எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சி.பி. ஹியாகட்டுரைகள்

முதன்மையானவைகள்

நாம் ஆகாய மார்க்கமாய் பயணிக்கும் பொழுது, விமானம் மேலெழும்பும்முன், விமான பணியாளர் பாதுகாப்பு விளக்கம் ஒன்று தருவார். அதில், விமான அறையினுள் அழுத்த குறைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார். பயணிகள் தங்களுக்கு மேலுள்ள பகுதியிலிருந்து கீழே விழும் ஆக்ஸிஜன் கவசத்தை பிறருக்கு உதவுமுன் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவர். ஏனெனில், பிறருக்கு உதவும்முன் உங்களை சரீரப்பிரகாரமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பவுல், தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, பிறருக்கு உதவவும், ஊழியம் செய்வதற்கும் முன்பாக, தன்னுடைய சொந்த ஆவிக்குறிய ஆரோக்கியத்தைக் காத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றார். ஒரு போதகராக தீமோத்தேயு என்னென்ன பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென நினைப்பூட்டுகிறார். கள்ளப் போதனைக்கு எதிர்த்து நிற்க வேண்டும் (1 தீமோ. 4:1-5). தவறான கொள்கைகைளை சீர்திருத்த வேண்டும் (வச. 6-8). கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாய் இருப்பதற்கு தேவையானதென்னவெனில், உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு. (வச. 16). அவன் முதலாவது தனக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவை சரிபண்ணிக் கொண்டால்தான் மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும்.

பவுல், தீமோத்தேயுவுக்குத் சொல்வது நமக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனை அறியாத ஜனங்களைச் சந்திக்கின்றோம். தேவனுடைய வார்த்தை, ஜெபம் ஆகியவற்றிற்கு நேரத்தைக் கொடுப்பதிலும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவதன் மூலம் ஆவிக்குரிய ஆக்ஸிஜனை நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை சரிபடுத்திக் கொண்டு ஆவியில் விழிப்பாய் இருந்து  கொண்டால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.

எல்லோரையும் விட வலிமை மிக்கவர்

இக்குவாசு நீர்வீழ்ச்சி பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உள்ள எல்லையில் உள்ளது. அது 2.7 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும்; இக்குவாசு ஆற்றில் 275 நீர்வீழ்ச்சிகள் கூடிய வியக்கத்தக்க அழகிய நீர் வீழ்ச்சியாகும். பிரேசில் பக்கம் விழும் நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள சுவற்றில், “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர்” (சங். 93:4) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வசனத்திற்கு கீழாக “நமது அனைத்து துன்பங்களையும் விட தேவன் மேலானவர்” என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

இராஜாக்கள் அரசாண்ட அந்தக் காலத்தில் தேவனே எல்லோரையும் ஆழக்கூடிய முதன்மையான உயர்சிறப்புடைய இராஜாவென்று சங்கீதம் 93யை எழுதியவர் அறிந்திருந்தார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். உமது சிங்காசனம் பூர்வ முதல் உறுதியானது; நீர் அனாதியாய் இருக்கிறீர்” (வச. 1,2) என்று எழுதினார். வெள்ளங்களோ, அலைகளோ எவ்வளவு உயரமாக எழும்பினாலும், தேவன் அவற்றைவிட பெரியவராக இருக்கிறார்.

நீர் வீழ்ச்சியின் பேரோசை உண்மையில் மிகக் கம்பீரமான ஓசையாக இருக்கும். ஆனால் அளவிற்கு மீறிய வேகத்தில் நீர் வீழ்ச்சியை நோக்கி வரும் நீரோட்டத்தில் இருப்பது மிக ஆபத்தானது. ஒருவேளை இன்று உங்களுடைய நிலைமை அதைப்போலவே ஆபத்தில் இருக்கலாம். சரீரப் பிரகாரமான பிரச்சனைகள், அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் அல்லது உறவுகளில் ஏற்பட்ட முறிவுகள் போன்றவை மிகவும் பெரிதாக அச்சமூட்டுபவைகளாக இருப்பதினால், நீங்கள் நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழும் அனுபவத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு கிறிஸ்தவராக பாதுகாப்பு அருளக்கூடிய ஒருவர் உண்டு. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்.” ஒருவர் உண்டு, அவரே நமது கர்த்தராவார் (எபே. 3:20). ஏனெனில் அவர் நமது அனைத்துத் துன்பங்களைவிட மேலானவர்.

நீங்கள் எதற்காக அறியப்பட்டவர்கள்?

சீனாவில் முற்காலத்தில் இருந்த ஜப்பானிய சிறைமுகாம் ஒன்றில், 1945ஆம் ஆண்டு மரித்த ஒருவரின் நினைவுக் கல் உள்ளது. “1902 ஆம் ஆண்டு தியான்ஜினில், ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு மகனாக எரிக் லிட்டல் (Eric Liddell) பிறந்தார். அவர் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்று, புகழின் உச்சியை தொட்டார். அவர் சீனாவிற்கு திரும்பி, தியான்ஜினில் ஒரு ஆசிரியராக வேலை செய்தார். மனிதகுலத்தின் நலனுக்காக சிறந்த பங்களிப்பை செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதிலேயே அவரது முழு வாழ்வையும் கழித்தார்” என்று அந்நினைவுகல்லில் எழுதப்பட்டிருந்தது.

எரிக் விளையாட்டுத் துறையில் செய்த சாதனையைத் தான் பலரும் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆயினும் அவர் பிறந்த நாட்டில், அவர் நேசித்த சீனாவில், தியான்ஜினின் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆற்றிய தொண்டையும், பங்களிப்பையும் கூட பலர் நினைவுகூருகின்றனர். விசுவாசத்தினால் அவர் வாழ்ந்தும், சேவை செய்தும் வந்தார்.

நாம் எதற்காக நினைவுகூரப்படுவோம்? நம்முடைய கல்வி சாதனைகளும், வேலையின் நிலையும், பொருளாதார வெற்றியும் பிறருடைய அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தரலாம். ஆனால் பலரது வாழ்வில் நாம் செய்த அமைதியான சில காரியங்கள்தான் நாம் சென்ற பிறகும் நம்மை பற்றி எடுத்துரைத்து வாழ்ந்து கொண்டிருக்கும். விசுவாசத்தின் அதிகாரம் என்று சொல்லப்படும் எபிரெயர் 11ல் மோசேயைக் குறித்து எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம். எகிப்தியரின் பொக்கிஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டார் (வச. 26). விசுவாசத்தினால் தேவனுடைய மக்களுக்காக ஊழியம் செய்து அவர்களை வழிநடத்தினார்.

கிறிஸ்துமஸ் விளக்குகள்

சிங்கப்பூரின் சுற்றுலா பகுதியாகக் கருதப்படும் ஆர்சர்ட் ரோட் (ORCHARD ROAD) ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வாரங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிசய உலகமாக மாறிவிடும். இந்த ஒளி அலங்காரமெல்லாம் வியாபாரத்திற்கு பெயர் போன அம்மாதத்தில், ஜனங்களைக் கவர்ந்து, அங்குள்ள கடைகளில் அவர்கள் பணத்தை செலவழிக்க வைப்பதற்கே அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கேளிக்கைகளைக் கண்டுகளித்து, பாடற்குழுவினர் பாடும் கிறிஸ்துமஸ் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, நடிகர்களின் நடிப்பை கண்டுகளித்து மகிழ அங்கு வருவார்கள்.

முதலாம் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம், மின்சார கம்பிகளால் அல்லது மின்னும் பொருட்கள் அல்லது நியான் (Neon) விளக்குகளால் உண்டாகவில்லை. மாறாக “கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” (லூக். 2:9). எந்த சுற்றுலா பயணியும் இதைக் காணவில்லை, சாதாரண மந்தை மேய்ப்பவர்களே இக்காட்சியைக் கண்டனர். அதுமட்டுமன்றி அதைத் தொடர்ந்து, பரலோக தூதர் சேனை பாடிய “உன்னததத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,” என்கிற பாடலையும் கேட்டு மகிழ்ந்தனர் (வச. 14).

பின்பு அத்தேவ தூதர்கள் கூறியது உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அம்மேய்ப்பர்கள் பெத்லேகம் சென்றார்கள் (வச. 15). அவை அனைத்தும் உண்மை என்று அறிந்து கொண்டபொழுது, அவர்கள் கேட்டதையும், கண்டதையும் குறித்துப் பிறருக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (வச. 17).

நம்மில் அநேகர் இந்த கிறிஸ்துமஸ் கதையை அநேகந்தரம் கேட்டதுண்டு. இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே, “உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்கிற கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார் என்கிற நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாலாமே.

இருளில் பிரகாசித்தல்

அரசியல் கைதியாக இருந்த வக்லாவ் ஹேவல் 1989ல் செக்கஸ்லோவேக்கியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். 2011ம் ஆண்டு பராகுவேயில் நடந்த அவரது அடக்க ஆராதனையில் பராகுவேயில் பிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் செயலர் மாடலின் ஆல்பிரைட், ஹேவல், “அந்தகாரத்தில் இருந்தவர்களுக்கு வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ணினார்” என்று விவரித்தார்.

செக்கஸ்லோவேக்கியாவில் (பின்னால் செக் குடியரசு) இருந்த அரசியல் சூழ்நிலையில் ஹேவல் எப்படியாக வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தாரோ, அதுபோல கர்த்தராகிய இயேசு, இந்த உலகம் முழுவதற்கும் ஒளியைக் கொண்டுவந்தார். ஆதியிலே தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார்…

தவறான லாடம்

200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் ரஷ்யப் போரில் தோற்றுப்போனதற்கு ரஷ்யக் கடுங்குளிரே காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் போர் குதிரைகள் அனைத்தும் கோடை காலத்திற்கான லாடங்ளை அணிந்திருந்தது தான் காரணம். குளிர் காலம் வந்தபொழுது, போர் வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏற்றியுள்ள பாரமான வண்டிகளை பனி அடர்ந்த சாலைகளில் இழுத்துச்செல்லும்பொழுது, வழுக்கி விழுந்து குதிரைகள் மாண்டு போயின. இவ்வாறு தொடர்ந்து நெப்போலியனால் உணவு போன்ற அத்தியாவசியமான பொருட்களை 400,000 போர் வீரர்களைக்கொண்ட தன் வலிமைமிக்க படைக்கு…

கவலைகள் இல்லை

மிகவும் அமைதியாகச் சென்ற விமானப் பயணம் திடீரென அலைக்கழிக்கப்பட ஆரம்பித்தது. விமானத்திற்குள்ளாக பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, விமான ஓட்டி, அனைத்து பயணிகளின் இருக்கை பெல்ட் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று நிச்சயப்படுத்துமாறு கூறினார். சிறிது நேரத்தில் சமுத்திரத்தில் காற்றினால் அலைப்பட்டு அலைகிற கப்பலைப்போல விமானம் உருண்டு பிறழ ஆரம்பித்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கலவரமான அந்த நிலையைக் கையாளுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு சிறுமி மட்டும் அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். விமானம் தரை இறங்கினபின், அந்த சிறுமியால் எவ்வாறு…

எனக்கே உரிய இடம்

சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் தொழில் துறை வடிவமைப்பில் பட்டதாரியான ஒருவருக்கு மிகவும் சாதாரணப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு பொதுவான பிரச்சனைக்கு ஒரு புதிய முறையில் பதில் கண்டுபிடிக்க, ஒரு பயிற்சி அரங்கத்தில் சவால் விடப்பட்டது. பொது இரயில்களிலும், பஸ்களிலும் பயணம் செய்யும் பொழுது கூட்டத்தின் நெருக்கடியில் நசுக்கப்படாமல் இருக்க ஒருவருக்கு உரிய இடத்தில் பிறருடைய தாக்கம் இல்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மேல் சட்டையை அவள் கண்டுபிடித்தாள். பொதுவாகப் பறவைகளும், பூனைகளும் தாவரங்களை தாக்காமல் இருக்க தாவரங்களிலுள்ள முட்கள் போல எளிதில் வளைந்து…

பிரியாவிடை வாழ்த்து

நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு அல்லது நமக்கு மிகவும் பிடித்த பழக்கப்பட்ட இடத்திற்கு அல்லது நாம் செய்த வேலைக்கோ, பிழைப்புக்கோ பிரியாவிடை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இயேசுவின் சீஷனாய் இருப்பதற்கான கிரையத்தைக் குறித்து அவரே லூக்கா 9: 57-62ல் விவரிக்கிறார். இயேசுவை பின்பற்ற விரும்பிய ஒருவன், அவரை நோக்கி “ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன், ஆனால் அதற்கு முன்பு நான் சென்று என் குடும்பத்திற்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றேன்” என்று கூறினான். அதற்கு இயேசு “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ