நான் அருகிலுள்ள ஒரு தேவாலயத்திற்குச் சிறப்பு செய்தியாளராகச் சொன்றிருந்தேன். அன்று என்னுடைய செய்தியின் கருத்து, நம்முடைய உடைந்த உள்ளத்தை தேவனிடம் கொடுத்து, அவர் கொடுக்க விரும்புகிற சுகத்தைப் பெற்றுக்கொள்ளல் என்பதைக் குறித்த ஓர் உண்மைக் கதை. கடைசி ஜெபத்திற்கு முன்பு அங்குள்ள போதகர், இடைப்பாதையின் மத்தியில் நின்றுகொண்டு அங்கு கூடியிருக்கும் சபையினரின் கண்களை ஆழ்ந்து நோக்கி, “உங்களுடைய போதகராக நான் உங்களை இந்த வார நடுவில் பார்க்கவும், உங்களுடைய இருதயத்தை நொறுக்கின நினைவுகளைப் பற்றிக் கேட்கவும் வாய்ப்பைப் பெறுகிறேன். வார இறுதி ஆராதனையில் நீங்கள் உங்கள் காயங்களை எவ்வாறு மறைத்துக் கொள்கிறீர்கள் என்பதைக் கவனிக்கும் வேதனையை நான் எடுத்துக் கொள்கின்றேன்” என்றார்.

நாம் மறைத்து வைத்துள்ள காயங்களால் ஏற்பட்ட என் இருதய வேதனையை சுகப்படுத்தும்படி தேவன் வந்தார். எபிரெயரை எழுதியவர் தேவனுடைய வார்த்தைகள் உயிருள்ளவை, செயல்படுபவை என்கின்றார். நம்மில் அநேகர் இந்த வார்த்தைகளை வேதாகமம் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அது அதையும் விட மேலானது. தேவனுடைய வார்த்தையின் ஜீவன் இயேசு கிறிஸ்து அவர் நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் மதிப்பிடுகின்றார். ஆனாலும், நம்மீது அன்பு கூறுகின்றார்.

இயேசு மரித்ததின் மூலம் நாம் தேவனுடைய சமூகத்திற்கு எல்லா வேளைகளிலும் செல்லக் கூடிய வழியைத் தந்தார். நாம் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வது என்பது புத்திசாலித்தனம் அல்ல என்பது நம்மனைவருக்கும் தெரியும், நாம் குற்ற உணர்வோடு உடைந்து போனவர்களாய் அல்ல, மன்னிக்கப்பட்ட கிறிஸ்துவின் சீடர்களாக வாழும் இடமாக தேவனுடைய ஆலயத்தைத் தந்துள்ளார். அது “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து” கொள்ள வேண்டிய இடம்’’ (கலா. 6:2).

இன்று மற்றவர்களின் கண்களுக்கு நீ எதை மறைத்துக் கொண்டிருக்கின்றாய்? தேவனிடமிருந்தும் எப்படி உன்னை மறைத்துக் கொள்ளப் பார்க்கின்றாய்? இயேசுவின் மூலம் தேவன் நம்மைக் காண்கின்றார். ஆனாலும் தேவன் நம்மை நேசிக்கின்றார். அவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வோமா?