பற்றிக்கொள்!
டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள கால்நடைப்பண்னையில் வளர்ந்த என்னுடைய நண்பன் (cowboy), அடிக்கடி ஏதாவது ஒரு பழமொழி கூறுவான். அவற்றில், “நல்ல காஃபி செய்ய அதிக தண்ணீர் தேவைப்படாது” என்பது எனக்கு பிடித்த பழமொழி. ஒருவேளை, சில சமயம் யாராவது, தங்களால் அடக்க முடியாத இளங்காளையோடு போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனையிலிருந்தாலோ, “உனக்குள்ளதை முழுமையாக பற்றிக்கொள். அதாவது, விட்டுவிடாதே! உதவி வருகிறது” என்னும் அர்த்தத்தில் கூக்குரலிடுவான்.
வெளிப்படுத்தின விசேஷத்தில், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களைக் காணலாம் (2-3 அதிகாரங்கள்). தேவன், முதலாம்…
உனக்கு மதிப்பு உண்டு
என்னுடைய மனைவியின் தாயார் இறந்த பிறகு, அவருடைய வீட்டில், பத்திரமாக வைக்கப்பட்டிருந்த பழைய அமெரிக்க இந்தியர்களின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் சிலவற்றைக் கண்டடைந்தோம். என் மாமியார் நாணயங்களை சேகரிக்கும் பழக்கத்தை உடையவரல்ல. இருப்பினும், அவர் அந்த நாணயங்கள் பழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் வாழ்ந்ததால் அவை அவரிடம் இருந்தன.
சிலவற்றைத் தவிர அவற்றில் பெரும்பாலான நாணயங்கள் நல்ல தரத்தில் இல்லை. அவற்றில் பொறிக்கப்பட்ட முத்திரைகளே மழுங்கி போகும் அளவுக்கு அவை பழையதாயிருந்தன. எல்லா நாணயங்களிலும், ஒரு செண்ட் (One Cent) என பொறிக்கப்பட்டிருந்தது. இக்காலத்தில், ஒரு…
மெய்யான புகலிடம்
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கள் ஊரிலுள்ள பழங்குடியினர் மத்தியிலே ஏற்பட்ட மோதலினால், என் தகப்பனாருடைய குடும்பம் அகதிகளுடன் அகதியாய், தலைநகரில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதுகாப்பற்ற தங்கள் சொந்த ஊர்களை விட்டு பாதுகாப்பைத் தேடி பிற இடங்களுக்கு மக்கள் சென்றதை வரலாற்றிலே நாம் காணலாம்.
என் ஜனத்தை சந்தித்து விசாரித்து கொண்டிருக்கையில், யோசுவா 20: 1-9ல் குறிப்பிட்டுள்ள அடைக்கலப் பட்டணங்களைத் குறித்து சிந்தித்தேன். திட்டமிடாமல் தவறுதலாய் ஏற்பட்ட மரணத்தினிமித்தம் பழிவாங்க எத்தனிக்கும் உறவினர்களிடம் இருந்து தப்பித்து தஞ்சம்புகும்படியாய் இப்பட்டணங்கள் நியமிக்கப்பட்டிருந்தன…
இரட்சிப்பின் ஊற்றுகள்
பொதுவாக மக்கள், பூமியின் மையப்பாகத்திலிருந்து கற்களைத் தோண்டி எண்ணெயோ, தண்ணீரோ இருக்கிறதா என்று கண்டறிய பூமியை ஆழமாய் துளையிடுவார்கள்.
ஆவிக்குரிய வனாந்திரத்திலும், வனாந்திர வறட்சியிலும் வாழும் தன்னுடைய ஜனம் “இரட்சிப்பின் நீருற்றுகளைக்” கண்டடைய வேண்டும் என தேவன் விரும்பினார் என்பதை ஏசாயா 12ல், நீருற்றிலிருந்து பொங்கும் இளைப்பாறுதல் அளிக்கும் குளிர்ந்த நீரோடு ஒப்பிட்டுள்ளார். அநேக ஆண்டுகளாய்த் தேவனைவிட்டு விலகிச் சென்றதால், அந்நியர்களால் கைப்பற்றபட்டு, எங்கும் சிதறடிக்கபடும்படியாய், யூதா தேசத்தை தேவன் ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாய், ஒரு சிறு கூட்டம்…
சிறந்த சந்தோஷம்
நான் சிறுவனாய் இருந்த பொழுது, பாதுகாப்பற்றது அல்லது ஞானமற்றது என்று என் பெற்றோரால் கருதப்பட்ட காரியங்களுக்காக, நான் எவ்வளவுதான் கெஞ்சினாலும், திறமையாக வாதாடுவதாகக் கருதி “எல்லோரும் இதை செய்கிறார்கள்” என்று சொன்னாலும், அதற்கு அவர்கள் சம்மதித்ததேயில்லை.
நாம் வளர வளர, நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்காக, நமது வாதங்களில், சாக்கு போக்குகளையும், சாமர்த்தியமான காரணகாரியங்களையும் பிணைத்து, “யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்.” “இது சட்டவிரோதமானதல்ல”, “முதலில் பாதிக்கப்பட்ட இதை அவன்தான் எனக்கு செய்தான்”, அல்லது “அவளுக்கு இது தெரிய வராது” என்று கூறுவோம். இதில், நம்முடைய தேவையே மற்றெல்லாவற்றையும்…
மேல்நிலையிலிருந்து
ஓர் உயர்ந்த மலையின் நிழலில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஓடும் ஓடையின் ஓரத்தில் என் வீடு உள்ளது. வசந்தகாலங்களில் பனி உருகுவதாலும் இந்த கனமழை பெய்வதாலும் ஒடையில் நீர்வரத்து பெருகி நதியைப் போல காட்சியளிக்கும். அநேகர் அதில் மூழ்கியும் போயிருக்கிறார்கள். ஒரு நாள் இந்த ஒடையின் துவக்கத்தை கண்டறிய விரும்பி ஆராய்ந்த பொழுது, அது ஒரு மலையின் மேலுள்ள பரந்து விரிந்த பனிநிலங்களில் இருந்து துவங்குகிறது என கண்டறிந்தேன். இந்த பனி நிலங்களிலிருந்து பனி உருகி, நீண்ட பயணமாய் அநேக சிற்றோடைகளோடு இணைந்து, பின்பு…
நினைவூட்டும் மணியோசை
இங்கிலாந்து தேசத்தின், லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் இடத்தில் பிக் பென் (Big Ben) என்று அழைக்கப்படும் கடிகாரத்தையுடைய கடிகார கோபுரம் மிக பிரசித்திபெற்ற ஒரு சின்னமாகும். ஹண்டெல் மேசியா (Handel’s Messiah) என்னும் தொகுப்பிலிருந்து, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிவேன்” என்ற மெட்டினை தழுவிய ராகத்தையே அந்த கடிகாரம் ஒலிப்பதாக பாரம்பரியமாக எண்ணப்படுகிறது. பின்பு, இந்த ராகத்தோடு இவ்வார்த்தைகளும் சேர்க்கப்பட்டு கடிகார அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது: “தேவனே, இந்த மணி வேளையும் எங்கள் வழிகாட்டியாய் இருந்தருளும்; ஏனெனில் உம்முடைய வல்லமையால்…
தனிமையான காலம்
கிறிஸ்மஸ் முடிந்து வந்திருந்த அநேக தபால்களின் மத்தியில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டேன். அது பழைய உபயோகப்படுத்தப்பட்ட அட்டையில் வரையப்பட்ட ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை. சாதாரண வாட்டர் கலரினால் வரையப்பட்ட குளிரான மலைப்பிரதேசமும், பசுமையான மரங்களும், கீழ்ப்பாகத்தின் நடுவில், சிவந்த பெர்ரி பழங்களுடன், ஹாலி இலைகளினால் ஆன கட்டத்துக்குள் “உனக்கு சமாதானம்!” என்று எழுதப்பட்ட செய்தியும் இருந்தது.
இதை வரைந்தவர் ஒரு சிறைக் கைதி. அவர் என்னுடைய நண்பர். அவருடைய கைவண்ணத்தை ரசித்தவாறே, அவருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்பதை நினைவு…
அவர் கேட்கின்றாரா?
“சில சமயம், தேவன் என் கூப்பிடுதலை கேட்கவில்லை என்றே தோன்றுகிறது.” தேவனோடு நடப்பதில் நிலைத்து நிற்க பிரயாசப்படும், குடிகார கணவனை உடைய ஒரு பெண்மணியின் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் அநேக விசுவாசிகளின் இதயக்குமுறல்களைப் பிரதிபலிக்கிறது. அவள் தன் கணவன் திருந்தும்படி பல ஆண்டுகளாக தேவனிடம் மன்றாடினாள். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை அவன் திருந்தவேயில்லை.
நன்மையான ஒன்றை, தேவனை மகிமைப் படுத்தக்கூடிய ஒன்றை, இடைவிடாமல் தேவனிடம் மன்றாடியும், கேட்டும், பதில் வரவில்லை என்றால் நாம் என்ன நினைப்பது? தேவன் கேட்கின்றாரா? இல்லையா?
நாம், நமது…