பிறரை அழைப்பதற்கு முன்பாக
சிறு பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பதால், சில நேரங்களில் எளிதாகப் பயந்துவிடுகிறேன். என்னுடைய மகனுக்க ஒவ்வாமை என்றாலோ அல்லது மகளுக்கு இருமல் என்றாலோ உடனடியாக என் தாயாரைத் தொலைபேசியில் அழைத்து நான் செய்ய வேண்டியதைக் குறித்துக் கேட்பேன்.
என் தாயார் எனக்கு பெரிய ஆதாரம், ஆனால் சங்கீதங்களைப் படித்தபோது, அநேகந்தரம் மனுஷனால் செய்யக்கூடாத உதவிகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தேன். தாவீது மகாப்பெரிய ஆபத்தின் மத்தியில் இருப்பதை சங்கீதம் 18 ஆம் அதிகாரத்தில் காணலாம். பயத்தின் மத்தியில், மரணத்தின் விளிம்பில், வேதனையின் மத்தியில் அவன் தேவனை நோக்கிக்…
இது என்ன?
பல ஆண்டுகளாக என் தாயார் ஞாயிறு வேதாகமப் பள்ளியில் பாடம் நடத்தியுள்ளார். ஒரு வாரம், தேவன் இஸ்ரவேலரை வனாந்தரத்திலே போஷித்ததை குறித்து விளக்க நினைத்தார். அக்குழந்தைகளுக்கு அக்கதை தத்ரூபமாய் இருக்க, “மன்னாவை” குறிக்கும்படியாய் ரொட்டியை சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் மேல் தேனைத் தடவினார். வேதத்தில், “அதன் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (யாத் 16: 31) என்று மன்னாவைக் குறித்து குறிப்பிட்டிருந்தபடியால் அவர் அவ்வாறு செய்தார்.
வானத்திலிருந்து வந்த மன்னாவை இஸ்ரவேலர் முதன்முதலில் தங்கள் கூடாரங்களுக்கு வெளியே பனியைப்போல தரையிலே படர்ந்திருக்க கண்டனர்.…
கேள்விகள் தொடரும் பொழுது
2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி விமானம் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது உடைந்து, மோஜோவ் பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. அவ்விபத்தில் துணை விமானி மரித்துப்போனார். ஆனால் அதன் விமான ஓட்டியோ அற்புதவிதமாக பிழைத்துக் கொண்டார். அதைக்குறித்து விசாரணை நடத்தினவர்கள் என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டறிந்த போதிலும், ஏன் நடந்தது என்பதை அறியவில்லை. அச்சம்பவத்தைக் குறித்து செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு, “கேள்விகள் தொடர்கின்றன” என துவங்கிற்று.
நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் துயரங்களுக்கு போதுமான…
அஜாக்கிரதையான வார்த்தைகள்
சமீபகாலமாக மிகவும் நோய்வாய்பட்டிருந்த என்னுடைய மகளை அவளுடைய கணவன் அவளுக்கு நல்ல துணையாய் இருந்து அவளை மிக அற்புதமாய்க் கவனித்துக் கொண்டான். அதைக் கண்டு, “உன்னிடமுள்ள பெரிய பொக்கிஷம் உன் கணவனே!” என்றேன்.
அதற்கு அவள் புன்முறுவலுடன், “எங்களுடைய திருமணத்திற்கு முன் நீங்கள் அப்படி நினைக்கவில்லையே”, என கூறினாள். அது உண்மைதான். இசில்டாவும் (Icilda) பிலிப்பும் (Philip) திருமணம் செய்ய முடிவு செய்த போது நான் கவலையுற்றேன். அவர்கள் இருவரும் வெவ்வேறு குணநலனுடையவர்கள். நாங்கள் கலகலப்பான பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பிலிப்பு மிகவும்…
தேவனுக்கே மகிமை
அன்று சபைக்கு புதிய நபர்கள் சிலர் வந்திருந்தனர். ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரசங்கியார் பிரசங்கித்து கொண்டிருக்கும் பொழுதே பாதி வேளையில் ஒரு பெண் சபையை விட்டு வெளியேறியதைக் கண்டு, அதன் காரணத்தை அறிந்துக்கொள்ளும்படி, ஆர்வத்துடனும், கலக்கத்துடனும் அவள் பின் சென்றேன்.
அவளை நெருங்கி, “நீங்கள் சீக்கிரம் கிளம்பிவிட்டீர்களே ஏதாவது பிரச்சனையா? உதவி தேவையா?” என கேட்டேன். அதற்கு அவள், “ஆம், அந்த பிரசங்கம் தான் என் பிரச்சனை. என்னால் அந்த பிரசங்கியார் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி கூறினாள். நம்…
சிறுவர்களுக்கான போதனைகள்
பள்ளிக்கூட உணவறையில், தான் சந்திக்கும் பிரச்சனையைக் குறித்து என் மகள் கூறினவுடன் அப்பிரச்சனையை எப்படி சரி செய்வது என எண்ணி வியந்தேன். ஆனால் அடுத்ததாக இன்னொரு எண்ணமும் தோன்றியது. ஒருவேளை அவள் தேவன் கிரியை செய்வதைக் கண்டு அவரை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ளும்படியாய் இந்தப்பிரச்சனையை அனுமதித்தாரோ என தோன்றியது. ஆகவே உடனடியாக அப்பிரச்சனையிலிருந்து அவளை விடுவிக்க முயல்வதை விட்டு, அவளோடு சேர்ந்து ஜெபிக்க தீர்மானித்தேன். என்னுடைய உதவியின்றி அப்பிரச்சனை விலகிற்று!
இச்சம்பவத்தின் மூலம் தேவன் தன் மேல் கருத்தாய் இருக்கிறார் என்றும், தன்னுடைய…
இனி ஒருபோதும் கைதி அல்ல
ஒரு வேலை ஸ்தலத்தில் நான் நடத்திய பயிற்சி வகுப்பு முடிந்தபின் ஒரு நடுத்தர வயது நபர் என்னிடம் வந்து, “கிட்டத்தட்ட என் வாழ்நாள் முழுவதும் நான் கிறிஸ்தவனாக இருந்துள்ளேன், ஆனால் என்னைக்குறித்து எப்பொழுதும் எனக்கு ஏமாற்றமே உண்டு. அப்படி செய்திருக்ககூடாது என்று நினைக்கும் காரியங்களையே நான் திரும்பத் திரும்ப செய்கிறேன், மேலும் நான் செய்ய வேண்டிய காரியங்களை அறிந்திருந்தும் செய்யாதிருக்கிறேன். தேவன் என்னைக்குறித்து சோர்ந்து போய்விடவில்லையா?” என்று கேட்டார். என் அருகில் இருந்த இரண்டு நபர்களும் கூட நான் சொல்லப்போகும் பதிலை கேட்க ஆவலாய்…
நல்வரவு
எங்கள் மகன் ஊதாரித்தனமாய் இருந்த காலக்கட்டத்தில், சபையில் ஆராதனை முடிந்து வெளியே வந்த சமயம், என்னுடைய நண்பர் ஒருவர் என்னைத் தனியே அழைத்து, “நான் உனக்காகவும் உன் மகனுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன். ஆனால் எனக்கு குற்ற உணர்வு உள்ளது” என்றார்.
நான் ஏன்? என்றதற்கு.
“ஏனென்றால் ஊதாரித்தனமான பிள்ளைகளை சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என் பிள்ளைகள் ஒரளவு ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்கள். ஆனால் அது நான் ஏதோ செய்ததாலோ செய்யாததாலோ அல்ல. ஏனென்றால் பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள்” என்றார்.…
மெய்யான மனிதர்கள், மெய்யான தேவன்
பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை பற்றி எழுதியிருந்தேன். அதைக் குறித்து “அனுதின மன்னா” வாசகர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘அந்த துயர சம்பவத்தை நீங்கள் கூறின போது தான், இதன் ஆசிரியர்கள் அனைவரும் நிஜ பிரச்சனைகளையுடைய நிஜ மனிதர்கள் என்பது உணர்ந்தேன்’, என எழுதியிருந்தார். இது எவ்வளவு உண்மையான கூற்று! இந்த கட்டுரைகளை எழுதும் ஆண், பெண் அனைவரையும் கண்டால், புற்றுநோய், அடங்காப் பிள்ளைகள், நிறைவேறாத கனவுகள் மற்றும் பல வகையான இழப்புகளைக் காணலாம். நம்முடைய…