Archives: ஜூலை 2017

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஒரு ‘புதிய மனிதன்’

ஜமைக்காவில் மோண்டிகோ பே என்ற இடத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு கூட்ட பதின் வயதினர் சென்ற பொழுது, அந்த அறையில் கடைசியில் மிகவும் தனிமையாக இருந்த ஒரு மனிதனை ஓர் இளம்பெண் கவனித்தாள். அவனுக்கென்று இவ்வுலகில் தூங்குவதற்கென ஒரு படுக்கை மட்டும் இருந்ததே தவிர வேறே ஒன்றும் கிடையாது. அத்தோடு அவனது உடல் ஊனத்தால், அவனது படுக்கையைவிட்டு எழுவதற்கு இயலாத நிலையில் இருந்தான்.

அந்த வாலிபப் பெண் அந்த மனிதனிடம் சென்று, அவனிடம் நேரிடையாக தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொண்டு, வேதத்திலிருந்து சில பகுதிகளை வாசித்தாள். “நான் அந்த மனிதனோடு வேதத்தை பகிர்ந்து கொண்டபொழுது, அவன் அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வாஞ்சையாக இருந்ததை உணர ஆரம்பித்தேன்”, என்று அப்பெண் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தாள். அந்த மனிதனின் ஆர்வத்தை அவள் உணர்ந்து, இயேசு நமக்காக பலியானதின் அற்புதத்தை விளக்கினாள். “ஒரு குடும்பமோ எந்தவித நம்பிக்கையுமோ இல்லாத அந்த மனிதன், அவன் ஒருக்காலும் சந்தித்திராத யாரோ ஒருவர் அவனது பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும் அளவிற்கு அவனை நேசித்தார் என்பதை அவனால் நம்ப இயலவில்லை” என்று பிற்காலத்தில் அவள் நினைவு கூர்ந்தாள்.

அந்த மனிதனுக்கு மேலும் அதிகமாய் அவள் இயேசுவைப்பற்றி கூறி, அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவர் புதிய சரீரத்தை கொடுப்பதோடு, பரலோகத்தையும் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பதைப்பற்றிக் கூறினாள். அந்த மனிதன் “பரலோகத்திலே நீ என்னோடு கூட நடனமாடுவாயா?” என்று அவளிடம் கேட்டான். அவன் அப்படிக் கேட்டவுடனேயே, அவன் அவனது பெலனற்ற ஊனமுற்ற செயல்பட இயலாத, அவனது சரீரத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக அவன் கற்பனை பண்ணியதை அவள் புரிந்து கொண்டாள்.

இயேசுவை அவனது இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவன் கூறிய பொழுது அவனது பாவமன்னிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்யும்படி அவனுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தாள். அவனோடு சேர்ந்து அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் கேட்டபொழுது, “நான் உட்காருவதற்கு நீ உதவி செய்தால், நான் ஒரு புதிய மனிதன்” என்றான். வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடிய, நம்பிக்கை அருளக் கூடிய இயேசுவைப் பற்றிய சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைப்பதற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் அந்த சுவிஷேம் புதிய ஜீவனை அருளுகிறது (கொலோ. 1:5,23).

ஆனைத்து தலைமுறையினரும்

உலகளாவிய பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில், 1933ஆம் ஆண்டு எனது பெற்றோருக்கு திருமணம் நடந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்ப முடியாத ஜனத்தொகை பெருக்கத்தில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. அக்காலத்தில்தான் நானும் என் சகோதரியும் பிறந்தோம். இளைய தலைமுறையைச் சார்ந்த 1970-1980களில் எங்களது நான்கு பெண்களும் பிறந்தார்கள். அப்படிப்பட்ட வேறுபட்ட காலங்களில் வளர்ந்த எங்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்து வேறுபட்ட கருத்துக்களை, நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கொண்டிருந்தோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பல்வேறு தலைமுறைகளில் வாழும் மக்கள், அவர்களது அனுபவங்களிலும், வாழ்க்கை மதிப்புகளிலும் மிக அதிக வேறுபட்ட எண்ணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். இது இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உண்மையாக இருக்கிறது. நாம் உடுத்தியிருக்கும் உடையில், நாம் கேட்டு மகிழும் பாடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மிடையே உள்ள ஆவிக்கேற்ற தொடர்பு அந்த வேறுபாடுகளைவிட பலமானது.

தேவனைத் துதித்துப்பாடும் சிறந்த பாடலான சங்கீதம் 145, நமது விசுவாசத்தின் பற்றுதியை அறிவிக்கிறது. “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்… அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியை கெம்பீரித்துப் பாடுவார்கள்” (வச. 4,7). பல்வேறு கால வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கு இருந்தாலும், நாம் ஒன்று கூடி “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவித்து” தேவனை கனப்படுத்துகிறோம் (வச. 11).

விருப்புகளும், வெறுப்புகளும் நம்மைப் பிரிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஊக்கம், ஒருவரையொருவர் போற்றுவது ஆகிய இவைகள் நம்மை ஒன்றாக இனைக்கிறது. நமது வயதும், வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டமும் வேறுபட்டிருந்தாலும், நாம் சிறந்த வாழ்க்கை வாழ ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு அனைவரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தலாம். “உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள்” (வச. 12).

உள்ளே நுளைவதற்கான உரிமை

அது இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியில் போடப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைப் போலவே இருந்தாலும், மிகவும் பயபக்தியை தூண்டக்கூடியதாக இருந்தது. யாத்திராகமம் 25 முதல் 27 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள நுணுக்கமான விளக்கங்களின்படியே அதே அளவிலும், அதே மாதிரியிலும் அமைக்கப்பட்டதாய் இருந்தது. ஆனால், முதலில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்தைப் போல உண்மையான தங்கமோ, சீத்தீம் மரமோ பயன்படுத்தப்படவில்லை. அந்த மாதிரி ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேல் நாட்டின் தென் பகுதியிலிருந்த பாலைவனத்தில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கத்தக்கதாக உயர்ந்து நின்றது.

எங்களுடைய பயணக் குழுவினர்கள், அந்த, மாதிரி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் இருந்த “பரிசுத்த ஸ்தலம்”, “மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்” சென்று “உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்க” அழைத்து செல்லப்பட்ட பொழுது எங்களில் ஒருசிலர் உள்ளே நுழைவதற்கு சற்றே தயங்கினார்கள். இது பிரதான ஆசாரியன் மட்டும் செல்லக் கூடிய மகா பரிசுத்த ஸ்தலமல்லவா? மிகவும் சாதாரணமாக நாங்கள் இதற்குள் நுழைவது எப்படி? என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரவேல் மக்கள் அவர்களது பலிகளைச் செலுத்த ஆசரிப்புக் கூடாரத்தை நெருங்கும் பொழுது, சர்வ வல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் வரப்போகிறோம் என்ற உணர்வினால் எவ்வளவு பயத்துடன் வந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க இயலுகிறது. தேவன் அவர்களுக்கு கூறவேண்டிய காரியங்களை எப்பொழுதெல்லாம் கூற வேண்டுமென்று விரும்பினாரோ, அப்பொழுதெல்லாம், மோசேயின் மூலமாக கூறிய பொழுது எவ்வளவு ஆச்சரியம் அடைந்திருப்பார்கள்!

இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே நமக்கும்; தேவனுக்கும் இடையே உள்ள திரை கிழிக்கப்பட்டதால், இன்று நீங்களும் நானும் தைரியமாக தேவனுடைய கிருபாசனத்தண்டையில் சேருகிறோம். (எபி. 12:22-23). நாம் விரும்பும் பொழுதெல்லாம் தேவனோடு பேசலாம்; அவருடைய வசனத்தை வாசிப்பதின்மூலம் அவர் நமக்கு கூறுவதை நேரடியாகக் கேட்கலாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவது ஒரு கனவாக இருந்தது. ஆனால், நாமோ தேவனோடு கூட நேரிடையாக தொடர்பு கொள்வதை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறோம். தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக பிதாவிடம் வரக்கூடிய பிரமிக்கத்தக்க இந்த உரிமையை மிகச் சாதாரணமாக கருதாமல் விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறோம்.

email and mobile

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.