இப்பள்ளியில் சேர்ந்தாள். எல்வா தற்சமயம் எங்கள் சபையின் அங்கத்தினராக இருக்கின்றார். “நான் எனது பாதுகாப்பான சமுதாயத்தையும், எங்கள் வாழ்க்கையோடு இணைந்த ஆசிரியர்களையும் விட்டு விட்டு, பயப்படக் கூடிய ஒரு சூழலிலுள்ள ஒரு வகுப்பறையில் கருப்பின மாணவியாக நான் ஒருத்தி மட்டுமே சேர்ந்தேன்." என எல்வா நினைவுகூர்ந்தாள். எல்வா மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு காணப்பட்டதால் அதிக துயரங்களை அனுபவித்தாள். ஆனால், அவள் தைரியமும், விசுவாசமும், மன்னிக்கும் சிந்தையுமுள்ள ஒரு பெண்மணியாக உருவானாள்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பாரம்பரியம், இனம் ஆகியவற்றைக் கடந்து தேவனால் நேசிக்கப்படுகிறான் என்ற உண்மையை மறுத்த அந்தச் சமுதாய நபர்கள் சிலரால் ஏற்பட்ட அநேகக் கொடுமைகளை எல்வா சகித்தாள். எனவே அவளுடைய சாட்சி மிகவும் ஆழமானதாயிருந்தது. ஆரம்பக் கால சபையின் அங்கத்தினர் சிலரும் இந்த உண்மையோடே போராடினர். தேவன் சிலரை அவர்கள் பிறப்பிலிருந்தே நேசிக்கிறார் எனவும், மற்றும் சிலரை தேவன் தள்ளிவிடுகிறார் எனவும் அவர்கள் நம்பினர். ஓர் உன்னத தரிசனத்தைப் பெற்ற பின்னர், பேதுரு கொடுத்த மிகவும் ஆச்சரியமான வெளிப்பாட்டைக் கேட்ட யாவரையும் அவர் அதிர்ச்சியடையச் செய்தார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்" (அப். 10:34-35) என பேதுரு கூறுகின்றார்.
தேவன் தம் கரங்களை விரித்து அனைவருக்கும் தமது அன்பைக் கொடுக்கின்றார். அவருடைய வல்லமையாலே நாமும் அப்படிச் செய்வோம்.
இவர் எப்படிப்பட்ட இரட்சகர்?
கடந்த ஆண்டில் என் நண்பர்களும் நானும் புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்த மூன்று பெண்மணிகளின் சுகத்திற்காக ஜெபித்தோம். தேவன் இதைச் செய்ய வல்லமையுடையவர் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே தேவன் செயல்படுமாறு அனுதினமும் ஜெபித்துவந்தோம். கடந்த நாட்களில் தேவன் செயல்பட்டதைக் கண்டிருக்கின்றோம். எனவே அவ்வாறு மீண்டும் செய்வாரென விசுவாசிக்கிறோம். ஒவ்வொருவரும் அநேக நாட்கள் போராட்டத்திற்குப்பின், உண்மையிலேயே சுகம் பெற்றதாகத் தோன்றியது. நாங்கள் மகிழ்சியடைந்தோம். ஆனால், அவர்கள் மூவரும் சில நாட்களுக்குப் பின் மரித்துப் போயினர். எங்கள் மகிழ்ச்சியும் விழுந்துபோனது. சிலர் இதனை, “நித்திய சுகம்" எனக் கூறினர். ஒரு வகையில் அப்படித்தான். ஆனாலும் அந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. தேவன் அவர்களை குணப்படுத்த வேண்டுமென விரும்பினோம். ஆனால், எந்த அற்புதமும் நடைபெறாதது, ஏனென்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில ஜனங்கள் இயேசுவை அவர் செய்த அற்புதங்களுக்காகப் பின்பற்றினர். தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பின்பற்றினர் (யோவா. 6:2,26). சிலர் அவரை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தனர் (மத். 13:55-58) வேறு சிலர் அவரை தங்களின் அரசியல் தலைவராக எதிர்பார்த்தனர் (லூக். 19:37-38) சிலர் அவரை சிறந்த போதகராகப் பார்த்தனர் (மத். 7:28-29) அவருடைய உபதேசம் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தபடியால் மற்றவர்கள் அவரைவிட்டுப் பின் வாங்கினர் (யோவா. 6:66).
நாம் எதிர்பார்க்கின்றவற்றை இயேசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவர் நாம் நினைப்பதையும் விட மேலாகச் செய்கின்றவர். அவரே நித்திய வாழ்வைத் தருபவர் (யோவா. 6:47-48). அவர் நல்லவரும் ஞானமுள்ளவருமாயிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கின்றார், மன்னிக்கின்றார், நம்மருகில் இருக்கின்றார், நமக்கு ஆறுதலைத் தருகின்றார். நாம் அவரின் மீது சாய்ந்து இளைப்பாறி, தொடர்ந்து அவரைப் பின்பற்றுவோம்.
கவலைக்கோர் மாற்று
சட்ட திட்டங்களைக் கடைபிடித்து நேர்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு நாள் அலைபேசி அழைப்பில் “நான் காவல்துறை அதிகாரி, காவல்துறை அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். தயவுகூர்ந்து என்னை இந்த எண்ணில் அழைக்கவும்" என்ற ஒரு செய்தி வந்தது. உடனடியாக அந்த மனிதனைக் கவலை தொற்றிக் கொண்டது. தான் ஏதோ தவறு செய்திருக்க வேண்டும் என பயந்தான். அவன் அந்த அழைப்பைக் கொடுக்க நடுங்கினான். அவன் சில இரவுகளைத் தூங்காமல் கழித்தான். இவ்வாறு என்ன நடக்குமோவென வௌ;வேறு காட்சிகளைத் தன் கண்முன்னே கொண்டு வந்து, கவலைப்பட்டு, தான் ஏதோவொரு பிரச்சனையில் மாட்டியிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தான். அந்த அதிகாரியும் அவனை மீண்டும் அழைக்கவேயில்லை. ஆனால், அந்த கவலையிலிருந்து விடுபட பல வாரங்களாயின.
கவலையைக் குறித்து இயேசுவும் ஓர் ஆர்வமான கேள்வியைக் கேட்கின்றார். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" (மத். 6:27). இது நாம் ஏன் கவலைப்படுகிறோமென மீண்டும் சிந்திக்கச் செய்கிறது. ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைக் குறித்து கரிசனை கொண்டுள்ளோமோ அதில் கவலை எந்த உதவியையும் செய்ய முடியாது.
பிரச்சனைகள் நம்மை நெருங்குகையில் நாம் இந்த இருபடி அணுகுமுறையை கடைபிடிக்கலாம். முயற்சி செய், தேவனை நம்பியிரு. நாம் அந்த பிரச்சனையைத் தவிர்க்க முடியுமாயின் அதன் வழியே முயற்சிப்போம். நாம் எடுக்க வேண்டிய செயலில் ஒரு வழியைக் காட்டும்படி தேவனிடம் ஜெபிக்கலாம். நம்மால் செய்யக் கூடியது எதுவுமில்லையாயின், தேவன் அப்படிப்பட்ட மீளமுடியாத இக்கட்டில் இல்லையென்பதை தெரிந்துகொள்ளலாம். தேவன் எப்பொழுதும் நமக்குச் சாதகமாகவே செயல்படுவார். நாம் நம் சூழ்நிலைகளை விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அவரிடம் திருப்பிவிடலாம்.
நாம் கவலைப்பட வேண்டிய வேளைகளில் துன்பங்களையும், கவலைகளையும் எதிர் நோக்கிய தாவீது அரசனின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளிடம் திரும்புவோம். "கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்" (சங். 55:22). இது கவலைக்கு எத்தனை பெரிய மாற்று வழி!