பல ஆண்டுகளுக்கு முன்பு ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். அதிலிருந்து அவளால் சாப்பிடவும், குடிக்கவும் சரியாக விழுங்கவும் முடியவில்லை. அநேக அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகளின் பலனாக அவள் தன் உடல் பெலத்தை இழந்து, இப்பொழுது அவளின் தோற்றம். முன்பு அவள் எப்படியிருந்தாள் என்பதின் ஒரு நிழலாகக் காட்சியளிக்கின்றாள்.

ஆனால், இன்னமும் ரூத்தால் தேவனைத் துதிக்க முடிகிறது. அவளுடைய விசுவாசம் உறுதியாயிருக்கிறது. ஆனால், அவளுடைய மகிழ்ச்சி பிறரையும் பற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் அவள் தேவனையே சார்ந்திருக்கிறாள். தான் ஒரு நாள் முற்றிலும் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தன்னை குணமாக்கும்படி ஜெபிக்கின்றாள். தேவன் அவளுடைய ஜெபத்திற்கு உடனேயோ அல்லது பிந்தியோ பதிலளிப்பார் என்பதில் நம்பிக்கையோடிருக்கின்றாள். எத்தனை அற்புதமான நம்பிக்கை!

ரூத்தினுடைய உறுதியான நம்பிக்கைக்கு காரணமென்னவெனின், தேவன் அவருடைய பெயரினால் நமக்குத் தந்துள்ள வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என்ற அறிவோடு மட்டுமன்றி, அவருடைய வாக்கை நிறைவேற்றும் வரை தன்னையும் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுள்ளதாக விளக்குகின்றாள். இது, தேவன் தம்முடைய திட்டங்களை நிறைவேற்றி, தங்கள் எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த தேவனுடைய ஜனங்களின் நம்பிக்கையைப் போலிருக்கிறது (ஏசா. 25:1), (வச. 7). அவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார், அவர் ‘‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்” (வ.8).

தேவன் தமக்குக் காத்திருக்கும் தம் பிள்ளைகளுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அருளுகின்றார் (வச. 4) அவர்களின் துக்கங்களில் அவர்களைத் தேற்றவும், சோதனையைச் சகிக்க பெலனையும், தேவன் அவர்களோடிருக்கிறார் என்ற உறுதியையும் தருகிறார்.

இதுவே நமக்குத் தரப்படுகின்ற இரட்டை வாக்குத்தத்தம் – ஒரு நாள் நம்மை விடுவிப்பார், அதனோடு ஆறுதலையும், பெலத்தையும், பாதுகாப்பையும் நம் வாழ்நாள் முழுவதும் தருகிறார்.