Archives: பிப்ரவரி 2016

ஜீவ இரத்தம்

மேரி ஏன் தேவனையும் அவர் குமாரனாகிய இயேசுவையும் விசுவாசித்தாள். ஆனால், இரட்சிப்பைக் கொடுக்க ஏன் இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார் என்பதை ஏற்றுக் கொள்ள அவளுக்குத் தயக்கம் ஏற்பட்டது. ஏதேனும் ஒன்றை இரத்தத்தின் மூலம் கழுவி சுத்திகரிக்க வேண்டும் என்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நியாயப் பிரமாணத்தின்படி, கொஞ்சம் குறைய எல்லாம் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படும். என்று வேதம் கூறுகிறது (எபிரேயர் 9:22). மேரி ஆனின் கருத்துப்படி அது அவளை வெறுப்புக்குள்ளாக்குகிறது.

ஒரு சமயம் அவள் மருத்துவமனைக்குச் செல்ல நேர்ந்தது. அவள் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை…

மேலும் வளருதல்

என் பேரனும் அவனது நண்பர்களும் டி-பந்து விளையாடுவதைப் பார்ப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியையளிக்கும். இந்த பேஸ்பால் போன்ற விளையாட்டில் அதிகம் பயிற்சி பெறாத இளம் விளையாட்டு வீரர்கள், தவறான பகுதிக்கு ஒடுவார்கள் அல்லது பந்தைப் பிடிக்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அறியாது திணறுவார்கள். பேஸ்பால் விளையாட்டையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் விளையாடும் பொழுது இப்படிப்பட்ட தவறுகள் வினோதமாகக் காணப்படாது.

இவற்றில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியடைவதே காரியம்.

என்ன செய்வதென்று அறியாமல் அல்லது எல்லாவற்றையும் மிகச் சிறந்த முறையில் செய்யத் தெரியாத நிலையில் - இவ்வாறு…

உற்று கவனித்தல்

நான் என் வீட்டின் ஓர் நிகழ்ச்சிக்காக, என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, வரும் விருந்தினர் நான் சுத்தம் செய்தவற்றை பார்க்காமல், நான் சுத்தம் செய்யாதவற்றை மாத்திரம் பார்ப்பார்கள் என்று எண்ணி மனம் தளர்ந்து போனேன். இந்த எண்ணம் வேதாந்தரீதியாகவும், ஆத்தும ரீதியாகவும் ஓர் கேள்வியை எழுப்பியது. ஏன் மக்கள் சரியானதைப் பார்க்காதவாறு, சீக்கிரம் தவறான காரியங்களையே பார்க்கிறார்கள் என்பதே. நாம் அநேகமாக அன்பான காரியங்களை ஞாபகத்தில் வைக்காமல் கொடூரமான காரியங்களையே ஞாபகத்தில் வைக்கிறோம். குற்றங்களே நம் மனதை ஈர்க்கிறதேயன்றி தயாளமான செயல்களை…

எவ்வாறு முதுமை அடைய வேண்டும்?

இன்று எப்படி இருக்கிறீர்கள் அம்மா? என்று நான் சாதாரணமாக 84 வயதுள்ள என் சிநேகிதியை விசாரித்த பொழுது, மூட்டுக்களில் உள்ள வேதனைகளையும், வலிகளையும் காண்பித்து, “முதுமை என்பது கடினம்! ஆனால் தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார்” என்று மெல்லிய குரலில் பதிலளித்தார்கள்.

“என் வாழ்க்கையில் முதுமை அடைவது என்பது எனக்கு மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று “வீட்டை நெருங்கி” என்ற நூலில் பில்லி கிரகாம் கூறுகிறார். “நான் இப்பொழுது ஓர் வயது முதிர்ந்தவன். இது ஓர் இலகுவான காரியம் அல்ல என்று என்னை நம்புங்கள்.”…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்!

சார்லஸ் சிமியோன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பல்கலைக்கழகத்தில் சேரும் முன், அவருக்கு குதிரைகளும் ஆடைகளும் பிடிக்கும், ஆண்டுதோறும் தனது ஆடைகளுக்காக பெரிய தொகையை செலவிட்டார். ஆனால் அவரது கல்லூரியின் ஒழுங்கின்படி திருவிருந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவர் நம்புவதை ஆராயத் தொடங்கினார். இயேசுவின் விசுவாசிகளால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்த பிறகு, அவர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு வியத்தகு மாற்றத்தை அனுபவித்தார். ஏப்ரல் 4, 1779 அன்று அதிகாலையில் எழுந்த அவர், “இயேசு கிறிஸ்து இன்று உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா! அல்லேலூயா!” என கதறினார். அவர் ஆண்டவரைப் பற்றிய விசுவாசத்தில் வளர்ந்ததால், அவர் வேதாகம வாசிப்பு, ஜெபம் மற்றும் சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதில் தன்னை அர்ப்பணித்தார். 

முதல் ஈஸ்டர் அன்று, இயேசுவின் கல்லறைக்கு வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை மாறியது. அங்கே ஒரு தூதன் கல்லைத் புரட்டி போட்டதால் பூமி மிகவும் அதிர்ந்ததை கண்டனர். அவன் அவர்களிடம், "நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்" (மத்தேயு 28:5–6)என்றான். மிகுந்த மகிழ்ச்சியில், ஸ்திரீகள் இயேசுவை பணிந்துகொண்டு, தங்கள் நண்பர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல ஓடினர். 

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்திப்பது பண்டைய நாட்களில் மட்டும் நடப்பதல்ல; அவர் இங்கேயும் இப்போதும் நம்மை சந்திப்பதாக வாக்களிக்கிறார். கல்லறையில் பெண்கள் அல்லது சார்லஸ் சிமியோன் பெற்றது போன்ற ஒரு வியத்தகு சந்திப்பை நாம் அனுபவிக்கலாம், இல்லமல் போகலாம். இயேசு தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எத்தகைய விதமாயினும், அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் நம்பலாம். 

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.