உன் அயலானை நேசி
மனித இன ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு குக்கிராமத்தில் பல மாதங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தன் பணியை முடித்தவராய் தன் அனுபவத்தைக் கூறுகிறார். தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக விமான நிலையம் செல்ல, ஓர் வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் பொழுது, நேரம் போவதற்காக சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு ஒன்றை நடத்த எண்ணினார். ஒரு மரத்திற்கருகாமையில் ஓர் பழக்கூடையையும், மிட்டாய்களையும் வைத்துவிட்டு அதை எடுக்க பிள்ளைகளிடம் ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். அவர்கள் ஓடுவதற்குரிய சைகையைக் காட்டியபொழுது முடிவு கோட்டை அடைய ஒருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ஓட முயற்சிக்கவில்லை. அதற்கு…
சிறந்த நண்பர் - எப்பொழுதும்
என் தந்தை அடிக்கடி எனக்குக் கூறும் ஞானமுள்ள ஆலோசனைகளில் நான் மதித்து ஏற்றுக்கொள்ளும் ஆலோசனை, “ஜோ, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் நாம் பெற்றுக்கொள்ளும் மாபெரும் பொக்கிஷங்களில் ஒன்று ஆகும்”. இது எவ்வளவு உண்மை! நல்ல நண்பர்கள் நமக்கிருக்கும் பொழுது நாம் ஒருபோதும் தனிமையாகவே இல்லை. அவர்கள் உங்கள் தேவைகள் என்ன என்பதில் கண்ணோக்கமாயிருப்பதுடன், உங்கள் சுக, துக்கங்களில் மிகவும் கரிசனையுடன் பங்கு கொள்வார்கள்.
இயேசு இவ்வுலகிற்கு வருவதற்கு முன் இரண்டு நபர்கள் மாத்திரம் தேவனின் சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது…
வெளிப்படையான பலவீனம்
என் தோள்பட்டையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப்பின் பல வாரங்களாகியும் தைரியமற்ற நிலையில் பயந்து கொண்டே இருந்தேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையைத் தாங்கிப் பிடிக்கும் தூக்கை (ஸ்லிங்) நான் உபயோகித்ததால் அது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சை வைத்தியரும், கைக்கு பயிற்சி கொடுக்கும் வைத்தியரும் ஸ்லிங்கை நான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினர். “காயம் குணமடைந்து வரும் நிலையில் ஸ்லிங் உபயோகிப்பது சுகமடைய உதவாது. அது உங்கள் பலவீனத்தை வெளிக்காட்டவே உதவும்.” என்று அவர்கள் தந்த குறிப்பில்…
தேவன் பயன்படுத்தும் உப்புத்தாள் (சாண்ட் பேப்பர்)
என் சிநேகிதி கூறிய வார்த்தை என்னைக் கொட்டியது போலிருந்தது. என்னுடைய திடமான கருத்தைக் குறித்து அவளுடைய குத்துவது போன்ற விமரிசனத்தை, மீண்டும், மீண்டும் என் மனம் அசைபோட்டு போராடிக் கொண்டிருந்ததை நிறுத்தி, தூங்குவதற்கு முயற்சித்தேன். தேவஞானத்தையும், சமாதானத்தையும் தரும்படி படுத்துக்கொண்டே ஜெபித்தேன். பல வாரங்களாகியும் அக்காரியம் என்னை உறுத்திக்கொண்டே இருந்ததால்,“நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். தேவனே, நான் எந்தக் காரியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், அவள் கூறுவது எவ்விதத்தில் சரி என்று எனக்குக் காண்பியும்” என்று ஜெபித்தேன்.
என் வாழ்க்கையில் என் சிநேகிதி தேவனின் உப்புத்தாள் போன்று…
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது ஓர் தண்டனையை அனுபவிப்பது போன்ற கடுமையானதொன்றாகும். போட்டியாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மதிய உணவு இடைவெளி, மாலை சிற்றுண்டி இடைவெளி தவிர மற்ற சமயங்களிளெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் கூட போட்டி நடைபெறும். இது சகிப்புத்தன்மைக்கும், திறமைக்குமான ஓர் சோதனையாகும்.
இதே காரணங்களுக்காக நம்முடைய வாழ்க்கையிலும் சில சமயங்களில் கடுமையான சோதனைகளை நாம் கடந்துவர நேரிடுகிறது. சோதனைகள் முடிவில்லாமல் தொடர்வதாகவும் உணர்கிறோம். நீண்ட காலமாக…
தவறான லாடம்
200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் ரஷ்யப் போரில் தோற்றுப்போனதற்கு ரஷ்யக் கடுங்குளிரே காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் போர் குதிரைகள் அனைத்தும் கோடை காலத்திற்கான லாடங்ளை அணிந்திருந்தது தான் காரணம். குளிர் காலம் வந்தபொழுது, போர் வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏற்றியுள்ள பாரமான வண்டிகளை பனி அடர்ந்த சாலைகளில் இழுத்துச்செல்லும்பொழுது, வழுக்கி விழுந்து குதிரைகள் மாண்டு போயின. இவ்வாறு தொடர்ந்து நெப்போலியனால் உணவு போன்ற அத்தியாவசியமான பொருட்களை 400,000 போர் வீரர்களைக்கொண்ட தன் வலிமைமிக்க படைக்கு…
பயத்திலிருந்து விடுதலை
என் உள்ளத்திற்குள் பயம் என்னை அறியாமல் இரகசியமாக நுழைந்து விடுகிறது. நீ உதவியற்றவன், நம்பிக்கையற்றவன் என்ற நிலையையும் உண்டாக்கி விடுகிறது. என் சமாதானத்தையும், மனதை ஒருமுகப்படுத்தி சிந்திப்பதையும் களவாடி விடுகிறது. நான் எதற்காகப் பயப்படுகிறேன்? என் குடும்பத்திற்காகவும், எனக்கு அருமையானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் மிகவும் கரிசனை கொள்கிறேன். பணியை இழக்க நேரிடும்பொழுதும் உறவுகளில் முறிவு ஏற்படும்பொழுதும் திகில் அடைகிறேன். பயத்தை என் உள்ளத்திற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வதால் மனம் எதையும் நம்புவதற்கான ஓர் மனப்பக்குவத்தை இழந்து விடுகிறது.
பயங்களும், கவலைகளும் இவ்வாறு நம்மைத் தாக்கும்பொழுது சங்கீதம்…
மனித இனம் (ஓட்டம்)
அலாரம் கடிகாரம் ஒலித்து நின்றது. இது மிகவும் சீக்கிரமாகத் தோன்றியது. முழுமையான ஓர் நாள் இன்னும் உங்களுக்கு முன் இருக்கிறது. வேலை செய்ய வேண்டும், நிர்ணயம் செய்யப்பட்ட காரியங்களை அதன் பிரகாரம் செய்து முடிக்க வேண்டும். கவனிக்க வேண்டிய மக்களை கவனிக்க வேண்டும். இதே போன்று அநேக காரியங்கள். ஆம் நீங்கள் தனிமையில் இல்லை. நம்மில் அநேகருக்கு எதைச்செய்ய வேண்டும் என்று தெரியாது, ஓர் காரியத்திலிருந்து மற்றோர் காரியத்தைச் செய்ய அங்கும் இங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருப்போம். அதனால்தான் நாம் ஓட்டப்பந்தயம் ஓடும் மனிதர் என்று…
தந்திரமாக, எண்ணங்களை திசை திருப்புதல்
நானும், என் மனைவியும் முதல் முறையாக ஓர் எழுத்துப்பணி திட்டத்தை இணைந்து செயல்படுத்திய பொழுது, காலதாமதம் செய்வது என்பது ஓர் முக்கிய தடையாக இருக்கும் என்பதை மனவேதனையுடன் அறிந்து கொண்டோம். நான் எழுதியவற்றை பதிப்பிற்கு தயார் செய்வதும், என் கால அட்டவணைப்படி என்னைச் செயல்பட வைப்பதும் அவளுடைய பணியாகும். ஆனால் என்னுடைய செயல்கள் அவளைக் கோபத்திற்குள்ளாக்கும். அநேக சமயங்களில் குறிப்பிட்ட சமயத்தில் முடிக்காமலும், வழிமுறைகளை பின்பற்றாமலும் இருப்பது அவளுடைய தீர்மானங்களையும், பொறுமையையும் இழக்கச் செய்யும்.
ஓர் நாளில் இறுதியில் ஓர் குறிப்பிட்ட பகுதியை எழுதி…