நம்மைப் போலவே நடந்தார்
டேவிட் டில்லர்ட், அவருக்குக் கீழாகப் பணி புரியும் இளம் கட்டிடக் கலைஞர்களிடம் அவர்கள், யாருக்கு வீடுகளை வடிவமைக்கிறார்களோ அவர்களோடு போய் தங்கி இருக்க அனுப்புவார். அவர்கள் மூத்தகுடிமக்கள் வாழும் இடத்திற்குச் சென்று அங்குள்ள 80, 90 வயதுள்ளவர்களைப் போலவே பைஜாமா அணிந்து கொண்டு, அவர்கள் வாழும் சூழ்நிலையிலேயே அவர்களைப் போலவே 24 மணி நேரம் வாழ்வார்கள். காது கேளாதவர்களைப்போல இருக்க அவர்களது காதுகளை மூடக்கூடிய காது கேட்க உதவும் கருவிகளை பொருத்திக் கொள்வார்கள். விரல்களின் வேலை செய்யும் திறனைக்குறைக்க அவர்களது விரல்களை ஒட்டும் நாடாவினால்…
பாய்ந்தோடும் சமாதானம்
எனது உடற்பயிற்சி வகுப்பில் எனக்கு அறிமுகமான ஒரு பெண் “நீ ஒடுக்கக்கூட்டங்கள் நடத்துவதுபற்றி நான் ஆச்சரியப்படவில்லை. நீ மிகச்சிறந்த குணமுடையவளாய் இருக்கிறாய்” என்று கூறினாள். அவள் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தாலும், அவளது விமர்சனத்தைக் குறித்து சந்தோஷம் அடைந்தேன். ஏனெனில், அவள் என்னிடத்தில் கண்ட சிறந்த நற்குணம் என்பது என்னிடமிருந்த கிறிஸ்துவின் சமாதானம் என்பதை அறிந்தேன். நாம் இயேசுவைப் பின்பற்றும்பொழுது எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அவர் நமக்குத் தருகிறார் (பிலி. 4:7). அந்த தேவசமாதானம் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து பரவுகிறது.
இயேசு அவருடைய…
ஆடுகளைப் போல
நான், என் தாத்தாவுடன் வடக்கு கானாவில் வாழ்ந்து வந்தபொழுது, ஆடுகளைக் கவனிப்பது எனது அனுதின வேலையாக இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் புல்வெளியில் மேய்வதற்கு அவைகளை அழைத்துச்சென்று சாயங்காலம் வீடு திரும்புவேன். அந்த நாட்களில் ஆடுகள் அதிக பிடிவாதமாக இருக்கக்கூடியவை என்பதை முதல் முதலாவதாக கவனித்தேன். உதாரணமாக, அவைகள் ஒரு வயலைப் பார்க்கும்பொழுது அவைகளின் உள் உணர்வு தூண்டுதலினால் அவைகள் மேய்வதற்கு நேராக அந்த வயல்களுக்குள் ஓடிவிடும். அதனால், எனக்கும் அந்த வயலின் சொந்தக்காரருக்கும் இடையே அநேக முறை பிரச்சனைகள் ஏற்படும்.
சில சமயங்களில்,…
காடுகள் விழித்தெழும்பினபொழுது
மிச்சிகனில் வாழும் மக்களுக்கு, இளவேனில் காலம் வரும் என்ற நம்பிக்கையினால் குளிர்ந்த பனி காலத்தைக் கடக்க இயலுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு மே மாதத்தில் பலன் கிடைக்கிறது. அப்பொழுது இயற்கையில் ஏற்படும் மாற்றம் ஆச்சரியப்படத்தக்காக உள்ளது. மே மாதம் 1ம் தேதியில் உயிரற்றதுபோல காணப்பட்ட கிளைகள் அம்மாதக் கடைசியில், இளவேனிற் காலத்தை வரவேற்பது போல, பசுமையான இலைகளுடன் காற்றில் அசைந்தாடுகின்றன. ஒவ்வொரு நாளும் அம்மரங்களில் ஏற்பட்ட மாற்றம், கண்ணால் காணக்கூடியதாக இல்லாவிட்டாலும், அந்த மாதக்கடைசியில் எனது முற்றத்திலிருந்த அனைத்து மரங்களும் பழுத்த சாம்பல் நிறத்திலிருந்து பசுமையான…
கவலைகள் இல்லை
மிகவும் அமைதியாகச் சென்ற விமானப் பயணம் திடீரென அலைக்கழிக்கப்பட ஆரம்பித்தது. விமானத்திற்குள்ளாக பானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, விமான ஓட்டி, அனைத்து பயணிகளின் இருக்கை பெல்ட் சரியாக மாட்டப்பட்டுள்ளதா? என்று நிச்சயப்படுத்துமாறு கூறினார். சிறிது நேரத்தில் சமுத்திரத்தில் காற்றினால் அலைப்பட்டு அலைகிற கப்பலைப்போல விமானம் உருண்டு பிறழ ஆரம்பித்தது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கலவரமான அந்த நிலையைக் கையாளுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு சிறுமி மட்டும் அமைதியாக அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். விமானம் தரை இறங்கினபின், அந்த சிறுமியால் எவ்வாறு…
ஏன் நான்?
ரூத் அந்நிய நாட்டைச் சேர்ந்த பெண். அவள் ஓர் ஏழை விதவை. இன்றைய உலகில் பல பகுதிகளில் அவள் ஓர் ஆள்தத்துவம் இல்லாதவள் போலவே கருதப்படுவாள். அதாவது, அவளுக்கு ஒரு நம்பிக்கையுடைய எதிர்காலம் உண்டு என்று ஒருவரும் எண்ணமாட்டார்கள்.
ஆயினும், மரித்துப்போன அவளது கணவனின் உறவினர் ஒருவரின் கண்களில் ரூத்திற்கு தயவு கிடைத்தது. அவன் மிகவும் ஐசுவரியவானகவும், அதிக நிலங்களுக்கு உரிமையாளராகவும் இருந்தான். அவனுடைய நிலத்தில்தான் கீழே விழும் தானியத்தை பொறுக்கிக்கொள்ள அவள் உத்தரவு கேட்டாள். அவன் காட்டிய பரிவிற்கு “நான் அந்நியதேசத்தாளாயிருக்க, எனக்கு…
துடுப்பு வலித்து வீட்டை அடைதல்
C.S. லூயிஸ் எழுதியுள்ள “கிரானிக்கில்ஸ் ஆப் நார்னியா” என்ற தொடரில் ரீப்பிசீப் என்ற பேசக்கூடிய சிறிய நெஞ்சுறுதி மிக்க எலியை எனக்கு மிகவும் பிடிக்கும். கிறிஸ்துவுக்கு அடையாளமான வலிமைமிக்க அஸ்லான் என்ற சிங்கத்தோடு சேர்வதற்கு கிழக்கு எல்லையை அடைய ரீப்பிசீப் தீர்மானித்தது. “என்னால் இயலும்பொழுது டான் டிரீடரில் கிழக்கே நோக்கிப் பயணிக்கிறேன். டான் டிரீடரின் மூலம் என் பயணத்தைத் தொடர இயலாமல் போய்விட்டால் எனது சிறிய படகின்மூலம் கிழக்கே செல்லுவேன். அதுவும் நீரில் மூழ்கிவிட்டால் எனது நான்கு பாதங்களாலும் துடுப்பு வலித்து கிழக்கே செல்லுவேன்.…
தேவன் வசிக்கும் இடம்
ஜேம்ஸ் ஒகிலிதோர்ப் (1696–1785) ஒரு பிரிட்டிஷ் தளபதியாகவும், பார்லிமென்டின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார். ஒரு மிகப்பெரிய மாநகரத்தை உண்டாக்க வேண்டுமென்று ஒரு தொலைநோக்குத் திட்டம் உடையவராக இருந்தார். வடஅமெரிக்காவில், ஜார்ஜியா மாநிலத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டபொழுது, அவரது தொலைநோக்கு திட்டத்தின்படி சாவன்னா நகரத்தை உருவாக்கினார். அநேக சதுக்கங்களை வடிவமைத்து, ஒவ்வொரு சதுக்கத்திலும் பசுமையான இடங்கள், ஆலயங்கள், பெரிய கடைகள் இவைகளுக்கான இடங்களைத் தெளிவாகத் திட்டம் பண்ணிவிட்டு, மீதமுள்ள இடத்தை வீடுகள் கட்டத்தக்கதாக வடிவமைத்தார். ஒகிலிதோர்ப் தொலைநோக்குத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த நகரம்தான்…
காரமான மிளகாய்
ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா வெளியில் நான் சிறுவனாக வாழ்ந்து வந்த காலத்தில், “நாங்கள் படுக்கைக்கு போகுமுன்பு எங்களது தாயார் எங்களுக்கு காரமான மிளகாயைக் கொடுப்பார்கள். எங்களது வாயில் ஏற்படும் காரத்தன்மையை குறைப்பதற்காக, அதிக அளவு தண்ணீர் குடிப்போம். அப்பொழுது எங்களது வயிறு நிரம்பின உணர்வைப் பெறுவோம். ஆனால், அது உண்மையில் எங்களை திருப்திபடுத்தவில்லை” என்று சாமுவேல் வறுமையினால் கஷ்டப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்தான்.
அரசாங்கம் கொடுத்த கடுமையான தொல்லைகளினால் சாமுவேலின் தகப்பனார் அவரது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு ஓடி விட்டார். சாமுவேலின் தாயார் தனிமையாக இருந்து…