வகை  |  odb

அந்நியரைச் சிநேகித்தல்

எங்களுடைய குடும்பத்தின் நபர் ஒருவர், வேறு மதத்திற்கு மாறியதால், என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள், அவளை மீண்டும் இயேசுவிடம் திரும்புமாறு செய்ய, என்னை வற்புறுத்தினர். கிறிஸ்து நம்மை நேசிப்பதைப் போன்று, அவளை நேசிக்க கற்றுக் கொண்டேன், பொது இடங்களில், சிலர் அவள் அணிந்துள்ள அந்நிய உடையின் நிமித்தம், அவள் மீது எரிச்சலைக் காட்டினர், சிலர் அவளைக் கடின வார்த்தைகளால் சாடினர், தன்னுடைய வாகனத்தில் இருந்தபடியே, ஒரு மனிதன், அவளை “உன்னுடைய வீட்டிற்குப் போ! “என்று விரட்டினான், அவள் தன்னுடைய வீட்டில் தான் இருக்கின்றாள் என்பதை அறியாத சிலர் இவ்வாறு செய்தனர்.

வேற்று உடையும், நம்பிக்கையும் கொண்டுள்ள புறஜாதியினரிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டுமென மோசே தன் ஜனங்களுக்கு கற்றுக்கொடுத்தார். நீதியும், கருணையும் நிறைந்த சட்டங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தார். “அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாய் இரு ந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே” (யாத். 23:9). தேவன் புறஜாதியினரின் மேல் கொண்டுள்ள கரிசனையை, இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. தூண்டப்பட்டவர்களாய், பிறரை காயப்படுத்துபவர்களுக்காகவே இந்த வார்த்தைகள் யாத்திராகமம் 22:21, லேவியராகமம் 19:33 ஆகிய இரு இடங்களில் வருகின்றது.

எனவே, நான் அந்த நபரோடு, சிறிது நேரம் செலவிட்டேன், சிற்றுண்டிச் சாலையில், பூங்காவில், நடைப்பயிற்சியின் போது, எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தும், வெவ்வேறு இடங்களிலும் அவளோடு பேசி, நான் எந்த அன்பையும், மரியாதையையும் பெற விரும்புகிறேனோ, அதை அவளிடம் காட்டினேன். இயேசு நம் மீது வைத்திருக்கும் இனிமையான அன்பை, அவளுக்கு நினைவு படுத்துவதற்கு இதுவே சிறந்த வழி. இயேசுவை அவள் தள்ளி விட்டதால், அவளை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் வியத்தகு கிருபையோடு நம் அனைவரையும் நேசிப்பது போல, அவள் மீது அன்பு செலுத்துவதே சாலச் சிறந்தது.

சுலபமாக சிக்குண்டு போதல்

அடர்ந்த, வெப்பமான காட்டினுள் போர் செய்துகொண்டிருந்த போர் வீரர்கள், தங்களை வெறுப்படையச் செய்யும் ஒரு பிரச்சனையை சந்தித்தனர். குத்தக்கூடிய முட்களைக் கொண்ட ஒரு வகை படர்கொடி, திடீரென, எதிர் பாராத விதமாக போர் வீரர்களின் உடலைச் சுற்றிக் கொண்டு, அவர்களை நகர விடாமல் செய்துவிடும். அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள போராடும் போது, மேலும் மேலும் கொடிகள் சுற்றிக்கொள்ளும். போர் வீரர்கள் இந்த கொடிக்கு “ஒரு நிமிடம் காத்திரு” என்று பெயரிட்டனர், ஏனெனில், இந்த கொடிகளால் சுற்றப்பட்டு, நகரமுடியாமல் தவிக்கும் போர் வீரர்கள் மற்ற வீரர்களை, “எனக்காக ஒரு நிமிடம் காத்திருக்கவும், நான் கட்டப்பட்டுள்ளேன்” என்று கூப்பிடுவார்கள்.

இதே போன்று, பாவ வலையில் வீழ்ந்த, இயேசுவின் விசுவாசிகளாலும் முன்னேறிச் செல்ல முடியாமல் போய் விடும். எபிரெயர் 12:1, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு,… பொறுமையோடே ஓடக்கடவோம்.”என்று நம்மை எச்சரிக்கின்றது. ஆனால், நம்மைத் தடுக்கிற பாவத்தை எப்படி தூக்கி எறிவது?

நம் வாழ்வை ஆண்டு கொண்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெற, ஒரே வழி இயேசுவே. நம்மை இரட்சிக்க வல்லவராகிய அவரையே நம் கண்கள் நோக்கக் கடவது (12:3). அவர் தேவக்குமாரனாயிருந்தும், முழுவதும் மனிதனாக வந்தபடியாலே, “அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதிருக்கிற பிரதான ஆசாரியர் அவர். (2:17-18; 4:15) பாவத்தினாலே கட்டுண்டவர்களாய் நாம் காணப்படலாம், நாம் சோதனைகளை மேற்கொள்ளும் படி தேவன் விரும்புகிறார். நம்முடைய சுய பெலத்தினால் அல்ல, அவருடைய பெலத்தோடே ,நம்மைச் சுற்றி வளைக்கின்ற எந்த பாவத்தையும் உதறித் தள்ளி விட்டு, அவருடைய நீதியின் வழியில் பொறுமையோடு ஓடக்கடவோம். (1 கொரி. 10:13).

அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்?

அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்?

நான் எங்கள் வீட்டுக்கருகிலுள்ள நடைபாதையில் வந்து கொண்டிருந்த போது, என்னுடைய மகள், கலக்கமுற்றவளாய் என்னை அலைபேசியில் கூப்பிட்டாள். நான், அவளை விளையாட்டு பயிற்சிக்கு அழைத்துச் செல்ல, சரியாக 6:00 மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும். நான் சரியான நேரத்திற்குத்தான் போய்க் கொண்டு இருக்கிறேன் ஆனால் என்னுடைய மகளின் குரல், அவளுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நான் உடனே, “இதோ வந்து விட்டேன், நீ ஏன் என்னை நம்பவில்லை?” என்று கேட்டேன்.

நான் இந்த வார்த்தைகளைப் பேசிய போது, “ என்னுடைய பரலோகத் தந்தை, இதே கேள்வியை எத்தனை முறை என்னிடம் கேட்டிருப்பார்?” என எனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டேன். மன அழுத்தம் மிகுந்த வேளைகளில் நானும் பொறுமையை இழந்திருக்கின்றேன். நானும் விசுவாசத்தோடிருக்க, தேவன் அவருடைய வாக்குதத்தத்தை நிறைவேற்றுவார் என்று நம்புவதற்குப் போராடியுள்ளேன். அப்பொழுது நான் “அப்பா, எங்கே இருக்கின்றீர்கள்? “ என்று கதறியுள்ளேன்.

கவலையோடு, நம்பிக்கையிழந்த வேளைகளில், தேவனுடைய பிரசன்னத்தையும், அவருடைய நன்மையையும், அவர் எனக்கு வைத்துள்ள நோக்கத்தையும் சந்தேகித்துள்ளேன். இஸ்ரவேலரும் அப்படியே சந்தேகப்பட்டனர். உபாகமம் 31 ஆம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள ஆயத்தமாகின்றனர், அவர்களுடைய தலைவன் மோசே, அவர்களோடு வரப்போவதில்லை என்பதையும் அறிவர், இப்பொழுது, மோசே அவர்களை தைரியப்படுத்துகின்றார். தேவன் தந்துள்ள வார்த்தையை நினைவு படுத்துகின்றார், “கர்த்தர் தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வ.8)

தேவன் நம்மோடு, எப்போதும் இருக்கிறார் என்ற வாக்குதத்தம், நம்முடைய விசுவாசத்தின் மூலைக்கல்லாயிருக்கிறது. (மத். 1:23; எபி. 13:5) வெளிப்படுத்தல் 21:3, இதனையே வலியுறுத்துகின்றது. “இதோ மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது , அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்”

தேவன் எங்கே இருக்கிறார்? அவர் இங்கே இருக்கிறார், இப்பொழுது இருக்கிறார், நம்மோடு இருக்கிறார், நம்முடைய ஜெபத்தைக் கேட்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.

பந்தயப் பொருளைக் குறிவைத்தல்

1994 ஆம் வருடம் வெளியான “ஃபோரெஸ்ட் கம்ப்” என்ற துப்பறியும் திரைப்படத்தில் வரும், ஃபோரெஸ்ட் ஒட்டத்தின் மூலம் பிரபல்லமானார். அவர் சிறிய ஓட்டத்தைத் துவக்கினார், நாளடைவில் 3 வருடங்கள், 2 மாதங்கள், 14 நாட்கள், 16 மணி நேரம் தொடர்ந்து ”சாலையின் கடைசிவரை” ஓடி முடித்தார். ஒவ்வொரு முறையும் அவர் இலக்கினை அடையும் போது, மற்றொரு இலக்கினை நிர்ணயித்து, தொடர்ந்து ஓடுவார். அமெரிக்கா தேசத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓடி, இதுவரை நினையாத அளவு ஓடினார். ‘ஏதோ செய்ய வேண்டும் “ என்பதாக ஆரம்பித்தது அந்த ஓட்டம். “அன்றைய தினம், எந்தவொரு நோக்கமும் இல்லாமல், ஒரு சிறிய தொலைவு ஓட ஆரம்பித்தேன் “ என்றார் ஃபோரெஸ்ட். 

எந்த நோக்கமும் இல்லாமல் ஓடிய ஃபோரெஸ்ட்டைப் போல்லல்லாமல், அப்போஸ்தலனாகிய பவுல் “பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24) என்று வாசகர்களை, தன்னை மாதிரியாகப் பின் பற்றச் சொல்கின்றார். பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களைப் போன்று ஓட்டத்தில், அதாவது வாழ்க்கையாகிய ஓட்டத்தில், நாமும் சில உலக சிற்றின்பங்களை வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும். நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுக்க நாம் முன் வரும் போது, அது, நாம் மற்றவர்களுக்கு பாவத்திலிருந்து மீட்பு, நித்திய வாழ்வு ஆகிய நற்செய்திகளை கொடுக்க உதவியாயிருக்கும்.

இந்த இலக்கை நோக்கி நம்மோடு ஓட , நாம் மற்றவர்களையும் அழைக்கும் படி நம் இருதயத்தையும், மனதையும் ஆயத்தப்படுத்தும் போது, நமக்கும் அந்த பந்தயப்பொருள் நிச்சயமாகக் கிடைக்கும். நாம் தேவனோடு, நித்திய காலமாக வாழுவோம். நம் ஓட்டத்தை முடிக்கும் போது, தேவன் நமக்கு வழங்கும் கிரீடம் என்றென்றும் அழியாதது. அவரை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அவர் தரும் பெலத்தோடே நாம் ஓடும் போது, பந்தயப் பரிசை பெற்றுக்கொள்வோம். இது, ஓடுவதற்கு என்ன அருமையான காரணம் !

எச்சரிப்பு வட்டங்கள்

ஆப்ரிக்கா தேசத்தின் வெளிமான்கள் திறந்த புல் வெளிகளில் ஓய்வு எடுக்கும் போது, தங்கள் உள்ளுணர்வு தூண்டுதலின் படி “எச்சரிப்பு வட்டங்களை” ஏற்படுத்திக் கொள்கின்றன. அவை, கூட்டமாகச் சேர்ந்து, ஒவ்வொன்றும் வெளிநோக்கிய திசையில், சற்றே மாறுபட்ட கோணத்தில் படுத்திருக்கும். இதன் மூலம் அவைகளால் 360 டிகிரி கோணத்தில் சுற்றுப்புறம் முழுவதையும் கண்காணித்து, வருகின்ற ஆபத்துகளைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்க முடியும்.

தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ள நினைக்காமல், தங்களுடைய குழுவிலுள்ள அனைவரின் மீதும் கரிசனை கொள்கின்றன. இயேசுவைப் பின் பற்றுபவர்களுக்கு தேவன் தரும் ஆலோசனையும் இதுவே. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடி வருதலை… விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” (எபி. 10:24-25).

எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கிறிஸ்தவ வாழ்வு தனிமையானதல்ல என்று விளக்குகிறார். இணைந்து வாழும் போது நாம் வலிமை பெறுகிறோம், ஒருவருக்கொருவர் புத்தி சொல்ல முடிகிறது (வச. 25). “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்ய திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி. 1:4) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள், ஏனெனில், “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” (1பேது. 5:8).

நாம் ஒருவரையொருவர் தாங்குவதன் நோக்கம் தப்பிப் பிழைப்பதற்கு மட்டுமல்ல. நம்மை இயேசுவைப் போல மற்றுவதற்கும், இவ்வுலகில், அன்பினால் தேவனுக்குப் பணிசெய்யவும், அவருடைய ராஜியத்தின் வருகையை நம்பிக்கையோடு, விசுவாசிகளோடு இணைந்து எதிர்பார்க்கவுமே. ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவது, நம் அனைவருக்குமே தேவை. நாம் அன்பினால் மற்றவர்களுக்கு உதவ, தேவன் நமக்கு உதவுவார். நாம் இணைந்து தேவனை நெருங்கி வாழுவோம்.