உபத்திரப்படுகிறவர்களுக்கு இளைப்பாறுதல்
கொடுமைக்கார மாற்றாந் தகப்பன், தன் மகன் டேவிட் காப்பர்ஃபீல்டை கொடுமைப்படுத்திய பொழுது சித்தி கோபாவேசத்துடன் அவரை எதிர்த்த காட்சி, இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான காட்சிகளில் ஒன்றாகும். முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே புத்தகத் தலைப்பாகக் கொண்ட சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “டேவிட் காப்பர்ஃபீல்ட்” கதையில் இக் காட்சி வருகிறது.
டேவிட் காப்பர்ஃபீல்ட் தன் சித்தி வீட்டிற்கு வந்த பொழுது அவனுடைய மாற்றாந் தந்தையும் அவனைத் தொடாந்து அங்கு வந்திருந்தார். தீய எண்ணம் கொண்ட திரு மர்ட்ஸ்டோனைப் பார்ப்பதற்கு சித்தி பெத்ஸி ட்ரோட்வுட்டுக்கு விருப்பமில்லை. மர்ட்ஸ்டோன்…
நித்தியகாலமாய் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தை
2வது உலகமகா யுத்தத்தின் துவக்க காலத்தில் போலந்திலுள்ள வார்சா, ஆகாய மார்க்கமாக குண்டு மழை பொழிந்ததால் தரைமட்டமானது. சிமெண்ட் கட்டிகள், சிதைந்த நீர்குழாய்கள், கண்ணாடித்துண்டுகள் போன்றவை அந்த பெரு நகரத்தில் சிதறிக்கிடந்தது. நகரின் நிர்வாக வணிக அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் சிதைவுண்ட கட்டிடங்களில் ஒன்று இன்னும் அசையாது நிமிர்ந்து நிற்கிறது. அது ஆங்கிலேயே மற்றும் வெளிநாடுகளின் வேதாகம சங்கத்தின் “போலந்திலுள்ள தலைமைச் செயலகமாகும்.” வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (மத் 24:35) என்ற வசனம் அங்கு சிதைந்து நிற்கும் சுவரில்…
ஆவியோ விடுவிக்கிறது
அயர்லாந்திலுள்ள அநேக கிராமப்புற நகரங்களில் சமீபகாலம் வரை வீட்டுக்கு எண்களோ, அல்லது தபால்துறை குறியீட்டு எண்களோ (பின்கோட்) பழக்கத்தில் இல்லை. எனவே, ஓர் ஊரில் மூன்று பாட்ரிக் மர்ஃபிக்கள் இருந்தால், புதிதாக அங்கு குடியேறிய அந்தப் பெயர் கொண்ட நபருக்கு கடிதம் வழங்கப்படமாட்டாது; நீண்ட நாட்களாக அங்கு வசித்து வரும் முதல் இரண்டு பாட்ரிக் மர்ஃபிகளுக்கும் வழங்கப்பட்டு பின் அது அவர்களுடைய கடிதம் இல்லையென்றால் தான் புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபிக்கு வழங்கப்படும். புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபி என்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் தான்…
இயேசு கண்ணீர்விட்டார்
நான் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது என் சிநேகிதி ஒருத்தி, நான் அப்படி என்ன வாசிக்கிறேன்? என்று குனிந்து உற்று நோக்கினாள். அவள் திகிலடைந்தவளாய் என்னைத் திரும்பிப்பார்த்து, “என்ன பயங்கரமான தலைப்பு?” என்று கூறினாள். நான் கிரிம் எழுதிய தேவதைகள் செயல்படும் கட்டுக்கதையாகிய “கண்ணாடி சவப்பெட்டி” என்ற கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சவப்பெட்டி என்ற வார்த்தை அவளைக் கலக்கத்திற்குள்ளாக்கியது. நம்மில் அநேகருக்கு மரணத்தைப் பற்றி நினைவுகூர்வது ஓர் விரும்பப்படாத காரியம். உண்மையாதெனில் 1000 பேர் வாழ்ந்தால், 1000 பேரும் மரித்துதான் போவார்கள்.…
தேவனுடைய வழி
நாம் கட்டாயம் தேவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இரு சிறு பிள்ளைகளைத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டில் வைத்து வளர்க்க கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. வயதுவந்த எங்கள் மூன்று பிள்ளைகளுடன், பள்ளிச் செல்லாத இரண்டு பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருப்பது எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதாகவும், குடும்பம் இருமடங்கு பெரிதானதால் வேலைப்பளுவும் அதிகமாகும் நிலை ஏற்படும். ஊழியப் பாதையில் நீண்ட கால அனுபவமுள்ள மிஷனரி ஏமி கார்மிக்கேல் அம்மையார் எழுதிய “எங்கள் அனுதின…
வர்ணம் தீட்டும் தேவன்
1402-1472ம் ஆண்டில் வாழ்ந்த நெசாஹால்கொயோட்டில் என்பவரின் பெயர் உச்சரிப்பதற்கு கடினமானது. ஆனால் அவருடைய பெயர் மிகவும் அர்த்தமுள்ள பெயர். அதன் அர்த்தம் என்னவென்றால் “பசியிலிருக்கும் ஓநாய்”. அவர் எழுதும் நூல்கள் ஆத்தும பசியை வெளிக்காட்டுபவையாகக் காணப்படும். இவன், மெக்ஸிக்கோவின் ஆட்சியாளராகவும், கவிஞனாகவும் இருந்தான். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னரே “நான் வணங்கும் தெய்வங்கள் கல்லான விக்கிரகங்கள் அவற்றிற்கு பேச்சும் இல்லை, உணர்வும் இல்லை… மிகவும் வல்லமையுள்ள கண்ணுக்கும் புலப்படாத நாம் அறியாத தெய்வம்தான் அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்தவர்” என்று எழுதியிருந்தான். “அவர் ஒருவரே எனக்கு துன்பத்தில்…
வழக்கத்திற்கு மாறான தந்திரம்
1980ம் ஆண்டு பாஸ்டன் மரத்தான் ஓட்டத்தின் பொழுது ஒரு பெண் சுரங்கப்பாதையில் செல்லும் இரயிலில் ஏறிக்கொண்டார். அது ஒரு பெரிய காரியமல்ல. ஆனால் ஒரு காரியம். அவள் மரத்தான் ஓட்டத்தில் ஓட வேண்டியவள்! முடிவுக் கோட்டிற்கு ஒரு மைலுக்கு சிறிது தூரத்தில், இரயிலிருந்து குதித்து ஓட்டப்பந்தயத்தில் ஒருவருடன் சேர்ந்து கொண்டதைப் பார்த்தவர்கள் இதைப் பின்னால் கூறினார்கள். ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பிற பெண்களைவிட, முன்னால் ஓடி முடிவு கோட்டைத் தாண்டினாள். அவளுக்கு மூச்சு வாங்கவோ, அதிகமாய் வியர்க்கவோ இல்லை. கொஞ்ச நேரத்திற்கு அவள் வெற்றி…
பச்சோந்தி நகர்வு
நாம் பச்சோந்தியை பற்றி நினைக்கும் பொழுது, அது தான் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறமையைப் பற்றி சிந்திப்போம். ஆனால் இந்த பல்லியினப் பிராணிக்கு மற்றுமோர் வேடிக்கையான பண்பும் உண்டு. பல முறை ஒரு பச்சோந்தி, தான் நடந்து செல்லும் பாதை வழியாக நடந்து செல்வதைப் பார்த்து, இது தான் போய் சேரவேண்டிய இடத்தை சேர முடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். வேண்டாவெறுப்பாக அந்த பச்சோந்தி தன் ஒரு காலை விரித்து வைக்கும், பின் தன் மனதை மாற்றி மீண்டும் முயற்சிக்கும். தான்…
அவருடைய கண் மணி
என் சிநேகிதியின் குழந்தையை வலிப்பு நோய் தாக்கியதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள் தன் மகளுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்த சமயம் அவள் இதயம் வேகமாக பட, பட வென்று துடித்தது, பொங்கிவரும் பாசத்துடன் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பற்றி பிடித்திருந்த பொழுது; நாம் தேவனுடைய கண்ணின் மணியைப் போல் அருமையாக இருப்பதால் அவர் எவ்வளவுக்கதிமாய் நம்மை நேசிக்கிறார் என்று சிந்திக்கலானாள்.
பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்கள் விடுதலை பெற்று எருசலேமுக்கு திரும்பி வந்த பொழுது அவர்களை சகரியா தீர்க்கதரிசி தேவனுடைய…