என்னுடைய கைபேசி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளதை பீப் ஒலியால் காட்டியது. என்னுடைய மகள் நான் என்னுடைய பாட்டியம்மாவிடமிருந்து பெற்றிருந்த பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம்
செய்முறைக் குறிப்பைக் கேட்டிருந்தாள். நான் என்னுடைய செய்முறைகள் அடங்கிய பெட்டியில் பழுப்பு நிறமடைந்த அட்டைகளினிடையே அதைத் தேடினேன். என் கண்கள் என் பாட்டியம்மாவின் தனிச் சிறப்பான கையெழுத்தைக் கண்டுபிடித்தன. அதில் ஆங்காங்கே சிறிய குறிப்புகள் என்னுடைய தாயாரின் சிறிய கையெழுத்தில் இருந்தது. என்னுடைய மகளின் வேண்டுகோளுக்கிணங்க, அது எனக்கு கிடைத்தது. பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம், எங்கள் குடும்பத்தில் நான்காவது தலைமுறையினருக்குள் நுழைந்துள்ளது.

வேறென்ன பாரம்பரியத்தை நாம் தலைமுறை தலைமுறையாகக் கொடுக்க முடியும் என வியந்தேன். நம்முடைய விசுவாசத்தைக் கொடுத்தால் எப்படியிருக்கும்? பெப்பர் மின்ட் ஐஸ் கிரீம் பையைக் கொடுப்பதோடு, என்னுடைய பாட்டியம்மாவின் நம்பிக்கையையும், என்னுடைய விசுவாசத்தையும் என்னுடைய மகளின் வாழ்விலும், அவளுடைய பிள்ளைகளின் வாழ்விலும் கொடுத்தால் என்ன?

சங்கீதம் 79ல் சங்கீதக்காரன் தான்தோன்றித் தனமாகச் செயல்படும், நிரந்தரமற்ற சிந்தனையுடைய இஸ்ரவேலரைக் குறித்துப் புலம்புகிறார். அவர் தேவனிடம் தன்னுடைய ஜனங்களை, தேவனைத் தொழுது கொள்ளாத புறஜாதியாரிடமிருந்து விடுவிக்குமாறும், எருசலேமை பாதுகாப்பாக விடுவிக்குமாறும் கெஞ்சுகிறார். அப்படி தேவன் விடுவிக்கும்போது, அவர்கள் தேவனுடைய வழிகளில் செல்வார்களென வாக்களிக்கின்றார். ‘‘அப்பொழுது உம்முடைய ஜனங்களும், உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லி வருவோம்” (வச. 13).

நான் என்னுடைய சமையல் குறிப்பை ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டேன். என்னுடைய பாட்டியம்மாவின் இனிப்பு பாரம்பரியத்தை எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய பரம்பரையும் அனுபவிக்கும். ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கொடுப்பதில், எல்லாவற்றையும்விட மிகவும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்று எங்கள் குடும்பத்தின் விசுவாசம். அதனைக் கொடுக்கும்படி என் தேவனிடம் உண்மையாக ஜெபிக்கின்றேன்.