எல்லாரும் பத்திரமாயிருக்கிறார்கள்! எல்லாரும் நலமாயிருக்கிறார்கள்!
1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்தேதி என்டுயுரன்ஸ் என்ற கப்பல், அன்டார்ட்டிக்காவில் பனிப்பாறைகளில் சிக்கி உடைந்து போனது. அக்கப்பலிருந்த துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, ஏர்னெஸ்ட் ஷேக்கில்டன் தலைமையில் கப்பல் சேதத்திலிருந்து தப்பி மூன்று உயிர்காக்கும் படகுகளின்மூலம் எலிபென்ட் தீவை அடைந்தார்கள். ஆட்கள் வசிக்காத அந்த தீவு கப்பல் போக்குவரத்து நடக்கும் கடல் பரப்பிலிருந்து வெகுதூரத்தில் இருந்தது. அவர்களுக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஷேக்கில்டனுடன் ஐந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய உயிர்காக்கும் படகில் உதவி பெறுவதற்காக…
மிக முக்கியமான கேள்விகள்
ஓர் இலையுதிர் காலத்தில் ஒர் நாள் இரவு ஒரு வாலிபனை, அவனது தைரியத்தை நிரூபிப்பதற்காக காட்டுக்குள் அனுப்பிய ஒரு பூர்வீக அமெரிக்க கதை உள்ளது. விரைவில் அந்தக் காட்டுப்பகுதி இருளால் சூழப்பட்டு இரவில் உண்டாகும் பல்வேறு சத்தங்களால் நிறைந்தது. மரங்கள் அங்கும் இங்கும் அசைத்து முனங்கல் சத்தத்தை உண்டுபண்ணின. ஓர் ஆந்தை கிரீச் என்று அலறினது. ஒரு காட்டு நாய் ஊளை இட்டது. அந்த வாலிபன் பயந்தாலும் அவனது தைரியத்தை நிரூபிக்க அந்த இரவு முழுவதையம் காட்டுக்குள்ளேயே கழித்தான். இறுதியில் பொழுது விடிந்தது அவனுக்கு…
எனது கவலை அல்ல
ஒரு மனிதன் எப்பொழுதும் எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பான். ஒரு நாள் அவன் மிகவும் மன நிம்மதியுடன் கவலையின்றி மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்ததை அவனது சிநேகிதர்கள் கேட்டார்கள். “என்ன நடந்தது” என்று ஆச்சரியத்துடன் வினவினார்கள். “ எனக்குப் பதிலாக கவலைப்படும்படி ஒரு மனிதனுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
“எவ்வளவு பணம் கொடுக்கிறாய்” என்று அவர்கள் கேட்டார்கள்.
“ஒரு வாரத்திற்கு 2000 டாலர்கள் கொடுக்கிறேன்” என்று அவன் பதில் கூறினான்.
“எப்படி உன்னால் அந்தப் பெரிய தொகையைக் கொடுக்க இயலுகிறது?”
“என்னால்…
ஆவிக்கேற்ற பரிசோதனை
நமது உடலில் ஏற்படும் உடல் நலக்குறைவுகளினால், உடல் நலம் அதிகமாக பாதிக்கப்படும் முன்பே ஒழுங்காக மருத்துவ பரிசோதனை அவ்வப்பொழுது செய்து கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்திற்காக மாற்கு 12:30ல் இயேசுவினால் கூறப்பட்டுள்ள தலை சிறந்த கட்டளையை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகள் கேட்பதின் மூலம் நமது ஆவிக்கேற்ற வாழ்வின் நலத்தை பரிசோதனை செய்யலாம்.
தேவன் முதலில் என்மேல் அன்பு கூர்ந்தபடியினால் அவரை நான் என் முழு மனதுடன் நேசிக்கின்றேனா? உலகப் பிரகாரமான ஆஸ்தியா அல்லது கிறிஸ்துவுக்குள் எனக்கு…
அன்பு முதலில் வருகிறது
ஒரு நாள் மாலை எனது சிநேகிதி அவளது வீட்டின் முன் அறையில் தொங்கவிடப்படக்கூடிய அலங்கரிக்கப்பட்ட மூன்று தகடுகளில் ஒன்றை என்னிடம் காண்பித்தாள். “அன்பு” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட அந்த தகட்டைத் தூக்கி பிடித்துக் கொண்டு “பார், எனக்கு அன்பு கிடைத்துவிட்டது” என்று கூறினாள். விசுவாசமும் நம்பிக்கையும் வந்து கொண்டிருக்கின்றன என்றாள்.
ஆகவே அன்பு முதலாவது வருகிறதென்று எண்ணினேன். விசுவாசமும், நம்பிக்கையும் அதைப் பின்தொடருகின்றன.
அன்பு முதலில் வந்து விட்டது. ஏனெனில் அன்பு தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில்…
நமது வாழ்க்கையின் பாடல்
ஒரு இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு விதமான கோணங்களில் ரசிக்கிறார்கள். அந்த இசையை இயற்றியவர், அவரின் கற்பனைக்குள்ளாக அதைக் கேட்கிறார். ரசிகர்கள் அவர்களது புலன்களிலும் உணர்வினாலும் கேட்கிறார்கள். இசைக்கருவிகளை இயக்கும் குழுவிலுள்ள அங்கத்தினர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள இசைக்கருவிகளின் சத்தத்தின் மூலம் இசையைக் கேட்கிறார்கள்.
ஒரு வகையில் நாம் அனைவரும் தேவனது இசைக்குழுவிலுள்ள அங்கத்தினர்கள். பொதுவாக நாம் நமக்கு அருகிலுள்ள இசையையே கேட்கிறோம் அனைத்து வழிகளிலும் இசையை நாம் ரசிக்கும் சமநிலை இல்லாதபடியினால் “இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்”. (யோபு 30:9)…
கவனக் குறைவான வார்த்தைகள்
நான் என் வாகனத்தை ஏறக்குறைய அரைமணி நேரம் ஓட்டிச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென, பின் இருக்கையிலிருந்த எனது மகள் வீரிட்டுக் கத்தினாள். “என்ன நடந்தது” என்று நான் கேட்ட பொழுது அவளுடைய சகோதரன் அவளது கையைப் பிடித்து இழுத்தான் என்றாள். அவள் அவனைக் கிள்ளினதினால் அவள் கையை இறுகப்பிடித்து இழுத்ததாக அவன் கூறினான். அவன் அன்பற்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசினதினால் அவன் கையைக் கிள்ளினேன் என்றாள்.
துரதிஷ்டவசமாக, சிறு பிள்ளைகள் மத்தியில் காணப்படும் இப்படிப்பட்ட தன்மை பெரியவர்களின் உறவுகள் மத்தியிலும் ஏற்படுகிறது. ஒருவர்…
தெளிவற்ற பார்வை
எனது சிநேகிதி மெக்கான் குதிரைப்பயிற்சியில் திறமை மிக்கவள். அவளிடமிருந்து குதிரைகளைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொண்டிருக்கிறேன். உதாரணமாக பாலூட்டிகளிலேயே மிகப்பெரிய கண்களை உடையதாக குதிரைகள் இருந்தாலும், குதிரைகளுக்கு குறைவான பார்வையே உள்ளது என்றும், மனிதர்களைவிட மிகக்குறைவான நிறங்களையே காண இயலும் என்பதையும் அறிந்து கொண்டேன். இதனால் தரையிலே கிடக்கும் பொருட்களை என்னவென்று அவைகளால் தெரிந்து கொள்ள இயலாது தரையிலே ஒரு கட்டையைக் கண்டால் அது அவைகளால் தாண்டிச் செல்லக் கூடிய ஒரு பொருளா அல்லது அவைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு பாம்பா என்று…
நெருப்போடு விளையாடுதல்
நான் சிறுவனாக இருந்த பொழுது எனது தாயார் நெருப்போடு ஒரு போதும் விளையாடக் கூடாது என்று என்னை எச்சரித்தார். ஒரு நாள் நெருப்போடு விளையாண்டால் என்ன நேரிடும் என்று அறிய விரும்பினேன். சில காகிதங்களையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்ய முயன்றேன். இதயம் படபடக்க தரையிலே முழங்கால் படியிட்டு தீக்குச்சியைக் கொளுத்தி காகிதத்தைப் பற்றவைத்தேன்.
திடீரென்று என் தாயார் வருவதைப் பார்த்தேன். நான் செய்த செயலைக் குறித்து எனது தாயார் அறிந்து கொள்ளக் கூடாதென்று நெருப்புச் சுவாலையின் மேல் என் கால்களை வைத்து…