Archives: அக்டோபர் 2022

ஒளிருவதற்கான வாய்ப்புகள்

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

தேவனில் நம்பிக்கை

பெருந்தொற்று வெகுவாய் பரவிய நாட்களில் டெல்லியில் வசித்த ஷீத்தல் என்ற பெண், உணவில்லாமல் வருமானமில்லாமல் சாலையோரங்களில் ஆதரவற்று கிடந்த மக்கள் மீது பரிவு கொண்டாள். அவர்களின் நிலைமையை அறிந்து 10 பேருக்கு உணவு சமைத்து, அதைக் கொண்டுபோய் கொடுத்தாள். இந்த செய்தி வெகுவாய் பரவியது. சில தன்னார்வு நிறுவனங்கள் அவளுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, அதின் விளைவாய், “ப்ராஜெக்ட் அன்னபூர்னா” என்ற திட்டம் உருவானது. 10 பேருக்கு உணவளிக்கத் துவங்கிய ஒரு பெண்ணிலிருந்து துவங்கிய இந்த முயற்சி, 50 தன்னார்வ தொண்டர்களுடன் 60,000 தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் பெரிய திட்டமாய் உருவெடுத்தது.
கொரோனா பெருந்தொற்றானது சேவை மனப்பான்மை கொண்ட பல நபர்களை ஒருங்கிணைத்தது. கிறிஸ்துவின் ஒளியை பிரகாசிக்கும் பல வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்தது. இயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு... உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16) என்று போதிக்கிறார். அன்பு, தயவு, நல்வார்த்தைகள் மற்றும் செய்கைகள் மூலமாக (கலாத்தியர் 5:22-23), கிறிஸ்துவின் ஒளியை நாம் பிரகாசிக்கச் செய்யலாம். இயேசுவின் மூலமாய் நாம் பெற்றுக்கொண்ட ஒளியை அன்றாடம் நம் வாழ்க்கையில் பிரதிபலித்தால்,“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (மத்தேயு 5:16) செய்யலாம்.
கிறிஸ்துவின் தேவையுள்ள உலகத்திற்கு அவர் நம்மை உப்பாகவும் ஒளியாகவும் வைத்துள்ளதால், இன்றும் என்றும் அவருடைய ஒளியை நம்மில் பிரகாசிக்க பிரயாசப்படுவோம்.

பலவீனம் பலமாகும்போது

நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன? எரேமியா 20:18

ட்ரூ, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ததற்காய் இரண்டு ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். சிறைச்சாலையில் அடைபட்டு மகிழ்ச்சியாயிருந்த பல மிஷனரிகளின் வாழ்க்கை சரிதையை அவன் படித்திருக்கிறான். ஆனால் தன்னுடைய அனுபவம் அதுபோலில்லை என்று அவன் சொன்னான். தேவன் அவருக்காய் பாடனுபவிக்கும்பொருட்டு தவறான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அவன் மனைவியிடத்தில் சொன்னான். அவனது மனைவியோ, “இல்லை, அவர் சரியான நபரையே தெரிந்தெடுத்திருக்கிறார்; அது ஏதேச்சையானது அல்ல” என்று சொன்னாள்.

யூதேயா ஜனங்கள் பாவம் செய்ததினிமித்தம் அவர்களைத் தேவன் தண்டிப்பார் என்று எச்சரித்த எரேமியா தீர்க்கதரிசியோடு ட்ரூவை ஒப்பிடலாம். எரேமியா முன்னறிவித்த நியாயத்தீர்ப்பு இன்னும் தேசத்தின் மீது வரவில்லை. ஆனால் அவனைச் சிறையிலடைத்தனர். “கர்த்தாவே, நீர் என்னை இணங்கப்பண்ணினீர்” (வச.7) என்று எரேமியா தேவனைக் குற்றப்படுத்துகிறான். தேவன் தன்னை விடுவிக்கத் தவறிவிட்டார் என்பதைத் தீர்க்கதரிசி நம்ப நேரிட்டது. “நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று” (வச.8) என்று கூறுகிறான். “நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக” (வச.14) என்று சலித்துக்கொள்கிறான். “நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?” (வச.18).

ட்ரூ, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் அவனுடைய மிகுந்த பாடுகளின் மூலம், அவன் பலவீனமானவன் என்பதினால் தேவன் அவனை எரேமியாவைப் போலவே தெரிந்தெடுத்திருக்கிறார். ட்ரூவும் எரேமியாவும் இயல்பில் பலவான்களாக இருந்திருப்பார்களாகில், அவர்களுடைய வெற்றிக்கு அவர்களுடைய திறமை பாராட்டப்பட்டிருக்கும். அவர்கள் பலவீனர்களாயிருந்தபடியினால் அவர்களின் பொறுமையினால் உண்டான மகிமை தேவனுக்கே போகிறது (1 கொரிந்தியர் 1:26-31). அவனுடைய பெலவீனமே, இயேசுவுக்காய் பயன்படும் நேர்த்தியான மனிதனாய் அவனை மாற்றியது.

சுவிசேஷத்தினிமித்தம்

நெல்சன், 1916ஆம் ஆண்டு அமெரிக்காவில் மருத்துவ பட்டம் பெற்றார். அந்த ஆண்டின் இறுதியில், அவரும் திருமணமாகி ஆறுமாதமான அவருடைய மனைவியும் சீனாவுக்கு வந்து சேர்ந்தனர். தன்னுடைய 22 வயதில் அந்த மருத்துவமனைக்கு மருத்துவராகப் பொறுப்பேற்றார். இரண்டு மில்லியன் மக்கள் வாழும் அந்த பகுதியில் இருக்கும் ஒரே மருத்துவமனை இது. 24 ஆண்டுகள் அந்த பகுதியில் குடும்பத்தோடு தங்கியிருந்து, மருத்துவமனையையும் நடத்திக்கொண்டு, அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சுவிசேஷத்தையும் நெல்சன் பகிர்ந்தார். ஆரம்பத்தில் “அந்நிய சத்துரு” என்று மக்கள் தங்கள் நம்பிக்கையில்லாமையை வெளிப்படுத்தினாலும், பின் நாட்களில், “சீன தேசத்து மக்களை நேசிக்கும் நெல்சன்” என்று அவரை அன்போடு அழைத்தனர். அவருடைய மகளான ரூத், சுவிசேஷகரான பில்லி கிரகாமை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திறமையான மருத்துவராகவும் நேர்த்தியான வேதாகம ஆசிரியராகவும் இருந்தாலும்; அவருடைய திறமை அல்ல, அவருடைய சுபாவங்களே மற்றவர்களைத் தேவனுக்கு நேராய் நடத்திற்று. கிரேத்தா தீவிலிருக்கும் திருச்சபைக்குப் பொறுப்பாயிருந்த தீத்து என்னும் புறஜாதி ஊழியனுக்கு பவுல் நிருபம் எழுதியபோது, கிறிஸ்துவைப்போல் வாழ்வது முக்கியமானது; ஏனெனில் அதுவே சுவிசேஷத்திற்கு அலங்காரம் என்று அறிவுறுத்துகிறார் (தீத்து 2:10). ஆகிலும் அதை நாம் நம்முடைய சுயபெலத்தோடே செய்ய முடியாது. கர்த்தருடைய கிருபையானது நம்மை “தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்” மாற்றி (வச.12), ஆரோக்கியமான உபதேசத்துக்கு (வச.1) பாத்திரர்களாய் நம்மை உருவாக்கும்.
நம்மை சுற்றியுள்ள அநேகருக்கு கிறிஸ்துவின் நற்செய்தி தெரியாது. ஆனால் அவர்களுக்கு நம்மை தெரியும். அவருடைய நற்செய்தியை அலங்கரிக்கப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துவதற்குத் தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

ஆவியின் கனிகள்: ஓர் புதிய பார்வை

றுவடையின் காலம் என்பது வெகுமதிகள் பெறும் காலம். பல மணி நேர உழைப்பு, வியர்வை, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுதல், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பயிர்களைப் பாதுகாத்தல், விரல் நகங்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் மண் துகள்கள் ஆகிய அனைத்து பிரயாசங்களும் நம் தோட்டத்தில் விளையும் விளைச்சலைப் பார்க்கும்போது உகந்ததாய் தெரியும்.

நம்முடைய தோட்டத்தில் விளையும் தாவரங்களின் வளர்ச்சி, நிறைவான மற்றும் சுவையான பலனைக் கொடுக்கிறது. ஆனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சி என்பது நம் தோட்டத்திலுள்ள கனிகளின் வளர்ச்சியைப் போல் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று அல்ல. நம்முடைய அதிகப்படியான பிரயாசங்கள்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உதவிக்கான அழுகை

டேவிட் வில்லிஸ், வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் கீச்சகத்தில் இவ்வாறு பதிவிட்டார். "ஹாய்@வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார். 
  
நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார். என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியைப் பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. "என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்" (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், "அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி" (வ.9) என்றார். 
  
"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் இடும் கூக்குரல்களைக் கேட்டு, "நான் இங்கே இருக்கிறேன்" என்று தேவன் கூறுவதால். 
  

  

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது. 
  
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12). 
  
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20). 
  
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்! 
  

  

சாக்லேட் பனி துகள்கள்

சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது. 
  
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும் 
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர். 
  
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).