எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மாரியன் ஸ்ட்ரோட்கட்டுரைகள்

எதை நான் தருவேன்?

 

கிறிஸ்துமஸிற்காக தங்கள் ஆலயத்தை அலங்கரிக்கும் பொறுப்பை பெற்ற சிலர் அந்த வருடம் ஓர் புதுமையான வழியை கையாண்டனர். “கிறிஸ்துமஸ் பட்டியல்” என்ற கருப் பொருளின் அடிப்படையில் அலங்கரித்தனர். தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்காமல், ஒவ்வொரு நபரிடமும் ஓர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் ஒரு சீட்டை கொடுத்தனர். இயேசுவிடத்திலிருந்து என்ன பரிசு வேண்டும் என்று ஒரு பக்கத்திலும், பின்பக்கத்தில் அவருடைய பிறப்பைக் கொண்டாடி அங்கீகரிக்கும் விதத்தில் அவருக்கு என்ன பரிசு கொடுக்க போகின்றனர் என்றும் எழுதவேண்டும். அதை வைத்து ஆலயத்தை அலங்கரிக்க எண்ணினர்.

நீங்கள் இதை செய்வீர்களானால் என்ன பரிசைக் கேட்பீர்கள், எதைக் கொடுப்பீர்கள்? வேதாகமத்தில் அநேக யோசனைகளைக் காணலாம். தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பதாக வாக்களித்துள்ளார். அதனால் நாம் ஓர் புதிய வேலையைக் கேட்கலாம், பணத் தேவைகளை சந்திக்கும்படியாகவும், நம்முடைய அல்லது மற்றவருடைய சரீர சுகத்திற்காகவும், குடும்பங்களில் நல்லுறவு மேம்படவும் நாம் வேண்டிக்கொள்ளலாம். மேலும் தேவனுடைய பணியைச் செய்ய நமக்கு கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய பரிசு என்ன என்று நாம் எண்ணலாம். அவற்றில் பல ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்னும் ஆவியின் கனி நம்வாழ்வில் இன்னும் அதிகமாக வெளிப்பட விரும்புவோம் (கலா. 5:22-23).

அவரிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகச்சிறந்த பரிசு - தேவனின் ஈவாகிய குமாரனும் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து தான். அவரின் மூலம் பாவ மன்னிப்பையும், மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கையையும், சதாகாலமும் நீடிக்கும் நித்திய வாழ்வின் வாக்குறு தியையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே அவருக்கு நம்மால் தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு என்னவென்றால் நம்முடைய இருதயம் தான்.

எல்லோருக்கும் நல்வரவு!

திருச்சபையின் வாலிபருக்கான திரைப்படம் காண்பிப்பதற்காக அநேக நாட்களாக ஜெபத்துடன் காத்திருந்தோம். காண்பிப்பதற்கான இரவும் வந்தது. கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் அந்த நாளுக்கான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சூட்டடுப்பில் பிஸ்ஸாக்கள் (ரொட்டி போன்ற ஒருவகை உணவு) சூடாகிக் கொண்டிருந்தன. நியூயார்க்கில் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஓர் இளைஞர் குழுவினர் ஒரு இளம் போதகர் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்ட விதத்தை விளக்கும் அந்தத் திரைப்படம், மேலும் அநேக வாலிபப்பிள்ளைகள் திருச்சபையின் வாலிபக்குழுவில் சேர்வதற்கு காரணமாக இருக்குமென்று, அந்தத் திருச்சபையின் வாலிபர்களின் போதகர் ஸ்டீவ் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால், அந்த மாலைப்பொழுதில் மிக முக்கியமான கால்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படப்போவதை அவர் அறியவில்லை. ஆகவே அவர் எதிர்பார்த்தை விட குறைவாகவே வாலிபர்கள் அன்று வந்தார்கள். மனதிற்குள்ளாக பெருமூச்சுவிட்டு, அறையிலிருந்த விளக்குகளை ஒளி மங்கச்செய்து ஸ்டீவ் திரைப்படத்தைப்போட ஆயத்தமானார். அப்பொழுது திடீரென தோல்உடைகளை அணிந்த மோட்டார் பைக் குழுவைச் சேர்ந்த 5 வாலிபர்கள் அந்த அறைக்குள் நுழைந்தார்கள். ஸ்டீவின் முகம் பயத்தினால் வெளிறியது.

டீ டாக் (T Dog) என்று அழைக்கப்பட்ட அந்த குழுவின் தலைவன், ஸ்டீவைப் பார்த்து அவன் தலையை துலுக்கி, “இந்தத் திரைப்படம் அனைவருக்கும் இலவசம்தானே?” என்று கூறினான். “திருச்சபையின் வாலிபர் குழுவிற்கு மட்டும்தான்” என்று ஸ்டீவ் கூறப்போன சமயத்தில் டீ டாக் (T Dog) என்ற அந்தத் தலைவன் கீழே குனிந்து இயேசு என்ன செய்வார்? என்ற எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்த WWJD (What would Jesus Do) ஒரு கைப்பட்டையை எடுத்து, “இது உங்களுடையது தானே நண்பா?” என்று கேட்டான். மிகவும் சங்கடமான உணர்வுடன், ஆமாம் என்று ஸ்டீவ் கூறினார். பின் அங்கு வந்த புதிய விருந்தாளிகள் இருக்கையில் அமரும் வரை காத்திருந்தார்.

ஸ்டீவின் நிலையில் நீங்கள் எப்பொழுதாவது இருந்ததுண்டா? இயேசுவைப்பற்றிய நற்செய்தியை பிறருக்கு அறிவிக்க நீங்கள் ஆவலாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்மனதில் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியவர்கள் “இவர்கள்தான்” என்ற பட்டியலை வைத்திருக்கலாம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, அவர் பழகின மக்களைப்பற்றி யூத மதத்தலைவர்கள் அவரைக் குற்றப்படுத்தினார்கள். ஆனால் பிறரால் வேண்டாம் என்று தள்ளப்பட்ட மக்களை இயேசு அன்புடன் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அவர்களுக்கு அவர் அதிகமாக தேவைப்படுகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் (லூக். 5:31–32).

இடர்பாடுகள் மத்தியில் மகிழ்ச்சியாயிருங்கள்

எமில் ஒரு வீடற்ற மனிதன். அவன் ஒவ்வொரு நாளும் சாலையிலுள்ள நடைபாதையை குனிந்து பார்த்துக்கொண்டே நடந்து ஆண்டு முழுவதையும் கழித்தவன். யாராவது அவனை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களை நேருக்கு நேராக சந்திக்க வெட்கப்பட்டான். ஏனெனில் அவனது வாழ்க்கை எப்பொழுதும் இதுபோல நடைபாதையில் கழிக்கப்படவில்லை. அவன் சாலையில், கீழே விழுந்து கிடக்கும் காசு அல்லது பாதி புகைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டு கிடைக்குமாவென்று அவ்வாறு குனிந்தே நடந்தான். அவ்வாறு அவன் தொடர்ந்து குனிந்தே நடப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டதால், அவனுடைய முதுகெலும்புத் தண்டும் நிலையாக…

கற்றுக்கொண்ட பாடம்

விதவையான மேரி, மோசமான உடல்நிலை பாதிப்பினால் பலவிதமான உடல்நலக் கேடுகளை சந்தித்த பொழுது அவளுடைய மகள், அவளுடைய வீட்டுடன் இணைந்துள்ள புதிய “பாட்டிகள் அறையில்” வந்து தங்க அவளுக்கு அழைப்பு விடுத்தாள். சிநேகிதிகளையும், அவளுடைய பிற குடும்பத்தினரையும் விட்டுவிட்டு பலதூர மைல்களுக்கு அப்பால் செல்லவேண்டியதிருந்தாலும், தேவன் அளித்த பராமரிப்பிற்காக மேரி சந்தோஷப்பட்டாள்.

இந்த புதிய வாழ்க்கை முதல் ஆறு மாதங்கள் மகிழ்ச்சியாகவும், மனரம்மியமாகவும் கடந்த நிலையில், தான் இங்கு வந்தது உண்மையாகவே தேவனுடைய திட்டம் தானா என்ற சந்தேகம் என்னும் சோதனையில் விழுந்து தனக்குள்ளே…

வளருவதற்கு ஏற்ற தருணம்

டெப்பியின் புதிய வீட்டின் சமையலறையில் இருண்ட ஒரு மூலையில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு செடியைக் கண்டுபிடித்தாள். தூசுபடிந்த கிழிந்து அதன் இலைகளைப் பார்த்தபொழுது, அச்செடி மாத் ஆர்க்கிட் வகையைச் சேர்ந்தது போல இருந்தது. புதிய பூக்கும் தண்டு, அச்செடியில் வளர்ந்தால் அச்செடி பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்குமென்று அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்தச் செடியை ஜன்னலின் அருகில் கொண்டு போய் வைத்து, அதின் காய்ந்த இலைகளெல்லாம் எடுத்துப்போட்டு, அச்செடிக்கு தண்ணீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை வாங்கிப்போட்டாள். வாரா வாரம் அச்செடியை கண்காணித்து…

கிறிஸ்துவின் சுகந்த வாசனை

நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு…

தேவனுடைய வழி

நாம் கட்டாயம் தேவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இரு சிறு பிள்ளைகளைத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டில் வைத்து வளர்க்க கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. வயதுவந்த எங்கள் மூன்று பிள்ளைகளுடன், பள்ளிச் செல்லாத இரண்டு பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருப்பது எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதாகவும், குடும்பம் இருமடங்கு பெரிதானதால் வேலைப்பளுவும் அதிகமாகும் நிலை ஏற்படும். ஊழியப் பாதையில் நீண்ட கால அனுபவமுள்ள மிஷனரி ஏமி கார்மிக்கேல் அம்மையார் எழுதிய “எங்கள் அனுதின…

தயவு செய்து உள்ளே வாருங்கள்

ஜென்னியின் வீடு நகர்ப்புறத்திலுள்ள ஒரு தெருவில் இருந்தது. போக்கு வரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பொழுது, அநேக வாகன ஓட்டிகள் அருகிலுள்ள பிரதான சாலையையும் அதிலுள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகளையும் தவிர்ப்பதற்காக, இந்த ஒதுக்கு புறமான சாலையை பயன்படுத்தினார்கள். அதனால் மிகவும் மோசமாக பழுதடைந்த அந்த சாலையை பழது பார்ப்பதற்காக ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அநேக பணியாட்கள் வந்தார்கள். அவர்கள் அநேக தடுப்புகளையும், உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்பட்ட பலகையுடனும் வந்தார்கள். அதைப் பார்த்தவுடன் “சாலையை பழுதுபார்த்து முடிக்கும் வரைக்கும் எனது…

அஜாக்கிரதையான வார்த்தைகள்

சமீபகாலமாக மிகவும் நோய்வாய்பட்டிருந்த என்னுடைய மகளை அவளுடைய கணவன் அவளுக்கு நல்ல துணையாய் இருந்து அவளை மிக அற்புதமாய்க் கவனித்துக் கொண்டான். அதைக் கண்டு, “உன்னிடமுள்ள பெரிய பொக்கிஷம் உன் கணவனே!” என்றேன்.

அதற்கு அவள் புன்முறுவலுடன், “எங்களுடைய திருமணத்திற்கு முன் நீங்கள் அப்படி நினைக்கவில்லையே”, என கூறினாள். அது உண்மைதான். இசில்டாவும் (Icilda) பிலிப்பும் (Philip) திருமணம் செய்ய முடிவு செய்த போது நான் கவலையுற்றேன். அவர்கள் இருவரும் வெவ்வேறு குணநலனுடையவர்கள். நாங்கள் கலகலப்பான பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பிலிப்பு மிகவும்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.  

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: கரினா நெபுலாவின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது" என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று சாகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4). 

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும்.