பாம்பும் மூன்று சக்கர சைக்கிளும்!
கானா நாட்டில் நானும் எனது சகோதரனும் சிறு குழந்தைகளாயிருந்த போது நடந்த ஒரு கதையை நான் பல முறை கூறிவந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தபடி எனது சகோதரன் ஒரு நல்ல பாம்பின் மேல் தனது பழைய, இரும்பாலான மூன்று சக்கர சைக்கிளை நிறுத்திவிட்டான். மிகவும் கனமான அந்த சைக்கிளின் முன் சக்ககரத்தில் அந்தப் பாம்பு சிக்கிக்கொண்டது.
எனது தாயாரும் சித்தியும் மரித்தபின், இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட எனது தாயாரின் கடிதத்தை நாங்கள் கண்டெடுத்தோம். உண்மையில், அந்தப் பாம்பின் மேல் சைக்கிளை நிறுத்தியது நான்தான் என்றும், அதை என் தாயாருக்கு என் சகோதரன் அறிவிக்க ஓடினான் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை நேரடியாக கண்ணால் பார்த்த என் தாயாரின் வார்த்தைகள் உண்மையை வெளிப்படுத்தின.
துல்லியமான பதிவுகளின் முக்கியத்துவத்தை லூக்கா அறிந்திருந்தார். எவ்வாறு இயேசுவின் சரிதை “ ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தார்கள்” (லூக். 1:2) என்றும், “அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” (வச. 4) என்றும் லூக்கா விளக்கமளிக்கிறார். தேயோப்பிலுவுக்கு அவர் எழுதுகையில், “…உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும்” (வச. 3) என்று கூறுகிறார். இவ்வாறாக உருவானதுதான் லூக்கா சுவிஷேம். பின்பாக, அப்போஸ்தலர் நடபடிகளின் முகவுரையை எழுதும் லூக்கா, “அவர் பாடுபட்ட பின்பு, இயேசுவானவர் அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்” (அப். 1:3) என எழுதியுள்ளார்.
நமது விசுவாசமானது மற்றவர்கள் நமக்குச் சொன்னதைச் சார்ந்தோ, மற்றவரது விருப்பநிலை சார்ந்தோ கிடையாது. அது தேவனோடு மனிதருக்குச் சமாதானம் உண்டாக்க வந்த இயேசுவானவரின் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ள வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இயேசுவானவரின் கதை நிலைத்து நிற்கிறது!
கவர்ச்சிக்கப்படுதல்!
கி.பி. 2016ன் கோடைகாலத்தில், போக்கிமேன் கோ எனப்படும் ஸ்மார்ட்போனில் விளையாடும் விளையாட்டை விளையாடுமாறு எனது அக்கா மகள் என்னைக் கட்டாயப்படுத்தினாள். இது போனின் கேமரா உதவியால் விளையாடுவது. போக்கிமேன் என்றழைக்கப்படும் சிறிய ஜீவன்களைப் பிடிப்பதே இவ்விளையாட்டின் நோக்கம். ஒரு போக்கிமேன் விளையாட வரும்போது, போனின் திரையில் ஒரு சிவப்பு, வெள்ளை பந்துகள் தோன்றும். ஒரு போக்கிமேனைப் பிடிக்க விளையாடுபவர் தனது விரலால் பந்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அவற்றைப் வசப்படுத்த ஒரு கவர்ச்சிப் பொருளைப் பயன்படுத்தும் போது போக்கிமேன்கள் எளிதாக பிடிபட்டுவிடுகின்றன.
கவர்ச்சியினால் பிடிபடுபவை போக்கிமேன் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல விசுவாசிக்கு தான் எழுதும் புதிய ஏற்பாட்டு மடலில், இயேசுவானவரின் இளைய சகோதரரான யாக்கோபு, “அவனவன் தன்தன் இச்சையினால் இழுக்கப்படுகிறான்” (1:14) என்று நினைவு படுத்துகிறார். வேறு விதமாய்ச் சொல்ல வேண்டுமெனில், நம்மைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும்படி, சோதனையுடன் நமது இச்சைகள் இணைந்து செயல்படுகின்றன. நமது பிரச்சனைகளுக்காக தேவனையோ அல்லது சாத்தானையோ குறை கூற நாம் எத்தனித்தாலும், உண்மையாய் ஆபத்து நமக்குள்தான் இருக்கிறது.
ஆனால், நல்ல செய்தி இருக்கிறது. நம்மைச் சோதனைக்குட்படுத்துகின்ற காரியங்களைக் குறித்து தேவனிடம் பேசுவதன் மூலம் சோதனையின் கவர்ச்சியிலிருந்து நாம் தப்பலாம். மேலும் யாக்கோபு விளக்குகிறார்: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (1:13). நமது மனித சுபாவம் தவறைச் செய்ய வாஞ்சையாயிருப்பது தேவனுக்குத் தெரியும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஞானத்தை நாம் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் (1:1-6).
மற்றவரது நலன்கள்!
எனது நண்பனாகிய ஜெய்மி ஒரு பெரிய சர்வதேச நிறுவனத்தில் பணி புரிகிறான். அந்நிறுவனத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஒரு மனிதன் அவனது மேஜைக்கு வந்து, பேச ஆரம்பித்தான். ஜெய்மிக்கு அங்கு என்ன வேலையென வினவினான். தனது வேலையைப் பற்றிக் கூறிய ஜெய்மி அவனது பெயரைக் கேட்டான். “என் பெயர் ரிக்” எனப் பதிலளித்தான் அவன்.
“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ஜெய்மி கேட்டான்.
“ம்ம்! நான் இந்நிறுவனத்தின் உரிமையாளர்”
இந்த சாதாரணமான, தாழ்மையான உரையாடல்தான் உலகிலேயே மிகவும் பெரிய பணக்காரர்களில் ஒருவரோடு தனது அறிமுகம் என்று ஜெய்மி திடீரென்று புரிந்து கொண்டான்.
தன்னைத் தானே உயர்த்துவதும் பெருமைப்பட்டுக் கொள்ளுவதும் பெருகிப்போன இந்த நாட்களில் இந்தச் சிறிய சம்பவம் பவுல் பிலிப்பியர் நிருபத்தில் எழுதியதை நமக்கு நினைவுபடுத்துகிறது: “ஒன்றையும் வாதினாலாவது வீண பெருமையினாலாவது செய்ய வேண்டாம்” (2:3). தங்களது நலனையல்ல பிறரது நன்மையைத் தேடுகிறவர்கள் பவுல் குறிப்பிடும் குணாதிசயத்தைப் பெற்றவர்கள்.
பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக எண்ணும்போது (வச. 3) கிறிஸ்துவின் எளிமையை நாம் வெளிப்படுத்துகிறோம். ஊழியம் கொள்ளுபடி வராமல் ஊழியஞ்செய்யும்படி வந்த இயேசுவை நாம் பிரதிபலிக்கிறோம். (மாற். 10:45). அடிமையின் சுபாவத்தை நாம் ஏற்றுக்கொள்ளுகையில் (பிலி. 2:7) இயேசுவின் சிந்தையை நாம் பெறுகிறோம் (வச. 5).
இன்று நாம் பிறறோடு தொடர்புகொள்ளும்போது, நமக்கானவைகளை மட்டும் பராமல் பிறருக்கானவைகளையும் நோக்கக் கடவோம் (வச. 4).
குற்ற உணர்வு போய்விட்டது!
சிறுமியாயிருக்கையில், என் வீட்டின் அருகிலிருந்த பரிசுப் பொருட்கள் கடைக்கு எனது தோழியை கூட்டிக்கொண்டு சென்றேன். அவளது செய்கை என்னை அதிர்ச்சிகுள்ளாக்கிற்று. வண்ணமிக்க சிறு பென்சில்களை அள்ளி எனது பையிள் திணித்த அவள் அவைகளுக்காக பணம் செலுத்தாமல் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு வாரமாக குற்ற உணர்வு என்னை வாதித்தது. எனது அம்மாவிடம் சென்று கண்ணீரோடு என் தவறை அவரிடம் அறிக்கையிட்டேன்.
எனது தோழி தவறு செய்தபோது அதை எதிர்க்காதற்காக மனம் வருந்திய நான், திருடப்பட்ட பொருட்களை அந்தக் கடையில் கொடுத்து, இனி ஒருபோதும் நான் திருடமாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். தன் கடைக்கு இனிமேல் நான் வரக்கூடாதென கடை உரிமையாளர் கூறினார். ஆனால் எனது அம்மா என்னை மன்னித்துவிட்டபடியாலும், நடந்ததைச் சரிசெய்ய உரியதை நான் செய்துவிட்டேன் என அவர் உறுதிசெய்ததாலும் அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்.
இராஜாவாகிய தாவீதும் அறிக்கையிடுவதால் கிடைக்கும் மன்னிப்பை அதிகம் சார்ந்திருந்தான் (சங். 32:1-2) அவனது எலும்புகள் உலர்ந்துபோகுமட்டும் (வச. 3). அவன் பத்சேபாள் மற்றும் உரியாவுக்கெதிரான தனது பாவத்தை மறைத்துவைத்தான் (2 சாமு. 11-12). ஆனால் தாவீது தனது தவறுகளை மறைக்க மறுத்தபோது தேவன் அவனது குற்ற உணர்வை எடுத்துப் போட்டார் (வச. 5). தேவன் அவனை இக்கட்டுக்கு விலக்கிக் காத்து இரட்சண்யப் பாடல்களால் அவனைச் சூழ்ந்து கொண்டார் (வச. 7). “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” என்பதினால் தாவீது அகமகிழ்ந்தான் (வச. 10).
பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைத் தேடும்போது, நமது பாவங்களுக்கான விளைவுகளை நாம் தேர்ந்தெடுக்க முடியாது அல்லது ஜனங்களின் மாறுத்தரங்களை நாம் கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால், பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமாக பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையும் சமாதானத்தையும் நாம் பெற்று மகிழ தேவன் நமக்கு வல்லமை அளிக்கிறார். நமது பாவம் என்றென்றும் மறைந்துபோனதை தேவன் உறுதிப்படுத்துகிறார்.
அறுவடைக்குத் தயாராக உள்ளது!
கோடை கால முடிவில் இங்கிலாந்தின் நியூ ஃபாரெஸ்ட் பகுதியில் நடந்து சென்றோம். காட்டில் வளர்ந்திருந்த கருப்பு பெர்ரி பழங்களை பிடுங்கிக்கொண்டே பக்கத்தில் துள்ளிக் குதித்த குதிரைகளை ரசித்தவாறு நடந்தோம். பல ஆண்டுகளுக்கு முன்பாக மற்றவர்களால் பயிரிடப்பட்ட திரளான இனிய கனிகளை நான் சுவைத்தபோது, இயேசுவானவர் தமது சீஷருக்குச் சொன்ன வார்த்தைகளை நினைத்தேன், “நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன் (யோவா. 4:38).
இவ்வசனங்கள் பிரதிபலிக்கும் தேவ இராஜியத்தின் தாராளத் தன்மையை நான் நேசிக்கிறேன். மற்றவரது கடின உழைப்பின் பலனை நாம் அனுபவிக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார். இது, இரட்சிக்கப்படாத ஒருத்தியின் பெற்றோர் உறவினர் அவளது இரட்சிப்பிற்காய் பல ஆண்டுகள் ஜெபித்திருக்க, நாம் சென்று அவளுடன் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து அவளை இரட்சிப்பிற்குள்ளாய் நடத்துவதைப் போன்றது. இயேசுவானவரின் வார்த்தைகளில் பொதிந்துள்ள எல்லை கட்டுப்பாட்டையும் நான் நேசிக்கிறேன். நாம் ஒருபோதும் பலனை அனுபவிக்க முடியாதென்றாலும், நாம் விதைகளை விதைக்கலாம், இன்னொருவர் அதை அறுவடை செய்யலாம். ஆனபடியால், பலன்களுக்கு நாம்தான் காரணமென பெருமையாய் நினைக்காமல் நம் முன் உள்ள வேலைகளைச் செய்வதில் நாம் மும்முரமாய் ஈடுபடலாம். தேவனுடைய பணி நம்மை நம்பி நடப்பதன்று. ஒரு மகத்தான அறுவடைக்கான எல்லா ஆதாரங்களையும் தேவன் வைத்திருக்கிறார். அதில் ஒரு பங்காக நாம் மாறுவது நமது பாக்கியமாகும்.
எந்த வயல்கள் அறுவடைக்கு ஆயத்தமாகி உங்கள் முன் இருக்கின்றன? எனக்கு முன் இருக்கின்றன? இயேசுவின் அன்பான அறிவுரையை நாம் கேட்போமாக: “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்தும் பாருங்கள்” (யோவா. 4:35).
அமைதியாயிருங்கள்!
“இதற்கு முன் மனித வரலாற்றில் செய்யப்பட்டதைக் காட்டிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக தகவல்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அது நமக்கு முன் எப்போதும் வந்து கொண்டிருக்கிறது” (Organized Mind: தகவல்கள் மிகுந்த சகாப்தத்தில் சரியாக யோசித்தல்’ புத்தக ஆசிரியர் டேனியல் லெவிடின்) லெவிடின் கூறுகிறார், “ மிக அதிகமான புறத்தூண்டுதலுக்கு அடிமைப்பட்டவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம்” தொடர்சியாக வந்து விழும் செய்திகளும், தகவல் அறிவும் நமது மணங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஊடகங்களின் தாக்குதல் நிறைந்த இக் காலச் சூழலில், அமைதியாயிருப்பதும் சிந்திப்பதும் ஜெபிப்பதும் மிகவும் சிரமமாக வருகிறது.
சங்கீதம் 46:10 கூறுகிறது, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” ஆண்டவர் மீது கண்ணோட்டத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வசனம் நமக்கு நினைவுபடுத்துகிறது. “அமைதிவேளை” என்பது வேதத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும், தேவனுடைய மகத்துவத்தை எண்ணிப் பார்க்கவும் மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் உணர ஆரம்பித்துள்ளனர்.
சங்கீதக்காரனைப் போல நாமும், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்பதை அனுபவிக்கும் போது அது நமது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது (வச. 2), உலகின் குழப்பத்தை விட்டு தேவ சமாதானத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. தேவனுடைய முழு கட்டுப்பாட்டைக் குறித்த ஒரு அமைதியான நம்பிக்கையை நம்மில் உருவாக்குகிறது (வச. 10).
நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு குழப்பம் நிறைந்ததாய் மாறிய போதிலும், நமது பரலோக பிதாவானவரின் அன்பிலும் வல்லமையிலும் நாம் அமைதியையும் பெலத்தையும் கண்டு கொள்ளக் கூடும்.
திருப்பம்!
இராணுவத்தில் திறம்பட பணியாற்றிய ஒரு முதியவரின் அடக்க ஆராதனையில் பிரசங்கித்த போதகர், மரித்தவர் எங்கிருப்பார் என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர் எப்படி மனிதர்கள் கடவுளை அறியலாமென கூறாமல் வேதாகமத்தில் எங்கும் எழுதப்படாத காரியங்களைக் குறித்து யூகங்களை அறிவித்தார். நம்பிக்கை எங்கே போனது என நான் சிந்திக்கலானேன்.
இறுதியாக முடிவுப் பாடலை பாடும்படி அவர் கூறினார். “ தேவனே நீர் எவ்வளவு பெரியவர்” என்ற பாடலைப் பாட நாங்கள் எழுந்தபோது, தேவனை கூடியிருந்த யாவரும் தங்கள் உள்ளத்திலிருந்து துதிக்க ஆரம்பித்தனர். சில நொடிகளுக்குள், எங்களது அறையின் ஆவிக்குரிய நிலை முற்றிலும் மாறியது. திடீரென ஆச்சரியப்படும் வண்ணம், மூன்றாவது சரணத்தை நான் பாடுகையில் உணர்ச்சிகள் எனது குரலை முற்றிலும் அடக்கிற்று!
தேவன் தமது குமாரனை மறைத்துவைக்காமல்
மரிக்க அனுப்பியதை நான் எண்ணி துதிக்கிறேன்
சிலுவையில் என் பாவத்தை மகிழ்வுடன் சுமந்தார்
இரத்தம் சிந்தி என் பாவத்திற்காய் அவர் மரித்தார். (How great Thou art)
அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் வரையிலும் தேவன் அந்த அடக்க ஆராதனைக்கு வருவாரா, மாட்டாரா என்று சிந்தித்தேன். அவர் ஒருபோதும் விலகிச் செல்லார். எஸ்தர் புத்தகம் இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்நிய நாட்டில் வசித்த யூதர்களை பலம் பொருந்திய மக்கள் அழிக்க முயன்றனர். அந்த மிக இருளான வேளையிலும் அடிமைகளாய் வாழ்ந்த இஸ்ரவேலர் தங்களது உரிமையைக் காத்துக்கொள்ள ஒரு தேவனை அறியாத ராஜா அவர்களுக்கு உதவி செய்தான் (எஸ். 8:11-13). வெற்றிகரமாக இஸ்ரவேலர் தங்களைக் காத்துக் கொண்டனர். கொண்டாட்டம் தொடங்கியது (9:17-19).
அடக்க ஆராதனையில் பாடப்பட்ட ஒரு பாடலில் தேவன் வெளிப்பட்டார் என்பது வியப்பான ஒரு காரியமல்ல. ஆண்டவர் ஒரு மனுக்குல அழிவை கொண்டாட்டமாக மாற்றினார், சிலுவையிலறையப்படுவதை உயிர்த்தெழுதலாகவும் இரட்சிப்பாகவும் மாற்றினார்!
துக்கத்திலிருந்து சந்தோஷத்திற்கு!
கெல்லியின் கர்ப்பத்தில் பல சிக்கல்கள். மருத்துவர்கள் மிகவும் பயந்தனர். பிரசவ காலம் நீண்டபோது அவளை அவசரமாக சிசெரியன் பிரசவ முறைக்கு உட்படுத்தினார். எனினும் அந்தக் கஷ்டமான நடை முறையில்கூட தனது மகனைக் கையில் ஏந்திய கெல்லி விரைவில் தனது வேதனையை மறந்துவிட்டாள்.
இவ்வுண்மையை வேதாகமம் ஆமோதிக்கிறது: “ஸ்திரீயானவளுக்கு பிரசவகாலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்” (யோவா. 16:21). மிக சீக்கிரத்தில் தாம் பிரிந்து செல்கையில் அவரது சீஷர்கள் துக்கமடைந்தாலும் அவரைத் திரும்பக் காணும்போது அவர்களது துக்கம் சந்தோஷமாகமாறும் என்பதை வலியுறுத்தவே இயேசுவானவர் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார். (வச. 20-22).
இயேசுவானவர் தமது மரணம் மற்றும் அதனையடுத்த உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டுப்பேசினார். அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின், சீஷர்கள் மகிழும் படி, இயேசுவானவர் 40 நாட்கள் அவர்கள் மத்தியில் சஞ்சரித்து, அவர்களுக்குப் போதனை செய்தார். பின்னர் பரமேறி மறுபடியும் அவர்களைப் பிரந்தார் (அப். 1:3) எனினும் துக்கத்தில் மூழ்கியவர்களாய் அவர் அவர்களை விட்டுச் செல்லவில்லை. பரிசுத்த ஆவினானவர் சந்தோஷத்தால் அவர்களை நிரப்பினார் (யோவா. 16:7-15 அப். 13:52).
நாம் இதுவரை இயேசுவானவரை முகமுகமாய் தரிசிக்கவில்லை என்றாலும், ஒரு நாள் அவரைக் காண்போம் என்னும் உறுதிப்பாடு விசுவாசிகளாகிய நமக்கு உண்டு. அந்நாளில், இப்பூமியில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துத் துயரங்களும் மறக்கப்பட்டுப்போம் என்றபோதிலும் அதுவரை நம்மை சந்தோஷமற்றவர்களாக விடவில்வை. அவர் தமது ஆவியானவரை நமக்குத் தந்தருளியிருக்கிறார் (ரோம. 15:13; 1 பேது. 1:8-9).