Archives: மார்ச் 2018

உயிரோடிருப்பதின் நோக்கம்

ஒரு நாள், பிந்திய இரவில் நான் பொருளாதார யோசனைகளைத் தரும் புத்தகங்களை மேலோட்டமாகத் திருப்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வித்தியாசமான போக்கினை கண்டேன். எல்லா புத்தகங்களும் நல்ல யோசனைகளைத் தந்த போதிலும், அநேகருடைய கருத்து என்னவெனில், இப்பொழுது செலவைக் குறைப்பதின் அடிப்படை நோக்கம், பிற்காலத்தில் கோடீஸ்வரனாக வாழ்வதற்காகவேயாம். ஆனால் ஒரு புத்தகம் வித்தியாசமான மற்றொரு கருத்தைத் தந்தது. எளிய வாழ்வு என்பது ஒரு செல்வ வாழ்வுக்கு வழிவகுக்கும். ஆனால் உனக்கு அதிக புதிய பொருட்களால் தான் மகிழ்ச்சியைத் தர முடியும் என்று கருதுவாயாயின் ‘‘நீ உயிரோடிருக்கிறாய் என்பதை உணரத் தவறுகிறாய்” என அந்த புத்தகம் தெரிவித்தது.

இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் என் மனதிற்குள் சில நினைவுகளைக் கொண்டு வந்தன. ஒரு மனிதன் இயேசுவிடம் வந்து, தனக்குள்ள ஆஸ்தியை பாகம் பிரித்துத் தரும்படி தன் சகோதரனுக்குக் கட்டளையிடும் என்று வற்புறுத்துகிறான். அவன் மீது அனுதாபம் கொள்ளாமல், இயேசு அவனைக் கடிந்து அனுப்புகிறார். மேலும், ‘‘பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல” (லூக். 12:14-15) என அறிவுறுத்துகிறார். பின்பு அவர் ஐசுவரியமுள்ள ஒருவன் தன்னுடைய தானியங்களைச் சேர்த்து வைக்க நினைத்த திட்டத்தைக் குறித்து விளக்குகின்றார். இது முதலாம் நூற்றாண்டில் கைக்கொள்ளப்பட்ட ஓய்வு ஊதிய திட்டம். ஒரு தெளிவான முடிவு எடுக்கின்றான். அன்றிரவே அவன் மரித்துப் போனான் அவன் சேர்த்து வைத்தவை அவனுக்கு உதவாமல் போனது (வ. 16-20) என எச்சரிக்கின்றார்.

நாமும் நமக்குள்ள பொருளாதாரத்தை ஞானமாய் பயன்படுத்த கடமைப்பட்டிருந்தாலும், இயேசுவின் வார்த்தைகள் நம்முடைய எண்ணங்களை ஆராய்ந்து பார்க்கச் சொல்லுகிறது. நம்முடைய இருதயம் எப்பொழுதும் தேவனுடைய ராஜ்ஜியத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக் கொண்டிராமல், அவரை அறிந்து கொண்டு, பிறருக்கு சேவை செய்து வாழலாம். (வச. 29-31). மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அவருக்காக நாம் வாழும் போது, தேவனோடு பூரண மகிழ்ச்சியான, செழிப்பான ஒரு வாழ்வை, அவருடைய ராஜ்ஜியத்தை இப்பொழுதே அனுபவிப்பதோடு, நம் வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வோம் (வச. 32-34).

இவர் யார்?

ஓர் அழுக்கடைந்த சாலையில் ஒருவரையொருவர் இடிக்குமளவுக்கு நெருக்கமான ஜனக்கூட்டத்தினரிடையே நீ நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாய் எனக் கற்பனை செய். இக்கூட்டத்தின் பின்பக்கம் நிற்கும் பெண்கள் நுனிக் காலில் நின்று யார் வருகிறார்களென எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் ஒரு மனிதன் கழுதையின் மேல் வருவது லேசாகத் தெரிகிறது. அவர் நெருங்கி வருகையில் ஜனங்கள் தங்கள் மேலாடைகளைச் சாலையில் விரிக்கின்றனர். திடீரென, உன் பின்பக்கம் ஒரு மரக்கிளை ஒடியும் சத்தம் கேட்கிறது. ஒரு மனிதன் தென்னை மர ஓலைகளை வெட்டிக் கொண்டிருக்கின்றான். ஜனங்கள் அவற்றை சாலையில் கழுதைக்கு முன்பாகப் பரப்புகின்றனர்.

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இயேசு எருசலேமுக்குள் நுழைந்த போது அவருடைய சீடர்கள் மிக உற்சாகமாக அவரை வரவேற்றனர். அந்த ஜனக்கூட்டம் மிக மகிழ்ச்சியோடு தேவனை மகிமைப்படுத்தினார்கள். தாங்கள் கண்ட சகல அற்புதங்களையும் குறித்து சந்தோஷப்பட்டார்கள்” (லூக். 19:37) இயேசுவின் பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ‘‘கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வ. 38) என சத்தமிட்டனர். அவர்களுடைய உற்சாக வரவேற்பு எருசலேம் நகரத்தாரைப் பாதித்தது. கடைசியாக அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில் நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் யார்?” என்று விசாரித்தனர். (மத். 21:10).

இன்றைக்கும் அநேக ஜனங்களிடையே யார் இந்த இயேசு என்ற கேள்வியுள்ளது. நாம் இயேசு வரும் பாதையில் மரக்கிளைகளையும், இலைகளையும் பரப்ப முடியாவிட்டாலும், இயேசுவைப் புகழ்ந்து சத்தமிட முடியாததாயினும், நாமும் அவரை கனப்படுத்த முடியும். நாம் அவர் செய்த மகத்துவமான செயல்களை விவரித்துச் சொல்ல முடியும். தேவையுள்ள ஜனங்களுக்கு உதவ முடியும்; நம்மைக் காயப்படுத்துவோரை பொறுத்துக் கொள்ள முடியும். ஒருவரையொருவர் ஆழ்ந்து நேசிக்க முடியும். அப்படிச் செய்வோமேயாயின், நாம் அந்த வேடிக்கைப் பார்க்கும் அந்தக் கூட்டத்திடம் இயேசு யாரென்று பதில் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

செயல்முறை விளக்கத்தின் வல்லமை

என் வீட்டிலுள்ள சில காரியங்களை நான் செய்ய முற்படும் போது, அவை பொதுவாக, மற்றொருவரை நான் வேலை செய்யும் போது ஏற்படுத்திய சேதத்தைச் சரி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளும். ஆனால் யு-டியூபில் ஒரு மனிதன் படிப்படியாக செயல்முறை விளக்கம் தந்ததைக் கடைபிடித்து சமீபகாலத்தில் நான் வீட்டு உபயோகப் பொருளொன்றை வெற்றிகரமாகச் சரி செய்து விட்டேன்.

பவுல், தன்னுடைய இளம் சீடருக்கு ஒரு வலிமையான எடுத்துக்காட்டு. தீமோத்தேயு பவுலோடு பிரயாணம் பண்ணி, அவருடைய செயல்களைக் கவனித்தார். ரோமாபுரியிலுள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தீமோத்தேயுவிற்கு நீயோ என் போதகத்தையும், நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும் ... துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்” (2 தீமோ. 3:10-11) என எழுதுகிறார். அத்தோடு அவர் தீமோத்தேயுவிடம் ‘‘நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்” (வச. 14-15) எனவும் எழுதுகின்றார்.

நம்முடைய வாழ்வையும் தேவனுடைய வார்த்தையாகிய கற்பாறையின் மேல் கட்டும்படி பவுலின் வாழ்வு நமக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது. அவர் தீமோத்தேயுவிடம், வேதாகமம் ஒரு வலிமையான, தேவன் தந்த பொக்கிஷம் அதனை அவன் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதாலும், வாழ்ந்து காட்டுவதாலும் தேவனுடைய சீடன் என்பதைக் காட்டுமாறு கூறுகின்றார்.

தேவன் மீதுள்ள நம்பிக்கையில் நாம் வளர, நமக்கு உதவிய தேவனுடைய பிள்ளைகளுக்கு நன்றி கூறும்போது நாமும் அவர்களைப் போன்று சத்தியத்தில் வாழ்ந்து பிறருக்குக் கற்றுக் கொடுப்போம். அவர்களை ஊக்குவிப்போம்.

இதுவே செயல்முறை விளக்கத்தின் வல்லமை.

இரட்டிப்பான வாக்குத்தத்தம்

பல ஆண்டுகளுக்கு முன்பு ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். அதிலிருந்து அவளால் சாப்பிடவும், குடிக்கவும் சரியாக விழுங்கவும் முடியவில்லை. அநேக அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகளின் பலனாக அவள் தன் உடல் பெலத்தை இழந்து, இப்பொழுது அவளின் தோற்றம். முன்பு அவள் எப்படியிருந்தாள் என்பதின் ஒரு நிழலாகக் காட்சியளிக்கின்றாள்.

ஆனால், இன்னமும் ரூத்தால் தேவனைத் துதிக்க முடிகிறது. அவளுடைய விசுவாசம் உறுதியாயிருக்கிறது. ஆனால், அவளுடைய மகிழ்ச்சி பிறரையும் பற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் அவள் தேவனையே சார்ந்திருக்கிறாள். தான் ஒரு நாள் முற்றிலும் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தன்னை குணமாக்கும்படி ஜெபிக்கின்றாள். தேவன் அவளுடைய ஜெபத்திற்கு உடனேயோ அல்லது பிந்தியோ பதிலளிப்பார் என்பதில் நம்பிக்கையோடிருக்கின்றாள். எத்தனை அற்புதமான நம்பிக்கை!

ரூத்தினுடைய உறுதியான நம்பிக்கைக்கு காரணமென்னவெனின், தேவன் அவருடைய பெயரினால் நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என்ற அறிவோடு மட்டுமன்றி, அவருடைய வாக்கை நிறைவேற்றும் வரை தன்னையும் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுள்ளதாக விளக்குகின்றாள். இது, தேவன் தம்முடைய திட்டங்களை நிறைவேற்றி, தங்கள் எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தேவனுடைய ஜனங்களின் நம்பிக்கையைப் போலிருக்கிறது (ஏசா. 25:1), (வச. 7). அவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார், அவர் ‘‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்” (வ.8).

தேவன் தமக்குக் காத்திருக்கும் தம் பிள்ளைகளுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அருளுகின்றார் (வச. 4) அவர்களின் துக்கங்களில் அவர்களைத் தேற்றவும், சோதனையைச் சகிக்க பெலனையும், தேவன் அவர்களோடிருக்கிறார் என்ற உறுதியையும் தருகிறார்.

இதுவே நமக்குத் தரப்படுகின்ற இரட்டை வாக்குத்தத்தம் - ஒரு நாள் நம்மை விடுவிப்பார், அதனோடு ஆறுதலையும், பெலத்தையும், பாதுகாப்பையும் நம் வாழ்நாள் முழுவதும் தருகிறார்.

தலைமுறையினருக்கு பாரம்பரியத்தைக் கொடுத்தல்

என்னுடைய கைபேசி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளதை பீப் ஒலியால் காட்டியது. என்னுடைய மகள் நான் என்னுடைய பாட்டியம்மாவிடமிருந்து பெற்றிருந்த பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம்
செய்முறைக் குறிப்பைக் கேட்டிருந்தாள். நான் என்னுடைய செய்முறைகள் அடங்கிய பெட்டியில் பழுப்பு நிறமடைந்த அட்டைகளினிடையே அதைத் தேடினேன். என் கண்கள் என் பாட்டியம்மாவின் தனிச் சிறப்பான கையெழுத்தைக் கண்டுபிடித்தன. அதில் ஆங்காங்கே சிறிய குறிப்புகள் என்னுடைய தாயாரின் சிறிய கையெழுத்தில் இருந்தது. என்னுடைய மகளின் வேண்டுகோளுக்கிணங்க, அது எனக்கு கிடைத்தது. பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம், எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறையினருக்குள் நுழைந்துள்ளது.

வேறென்ன பாரம்பரியத்தை நாம் தலைமுறை தலைமுறையாகக் கொடுக்க முடியும் என வியந்தேன். நம்முடைய விசுவாசத்தைக் கொடுத்தால் எப்படியிருக்கும்? பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம் பையைக் கொடுப்பதோடு, என்னுடைய பாட்டியம்மாவின் நம்பிக்கையையும், என்னுடைய விசுவாசத்தையும் என்னுடைய மகளின் வாழ்விலும், அவளுடைய பிள்ளைகளின் வாழ்விலும் கொடுத்தால் என்ன?

சங்கீதம் 79ல் சங்கீதக்காரன் தான்தோன்றித் தனமாகச் செயல்படும், நிரந்தரமற்ற சிந்தனையுடைய இஸ்ரவேலரைக் குறித்துப் புலம்புகிறார். அவர் தேவனிடம் தன்னுடைய ஜனங்களை, தேவனைத் தொழுது கொள்ளாத புறஜாதியாரிடமிருந்து விடுவிக்குமாறும், எருசலேமை பாதுகாப்பாக விடுவிக்குமாறும் கெஞ்சுகிறார். அப்படி தேவன் விடுவிக்கும்போது, அவர்கள் தேவனுடைய வழிகளில் செல்வார்களென வாக்களிக்கின்றார். ‘‘அப்பொழுது உம்முடைய ஜனங்களும், உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லி வருவோம்” (வச. 13).

நான் என்னுடைய சமையல் குறிப்பை ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டேன். என்னுடைய பாட்டியம்மாவின் இனிப்பு பாரம்பரியத்தை எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய பரம்பரையும் அனுபவிக்கும். ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கொடுப்பதில், எல்லாவற்றையும்விட மிகவும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று எங்கள் குடும்பத்தின் விசுவாசம். அதனைக் கொடுக்கும்படி என் தேவனிடம் உண்மையாக ஜெபிக்கின்றேன்.

நீர் மேல் நடத்தல்

ஒரு பனிக்காலத்தில், உலகில் ஐந்தாவது பெரிய ஏரியான மிச்சிகன் ஏரியை, அந்த பகுதி மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும், அதன் மேற்பகுதி உறைந்திருப்பதைப் பார்க்கச் சென்றேன். குளிரைத் தாங்கும் உடைகளைப் போர்த்திக் கொண்டு, அந்த ஏரிக் கரையில் நான் வழக்கமாக சூரிய குளியல் எடுக்குமிடத்தில் நின்று, அந்த பிரம்மிக்கத்தக்க காட்சியைக் கண்டேன். அங்கு நீர் அலை வடிவில் உறைந்து, பனிக்கட்டியின் மிக அற்புதமான தோற்றத்தைக் கொண்டிருந்தது.

அந்த ஏரியில் கரையிலிருந்தே நீர் உறைந்திருந்ததால், நான் ‘‘நீர் மேல் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அந்த பனி என்னுடைய எடையைத் தாங்கக் கூடிய அளவிற்கு தடிமனானது எனத் தெரிந்திருந்தாலும், நான் முதல் சில அடிகளைத் தாங்கும் எனச் சோதித்தபின்னரே எடுத்து வைத்தேன். இந்த பனி என்னைத் தொடர்ந்து தாங்குமா என எனக்குள்ளேயே பயந்தேன். நான் இந்த பரந்த, பழக்கமற்ற பரப்பை கவனமாக ஆராய்ந்தபோது, இயேசுவும் பேதுருவை படகிலிருந்து இறங்கி கலிலேயாக் கடலின்மேல் நடந்து வரச் சொன்னதை நினைவு கூர்ந்தேன்.

சீடர்கள், இயேசு நீர்மேல் நடந்து வந்ததைப் பார்த்தபோது, அவர்களும் பயந்தனர். ஆனால் இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:26-27). பேதுரு தன் பயத்தை மேற்கொண்டு, நீரின்மேல் இறங்கினான். ஏனெனில், இயேசு அங்கேயிருக்கிறாரென அவனுக்குத் தெரியும். ஆனால் அங்கு காற்றையும், அலையையும் பார்த்தபோது இவனுடைய தைரியமான அடிகள் தயங்கின. பேதுரு இயேசுவை நோக்கி கதறுகிறான். இயேசு அங்கே அவனருகில் தன்னுடைய கரத்தை நீட்டி அவனைக் காப்பாற்றும்படி அங்கேயே இருந்தார்.

ஒரு வேளை நீயும் இத்தகைய ஒரு சூழ்நிலையிலிருக்கிறாயா? இயேசு உன்னை நீரின் மேல் நடக்கச் சொல்வதைப் போன்று, ஒரு முடியாத காரியத்தைச் செய்யச் சொல்லுகிறாரா? தைரியமாயிரு. உன்னை அழைத்தவர் உன்னோடு இருக்கிறார்.

நல்ல காலங்கள்

உலகத்தின் வடபகுதிக்கு இன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாள். நீ ஆஸ்திரேலியாவில் வசித்தால், இன்று இலையுதிர் காலத்தின் முதல் நாள். வட அரைக்கோளத்தில் வசந்த கால சம பகல் இரவு நாள் இருக்கும்போது, தென் அரைக்கோளத்தில் இலையுதிர்கால சம பகல் இரவு நாளாக இருக்கும். இன்று, பூமத்திய பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும். எனவே இன்று பகல் நேரமும், இரவு நேரமும் ஏறத்தாழ சமமாக பூமி முழுவதும் இருக்கும்.

புதிய பருவகாலம் என்பது அநேகருக்கு முக்கியமானதாகத் தோன்றும். சிலர் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பர். ஏனெனில், புதிய கால நிலை புதிய நம்பிக்கையைத் தரும் என நம்பினர். ஒரு வேளை நீயும் விஸ்கான்சினில் வசந்த காலத்தை எதிர்பார்த்து, குளிர்கால முடிவை காலண்டரில் குறித்துக் கொண்டிருக்கலாம். அல்லது நீ மெல்போர்னில் வசித்து வந்தால், இலையுதிர்காலம் சூரியனிடமிருந்து ஒரு விடுதலையைத் தருமென எதிர்பார்க்க முடியாது.

நம் வாழ்க்கையிலும் பல கால நிலைகளின் வழியாகக் கடந்து செல்கிறோம். ஆனால் இதற்கும் பருவகாலத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. பிரசங்கியை எழுதியவர் சொல்கிறார், சூரியனுக்குக் கீழே ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு. தேவன் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருக்கின்றார். அப்படியொரு வாழ்க்கை காலத்திற்குள் நாம் வாழ்கின்றோம் (3:1-11).

மோசே தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காலத்தைக் குறித்துச் சொல்கின்றார். (உபா. 31:2) தன்னுடைய தலைமைத்துவ பணியை யோசுவாவிடம் கொடுக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். பவுல் ரோமாபுரியில் வீட்டுச் சிறையிலிருந்தபோது ஒரு தனிமையான காலத்தைச் சந்தித்தார். அவர் தன்னைப் பார்க்க வரும்படி பார்வையாளர்களை அழைக்கின்றார். ஆனாலும் தேவன் அவர் பக்கம் இருக்கிறார் என்பதை உணர்கிறார்.

வாழ்வில் எத்தகைய காலம் இருந்தாலும் சரி, நம்முடைய தேவன் வல்லவராகவும், உதவுபவராகவும், நமக்குத் துணையாளராகவும் இருப்பதால் அவருக்கு நன்றி கூறுவோம்.