“இதற்கு முன் மனித வரலாற்றில் செய்யப்பட்டதைக் காட்டிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக தகவல்களை நாம் உருவாக்கியிருக்கிறோம். அது நமக்கு முன் எப்போதும் வந்து கொண்டிருக்கிறது” (Organized Mind: தகவல்கள் மிகுந்த சகாப்தத்தில் சரியாக யோசித்தல்’ புத்தக ஆசிரியர் டேனியல் லெவிடின்) லெவிடின் கூறுகிறார், “ மிக அதிகமான புறத்தூண்டுதலுக்கு அடிமைப்பட்டவர்களாக நாம் மாறிவிட்டிருக்கிறோம்” தொடர்சியாக வந்து விழும் செய்திகளும், தகவல் அறிவும் நமது மணங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஊடகங்களின் தாக்குதல் நிறைந்த இக் காலச் சூழலில், அமைதியாயிருப்பதும் சிந்திப்பதும் ஜெபிப்பதும் மிகவும் சிரமமாக வருகிறது.

சங்கீதம் 46:10 கூறுகிறது, “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” ஆண்டவர் மீது கண்ணோட்டத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வசனம் நமக்கு நினைவுபடுத்துகிறது. “அமைதிவேளை” என்பது வேதத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும், தேவனுடைய மகத்துவத்தை எண்ணிப் பார்க்கவும் மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் உணர ஆரம்பித்துள்ளனர்.

சங்கீதக்காரனைப் போல நாமும், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (வச. 1) என்பதை அனுபவிக்கும் போது அது நமது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது (வச. 2), உலகின் குழப்பத்தை விட்டு தேவ சமாதானத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. தேவனுடைய முழு கட்டுப்பாட்டைக் குறித்த ஒரு அமைதியான நம்பிக்கையை நம்மில் உருவாக்குகிறது (வச. 10).

நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு குழப்பம் நிறைந்ததாய் மாறிய போதிலும், நமது பரலோக பிதாவானவரின் அன்பிலும் வல்லமையிலும் நாம் அமைதியையும் பெலத்தையும் கண்டு கொள்ளக் கூடும்.