வகை  |  odb

நித்திய நம்பிக்கை

என் தாயார் இறந்து இரண்டு மாதங்களாகியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு இன்னும் ஒரு வாரமேயிருந்த நிலையில், வீட்டை அலங்கரிப்பது, கடைக்குச் செல்வது, எனது முன்னுரிமை பட்டியலில் கடைசியாயிருந்தது. எங்கள் குடும்பத்தின் விசுவாசத்தாயின் மரணத்தை இன்றும் நினைத்துக் துக்கத்தில் இருந்தபடியால் என்னை ஆறுதல்படுத்த என் கணவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் ஒதுங்கியே இருந்தேன். என் மகன் சேவியர் சீரியல் பல்புகளை வீட்டினுள் தொங்கவிட்டு பிளக்கை சொருகி எரியச் செய்து விட்டு அவனும், அவன் தந்தையும் வேலைக்குப் போய்விட்டார்கள்

அந்த கலர் பல்புகள் விட்டுவிட்டு எரியும்போது, தேவன் என்னை என் இருளிலிருந்து வெளியே கொண்டுவந்தார். தேவனுடைய வெளிச்சம் எனக்குள் வந்தபோது, எவ்வளவு வேதனையான சூழ்நிலையிலிருந்தாலும், அவருடைய மாறாத சத்தியத்தின் வெளிச்சம் அவருடைய மாறாத தன்மையை அப்பொழுதும் அது வெளிப்படுத்திக் காட்டியது.

இக்கட்டான காலையில் தேவன் எனக்கு நினைப்புட்டினதை, 146ம் சங்கீதம் உறுதிப்படுத்தியது. எனக்கு உதவி செய்பவரும், என் வல்லமையும் இரக்கமுள்ள “தேவன் மேலேயே, என் நம்பிக்கை நித்தியகாலமாய் இருக்கும்” (வச. 5). எல்லாவற்றையும் சிருஷ்டித்த அவரே “என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்” (வச. 6). “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார்”, நம்மைப் போஷித்துப் பாதுகாக்கிறார் (வச. 7). “மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்” (வச. 8), “கர்த்தர் காப்பாற்றுகிறார்”, “ஆதரிக்கிறார்” “சதா காலங்களிலும் அரசாளுகிறார்; தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம் பண்ணுகிறார் (வச. 9,10).

கிறிஸ்துமஸ் வரும்பொழுது, சிலவேளைகளில், சந்தோஷம் பொங்கி வழியும், சில வேளைகளில் இழப்பைச் சந்திக்கிறோம், வேதனைப்படுகிறோம் அல்லது தனிமை உணர்வினால் வருந்துகிறோம். ஆனால், எல்லா நேரங்களிலும் அவர் நமது இருளில் வெளிச்சமாயிருந்து, தேவையான உதவிகளைச்செய்து நித்திய நம்பிக்கையாயிருப்பேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார்.

சாந்தம்

வாழ்க்கையின் பிரச்னைகள் நமக்கு எரிச்சலூட்டி, முறைகேடாய் நடக்கப் பண்ணும். இந்தமாதிரி மோசமாக நடப்பது சகஜம் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது நாம் நேசிப்பவர்களின் இருதயத்தை வாடிப்போகச் செய்து நம்மைச் சுற்றிலும் துக்கத்தைப் பரப்பும். நாம் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதைக் கற்றுக்கொள்ளும்வரை, பிறருக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யத் தவறுகிறோம்.

நமது அன்பற்ற, விரும்பத்தகாத குணத்தை மாற்றும் நற்குணத்திற்குப் புதிய ஏற்பாட்டில் ஒரு வார்த்தையுண்டு அது தான் - சாந்தம். சாந்தம் என்னும் இந்த வார்த்தை அன்பும், கிருபையுமுள்ள ஆத்துமாவைச் சுட்டிக்காட்டுகிறது. மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமுமாய் ஜீவிக்க எபேசியர் 4:2 நம்மை நினைவூட்டுகிறது.

சாந்தம் என்பது, மற்றவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் மிகைப்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதேயாகும். மற்றும் சாந்தம் என்பது நமக்கு உதவி செய்யாதவர்களையும் சகித்து, மற்றவர்கள் செய்யும் சிறு உதவிகளுக்கும் நன்றியோடிருப்பதாகும். தொந்தரவு கொடுப்பவர்களையும், விசேஷமாய் உரத்த சத்தம்மிட்டு, முரட்டுத்தனமாக செயல்படும் அற்பமான மனிதரைச் சகிப்பது, சாந்தம். சிறு பிள்ளைகளிடத்தில் அன்பும் பாசமும் காட்டுவது சாந்தமுள்ள நல்ல மனிதனுக்கு அடையாளமும்; கிரீடமுமாயிருக்கிறது. பிறர் எரிச்சலுட்டும்பொழுதும் சாந்தமுள்ளவர்களின் பிரதியுத்தரம் மிருதுவானதாகவேயிருக்கும். அது பேசாமலும் அமைதியாகவும் இருக்கும். அன்பற்ற வார்த்தைகளால் பிறர் நம்மை நிந்திக்கும்பொழுது, கோபப்படாமல் அமைதியாய் இருப்பதே வல்லமையான மாறுத்தரமாகும்.

இயேசு, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என்றார் (மத். 11:29). நாம் அவரிடம் வேண்டிக் கொண்டால் ஏற்ற வேளையில் நம்மையும் அவரைப் போல் மாற்றுவார். ஸ்காட்லாண்ட் தேசத்து ஆசிரியர் ஜார்ஜ் மக்டோனல்ட் “மற்றவர்கள் இருதயத்தை வேதனைப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசும்போது தேவன் அதைக் கேட்க விரும்மாட்டார். இப்படிப்பட்டதும் மற்றவிதமான பாவங்களிலிருந்தும் நம்மை மீட்கவே இயேசு பிறந்தார்.”

பெரிய உலகம், அதைவிடப் பெரிய கர்த்தர்

வடக்கு மிச்சிகன் வழியாக காரில் நாங்கள் செல்லும்பொழுது, பூமத்திய ரேகைக்கும் வடதுருவத்திற்கும் நடுவிலிருக்கும் 45ம் அட்சரேகையைக் குறிக்கும் அடையாளத்தைக் கடந்தபொழுது, மார்லின் “நம்பவே முடியவில்லை, உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” என்று வியந்தாள். நம்முடைய உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறதென்றும், நாம் எவ்வளவு சிறியவர்களாயிருக்கிறோம், என்பதைக் குறித்துப் பேசினோம். இருந்தும் அண்டசராசரத்துடன் ஒப்பிடும்போது, நமது சிறிய பூமி தூசிபோன்ற புள்ளியாகத்தான் காணப்படுகிறது. நம்முடைய பூமி பெரியதும் அண்டசராசரங்கள் மிகப்பெரியதுமாக இருந்தால் இவற்றை தமது வல்லமையால் சிருஷ்டித்த கர்த்தர் எவ்வளவு பெரியவர்? அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16).

இது ஒரு நற்செய்தி, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நித்தியம் வரைக்கும் நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த இந்த இயேசுதான் சகலத்தையும் சிருஷ்டித்தவர். தாம் மரிப்பதற்கு முந்தின இரவு “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு சொன்னார் (யோவா. 16:33).

வாழக்கையின் சிறிய, பெரிய சவால்களைச் சந்திக்கும்பொழுது சராசரங்களைப் படைத்தவரை நோக்கிக் கூப்பிடுவோம். அவரே மரித்து உயிர்த்தெழுந்தவர். அவரே நொறுக்கப்பட்ட உலகத்தை நமக்காக ஜெயித்தவர். நமது இக்கட்டான சமயங்களில் அவர் வல்லமையுடன் தமது சமாதானத்தை நமக்குத் தருகிறார்.

பெரிய உலகம், அதைவிடப் பெரிய கர்த்தர்

வடக்கு மிச்சிகன் வழியாக காரில் நாங்கள் செல்லும்பொழுது, பூமத்திய ரேகைக்கும் வடதுருவத்திற்கும் நடுவிலிருக்கும் 45ம் அட்சரேகையைக் குறிக்கும் அடையாளத்தைக் கடந்தபொழுது, மார்லின் “நம்பவே முடியவில்லை, உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது!” என்று வியந்தாள். நம்முடைய உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறதென்றும், நாம் எவ்வளவு சிறியவர்களாயிருக்கிறோம், என்பதைக் குறித்துப் பேசினோம். இருந்தும் அண்டசராசரத்துடன் ஒப்பிடும்போது, நமது சிறிய பூமி தூசிபோன்ற புள்ளியாகத்தான் காணப்படுகிறது. நம்முடைய பூமி பெரியதும் அண்டசராசரங்கள் மிகப்பெரியதுமாக இருந்தால் இவற்றை தமது வல்லமையால் சிருஷ்டித்த கர்த்தர் எவ்வளவு பெரியவர்? அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16).

இது ஒரு நற்செய்தி, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நித்தியம் வரைக்கும் நம்மைப் பாவத்திலிருந்து மீட்க வந்த இந்த இயேசுதான் சகலத்தையும் சிருஷ்டித்தவர். தாம் மரிப்பதற்கு முந்தின இரவு “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு சொன்னார் (யோவா. 16:33).

வாழக்கையின் சிறிய, பெரிய சவால்களைச் சந்திக்கும்பொழுது சராசரங்களைப் படைத்தவரை நோக்கிக் கூப்பிடுவோம். அவரே மரித்து உயிர்த்தெழுந்தவர். அவரே நொறுக்கப்பட்ட உலகத்தை நமக்காக ஜெயித்தவர். நமது இக்கட்டான சமயங்களில் அவர் வல்லமையுடன் தமது சமாதானத்தை நமக்குத் தருகிறார்.

ஹீரோவுக்கு மேல்

உலகெங்கும் உள்ள “ஸ்டார் வார்ஸ்” பட ரசிகர்கள், அதன் 8ம் பகுதி “தி லாஸ்ட் ஜெடி”யைக்காண ஆர்வமாயிருக்கிறார்கள். 1977 முதல் வந்து கொண்டிருக்கும் படத்தின் வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். (CNN Money) என்ற ஊடக நிருபர், ஃபிராங்க் பல்லோட்டா, “பொல்லாத உலகத்தில் மக்கள் ஒரு புது நம்பிக்கைக்காகவும், வல்லமையுள்ள நல்ல ஹீரோவுக்கும் ஏங்கி காத்திருப்பதே இந்த படம் பிரபலமானதற்கும் காரணம்” என்கிறார்.

இயேசு பிறந்தபொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஒடுக்குகிறவர்களின் கைக்கு விலக்கி இரட்சிக்கும், வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவுக்காகக் காத்திருந்தார்கள். அநேகர் தங்களை ரோம கொடுங்கோன்மையினின்று விடுவிக்கும் மா வீரன் ஒருவரை எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ அரசியல் ஹீரோவாகவோ ராணுவ மாவீரனாகவோ வரவில்லை. மாறாக ஒரு சிறு குழந்தையாக பெத்லகேமிலே பிறந்தார். அதனால், அநேகர் அவர் யாரென்றே அறியாமற்போனார்கள். “அவர் நமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ள வில்லை” (யோவா. 1:11) என்று அப்போஸ்தனலாகிய யோவான் எழுதியிருக்கிறார்.

ஹீரோவுக்கும் மேலாக இயேசு நமது இரட்சகராக வந்தார். இருளுக்குள் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்க வந்தார். அவரை ஏற்றுக்கொண்ட அனைவரும் பாவ மன்னிப்பைப்பெற்று, பாவத்தின் வலிமையின்று விடுதலைபெற, தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தார். “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (வச. 14) என்றெழுதினான்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் அவருடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார்” (வச. 12). ஆம் உலகத்திற்குத் தேவையான உண்மையான ஒரே நம்பிக்கை இயேசுவே!

தேவனுடைய உதவியுடன்

எனக்கு வயதாகிவிட்டதினால், முக்கியமாக குளிர்காலங்களில், மூட்டுகளில் வலி என்னைத் தாக்குகிறது. சில நாட்களில் என்னை வெற்றிவீரனாக நினைக்க முடியவில்லை; மூத்தக் குடிமகனாவதின் சவால்களால் தோற்றுப்போனவனாகவே உணருகிறேன்.

அதனால் தான் வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானை வேவுபார்க்க மோசேயினால் அனுப்பப்பட்ட வயதான காலேபு என் அபிமான வீரன். வேவு பார்க்க அனுப்பப்பட்ட பன்னிரண்டு பேரில், பத்துபேர் துர்ச்செய்தியைக் கொண்டுவந்த போதும், காலேபும், யோசுவாவும் மட்டுமே கர்த்தரால் கானானுக்குள் பிரவேசிக்கும் கிருபை பெற்றனர். தேசத்தில் காலேப் தன் சுதந்தரத்தைப் பெறப்போகும் நேரம் வந்ததை யோசுவா 14ல் வாசிக்கிறோம். இன்னும் துரத்தப்பட வேண்டிய எதிரிகள் இருந்தனர். இளையதலைமுறைக்கு இப்பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வுபெற மனதில்லாத காலேப், “அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீர். கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்” (யோசு. 14:12).

“கர்த்தர் என்னேடிருப்பாரானால்” என்ற மனத்திடம்தான் காலேபை யுத்ததிற்கு ஆயத்த நிலையில் வைத்திருந்தது. அவன் தான் வயதானதை எண்ணாமலும், தன் பலத்தை நம்பாமலும், கர்த்தருடைய வல்லமையையே சார்ந்திருந்தான். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய தேவன் அவனுக்கு உதவுவார் என்று எண்ணினான்.

நம்மில் அநேகர், ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியபின் பெரிய சாதனை எதையும் சாதிக்க விரும்புவதில்லை. நாம் எவ்வளவு வயது சென்றவர்களாயிருந்தாலும், தேவனுக்கென்று பெரிய காரியங்களைச் செய்ய முடியும். காலேபுக்கு வந்த பெரிய வாய்ப்பை அவன் பற்றிக்கொண்டது போல, நமக்கும் அது போன்ற வாய்ப்பு வருமானால், நாம் அதைத் தவிர்க்கக் கூடாது! கர்த்தரின் உதவியுடன் நாம் வெற்றி பெற முடியும்.

அது நானல்ல

இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இசைக்குழு நடத்துனர்களில் ஒருவரான ஆர்டுரோ டஸ்கானினி, யாருக்குப் புகழ் உரியதோ, அவர்களுக்கே அதைக் கொடுப்பவர் என்று நினைவுகூறப்படுகிறார். டேவிட் ஈவென் இசை நடத்துனர்களைக்குறித்துத் தானெழுதிய ((Dictators Of The Baton) என்ற நூலில் டஸ்கானினியைப்பற்றி எழுதியுள்ளார். அவர் பெத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனி பயிற்சியை முடித்தபொழுது, அதைக் கேட்டுக்கொண்டிருந்த நியூயார்க் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர் எழுந்து நின்று பலத்த கரகோஷம் செய்தனர். கைதட்டுதல் நின்ற பொழுது, டஸ்கானினி கண்களில் நீர்மல்க, “நானல்ல… அது பெத்தோவன்! டஸ்னானினி ஒன்றுமில்லை” என்றார்.

அப்போஸ்தலர் பவுல் எழுதிய புதிய ஏற்பாட்டு நிருபங்களில் ஆவிக்குரிய உள்ளான கண்ணோட்டத்திற்கும், ஊந்துதலுக்கும் உரிய புகழை ஏற்றுக்கொள்ள, பவுல் மறுத்துவிட்டான். கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்த அநேகருக்கு, தான் ஆவிக்குரிய தாயும் தகப்பனுமாயிருப்பதை அறிந்திருந்தார். அநேகருடைய விசுவாசம், நம்பிக்கை, அன்பை பெருகச் செய்ய தான் அதிகப் பாடுகளை சகித்து பிரயாசப்பட்டதை ஒத்துக்கொண்டார் (1 கொரி 15:10). ஆனாலும், தனக்கிருந்த அன்பு விசுவாசம் உள்ளுணர்விற்கான பாராட்டை நல்மனசாட்சியுடன் ஏற்க மறுத்துகிட்டார்.

பவுல் தன் வாசகர்களுக்காகவும், நமக்காகவும் “சகோதர, சகோதரிகளே, அது நானல்ல கிறிஸ்துவே… பவுல் ஒன்றுமில்லை” என்றார், நாம், பாராட்டுக்குரிய ஒருவருடைய  தூதுவர்களேயன்றி வேறில்லை!

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தன. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும். அங்கு வசிக்க ஒரு இடம் கண்டு பிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும்  தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டும் என்ற பட்டியலைப் பார்த்த பொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு…

கவலைக்கு மருந்து

என் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).

தனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.

பவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.