புதியதாக வனைய நொறுக்கப்படுதல்
இரண்டாவது உலகப்போரின் பொழுது என் தந்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் தென் பசிபிக் பகுதியில் பணியாற்றினார். அக்காலத்தில் என் தந்தை சமயக் கோட்பாடுகளை வெறுத்து,“நான் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால் ஆவிக்குரிய காரியங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஓர் நாளில் பெற்றுக்கொண்டார். மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க என் தாய் பிரசவ வார்டுக்குள் சென்று விட்டார். புதிதாகப் பிறக்கப்போகிற ஓர் தம்பியையோ அல்லது தங்கையையோ சீக்கிரம் பார்க்கப் போகிற உணர்வுகளுடன் நானும் என் சகோதரனும் படுக்கைக்குச் சென்றோம். மறுநாள் காலை படுக்கை…
இன்றைய வேதாகம பகுதி
ரோமப் பேரரசின் மகிமை, இயேசுவின் பிறப்பிற்கு ஓர் விலையேறப்பெற்ற வழியை வகுத்துத் தந்தது. கி.மு. 27ம் ஆண்டில் ரோமின் முதலாவது பேரரசரான அகுஸ்து ராயன் 200 ஆண்டு காலம் நடந்த உள்நாட்டுப் போருக்கு ஓர் முடிவு கட்டி, அருகாமையில் சிதைவுண்ட பகுதிகளில், பண்டைய சிலைகளையும், கோயில்களையும், அரங்க சாலைகளையும், அரசாங்கக் கட்டிடங்களையும் உருவாக்கினான். ரோம வரலாற்றாசிரியர் பிளினி மூத்தவர் கூற்றுப்படி,“அகுஸ்து ராயன் தீர்மானித்த கட்டிடங்கள் இதுவரை உலகம் கண்டிராத அளவிற்கு அழகிய தோற்றமளிக்கின்றன.”
அவ்வாறு அந்த நகரமும், பேரரசும் அழகுடன் அழியா நகரமாகக் காணப்பட்டாலும்,…
உங்களுக்கு நோக்கமுண்டு
மேற்கு டெக்ஸாஸில் ஓர் உஷ்ணமான நாளில் ஓர் பெண் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விளக்கு ஸ்தம்பம் அருகில் ஒரு எழுதப்பட்ட வாசகத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பதை என் மருமகள் வானியா பார்த்தாள். வாகனத்தை அவள் அருகாமையில் ஓட்டிச்சென்று, அதில் என்ன எழுதியிருக்கிறது என்று வாசிக்க முயற்சித்தாள். தனக்குள் அதில் ஆகாரம் அல்லது பணஉதவி கேட்டு எழுதியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். அதில் “உனக்கு நோக்கம் உண்டு” என்றிருந்தது.
தேவன் நம் ஒவ்வொருவரையும் ஓர் குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் படைத்திருக்கிறார். அதில்…
சோர்ந்து போகிறவனுக்கு பெலன்
சூரிய ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான ஓர் நாளில் ஆவியில் மிகவும் சோர்வுற்றவனாய் ஓர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு காரியம் மாத்திரமல்ல - எல்லாக் காரியங்களும் சேர்ந்து மனபாரத்தினால் என்னைக் கீழே ஆழ்த்தின. ஓர் பெஞ்சில் நான் அமர்ந்தபொழுது, ஓர் சிறு பலகையைப் பார்த்தேன். அது அன்பு கணவன், தந்தை, சகோதரன், நண்பனாக இருந்தவரின் அன்பின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பலகையில் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்ற…
தேவனே உதவி செய்யும்!
என் சிநேகிதி தான் தாயாகப்போவதை அறிவித்தபொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பிறக்கும்வரை உள்ள நாட்களை எண்ணினோம். பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு மூளையில் காயம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டது. என் இதயம் நொறுங்கியது. எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்பதே. அவர் நமது பிதா; நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவர் கேட்கிறார்.
தேவன் அற்புதங்களைச் செய்வதில் வல்லவர் என்பது எனக்குத் தெரியும். யவீருவின் மகளுக்கு ஜீவனை மீட்டுத்தந்தார் (லூக். 8:49–55).…
சாதாரணக் கதை அல்ல
பழைய ஏற்பாட்டின் பிரமாணங்கள் குழப்பமற்ற நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள். கர்த்தருக்கு கீழ்ப்படியாவிட்டால் கஷ்டங்கள் நேரிடும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் சத்தியம். ஆனால் கடைப்பிடிப்பதற்கு இது அவ்வளவு எளிதானதா?
ஆசா இராஜாவின் வாழ்க்கை இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அந்நிய தேவர்களை வணங்குவதிலிருந்து மக்களைத் தேவனிடம் திருப்பினான். அவன் இராஜ்ஜியபாரம் செழித்தோங்கியது (2 நாளா. 15:1–19). ஆனால், அவனுடைய பிந்தைய ஆட்சி காலத்தில் தேவனைச் சார்ந்திராமல் தன்னையே சார்ந்து வாழ்ந்தான் (16:2–7). எனவே யுத்தங்களும், வியாதிகளும் அவன் பிந்தைய வாழ்க்கையைப்…
அறிந்து செயல்படல்
சீன தத்துவஞானி ஹான் ஃபீஜூ, “உண்மையை அறிந்து கொள்வது எளிது, ஆனால் அந்த உண்மையின்படி எப்படிச் செயல்படவேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்” என்று வாழ்க்கையைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட பிரச்சனையோடு ஓர் ஐசுவரியவான் ஒரு முறை இயேசுவிடம் வந்தான். அவன் மோசேயின் நியாயப்பிரமாணங்களை நன்கு அறிந்தவனாகவும், சிறு வயதிலிருந்தே அவற்றை ஒழுங்காகக் கைக்கொள்ளுபவனாகவும் இருந்தான் (மாற். 10:20). இதற்கும் மேலாக, இயேசு என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்பதை அறிய மிக ஆவலோடு இருந்தான், “நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான்…
சுத்த இருதயங்களிலிருந்து வரும் துதி
எனது சிநேகிதி மிர்னா வேறு ஒரு நாட்டிற்கு சென்றபொழுது, அங்கிருந்த ஓர் ஆலயத்தில் நடந்த ஆராதனையில் பங்கெடுத்தாள். மக்கள் ஆலயத்திற்கு நுழைந்தவுடன், ஆலயத்தின் முகப்பு பகுதிக்கு எதிர்த்திசையில் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்கள். அந்த சபை மக்கள், ஆராதனை வேளை ஆரம்பிக்கும் முன்பு அவர்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டார்கள் என்பதை என் சிநேகிதி அறிந்தாள்.
அந்தத் திருச்சபை மக்களின் இந்தத் தாழ்மையான செயல் சங். 51ல் தாவீது கூறின “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை, நீர் புறக்கணியீர்” (சங். 51:17) என்ற வசனம் என்…
ஒருமுறை மட்டும்தான் மரிக்க இயலும்
ஹாரியட் டப்மேன் (1822–1913) அடிமையாகப் பிறந்து, அடிமையாக வாழ்ந்தாள். அவளது வாலிபப் பருவத்தில் அடிமையாக மிகவும் மோசமாக நடத்தப்பட்டாள். ஆனால், அவளுடைய தாயார் கூறின வேதாகமக் கதைகள் மூலமாக வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியைப் பெற்றாள். பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இஸ்ரவேல் மக்களின் வரலாற்றின் மூலமாக, தேவன் அவருடைய மக்களின் விடுதலையை விரும்புகிறார் என்பதை அறிந்தாள்.
ஹாரியட், மேரிலேண்ட் மாநிலத்தின் எல்லையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்றதினால், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றாள். ஆனால் இன்னமும் அநேக மக்கள் அடிமைத்தளையில் இருப்பதை அவள் அறிந்திருந்ததால், அவளால் வாழ்க்கையில்…