கலோரிகளுக்கேற்ற மதிப்புதானா?
எனது தேசமாகிய சிங்கப்பூரில் கிடைக்கும் தட்டையான ரொட்டி வகையை சேர்ந்த முட்டை பரோட்டா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், 57 கிலோ எடையுள்ள ஒருவன் 8 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடங்கள் ஒடினால் 240 கலோரிகளை எரிக்கலாம் என்பதை படித்துக் கலக்கமடைந்தேன். ஏனென்றால், அது ஒரே ஒரு முட்டை பரோட்டாவுக்குச் சமம்.
நான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அந்த எண்களெல்லாம் எனக்கு புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. என்னையறியாமல், இவ்வளவு கலோரிகளுக்கு ஏற்ற மதிப்புடையதா இந்த உணவு, என கேட்க…
ஆயத்தமாகுதல்
சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த என் மாமனாருடைய உடலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது, அவருடைய மகன்களில் ஒருவன், அவர் உபயோகப்படுத்திய சுத்தியை கூப்பியிருந்த அவருடைய கைகளுக்குள் செருகிவிட்டார். வருடங்கள் கழித்து, என்னுடைய மாமியார் மரித்த பொழுது, அவருடைய ஒரு பிள்ளை இரு பின்னல் ஊசிகளை அவருடைய விரல்களுக்கடியில் செருகிவிட்டார். அவர்களுடைய வாழ்நாட்களில் எவ்வளவாய் அக்கருவிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இச்செயல்கள் ஆறுதலைக் கொண்டுவந்தது.
நிச்சயமாக நித்தியத்தில் அவர்களுக்கு இக்கருவிகள் தேவைப்படாது தான். அடுத்த வாழ்விற்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாக பணத்தையோ, ஆயுதங்களையோ அல்லது…
உயிர் காக்கும் மிதவை
எனக்கு முன்பாக இருந்த நீச்சல் குளத்தில் சூரிய ஒளி மின்னியது. தற்செயலாக, அதிக நேரம் தண்ணீரிலிருந்த மாணவனைப் பார்த்து, “நீ சோர்வடைவது போலத் தெரிகிறது, ஆழத்திலிருக்கும் பொழுது சோர்வடைந்தால், உயிர் காக்கும் மிதவையை உபயோகி” என்று பயிற்சியாளர் கூறுவதைக் கேட்டேன்.
சில சூழ்நிலைகள், நாம் நம் மனதாலோ, சரீர பெலத்தினாலோ, நம்முடைய உணர்ச்சிகளினாலோ தாங்கிக்கொள்ள முடியாதபடி இருக்கக் கூடும். தாவீது ஒருமுறை எதிரிகளின் பயமுறுத்துதலையும், அவர்களுடைய கோபத்தின் ஆழத்தையும் எதிர்கொண்டது குறித்து விவரிக்கிறான். அவன் எதிர்கொண்ட துயர நிலையிலிருந்து தப்பிப்பது அவசியமாயிருந்தது.
இவ்வாறு அவன்…
ஒரு சுகந்த வாசனை
நியூயார்க் (New York) நகரில், வாசனை திரவியப் பொருட்கள் செய்யும் ஒரு பெண், சில வாசனை திரவியங்களின் கலவைகளை அடையாளம் கண்டு, அந்நறுமணத்தின் தயாரிப்பாளரை தன்னால் யூகிக்க முடியும் எனக் கூறினார். ஒரே ஒரு தரம் வாசனையை முகர்ந்து பார்த்தே அவளால், “இது ஜென்னியின் கைவண்ணம்” என்று கூற முடியும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும் பொழுது, ஒரு முறை தாங்கள் கைப்பற்றிய பட்டணத்தில், தூபம் காட்டும் வெற்றிச்சிறந்த ரோமப் படையை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார் (2 கொரி. 2:14). படைத் தலைவர்…
ஒருவருக்கொருவர் உதவுதல்
புதிய ஏற்பாட்டில் 30 முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படும் “கிறிஸ்துவின் சரீரம்” என்னும் சொற்றொடர் ஒரு புதிர். அப்போஸ்தலனாகிய பவுல் அச்சொற்றொடரை சபையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். இயேசு பரமேறிய பின்பு, அவருடைய பணியை தொடரும்படி குறைவுள்ள, திறமையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒப்புக்கொடுக்கிறார். அவர் சபைக்கு தலையாக தலைமை ஏற்றுக்கொண்டு, அவருடைய கைகளாக, கால்களாக, காதுகளாக, கண்களாக, மற்றும் குரலாக ஒழுங்கற்ற சீஷர்களை, அதாவது உன்னையும், என்னையும் விட்டுச் சென்றுள்ளார்.
அநேக அவயங்கள் உள்ள ஒரு பெரிய சரீரத்திற்கு காணக்கூடாத தலையாக இருக்க தீர்மானித்த இயேசு, …
காலத்திற்கு அப்பாற்பட்டு
ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவான் 6:68-69
2016 ஆண்டு, வில்லியம் ஷேக்ஸ்பியருடைய (William Shakespeare) நானூறாவது நினைவு ஆண்டினை கூறும் வண்ணம் பிரிட்டனிலும் (Britain) மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடகக் கம்பெனிகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின. காலத்தால் அழிக்க முடியாத நாடகத் தொகுப்புகளை இயற்றிய அதிசிறந்த ஆங்கில நாடக ஆசிரியராக அவரைக் கருதிய மக்கள் அனைவரும் கச்சேரிகள், விரிவுரைகள் மற்றும் கொண்டாட்டங்களில்…
மாற்றத்திற்கு தயாரா?
நாம் தேர்ச்சிபெற நினைக்கும் காரியங்களில், அநேகமாக இச்சையடக்கமே கடினமான ஒன்றாக இருக்கக்கூடும். எத்தனை முறைகள் ஒரு மோசமான பழக்கவழக்கத்தினால் அல்லது மட்டமான மனப்பான்மையினால் இல்லையெனில் தவறான மனப்போக்கினால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும்படி உறுதிமொழி எடுக்கிறோம். யாரையாவது நமக்கு பொறுப்பாளியாக நாம் கணக்கொப்புவிக்கும்படியாக இருக்கக் கேட்கிறோம். ஆனால் நாம் மனம் மாற தேவையான பெலனோ, திறனோ நமக்கு இல்லை என்பது நமது உள்ளத்தின் ஆழத்திலே நமக்குத் தெரியும். நாம் அதைக்குறித்து பேசலாம், திட்டமிடலாம், சுய உதவி புத்தகங்கள் வாசிக்கலாம். ஆனால், நமக்குள் இருக்கும் வேண்டாத…
திருமணத்திற்கு தயார்
“எனக்குப் பசிக்கிறது”, என்று என்னுடைய எட்டு வயது மகள் கூறினாள். அதற்கு நான், “மன்னித்துவிடு, உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. நாம் டிக்-டாக்-டோ விளையாடலாம்” என அவளிடம் கூறினேன். ஒரு மதிய வேளை திருமணத்தில் கலந்துக் கொள்ளும்படியாய் ஆலயத்திலே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்பட்டு கொண்டிருக்கும் மணமகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். இன்னும் எவ்வளவு நேரம் ஆகக்கூடும் என்று தெரியவில்லை. ஆயினும் திருமணம் தொடங்கும் வரையில் எப்படியாவது என் மகளை சமாளித்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில்,…
அவசரகால ஜெபம்
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 81வது தளத்தில், தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டான்லி பிரேம்நாத் (Stanley Praimnath) ஒரு விமானம் தன்னை நோக்கி பறந்து வருவதைக் கண்டு, “தேவனே, என்னால் இது கூடாத காரியம்! நீர் பார்த்துக்கொள்ளும்!” என்று அவசரமாக ஒரு ஜெபத்தை செய்துவிட்டு தன்னுடைய மேஜையின் கீழ் பாதுகாப்பு கருதி விரைவாய் ஒளிந்துக்கொண்டார்.
மோசமான விமான தாக்குதலின் விளைவால், ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் ஸ்டான்லி மாட்டிக்கொண்டார். சுவர் போல மூடியிருந்த அக்குப்பை மேட்டிற்குள்ளிருந்து,…