எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சி.பி. ஹியாகட்டுரைகள்

முதன்மையானவைகள்

நாம் ஆகாய மார்க்கமாய் பயணிக்கும் பொழுது, விமானம் மேலெழும்பும்முன், விமான பணியாளர் பாதுகாப்பு விளக்கம் ஒன்று தருவார். அதில், விமான அறையினுள் அழுத்த குறைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார். பயணிகள் தங்களுக்கு மேலுள்ள பகுதியிலிருந்து கீழே விழும் ஆக்ஸிஜன் கவசத்தை பிறருக்கு உதவுமுன் அணிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவர். ஏனெனில், பிறருக்கு உதவும்முன் உங்களை சரீரப்பிரகாரமாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பவுல், தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, பிறருக்கு உதவவும், ஊழியம் செய்வதற்கும் முன்பாக, தன்னுடைய சொந்த ஆவிக்குறிய ஆரோக்கியத்தைக் காத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றார். ஒரு போதகராக தீமோத்தேயு என்னென்ன பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென நினைப்பூட்டுகிறார். கள்ளப் போதனைக்கு எதிர்த்து நிற்க வேண்டும் (1 தீமோ. 4:1-5). தவறான கொள்கைகைளை சீர்திருத்த வேண்டும் (வச. 6-8). கிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாய் இருப்பதற்கு தேவையானதென்னவெனில், உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு. இவைகளில் நிலைகொண்டிரு. (வச. 16). அவன் முதலாவது தனக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவை சரிபண்ணிக் கொண்டால்தான் மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும்.

பவுல், தீமோத்தேயுவுக்குத் சொல்வது நமக்கும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் நாம் தேவனை அறியாத ஜனங்களைச் சந்திக்கின்றோம். தேவனுடைய வார்த்தை, ஜெபம் ஆகியவற்றிற்கு நேரத்தைக் கொடுப்பதிலும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவதன் மூலம் ஆவிக்குரிய ஆக்ஸிஜனை நிரப்பிக் கொள்ளலாம். இவ்வாறு நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை சரிபடுத்திக் கொண்டு ஆவியில் விழிப்பாய் இருந்து  கொண்டால்தான் மற்றவர்களுக்கு உதவ முடியும்.

எல்லோரையும் விட வலிமை மிக்கவர்

இக்குவாசு நீர்வீழ்ச்சி பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உள்ள எல்லையில் உள்ளது. அது 2.7 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும்; இக்குவாசு ஆற்றில் 275 நீர்வீழ்ச்சிகள் கூடிய வியக்கத்தக்க அழகிய நீர் வீழ்ச்சியாகும். பிரேசில் பக்கம் விழும் நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள சுவற்றில், “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர்” (சங். 93:4) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வசனத்திற்கு கீழாக “நமது அனைத்து துன்பங்களையும் விட தேவன் மேலானவர்” என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

இராஜாக்கள் அரசாண்ட அந்தக் காலத்தில் தேவனே எல்லோரையும் ஆழக்கூடிய முதன்மையான உயர்சிறப்புடைய இராஜாவென்று சங்கீதம் 93யை எழுதியவர் அறிந்திருந்தார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். உமது சிங்காசனம் பூர்வ முதல் உறுதியானது; நீர் அனாதியாய் இருக்கிறீர்” (வச. 1,2) என்று எழுதினார். வெள்ளங்களோ, அலைகளோ எவ்வளவு உயரமாக எழும்பினாலும், தேவன் அவற்றைவிட பெரியவராக இருக்கிறார்.

நீர் வீழ்ச்சியின் பேரோசை உண்மையில் மிகக் கம்பீரமான ஓசையாக இருக்கும். ஆனால் அளவிற்கு மீறிய வேகத்தில் நீர் வீழ்ச்சியை நோக்கி வரும் நீரோட்டத்தில் இருப்பது மிக ஆபத்தானது. ஒருவேளை இன்று உங்களுடைய நிலைமை அதைப்போலவே ஆபத்தில் இருக்கலாம். சரீரப் பிரகாரமான பிரச்சனைகள், அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் அல்லது உறவுகளில் ஏற்பட்ட முறிவுகள் போன்றவை மிகவும் பெரிதாக அச்சமூட்டுபவைகளாக இருப்பதினால், நீங்கள் நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழும் அனுபவத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு கிறிஸ்தவராக பாதுகாப்பு அருளக்கூடிய ஒருவர் உண்டு. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்.” ஒருவர் உண்டு, அவரே நமது கர்த்தராவார் (எபே. 3:20). ஏனெனில் அவர் நமது அனைத்துத் துன்பங்களைவிட மேலானவர்.

நீங்கள் எதற்காக அறியப்பட்டவர்கள்?

சீனாவில் முற்காலத்தில் இருந்த ஜப்பானிய சிறைமுகாம் ஒன்றில், 1945ஆம் ஆண்டு மரித்த ஒருவரின் நினைவுக் கல் உள்ளது. “1902 ஆம் ஆண்டு தியான்ஜினில், ஸ்காட்டிஷ் பெற்றோருக்கு மகனாக எரிக் லிட்டல் (Eric Liddell) பிறந்தார். அவர் 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்று, புகழின் உச்சியை தொட்டார். அவர் சீனாவிற்கு திரும்பி, தியான்ஜினில் ஒரு ஆசிரியராக வேலை செய்தார். மனிதகுலத்தின் நலனுக்காக சிறந்த பங்களிப்பை செய்யுமாறு இளைஞர்களை ஊக்குவிப்பதிலேயே அவரது முழு வாழ்வையும் கழித்தார்” என்று அந்நினைவுகல்லில் எழுதப்பட்டிருந்தது.

எரிக் விளையாட்டுத் துறையில் செய்த சாதனையைத் தான் பலரும் பெரிதாக எண்ணுகிறார்கள். ஆயினும் அவர் பிறந்த நாட்டில், அவர் நேசித்த சீனாவில், தியான்ஜினின் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆற்றிய தொண்டையும், பங்களிப்பையும் கூட பலர் நினைவுகூருகின்றனர். விசுவாசத்தினால் அவர் வாழ்ந்தும், சேவை செய்தும் வந்தார்.

நாம் எதற்காக நினைவுகூரப்படுவோம்? நம்முடைய கல்வி சாதனைகளும், வேலையின் நிலையும், பொருளாதார வெற்றியும் பிறருடைய அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தரலாம். ஆனால் பலரது வாழ்வில் நாம் செய்த அமைதியான சில காரியங்கள்தான் நாம் சென்ற பிறகும் நம்மை பற்றி எடுத்துரைத்து வாழ்ந்து கொண்டிருக்கும். விசுவாசத்தின் அதிகாரம் என்று சொல்லப்படும் எபிரெயர் 11ல் மோசேயைக் குறித்து எழுதப்பட்டிருப்பதை நாம் காணலாம். எகிப்தியரின் பொக்கிஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களுடன் இணைந்து செயல்பட விரும்பி, அவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்டார் (வச. 26). விசுவாசத்தினால் தேவனுடைய மக்களுக்காக ஊழியம் செய்து அவர்களை வழிநடத்தினார்.

கிறிஸ்துமஸ் விளக்குகள்

சிங்கப்பூரின் சுற்றுலா பகுதியாகக் கருதப்படும் ஆர்சர்ட் ரோட் (ORCHARD ROAD) ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வாரங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிசய உலகமாக மாறிவிடும். இந்த ஒளி அலங்காரமெல்லாம் வியாபாரத்திற்கு பெயர் போன அம்மாதத்தில், ஜனங்களைக் கவர்ந்து, அங்குள்ள கடைகளில் அவர்கள் பணத்தை செலவழிக்க வைப்பதற்கே அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கேளிக்கைகளைக் கண்டுகளித்து, பாடற்குழுவினர் பாடும் கிறிஸ்துமஸ் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, நடிகர்களின் நடிப்பை கண்டுகளித்து மகிழ அங்கு வருவார்கள்.

முதலாம் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம், மின்சார கம்பிகளால் அல்லது மின்னும் பொருட்கள் அல்லது நியான் (Neon) விளக்குகளால் உண்டாகவில்லை. மாறாக “கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” (லூக். 2:9). எந்த சுற்றுலா பயணியும் இதைக் காணவில்லை, சாதாரண மந்தை மேய்ப்பவர்களே இக்காட்சியைக் கண்டனர். அதுமட்டுமன்றி அதைத் தொடர்ந்து, பரலோக தூதர் சேனை பாடிய “உன்னததத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,” என்கிற பாடலையும் கேட்டு மகிழ்ந்தனர் (வச. 14).

பின்பு அத்தேவ தூதர்கள் கூறியது உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அம்மேய்ப்பர்கள் பெத்லேகம் சென்றார்கள் (வச. 15). அவை அனைத்தும் உண்மை என்று அறிந்து கொண்டபொழுது, அவர்கள் கேட்டதையும், கண்டதையும் குறித்துப் பிறருக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (வச. 17).

நம்மில் அநேகர் இந்த கிறிஸ்துமஸ் கதையை அநேகந்தரம் கேட்டதுண்டு. இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே, “உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்கிற கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார் என்கிற நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாலாமே.

இருளில் பிரகாசித்தல்

அரசியல் கைதியாக இருந்த வக்லாவ் ஹேவல் 1989ல் செக்கஸ்லோவேக்கியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். 2011ம் ஆண்டு பராகுவேயில் நடந்த அவரது அடக்க ஆராதனையில் பராகுவேயில் பிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் செயலர் மாடலின் ஆல்பிரைட், ஹேவல், “அந்தகாரத்தில் இருந்தவர்களுக்கு வெளிச்சத்தைப் பிரகாசிக்கப்பண்ணினார்” என்று விவரித்தார்.

செக்கஸ்லோவேக்கியாவில் (பின்னால் செக் குடியரசு) இருந்த அரசியல் சூழ்நிலையில் ஹேவல் எப்படியாக வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தாரோ, அதுபோல கர்த்தராகிய இயேசு, இந்த உலகம் முழுவதற்கும் ஒளியைக் கொண்டுவந்தார். ஆதியிலே தேவன் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார்…

தவறான லாடம்

200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் ரஷ்யப் போரில் தோற்றுப்போனதற்கு ரஷ்யக் கடுங்குளிரே காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் போர் குதிரைகள் அனைத்தும் கோடை காலத்திற்கான லாடங்ளை அணிந்திருந்தது தான் காரணம். குளிர் காலம் வந்தபொழுது, போர் வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏற்றியுள்ள பாரமான வண்டிகளை பனி அடர்ந்த சாலைகளில் இழுத்துச்செல்லும்பொழுது, வழுக்கி விழுந்து குதிரைகள் மாண்டு போயின. இவ்வாறு தொடர்ந்து நெப்போலியனால் உணவு போன்ற அத்தியாவசியமான பொருட்களை 400,000 போர் வீரர்களைக்கொண்ட தன் வலிமைமிக்க படைக்கு…

கவலைகள் இல்லை

மிகவும் அமைதியாகச் சென்ற விமானப் பயணம் திடீரென அலைக்கழிக்கப்பட ஆரம்பித்தது. விமானத்திற்குள்ளாக பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, விமான ஓட்டி, அனைத்து பயணிகளின் இருக்கை பெல்ட் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று நிச்சயப்படுத்துமாறு கூறினார். சிறிது நேரத்தில் சமுத்திரத்தில் காற்றினால் அலைப்பட்டு அலைகிற கப்பலைப்போல விமானம் உருண்டு பிறழ ஆரம்பித்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கலவரமான அந்த நிலையைக் கையாளுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு சிறுமி மட்டும் அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். விமானம் தரை இறங்கினபின், அந்த சிறுமியால் எவ்வாறு…

எனக்கே உரிய இடம்

சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் தொழில் துறை வடிவமைப்பில் பட்டதாரியான ஒருவருக்கு மிகவும் சாதாரணப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு பொதுவான பிரச்சனைக்கு ஒரு புதிய முறையில் பதில் கண்டுபிடிக்க, ஒரு பயிற்சி அரங்கத்தில் சவால் விடப்பட்டது. பொது இரயில்களிலும், பஸ்களிலும் பயணம் செய்யும் பொழுது கூட்டத்தின் நெருக்கடியில் நசுக்கப்படாமல் இருக்க ஒருவருக்கு உரிய இடத்தில் பிறருடைய தாக்கம் இல்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மேல் சட்டையை அவள் கண்டுபிடித்தாள். பொதுவாகப் பறவைகளும், பூனைகளும் தாவரங்களை தாக்காமல் இருக்க தாவரங்களிலுள்ள முட்கள் போல எளிதில் வளைந்து…

பிரியாவிடை வாழ்த்து

நம்முடைய குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு அல்லது நமக்கு மிகவும் பிடித்த பழக்கப்பட்ட இடத்திற்கு அல்லது நாம் செய்த வேலைக்கோ, பிழைப்புக்கோ பிரியாவிடை கொடுப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இயேசுவின் சீஷனாய் இருப்பதற்கான கிரையத்தைக் குறித்து அவரே லூக்கா 9: 57-62ல் விவரிக்கிறார். இயேசுவை பின்பற்ற விரும்பிய ஒருவன், அவரை நோக்கி “ஆண்டவரே உம்மைப் பின்பற்றுவேன், ஆனால் அதற்கு முன்பு நான் சென்று என் குடும்பத்திற்கு பிரியாவிடை கொடுத்து வருகின்றேன்” என்று கூறினான். அதற்கு இயேசு “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும்…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.