Archives: ஜூலை 2017

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஆனைத்து தலைமுறையினரும்

உலகளாவிய பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில், 1933ஆம் ஆண்டு எனது பெற்றோருக்கு திருமணம் நடந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்ப முடியாத ஜனத்தொகை பெருக்கத்தில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. அக்காலத்தில்தான் நானும் என் சகோதரியும் பிறந்தோம். இளைய தலைமுறையைச் சார்ந்த 1970-1980களில் எங்களது நான்கு பெண்களும் பிறந்தார்கள். அப்படிப்பட்ட வேறுபட்ட காலங்களில் வளர்ந்த எங்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்து வேறுபட்ட கருத்துக்களை, நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கொண்டிருந்தோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பல்வேறு தலைமுறைகளில் வாழும் மக்கள், அவர்களது அனுபவங்களிலும், வாழ்க்கை மதிப்புகளிலும் மிக அதிக வேறுபட்ட எண்ணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். இது இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உண்மையாக இருக்கிறது. நாம் உடுத்தியிருக்கும் உடையில், நாம் கேட்டு மகிழும் பாடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மிடையே உள்ள ஆவிக்கேற்ற தொடர்பு அந்த வேறுபாடுகளைவிட பலமானது.

தேவனைத் துதித்துப்பாடும் சிறந்த பாடலான சங்கீதம் 145, நமது விசுவாசத்தின் பற்றுதியை அறிவிக்கிறது. “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்… அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியை கெம்பீரித்துப் பாடுவார்கள்” (வச. 4,7). பல்வேறு கால வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கு இருந்தாலும், நாம் ஒன்று கூடி “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவித்து” தேவனை கனப்படுத்துகிறோம் (வச. 11).

விருப்புகளும், வெறுப்புகளும் நம்மைப் பிரிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஊக்கம், ஒருவரையொருவர் போற்றுவது ஆகிய இவைகள் நம்மை ஒன்றாக இனைக்கிறது. நமது வயதும், வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டமும் வேறுபட்டிருந்தாலும், நாம் சிறந்த வாழ்க்கை வாழ ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு அனைவரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தலாம். “உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள்” (வச. 12).

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

email and mobile

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.