அக்டோபர், 2020 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2020

குச்சிகளும் செங்கற்களும் தேவனும்

அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் தேவன் அவர்களை என்ன செய்ய அழைகிக்கிறார் என்ற கேள்வியோடு  ஜெபித்த பிறகு, மார்க்கும் நீனாவும் அவர்கள் நகர்ப்புற மையத்திற்கு செல்வது தான் சரி என்று தீர்மானித்தனர். அவர்கள் ஒரு காலியான வீட்டை வாங்கினர். வீடு  புதுப்பித்தல் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையிலே புயல் வந்தது. மார்க் எனக்கு இவ்வாறு ஒரு உரை செய்தியில் எழுதினார்: “ எங்கள் நகரம் வழியாக பாய்ந்த புயல், எங்களுடைய  புதுப்பித்தல் வேலையை தகர்த்தெரிந்தது. வெறும் குச்சிகளும் மற்றும் செங்கற்களும் தான் நிற்கின்றன. தேவன் ஏதோவொன்றைக் திட்டம் கொண்டிருக்கிறார்போலும்” 

கட்டுப்படுத்த முடியாத புயல்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கும், வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும்.  துரதிர்ஷ்டத்தின் மத்தியில் நாம் தேவனை நோக்கிக்கொண்டிருப்பது தான்  பிழைக்க ஒரே  வழி. 

யோபின் வாழ்க்கையில் வானிலையால் ஏற்பட்ட பேரழிவு, சொத்து இழப்பு மற்றும் பிள்ளைகளின் இறப்பு
(யோபு 1:19) அவருடைய வாழ்வில் அவர் சந்தித்த அதிர்ச்சியாகும். அதற்கு முன் மூன்று தூதர்கள் துற்செய்திகளைக் கொண்டு வந்தார்கள் (வச. 13-17).

எந்த ஒரு நாளிலும், விருந்தில் இருந்து வருத்தத்திற்கு, கொண்டாட்டத்திலிருந்து மரணத்திற்கு ஊடே நாம் செல்ல கூடும். நம் வாழ்க்கையை துரிதமாகவே  - நிதி, உறவு, உடல், உணர்ச்சி, ஆன்மீகம் ரீதியில் - வெறும்  “குச்சிகள் மற்றும் செங்கற்கள் ஆகலாம். ஆனால் கடவுள் எந்த புயலையும் விட வலிமையானவர். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும், யோபைபோல  “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக்கூடிய விசுவாச பக்குவம் வேண்டும்.” (வச. 21).

அனைவருக்கும் ஒரு வழிகாட்டி தேவை

என்னுடைய புது மேற்பார்வையாளருடைய அறைக்குள் நான் நுழையும் போது சற்றே பயந்து தயக்கம் கொண்டேன். ஏனென்றால் பழைய மேற்பார்வையாளர் கடினமான குணம் உள்ளவர். அடிக்கடி அவருக்கு கீழ் வேலை செய்கிறவர்களை அழ வைத்தார். புதிதாக வந்தவர் எப்பேற்பட்டவரோ என்று யோசித்துக்கொண்டே அந்த அறையில் நுழைந்தேன். அவர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றபோது என்னுடைய பயங்கள் நீங்கியன; என்னுடைய அனுபவங்களை அவர் விசாரித்து கனிவாக பேசினார். அவர் உண்மையிலேயே கரிசனை கொண்டவர் என்று நான் அறிந்துகொண்டேன். இயேசுவின் மேல் விசுவாசம் கொண்ட  அவர் எனக்கு நண்பரும், ஊக்குவிப்பவரும், குருவுமாக ஆனார்.

அப்போஸ்தலர் பவுல் இவ்விதமாக “பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு” (தீத்து 1:1) ஆவிக்குரிய குரு. அவனுக்கு எழுதின நிருபத்தில் அவன் சபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. (தீத்து 2:1),  “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக”. (வ 7-8)  என்கிறார். அதனால் தீத்து அவருடைய “சகோதரனும்,கூட்டாளியும், உடன்வேலையாளுமாக (2 கொரி. 2:13; 8:23) கருதப்பட்டான்.

நம்மில் அநேகர்  - ஒரு ஆசிரியர், பயிற்சியாளர், தாத்தா, இளைஞர் தலைவர் அல்லது போதகர் - இவர்கள் மூலமாக அறிவு, ஞானம் ஊக்கம், தேவன் மேல் விசுவாசம் இவைகளில் வளர்ந்திருக்கிறோம்.  இயேசுவுடன் பயணிக்கும்போது நீங்கள்  கற்றுக்கொண்ட ஆவிக்குரிய படங்களால் யார் பயன் பெறலாம்.

ஒரு பாரஊர்தி (truck) ஓட்டுநரின் கரங்கள்

என்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும்  என்னுடைய அப்பாதான்.  இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.

நான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது  உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா? அதையும்  நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது?” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு  இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..

இந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்களை போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..

சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை  ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.

இது யாருக்காக?

அந்த காட்சி என்னை சத்தமாகவே சிரிக்க செய்தது. சாலையின் இருபுறமும் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வண்ணப்பிரதிகளை எறிந்துகொண்டு, கட்சித் தலைவர் வருகையை எதிர்நோக்கி மக்கள் கூட்டம் பெருகிற்று.  அப்பொழுது சாலையின் நடுவே ஒரு தெரு நாய்க்குட்டி மெதுவாக நடந்து போனது. அங்கு எழும்பின ஆரவாரம் எல்லாம் தனக்கே என்று புன்னகை செய்ததுபோல எனக்கு பட்டது. 

நாய்க்குட்டி இவ்வாறாக நடந்துகொண்டது ஒரு விதத்தில் அழகாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய புகழ்ச்சியை நாம் கடத்திக் கொள்வது நம்மையே விழச்செய்யும். தாவீது இதை அறிந்திருந்தான்; தன்னுடைய பெலசாலிகள் தம்முயிரை துச்சமென்றெண்ணி கொண்டுவந்த தண்ணீரை அவன் குடிக்க மறுத்தான். பெத்லெகெமிலிருந்த அந்த கிணற்றிலிருந்து யாராவது குடிக்க நீர் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்று அவன் ஏறக்குறைய தனக்குள் சொல்லிக் கொண்டதை  அவனுடைய மூன்று பலசாலிகள் உண்மையாக எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய அணிகளைத் தாண்டி தண்ணீர் மொண்டு கொண்டுவந்தனர். அதைக் கண்டு உணர்ச்சிவசமான தாவீது அதை குடிக்க மறுத்தான். அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். (2 சாமு. 23:16)

கனத்தையும் துதியையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம்  என்பது நம்மை குறித்து அதிகம் சொல்லும். ஆண்டவருக்கு மகிமை செலுத்தப்படும் போது குறுக்கிடாதே. அந்த அணிவகுப்பு நமக்கு அல்ல. நம்மை யாராவது கௌரவித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி இயேசுவுக்கே மகிமை செலுத்துங்கள்  அந்த “தண்ணீர்” நமக்கல்ல. துதி செலுத்திய பின் அதை ஆண்டவருக்கு முன்பாக ஊற்றி விடுங்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).