வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்
நான் சிறுவனாக இருக்கும்பொழுது, மாதந்தோறும் குடும்பமாக ஒகாயோவிலிருந்து மேற்கு வர்ஜீனியாவிலுள்ள எங்கள் தாயின் வழி தாத்தா, பாட்டியைப் பார்க்க பயணம் மேற்கொள்வோம். நாங்கள் ஒவ்வொரு முறையும் பண்ணை வீட்டின் வாசலை அடைந்தவுடன் எங்கள் பாட்டி லெஸ்டர் “உள்ளே வாருங்கள், சிறிது நேரம் உட்காருங்கள்” என்று எங்களை வரவேற்பார்கள். நாங்கள் சிறிது நேரம் வசதியாக உட்கார்ந்து அனைவரையும் ஈர்க்கத்தக்க விதத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்தில் அவ்வாறு கூறுவார்கள்.
வாழ்க்கை மிக மிக வேகமாக நிற்கக்கூட நேரமின்றி சென்று கொண்டிருக்கலாம். தொழிலையே முக்கியமாகக்…
கடுங்குளிரில் வெட்ட வெளியில்
பதற்றமான நிலையில், ஓர் பெண் நான் பணிபுரியும் வீட்டு உதவி மையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். வீட்டை அனல்மூட்டும் கருவி பழுதடைந்ததால், வாடகைக்குக் குடியிருந்த அவள் வீடு மரக்கலன்கள் (மேஜை, நாற்காலி போன்றவை) கூட பனிக்கட்டி போல் உறைந்து விட்டது. என்ன செய்வது என்று அறியாத நிலையில், தன் குழந்தைகளை அந்தக் குளிரினின்று எவ்வாறு காப்பாற்றுவது என்று கேட்டாள், அலுவலகத்தில் அச்சடிக்கப்பட்டு வைத்திருந்த பதிலை எடுத்து “உடனே ஓர் உணவு விடுதிக்குச் சென்று தங்குங்கள். அதற்கு ஆகும் கட்டண ரசீதை வீட்டுச் சொந்தக்காரருக்கு…
பெயர் சொல்லி அழைக்கப்பட்டிருக்கிறோம்
நான் அவர்கள் பெயர்களை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். மாணவர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களையும் புகைப்படங்களையும், பார்ப்பதில் நேரம் செலவிட்டு அவற்றை எனக்குப் பழக்கப்படுத்திக் கொண்டேன். எனவே அவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்பொழுது, “ஹலோ ஜெஸிகா” அல்லது “ட்ரெவோர் வரவேற்கிறேன்” என்று கூறுவேன். பெயர் சொல்லி ஒருவரை அழைப்பது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் உண்மையாகவே ஒருவரைப்பற்றி அறிய வேண்டுமானால் அவர் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டால் போதாது. அதற்கும் அதிகமாக அவர்களைப்பற்றி அறிய வேண்டியது உள்ளது. நல்ல மேய்ப்பனாகிய இயேசு, நம்மீது அன்பும்,…
நம் வாழ்க்கை முறை
இக்காலத்து வேதாகம மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கூறிய சொற்றொடரை, ஒருவர் மேற்கோள் காட்டிய பொழுது அதிர்ச்சிக்குள்ளானேன். “நம் வாழ்க்கை முறை” என்ற சொற்றொடரைப்பற்றி கூகுளில் நான் தேடிப்பார்த்த பொழுது, மக்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை முறைகள் அச்சுறுத்துபவைகளாக இருப்பதைத் தாங்கள் உணர்வதை மையமாகக் கொண்டே அநேக பதில்கள் கூகுளில் காணப்பட்டது. அவ்வாறு உணரப்பட்ட அச்சுறுத்தல்கள் சீதோஷ்ணநிலை மாற்றம், தீவிரவாதம், அரசாங்கத்தின் அரசியல் போக்கு ஆகியவை ஆகும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய, உண்மையில் நமது வாழ்க்கை முறை உண்மையில் எப்படிப்பட்டது? வசதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையா? அல்லது இன்னும்…
கடந்த காலத்தை பின்னால் விட்டுவிடல்
கிறிஸ் பேக்கர் பச்சை குத்தும் கலைஞர். அவர் பச்சை குத்தப்பட்டிருந்த வேதனையின் சின்னங்களையும், அடிமைத்தன சின்னங்களையும் கலைநயமிக்க சித்திரங்களாக மாற்ற வல்லவர். அவனிடம் வரும் வாடிக்கையாளர்களில் அநேகர் தீயவழியில் சென்ற கூட்டத்தினர், மனிதரைக் கடத்திச் செல்வதில் அடிமைப்பட்டவர்கள், இவர்களுக்கென அவர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெயர்களையும், சின்னங்களையும், குறியீடுகளையும் அவர்கள் கொண்டவர்கள். கிறிஸ் இப்படிப்பட்ட சின்னங்களை தன் கலைத் திறனால் மிகவும் அழகான உருவங்களாக்கி அவர்கள் தோல்மீது பச்சை குத்தினான்.
கிறிஸ்து பிறர் தோலின்மீது ஏற்படுத்திய மாற்றங்களைப்போல இயேசு நம் ஆத்துமாக்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.…
விலகிச் செல்லுதல் அல்ல
பள்ளி ஆண்டில் ஓரு பருவநிலை முடிந்த தருணத்தில் என் மனைவியும், நானும், 100 கிலோ மீட்டர் (60 மைல்) தூரத்திலுள்ள பள்ளியிலிருந்து எங்கள் மகளை அழைத்து வந்தோம். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், சற்று வழிவிலகிச் சென்று அருகாமையில் உள்ள கடற்கரை உணவு விடுதியில் சென்று சிற்றுண்டி அருந்தச் சென்றோம். எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்துக் கொண்டிருந்த சமயத்தில், கடற்கரையில் அநேகப் படகுகளைக் கண்டோம். பொதுவாக அவை நீரில் அடித்துச் செல்லாதபடிக்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். ஆனால் ஓர் படவு மாத்திரம், எவ்விதத் தங்கு தடையுமின்றி மெதுவாக,…
அதிர்ச்சியூட்டும் நேர்மை
சபைப் போதகர், மூப்பர் ஒருவரைப் பார்த்து, சபை மக்களை ஜெபத்தில் வழிநடத்தக் கேட்டுக்கொண்ட பொழுது, அவர் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தார். “தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள், பாஸ்டர்”, நான் ஆலயத்திற்கு வரும் வழியிலெல்லாம் என் மனைவியிடம் வாதாடிக்கொண்டு வந்தேன். எனவே நான் எந்த விதத்திலும் ஜெபம் நடத்தத் தகுதியற்றவன்”, என்று கூறினார். அடுத்த நிமிடம் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. போதகர் ஜெபித்தார். ஆராதனை தொடர்ந்து நடந்தது. இனிமேல் யாரிடமும் தனிமையில் பேசி ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டுமே அல்லாமல் அனைவர் மத்தியிலும் கேட்கக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டார்.…
நிற்பதற்கு உறுதியான இடம்
ஜார்ஜியாவில் உள்ள சாவன்னா பகுதியில் வரலாற்றுப் புகழ்மிக்க நதியிம் நடைபாதைப் பகுதியின் தளங்களில் வெவ்வேறு விதமான கூழாங்கற்களால் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அட்லாண்டிக் கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்களை நிலைப்படுத்த பெரிய சரளைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள். ஜார்ஜியாவில் சரக்குகளை ஏற்றியபின் இந்த சரளைக்கற்கள் தேவையில்லாததால், அவற்றை கப்பற்கட்டும் தளத்திற்கு அருகேயுள்ள வீதிகளில் தளம் அமைக்க அவை பயன்படுத்தப்பட்டன. அந்தக் கற்கள் தங்கள் முக்கியமான பணியாக ஆபத்தான நீர்களின் மத்தியில் கப்பல்கள் நிலையாக நிற்பதற்கான சீரிய பணியை செய்து…
அவரது அன்பின் பிரசன்னம்
எங்களுக்கு அருமையான சிநேகிதி சின்டிக்குப் புற்றுநோய் என்று அறிந்த போது எங்கள் மனம் மிகவும் சோர்வடைந்தது. சின்டி மிகவும் துடிப்புடன் செயல்படுபவள். அவளுடன் தொடர்பு கொண்ட அனைவரின் வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே இருந்தது. அவள் வியாதி குறைந்துவிட்டதை அறிந்து நானும், என் மனைவியும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் சில மாதங்களில் அந்த நோய் அவளை அதிகமாய்த் தாக்கியது. அவள் மிகக்குறைந்த வயதிலேயே மரிக்கப்போவதாகவே எங்களுக்குத் தோன்றியது. அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களைப்பற்றி அவள் கணவன் என்னிடம் பகிர்ந்து கொண்டார். மிகவும் பெலவீனமாக, நடக்க முடியாத நிலையில் இருந்தபொழுது…