வகை  |  odb

புது இருதயம் தேவையா?

என்னுடைய தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனவே அவருடைய மருத்துவர், அவருடைய இருதயத்தை நன்கறிய ஒரு சோதனை செய்தார். விளைவு? மூன்று இரத்த நாளங்களிலே அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பிப்ரவரி 14 ஆம் நாள் மூன்று இடங்களில் துணைப்பாதை அமைக்கும் அறுவை சிகிச்சை செய்ய நிர்ணயிக்கப்பட்டது. என்னுடைய தந்தை அந்த நாளை ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும் நாளாக எதிர்பார்த்தார். “வாலன்டைன்ஸ் தினத்தன்று நான் ஒரு புதிய இருதயத்தைப் பெற்றுக் கொள்வேன்” என்றார். அதுவும் நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை நன்றாகச் செய்யப்பட்டது. போராடிக் கொண்டிருந்த அவருடைய இருதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் நடைபெறும்படி புதுப்பிக்கப்பட்ட புது இருதயத்தைப் பெற்றுக் கொண்டார்.

என்னுடைய தந்தையின் அறுவை சிகிச்சை, தேவன் நமக்குக் கொடுக்கின்ற புதிய வாழ்வை நினைவுபடுத்தியது. ஆவிக்குரிய குழாய்களை பாவம் அடைத்துக் கொள்வதால் நாம் தேவனோடு உறவுகொள்ள தடுமாறுகின்றோம். இந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை தேவை.

எசேக்கியேல் 36:26ல், தேவன் இதனையே தமது ஜனத்திற்கு வாக்களித்துள்ளார். இஸ்ரவேல் ஜனங்களிடம், “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து… கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” மேலும், “நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்” (வச. 25), “உங்கள் உள்ளத்தில் என் ஆவியை  வைத்து… (வச. 27). நம்பிக்கையிழந்த ஒரு ஜனத்திற்கு ஒர் புதிய துவக்கத்தைத் தருகின்றார். வாழ்வைப் புதிதாக்குகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக இந்த வாக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டது. நாம் அவரை விசுவாசிக்கும் போது புதிய ஆவியுள்ள இருதயத்தைப் பெற்றுக் கொள்வோம். அந்த ஆவியானவர் நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும் நீக்கி, நம்மைச் சுத்தமாக்கி புதிய இருதயத்தைத் தருகின்றார். தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்ட நம்முடைய புதிய இருதயம், வாழ்வுதரும் கிறிஸ்துவின் புதிய இரத்தத்தினால் இயங்குகின்றது. நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாய் வாழ்வோம் (ரோம. 6:4)

விழிப்பாயிரு

நான் வெப்பமான தென்புற பட்டணங்களிலேயே வளர்ந்ததால், வடபுறம் இடம் பெயர்ந்த போது பல மாதங்களாக பனிபடர்ந்து காணப்படும் நீண்ட சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டக் கற்றுக்கொள்ள பல நாட்களாயின. நான் முதல் முறையாக, கடினமான குளிர்காலத்தைச் சந்தித்தபோது மூன்று முறை பனிக்குள் சிக்கி, வெளியேற வழிதெரியாமல் திகைத்தேன்! ஆனால், பல ஆண்டு அநுபவத்திற்குப் பின், பனி நேரங்களிலும் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்குக் கற்று கொண்டேன். பனிச்சூழலில் மிகவும் நன்றாக கார் ஓட்டக் கற்று கொண்டேனென என்னைக் குறித்து சற்று அதிகமாகவே நினைத்துக் கொண்டேன். நான் மிகவும் விழிப்பாக, நிறுத்தினேன், அப்பொழுது கருமையான இருப்பதை ஒரு பனிக் குவியலின் மீது மோதி, வழுக்கி சாலையோரமிருந்த ஒரு டெலிபோன் கம்பத்தில் மோதினேன்.

நல்ல வேளை, ஒருவரும் காயப்படவில்லை. ஆனால், அன்று நான் ஒன்றினைக் கற்றுக்கொண்டேன். நான் நன்றாகத்தான் ஓட்டுகிறேன் என்று எத்தனை ஆபத்தை விளைவிக்கின்றது என்பதைத் தெரிந்து கொண்டேன். கவனமாயிருப்பதற்குப் பதிலாக, காரை தானாக ஓட்டும் ஒரு (Auto Pilot) போட்டிருந்தேன்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் இத்தகைய விழிப்புணர்வை செயல்படுத்துவது அவசியமாயிருக்கின்றது. வாழ்க்கையில் சிந்தனையில்லாமல் வழுக்கிக் கொண்டு செல்லும் நிலையை கவனமற்றிருப்பது விசுவாசிகள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதென பேதுரு எச்சரிக்கின்றார். விழிப்பாயிருங்கள் என்கின்றார் (1 பேது. 5:8). பிசாசானவன் நம்மை அழிப்பதற்கு சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றான். எனவே நாமும் சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும், விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும் விழிப்பாயிருக்க வேண்டும் (வச. 9) ஆனால், இது நம்முடைய சுயபெலத்தினால் செய்யக் கூடிய ஒன்றல்ல. “சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலை நிறுத்துவார்” (வச. 10) அவருடைய வல்லமையால் நாம் விழிப்பாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி தேவனைப் பற்றிக்கொள்வோம்.

நீண்ட கால ஜெபம்

நீண்ட கால ஜெபம்

சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு

கிறிஸ்மஸ் விடுமுறையின் போது எங்கள் குடும்பத்தின் ஐந்து பேரும் ரோம் நகருக்குச் சென்றிருந்தோம். ஒரே இடத்தில் இத்தனை அதிகமான ஜனக்கூட்டம் நிரம்பியிருக்கும் காட்சியை நான் இதற்குமுன் கண்டதேயில்லை. கூட்டத்தினூடே நாங்கள் ஊர்ந்து சென்று வாட்டிக்கன், கொலிசியம் போன்ற இடங்களைப் பார்வையிட்டோம். நான் என்னுடைய குழந்தைகளிடம் சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வோடு இருக்குமாறு அடிக்கடி வலியுறுத்திக் கொண்டேயிருந்தேன். நீ எங்கிருக்கின்றாய்,

யார் உன்னைச் சுற்றியிருக்கின்றார்கள், உன்னைக் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பனவற்றின் மீது கவனமாயிருக்கும்படி கூறிக் கொண்டேயிருந்தேன். நாம் இருக்கின்ற இடமும், நம்மைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாப்பானவையல்ல எனக் கூறும்படியான ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அலைபேசிகளையும் காதில் வைக்கும் மைக்ரோ போன்களையும் பயன்படத்திக் கொண்டிருப்பதால் பெரும்பாலான சிறியவர்கள் (பெரியவர்களும்) தன்னைச் சுற்றியிருப்பவற்றைக் குறித்து விழிப்போடிருக்க பழகிக்கொள்வதில்லை.

சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு என்பதை பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்காக பவுல் ஏறெடுத்த ஜெபத்தில் காணலாம். பிலிப்பியர் 1:9-11ல் உள்ளது. பவுல் அவர்களின் மீது கொண்டுள்ள ஆவல் என்னவெனில் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும், எங்கிருக்கின்றோம், எப்படிப்பட்ட சூழலிலிருக்கின்றோம் என்பதைக் குறித்த ஓர் எண்ணத்தை நாளுக்கு நாள்; அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்;காக ஓர் இலக்கினை ஏற்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் மேலான ஒரு நோக்கத்தோடு பவுல் ஜெபிக்கின்றார். தேவனுடைய அன்பைப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஜனங்கள் தங்களைப் பரிசுத்தமும் குற்றமற்றவர்களாகவும் காத்துக் கொண்டு தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி கிறிஸ்து இயேசுவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக, இடறலற்றவர்களாக வாழும்படி ஜெபிக்கின்றார். தேவன் நம் வாழ்வில் இருக்கின்றார். நாம் அவரையே மேலும் மேலும் சார்ந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் இத்தகைய வாழ்வு நமக்குள் துளிர்க்கும், நாம் தேவனையும் பிரியப்படுத்த முடியும். மேலும் நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்தவர்களாய் அங்கு அவருடைய அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.

விவரிக்க முடியாத அன்பு

வியக்கும்படி செய்ய தீர்மானித்தனர். எங்கள் ஆலய அங்கத்தினர்கள், ஞாயிறு பாடசாலை வகுப்பறையை பலூன்களால் அலங்கரித்து, அங்கு ஒரு சிறிய மேசையை வைத்து, அதில் ஒரு கேக்கை வைத்திருந்தனர். என்னுடைய மகன் கதவைத் திறந்த போது அனைவரும் ஒன்று சேர்ந்து, “மகிழ்ச்சியான பிறந்த நாள்” என வாழ்த்தினர்.

பின்னர் நான் கேக்கை வெட்டிய போது என்னுடைய மகன் என் காதுகளில் மெதுவாக, “அம்மா, ஏன் இங்கிருக்கின்ற அனைவரும் என்னை நேசிக்கின்றார்கள்?” என்று கேட்டான். நானும் அதே கேள்வியையே கேட்கின்றேன்! அவர்களுக்கு எங்களைக் கடந்த ஆறுமாதங்களாகத்தான் தெரியும், ஆனால் அவர்கள் அநேக நாட்கள் பழகிய நண்பர்கள் போன்று எங்களிடம் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் என்னுடைய மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிக்கின்றது.தேவன் ஏன் நம்மை இவ்வளவு நேசிக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும் அவர் நம்மை நேசிக்கின்றார். அவருடைய அன்பு நமக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றது. அவருடைய அன்பைப் பெற நாமொன்றும் செய்யவில்லை. இருப்பினும் அவர் விவரிக்க முடியாத அளவு அன்பு கூருகின்றார். வேதாகமத்தில் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவா. 4:8) எனக் காண்கின்றோம். அன்பு அவருடைய தன்மையின் ஒரு பகுதி.

தேவன் நம்மீது அன்பினைப் பொழிந்து கொண்டிருக்கின்றார். எனவே நாமும் அந்த அன்பினை பிறர்மீது காட்டுவோம். இயேசு தன்னுடைய சீடர்களிடம், “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்… நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார் (யோவா. 13:34-35).

எங்களுடைய ஆலயத்தின் ஜனங்கள் எங்களை நேசிக்கின்றார்கள், ஏனெனில், தேவனுடைய அன்பு அவர்களில் இருக்கின்றது. அவருடைய அன்பு அவர்கள் வழியாக செயல்பட்டு, அவர்களை தேவனுடைய சீடர்களாகக் காண்பிக்கின்றது. நம்மால் தேவனுடைய முழு அன்பையும் புரிந்துகொள்ள முடியாது, ஆனால், அவருடைய விவரிக்க முடியாத அன்பின் எடுத்துக்காட்டாக, பிறர்மீது அன்பைப் பொழிய முடியும்.

கடனாகப் பெறப்பட்ட ஆசீர்வாதங்கள்

மதிய உணவிற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஜெபத்திற்காக தலை வணங்க, ஜெஃப் ஜெபித்தான். “அப்பா, நாங்கள் உம்முடைய காற்றைச் சுவாசிக்கவும், உம்முடைய உணவை உண்ணவும் எங்களுக்குதவியதால் உமக்கு எங்களது நன்றியை கூறிக் கொள்கின்றோம்” என்றான். ஜெஃப் இப்பொழுது தனது வேலையை இழந்து கஷ்டங்களின் மத்தியில் இருக்கின்றான். ஆனால், அவனுடைய இருதயம் தேவன் மீதுள்ள நம்பிக்கையோடிருப்பதால், எல்லாம் தேவனுடையது என்பதைக் கண்டு கொண்டான். அது என்னை ஆழமாகத் தொட்டது. என்னுடைய அனுதினவாழ்வில் நான் பயன்படுத்தும் அடிப்படை காரியங்களிலிருந்து எல்லாம் தேவனுடையவையே என்பதை நான் உண்மையாகத் தெரிந்து கொண்டுள்ளேனா? தேவனே அவற்றை பயன்படுத்த என்னை அனுமதித்துள்ளார்.

தாவீது ராஜா, எருசலேம் தேவாலயத்தைக் கட்ட, இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து காணிக்கைகளைச் சேகரித்தபோது அவனும் ஜெபித்தான். “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்… எல்லாம் உம்முடையது” (1 நாளா. 29:14,16) என்று ஜெபித்தான்.

நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையானவற்றையெல்லாம் தேவனே தருகின்றார். “அவரே ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (1 நாளா. 8:18) என வேதாகமம் சொல்லுகிறது. நாம் வைத்திருப்பதெல்லாம் கடனாகப் பெறப்பட்டவை என்பதை நினைத்து, உலகப் பொருளோடு நமக்கிருக்கின்ற பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு திறந்த கரங்களோடும், திறந்த உள்ளத்தோடும் தாராளமாகப் பகிர்ந்து கொள்வோம். ஏனெனில், நாம் தேவனிடமிருந்து அனுதினமும் பெறுகின்ற இரக்கத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருப்போம்.

தேவன் தாராளமாகக் கொடுக்கின்ற தயாள பிரபு. அவர் அன்பினால் தன்னுடைய குமாரனையே நமக்காகத் தந்தார் (ரோம. 8:32). நாம் மிக அதிகமாகப் பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள சிறிதும், பெரிதுமான அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் நம்முடைய உள்ளம் நிறைந்த நன்றியை அவருக்குச் செலுத்துவோம்.

மிகப்பெரிய பரிசு

பல ஆண்டுகளாக என்னுடைய சிநேகிதி பார்பரா எனக்கு அதிக எண்ணிக்கையில், என்னை ஊக்கப்படுத்தும் அட்டைகளையும், சிந்திக்க வைக்கும் பரிசுகளையும் கொடுத்துவந்தாள். நான் அவளிடம் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று சொன்னபோது, இதுவரை கொடுத்ததையெல்லாம் விட மிகப் பெரிய பரிசாக என்னுடைய முதல் வேதபுத்தகத்தைக் கொடுத்தாள். 'நீ தேவனோடு நெருக்கமாக வளர்ந்து, ஆவியில் முதிர்ச்சியடைந்து, அவரை அனுதினமும் சந்தித்து, வேதம் வாசித்து, ஜெபித்து, அவர் மீது நம்பிக்கையோடு, அவருக்குக் கீழ்படிந்திரு" என்றார். பார்பரா தேவனைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்ள என்னை அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்வு முற்றிலும் மாறியது.

அப்போஸ்தலனாகிய பிலிப்புவைப் பற்றி பார்பரா எனக்கு நினைப்பூட்டினாள். இயேசு, பிலிப்புவிடம் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தபோது (யோவா. 1:43), அந்த அப்போஸ்தலன் உடனடியாகத் தன்னுடைய நண்பன் நாத்தான்வேலிடம், 'நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் (வச. 45) என்றான். நாத்தான்வேல் சந்தேகித்த போது, பிலிப்பு வாக்குவாதமோ, விமர்சனமோ பண்ணவுமில்லை, அவனை விட்டுவிடவுமில்லை. ஆனால், நேருக்கு நேர் சந்திக்கும் படி இயேசுவிடம் அழைத்து வந்தான். 'வந்து பார்" என்றான் (வச. 46).

நாத்தான்வேல் இயேசுவை, 'தேவனுடைய குமாரன்", 'இஸ்ரவேலின் ராஜா" (வச. 49) என்று வெளிப்படுத்தினதைக் கேட்ட பிலிப்பு எப்படி மகிழ்ந்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. தன்னுடைய நண்பன் 'மிகப்பெரியவற்றை" காணத் தவறவில்லை என்பது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கிறது. இயேசு அவனிடம், 'இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்" (வச. 50) என்றார்.

தேவனோடு நமக்குள்ள நெருங்கிய உறவை பரிசுத்த ஆவியானவர் துவக்கி வைக்கின்றார். அவரை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகின்றார். இயேசுவை நன்கு அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகின்றார். இயேசுவைச் சந்திக்க நாம் பிறரை அழைத்துவரும்படி பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் கிரியை செய்கின்றார். இயேசுவை மேலும் அறிந்துகொள்ள அழைப்பதே, நாம் பெற்றுக்கொள்ளவும், கொடுக்கவும் ஏற்ற மிகச்சிறந்த பரிசு.

படைப்பவரும் காப்பவரும்

பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.

புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.

ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.

ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், 'தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்" (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.

படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், 'எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது" (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.

பிரகாசமான விளக்குகள்

2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், கென்யாவிலுள்ள நைரோபி என்ற இடத்திலுள்ள மாதரே என்ற பின்தங்கிய பகுதிக்குச் சென்ற எங்கள் ஆலயத்தின் குழுவினர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போயினர். அங்கு நாங்கள் அழுக்கடைந்த

பள்ளிக்கூடத்தையும், துருபிடித்த உலோகச் சுவர்களையும் நலிவடைந்த மரச்சாமான்களையும் கண்டோம். மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள அம்மக்களினிடையே ஒரே ஒரு நபர் மட்டும் மாறுபட்டு காணப்பட்டாள்.

அவளுடைய பெயர் பிரிலியன்ட். அந்த பெயர் அவளுக்குச் சற்றும் பொருத்தமாயில்லை. அவள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குள் மகிழ்ச்சியும் தன்னுடைய சேவையைக் குறித்த ஒரு தீர்மானமும் இருந்தது. அவள் வண்ணமிகு உடையணிந்திருந்தாள். அவளுடைய தோற்றமும், அவள் மகிழ்ச்சியோடு அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த விதமும் எங்களை வியப்படையச் செய்தது.

முதலாம் நூற்றாண்டில் பிலிப்பி பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வுலகில் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போன்று பிரிலியன்ட் -ம் தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியைக் கொடுத்தாள். ஆவியில் பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த உலகில், இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் வானத்தின் சுடர்களைப் போலப் பிரகாசிக்க வேண்டுமென பவுல் கூறுகின்றார் (பிலி. 2:15). நாம் செய்யவேண்டிய செயல் திட்டம் ஒன்றும் மாறிவிடவில்லை. பிரகாசமான விளக்குகள் எங்கும் தேவையாயிருக்கின்றது. 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வச. 13) என்பதைக் கேட்கும் போது எத்தனை ஆர்வமாயிருக்கிறது. இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள், எப்படியிருக்கவேண்டுமென விரும்புகின்றாரோ அப்படியே அவருடைய விசுவாசிகள் பிரகாசிக்க வேண்டும். இன்னும் அவர் நமக்குச் சொல்வது, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்... மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத். 5:14-16) என்பதே.