என்னால் செய்ய முடியாது
“என்னால் செய்ய முடியாது!” என மனச்சோர்வடைந்த ஒரு மாணவன் புலம்பினான். அவன் கையில் வைத்திருந்த தாளின் பக்கத்தில் குறைந்த அளவே எழுதப்பட்டிருந்தது. கடினமான கருத்துக்கள், அத்தோடு மன்னிக்க முடியாத காலக்கெடுவும் கொடுக்கப்பட்டிருந்தது. அவனுக்கு அவனுடைய ஆசிரியரின் உதவி வேண்டியதாயிருந்தது.
நாமும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தை வாசிக்கும் போது இத்தகைய நம்பிக்கையிழந்த சூழலை உணரலாம். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” (மத். 5:44). கோபம் கொலைக்குச் சமம் (வச. 21,22). ஒரு ஸ்தரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று (வச. 28). ஒருவேளை நாம் இத்ததைய தரத்தோடு வாழ முடியும் என நினைப்போமாயின், “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்” (வச. 48).
“மலைப் பிரசங்கம் நமக்குள்ளே விரக்தியை உருவாக்குகின்றது” என ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் சொல்கின்றார். ஆனால், அவர் இதனை நல்லதாகக் கண்டார். ஏனெனில், ‘‘நம்முடைய நம்பிக்கையிழந்து, ஒன்றுமில்லாத நிலையில்தான் நாம் இயேசுவிடம் ஏதாவது பெற்றுக் கொள்ள வருவோம்.”
ஓன்றுமில்லாமையில் தான் தேவன் செயல்படுவதைக் காண்கின்றோம். தங்களால் ஒன்றும் கூடாது என்று புரிந்து கொண்டவர்கள் தான் தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொள்கின்றனர். “மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்” (1 கொரி. 1:26-27).
தேவனுடைய ஞானத்தில் நம்முடைய போதகர் நமக்கு இரட்கசர். அவரிடத்தில் நம்பிக்கையோடு வரும்போது “அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30). அவரே நமக்கு கிருபையும், அவருக்காக வாழ வல்லமையுமாவார். எனவே தான் அவர், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது” என்றார் (மத். 5:3).
சாட்சி கையொப்பம் தேவையில்லை
எந்த மனிதனாவது தான் ஒரு கார் அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற விரும்பும் போது, அவன் பெற்ற கடனைத் திருப்பிச் செலத்தியதாக நீண்ட சரித்திரம் இல்லையெனில், கடன் கொடுப்பவர் இந்தப் பணப்பரிவர்த்தனையிலுள்ள ஆபத்தைக் கையாள தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய ஒரு செயலின் பதிவு இல்லையெனில், அந்த மனிதன் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகத் தரும் வாக்குமூலம் போதாதென வங்கியாளர்கள் கருதுகின்றனர். எனவே கடன் வாங்குபவர் அத்தகைய நற்சாட்சி பெற்ற யாரையேனும் தேடி கண்டுபிடித்து அவர்களின் பெயரை இந்தக் கடனுக்குச் சாட்சியாக சேர்த்துக் கொள்வார். இவ்வாறு சாட்சி கையொப்பமிடுபவர், இந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் என வங்கிகளுக்கு உறுதி வாக்குக் கொடுக்கின்றனர்.
இவ்வாறு யாரேனும் நமக்கு பொருளாதார ரீதியாகவோ, திருமணத்திலோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வாக்களித்திருந்தால் நாம் அவற்றை நிறைவேற்றும்படி எதிர்பார்ப்போம். தேவனும் தாம் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவர் எனத் தெரிந்து கொள்வோம். ஆபிரகாமிடம் தேவன் அவனை ஆசீர்வதித்து “அவனுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் (எபி. 6:14, ஆதி. 22:17) என வாக்களித்தபோது, ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான், நாம் காணும் அகிலம் அனைத்தையும் படைத்த தேவனை விட மேலானவர் ஒருவரும் இல்லை. அவர் ஒருவரே தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.
ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பெறும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது (எபி. 6:15). (அவன் தன்னுடைய சந்ததியார் எவ்வளவாகப் பெருகுவார்கள் என்பதைக் காணவில்லை) ஆனால், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருந்தார். தேவன் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (13-5) நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் (யோவா. 10:29) அவர் நம்மை ஆறுதல் படுத்துகின்றார் (2 கொரி. 1:3-4) அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.
மிகச் சிறந்த பரிசு
நான் என் உடைமைகளை அடுக்கிக் கொண்டு லண்டனிலுள்ள என்னுடைய வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது என்னுடைய தாயார் ஒரு பரிசோடு, அவர்களுடைய மோதிரங்களில் நான் மிகவும் விரும்பிய ஒன்றோடு, என்னிடம் வந்தார்கள். “நீ இதை இப்பொழுதே அணிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நான் மரிக்கும்வரை நீ ஏன் காத்திருக்க வேண்டும்? அது இப்பொழுது எனக்குப் பொருந்தவுமில்லை” என்றார். ஒரு புன்னகையோடு நான் அந்த எதிர்பாராத பரிசை ஏற்றுக் கொண்டேன். சீக்கிரத்தில் கிடைத்த பரம்பரைச் சொத்து எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது.
என்னுடைய தாயார் ஓர் உலகப் பொருளை எனக்குப் பரிசாகத் தந்தார். ஆனால், “பரம’ பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா” என இயேசு நமக்கு வாக்களித்துள்ளார் (லூக். 11:13) பாவத்தால் தம்மைக் கெடுத்துக்கொண்ட பெற்றோர் கூட தன் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க அறிந்திருக்கும்போது (மீன் அல்லது முட்டை போன்றவற்றை) நம்முடைய பரமத்தந்தை அவருடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு அதிகமாகக் கொடுப்பார்? பரிசுத்த ஆவியாகிய கொடையின் மூலம் (யோவா. 16:13) நம்பிக்கை, அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவற்றை நம்முடைய கஷ்ட நேரங்களில் கொடுப்பார். இந்த ஆவியின் கொடைகளை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வோம்.
நாம் வளர்ந்துவிட்டபோது, நம்முடைய பெற்றோரால் நம்மை முழுவதும் கவனிக்கவும் அன்பு கூரவும் முடியாமல் போகும். நம்முடைய தாயோ, தந்தையோ ஒரு தியாக அன்பின் எடுத்துக் காட்டுகளாகிவிட்டிருக்கலாம். அல்லது நம்முடைய அனுபவம் இவற்றிற்கிடையேயிருக்கலாம். நம்முடைய உலகப் பெற்றோரிடமிருந்து நாம் எதைத் தெரிந்து கொண்டாலும் நாம் நம்முடைய பரமதந்தை மாறாத அன்பைத் தருவதாகக் கூறும் வாக்கைப் பற்றிக் கொள்வோம். அவர் தம்முயை பிள்ளைகளுக்குப் பரிசுத்த ஆவியைப் பரிசாகத் தந்தார்.
நம்முடைய காயங்களை மறைத்தல்
நான் அருகிலுள்ள ஒரு தேவாலயத்திற்குச் சிறப்பு செய்தியாளராகச் சொன்றிருந்தேன். அன்று என்னுடைய செய்தியின் கருத்து, நம்முடைய உடைந்த உள்ளத்தை தேவனிடம் கொடுத்து, அவர் கொடுக்க விரும்புகிற சுகத்தைப் பெற்றுக்கொள்ளல் என்பதைக் குறித்த ஓர் உண்மைக் கதை. கடைசி ஜெபத்திற்கு முன்பு அங்குள்ள போதகர், இடைப்பாதையின் மத்தியில் நின்றுகொண்டு அங்கு கூடியிருக்கும் சபையினரின் கண்களை ஆழ்ந்து நோக்கி, “உங்களுடைய போதகராக நான் உங்களை இந்த வார நடுவில் பார்க்கவும், உங்களுடைய இருதயத்தை நொறுக்கின நினைவுகளைப் பற்றிக் கேட்கவும் வாய்ப்பைப் பெறுகிறேன். வார இறுதி ஆராதனையில் நீங்கள் உங்கள் காயங்களை எவ்வாறு மறைத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் கவனிக்கும் வேதனையை நான் எடுத்துக் கொள்கின்றேன்” என்றார்.
நாம் மறைத்து வைத்துள்ள காயங்களால் ஏற்பட்ட என் இருதய வேதனையை சுகப்படுத்தும்படி தேவன் வந்தார். எபிரெயரை எழுதியவர் தேவனுடைய வார்த்தைகள் உயிருள்ளவை, செயல்படுபவை என்கின்றார். நம்மில் அநேகர் இந்த வார்த்தைகளை வேதாகமம் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அது அதையும் விட மேலானது. தேவனுடைய வார்த்தையின் ஜீவன் இயேசு கிறிஸ்து அவர் நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் மதிப்பிடுகின்றார். ஆனாலும், நம்மீது அன்பு கூறுகின்றார்.
இயேசு மரித்ததின் மூலம் நாம் தேவனுடைய சமூகத்திற்கு எல்லா வேளைகளிலும் செல்லக் கூடிய வழியைத் தந்தார். நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வது என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பது நம்மனைவருக்கும் தெரியும், நாம் குற்ற உணர்வோடு உடைந்து போனவர்களாய் அல்ல, மன்னிக்கப்பட்ட கிறிஸ்துவின் சீடர்களாக வாழும் இடமாக தேவனுடைய ஆலயத்தைத் தந்துள்ளார். அது “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” கொள்ள வேண்டிய இடம்’’ (கலா. 6:2).
இன்று மற்றவர்களின் கண்களுக்கு நீ எதை மறைத்துக் கொண்டிருக்கின்றாய்? தேவனிடமிருந்தும் எப்படி உன்னை மறைத்துக் கொள்ளப் பார்க்கின்றாய்? இயேசுவின் மூலம் தேவன் நம்மைக் காண்கின்றார். ஆனாலும் தேவன் நம்மை நேசிக்கின்றார். அவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வோமா?
அவர் நம்மை அறிவார்
என்னுடைய கிராமத்தை அடைய நான் இரவில் 100 மைல்கள் காரை ஓட்டி, பிரயாணம் செய்வதை தேவன் அறிவாரா? நான் இருந்த நிலையை நான் சொல்கின்றேன், என்னுடைய உடல் வெப்பநிலை ஏறிக்கொண்டிருக்கிறது. என் தலைவலிக்கின்றது. நான், “தேவனே நீர் என்னோடிருக்கிறீர் என்பதை நானறிவேன். ஆனால், நான் வேதனையிலிருக்கிறேன்” என ஜெபித்தேன்.
ஒரு சிறிய கிராமத்தினருகிலுள்ள சாலையோரம் என் காரை நிறுத்தினேன். மிகவும் சோர்ந்து பெலமிழந்து காணப்பட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து, ஒரு குரல் கேட்டது. “உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?” தன்னுடைய தோழர்களோடு, அந்த இடத்திலுள்ள ஒரு மனிதன் வந்திருந்தான். அவர்கள் வந்தது எனக்கு நன்மையாயிருந்தது. அவர்கள் தங்களுடைய கிராமத்தின் பெயரை
“நா மின் யாலா” எனக் கூறினர். “ராஜா என்னைப் பற்றி அறிவார்” என்பதே அதன் பொருள். நான் வியந்தேன். நான் அநேக முறை இந்த சமுதாயத்தினரைக் கடந்து சென்றிருக்கின்றேன். ஒரு முறையும் நின்றதில்லை. ஆனால், இந்த முறை தேவன் அந்தப் பெயரை பயன்படுத்தி, நான் தனிமையில், வேதனையோடு சாலையோரத்தில் நின்றபோது, அந்த ராஜா என்னோடிருந்தார். அந்த மனிதர் என்னை ஊக்கப்படுத்தி, கட்டாயப்படுத்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நாம் எங்கு சென்றாலும், அனுதின வேலையிலிருந்தாலும், நாம் செல்லும் வெவ்வேறு இடங்களையும், சூழ்நிலைகளையும், நாம் எப்படியிருந்தாலும் அதை தேவன் அறிவார் (வச். 139:1-4; 7-12). தேவன் நம்மைக் கைவிடுவதுமில்லை, மறப்பதுமில்லை அல்லது தேவன் அவசரவேலையின் காரணமாக நம்மை நிராகரிப்பதுமில்லை. நாம் துன்பத்திலிருக்கும் போதும் கடினமான சூழலில் அகப்படும் போதும், அது இருளானாலும், இரவானாலும் (வச. 11-12) நாம் அவருடைய பிரசன்னத்தை விட்டு மறைக்கப்படுவதில்லை. இந்த உண்மை நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நம்மை பிரமிக்கத்தக்க அதிசயமாக உருவாக்கின தேவன், நம் வாழ்நாள் முழுவதும் வழிநடத்துவார் (வச. 14).
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
அந்நியர் அந்நியரை வரவேற்றல்
நானும் என்னுடைய கணவனும் சியாட்டில் என்ற இடத்திற்கு, அவருடைய சகோதரியின் அருகிலே வாசம் பண்ணும்படி நகர்ந்த போது, எங்களுக்கு எங்கே தங்குவது, எங்கு வேலை செய்வதென்று தெரியவில்லை. அருகிலுள்ள ஒரு தேவாலயம் நாங்கள் தங்கும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவியது. அது ஒரு வாடகை வீடு, அநேக படுக்கையறைகளைக் கொண்டது. நாங்கள் ஓர் அறையில் தங்கிக் கொண்டு மற்றவற்றை வெளிநாட்டு மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்குக் கொடுக்கலாம். எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாங்கள் அந்நியரை வரவேற்கும் அந்நியராக இருந்தோம். எங்களுடைய வீட்டையும் ஆகாரத்தையும் உலகெங்கிலிருந்தும் வந்த மக்களோடு பகிர்ந்து கொண்டோம். நாங்களும் எங்கள் வீட்டில் தங்கியிருப்போரும் டஜன் கணக்கான வெளிநாட்டு மாணவர்களை ஒவ்வொரு வெள்ளி இரவும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ள அழைத்தோம்.
நம் வீட்டைவிட்டு வெகுதொலைவில் இருப்பது என்ன என்பது தேவனுடைய ஜனங்களுக்குத் தெரியும். அநேக நூற்றாண்டுகள் இஸ்ரவேலர் அந்நியராகவும், அடிமைகளாகவும் எகிப்து தேசத்தில் இருந்தனர். லேவியராகமம் 19ல் அவனவன் தன் தன் “தாயையும், தகப்பனையும் கனம் பண்ணு” “களவு செய்யாதே” (வச. 3,11) என்ற நன்கறிந்த கட்டளைகளோடு உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனை சுதேசி போல எண்ணி கவனி, ஏனெனில் நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயும் பயந்துமிருந்தீர்கள் (வச. 33-34) எனக் கூறுகின்றார்.
தேவனைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மில் அநேகருக்கு அகதிகளாக வாழ்ந்த அனுபவம் இல்லை. ஆனால், அந்த உலகில் அந்நியரைப் போல வாழ்தல் எவ்வாறிருக்கும் (1 பேத. 2:11) எனத் தெரியும், ஏனெனில் நாம் இப்பூமிக் குரியவர்களல்ல, நம்முடைய விசுவாசப் பயணம் பரலோக ராஜ்ஜியத்தை நோக்கியேயிருக்கிறது. நாம் உபசரிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும்படி அழைக்கப்பட்டிருக்கின்றோம். அந்நியரை கிறிஸ்துவின் குடும்பத்திற்குள் வரவேற்கும் அந்நியராயிருக்கிறோம். சியாட்டிலில் நானும் என் கணவரும் அனுபவித்த உபசரனை, நாங்களும் மற்றவர்களை வரவேற்கக் கற்றுத் தந்தது. இதுவே இருதயத்தில் கிறிஸ்துவின் குடும்பமாயிருத்தல் (ரோம. 12:13).
ஆழங்களின் தேவன்
“நீ ஆழ்கடலுக்குள் செல்லும் போது, ஒவ்வொருமுறையும் ஒரு மாதிரியை எடுத்துவா. ஒவ்வொருமுறையும் ஒரு புதிய படைப்பைக் காண்பாய்” என்று கடல் உயிரின உயிரியலாளர் வார்ட் ஆப்பிள்டன்ஸ் கூறுகின்றார். சமீப காலத்தில் அறிவியலார் 1,451 புதிய வகை கடலடி உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் இதுவரை அங்குள்ளவற்றில் பாதியையாகிலும் தெரிந்துகொள்ளவில்லை.
யோபு 38-40ல் தேவன் தன் படைப்புகளை யோபுவிற்கு நினைப்பூட்டுகின்றார். இந்த மூன்று அதிகாரங்களிலும் தேவன் காலநிலைகளின் அதிசயங்களையும், பரந்து விரிந்த அண்டத்தையும், அதில் வாழும் வகை வகையான உயிரினங்களையும் விவரிக்கின்றார். இந்தக் காரியங்களை நாம் காண முடியும். பின்னர் தேவன் ஓர் அதிகாரம் முழுவதும் வினோதமான லிவியாதானைப் பற்றி விளக்குகின்றார். லிவியாதான் ஒரு வினோத உயிரினம், அது எரியப்படும் அம்புகளையும் தடுக்க வல்லன, (யோபு 41:7,13), அதின் உடல் அசைவு நேர்த்தியாயும் (வச. 12) அதின் பற்கள் பயங்கரமானதாயும் (வச.14) உள்ளன. “அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்படும்… அதின் நாசியிலிருந்து புகை புறப்படும்” (வச. 19-20) “பூமியின் மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை” (வச. 33).
எனவே தேவன் நாம் இதுவரைக் கண்டிராத ஒரு உயிரினத்தைப்பற்றி பேசுகின்றார். ஆனால், இதுதான் யோபு 41ஆம் அதிகாரத்தின் நோக்கமா? இல்லை. யோபு 41 தேவனின் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பற்றிய நம் புரிந்துகொள்ளலை விரிவாக்குகின்றது. சங்கீதக்காரன் இதையே விரிவாக, “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும்… அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கலங்களும் உண்டு (சங். 104:25-26) என விளக்குகின்றார். யோபுவில் கொடுக்கப்பட்டுள்ள பயங்கரமான விளக்கத்திலிருந்து எல்லா உயிரினங்களையும் விட மிக பயங்கரமான இந்த படைப்பு விளையாடும் இடத்தையும் கொடுத்துள்ளார் என தெரிந்துகொள்கிறோம். அதுதான் லிவியாதானின் விளையாட்டு.
நம்முடைய வாழ்நாளில் நாம் இந்த சமுத்திரத்தை ஆராய்கின்றோம். நமக்கு ஒரு நித்திய ஸ்தலமுள்ளது. அங்கு நாம் நம்முடைய, பிரமிக்கத்தக்க, விநோதமான தேவனின் விளையாட்டுகளை ஆராய்வோம்.
என் ஆத்துமாவே, அமர்ந்திரு!
ஒரு குழந்தையை அன்போடு அனைத்துக்கொண்டு, தாய் தன் விரலை அக்குழந்தையின் உதடுகளின் முன் வைத்து - ஷ்ஷ்… என்ற வார்த்தையைச் சொல்வது போன்று கற்பனை செய்துபார். இந்த செயலில், எளிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், ஏமாற்றங்களின் மத்தியில் எதிர்பார்ப்போடுள்ள குழந்தையின் வலி அல்லது அசௌகரியத்தை அமைதிப்படுத்துவதாகும். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாவிடத்திற்கும், எக்காலத்திற்கும் உரியவை. நாம் அனைவருமே இத்தகைய அன்பின் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கவும் முடியும், கொடுத்திருக்கவும் முடியும். நான் சங்கீதம் 131:2 ஐ தியானித்த போது இந்த காட்சிதான் என் கண் முன்னே வந்தது.
இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் போக்கும் சங்கீதக்காரன் தாவீதின் தீவிரமான அநுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் எனத் தெரிகின்றது. நீ ஏமாற்றத்தையோ, தோல்வியையோ சந்திக்கும் போது, அது உன்னை ஜெபத்திற்கு நேராக வழிநடத்தினதுண்டா? உன்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் நீ தாழ்த்தப்படும்போது நீ என்ன செய்வாய்? ஒரு தேர்வில் தோற்கும் போது, ஒரு வேலையை இழந்த போது அல்லது ஓர் உறவின் முடிவைச் சந்தித்தபோது என்ன செய்வாய்? தாவீது தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றி, அத்தோடு தன் ஆன்மாவை உண்மையாய் ஆராய்ந்து அறிந்து ஒரு பட்டியலை தயாரித்தான் (சங். 131:1) அவனுடைய சுற்றுச் சுழலோடு சமாதானம் செய்து கொண்டபின், ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பிலிருக்கும் போது அமைதியாயிருப்பது போல, தாவீதும் மன நிறைவைப் பெற்றுக்கொண்டான் (வச. 2).
வாழ்க்கையின் சூழல் மாறலாம். சிலவேளைகளில் நாம் தாழ்த்தப்படலாம். ஆனாலும் நாம் நம்பிக்கையோடும் மன நிறைவோடும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள தேவன் நம்மோடிருக்கிறார் என அவரை முற்றிலுமாக நம்புவோமாக.