வகை  |  odb

வித்தியாசமாக சிந்திப்பது

கல்லூரியில் படிக்கும் போது, ​​வெனிசுலாவில் கோடைகாலத்தின் ஒரு நல்ல பகுதியை நான் கழித்தேன். உணவு வியக்க வைப்பதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சிகரமானவர்கள், வானிலை மற்றும் விருந்தோம்பல் அழகாக இருந்தது. இருப்பினும், முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள், நேர நிர்வாகத்தை குறித்த எனது கருத்துக்கள் எனது புதிய நண்பர்களால் பகிரப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் மதியம் மதிய உணவு சாப்பிட திட்டமிட்டிருந்தால், அது மதியம் 12 முதல் 1 மணி இடையில் எப்பொழுதாவது இருக்கலாம். கூட்டங்கள் அல்லது பயணங்களுக்கும் இப்படியே: காலவரையறைகள் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் தோராயமாக இருந்தன. “சரியான நேரத்தில்” என்ற எனது யோசனை நான் உணர்ந்ததை விட மிக அதிகமாக கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.

பொதுவாக நாம் எப்போதும் கவனிக்காமலேயே, நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள கலாச்சார விழுமியங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளோம். பவுல் இந்த கலாச்சார சக்தியை “பிரபஞ்சம்” என்று அழைக்கிறார் (ரோம. 12:2). இங்கே, “பிரபஞ்சம்” என்பது இயற்பியல் பிரபஞ்சத்தை குறிக்காது, மாறாக நம் இருப்பைப் பரப்பும் சிந்தனை வழிகளைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நாம் வாழ்வதால் கேள்விக்குறியாகாத அனுமானங்களையும் வழிகாட்டும் கொள்கைகளையும் குறிக்கிறது.

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று விழிப்புடன் இருக்குமாறு பவுல் எச்சரிக்கிறார். மாறாக, “ உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (வச. 2). சிந்தனை வழிகளை செயலற்ற முறையில் எடுத்துக்கொள்வதற்கும், நம்மைச் சூழ்ந்திருப்பதாக நம்புவதற்கும் பதிலாக, தேவனின் சிந்தனை வழியை தீவிரமாகப் பின்தொடரவும், அவருடைய “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை” எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகிறோம் (வச. 2). மற்றவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை விட, தேவனுக்கு செவிசாய்ப்போம்.

மிகத் துல்லியமான படம்

ஒரு பயணத்தில், எனது கணவர் சிறுவயதிலிருந்தே அவரது குடும்பத்தை அறிந்த ஒரு பெண்ணை சந்தித்தோம். அவர் எனது கணவர் ஆலனையும் எங்கள் மகன் சேவியரையும் பார்த்தாள். “அவன் தனது அப்பாவின் மிகத் துல்லியமான படம், என்று அவர் கூறினார்.” “அந்த கண்கள். அந்த புன்னகை. ஆம். அவரைப் போலவே தெரிகிறது.” தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு வலுவான ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்ததால், அவர்களின் ஆளுமைகளில் ஒற்றுமையைக் கூட அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் பல வழிகளில் ஒரே மாதிரியாக இருந்தாலும், என் மகன் தனது தந்தையை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

ஒரே ஒரு மகன் - இயேசு தன் தந்தையை முழுமையாக பிரதிபலிக்கிறார். கிறிஸ்து “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ. 1:15). அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 16). “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (வச. 17).

ஜெபத்திலும் வேதாகமம் படிப்பதிலும் நாம் நேரத்தைச் செலவிடலாம், மாம்சத்தில் இருக்கும் இயேசுவைப் பார்ப்பதன் மூலம் தந்தையின் தன்மையைக் கண்டுபிடிப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் வேதாகமத்தில் மற்றவர்களுடனும் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை ஆராய்வதன் மூலம் அவருடைய அன்பைச் செயலில் காட்ட அவர் நம்மை அழைக்கிறார். நம் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, பரிசுத்த ஆவியின் பரிசைப் பெற்ற பிறகு, நம்முடைய அன்பான பிதாவை அறிந்து நம்புவதில் நாம் வளரலாம். அவருவருக்காக வாழ்ந்து, அவருடைய குணத்தை பிரதிபலிப்பார்களாக அவர் நம்மை மாற்றுவார். 

நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம் என்று மற்றவர்கள் சொல்ல முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி! 

ஒரு நெருக்கடி நிலை குறிகையை அனுப்புகிறது

அலாஸ்காவின் ஒரு மலைப்பிரதேசத்தில் குடியேறியவரின் குடிசையில் தீப்பிடித்தபோது, ​​அமெரிக்காவின் குளிரான மாநிலத்தில் சில வசதிகளே இருந்தன. ஒரு விறைப்பான குளிர் காலத்தின் நடுவில், குடியேறியவருக்கு போதுமான தங்குமிடம் இல்லாமல் இருந்தது.. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு விமானம் பறந்து, பனியில் அவரால் முத்திரை குத்தப்பட்ட மற்றும் புகைக்கறியால் கருமையாக்க பட்ட பெரிய நெருக்கடி நிலை குறிகையை அவர்கள் உளவு பார்த்தபோது, ​​அந்த நபர் இறுதியாக மீட்கப்பட்டார்.

 சங்கீதக்காரர் தாவீது நிச்சயமாக மிகுந்த நெருக்கடியில் இருந்தார். பொறாமை கொண்ட சவுல் அவரைக் கொல்ல முயன்றார். எனவே அவர் காத் நகரத்திற்கு ஓடினார், அங்கு அவர் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக பைத்தியக்காரனாக நடித்தார் (1 சாமு. 21ஐப் பார்க்கவும்). அந்த நிகழ்வுகளில் 34 சங்கீதம் வெளிவந்தது, அங்கு தாவீது தேவனிடம் ஜெபத்தில் கூப்பிட்டு சமாதானத்தைக் கண்டார் (வச. 4, 6). கர்த்தர் அவருடைய வேண்டுகோளைக் கேட்டு அவரை விடுவித்தார்.

நீங்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருக்கிறீர்களா, உதவிக்காக அழுகிறீர்களா? இன்றும் நம்முடைய அவநம்பிக்கையான ஜெபங்களுக்கு தேவன் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். தாவீதுக்கு செய்தது போலவே, அவர் நம்முடைய துயர அழைப்புகளை கவனித்து, நம்முடைய அச்சங்களை நீக்குகிறார் (வச. 4) - மேலும் சில சமயங்களில் “இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிப்பார். (வச. 6). “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங். 55:22) என்று வேதாகமம் நம்மை அழைக்கிறது. நம்முடைய கடினமான சூழ்நிலைகளை நாம் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நமக்குத் தேவையான உதவியை வழங்குவார் என்று நம்பலாம். அவருடைய திறமையான கைகளில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.

ஏதோ புதியது

புதிய நீர் இல்லாத பகுதிகளில் விவசாயம் செய்வது கடினம். இந்த சிக்கலை தீர்க்க உதவுவதற்காக, கடல் நீர் கிரீன்ஹவுஸ் நிறுவனம் சோமாலிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் இதே போன்ற தட்பவெப்பநிலைகளைக் கொண்ட பிற நாடுகளில் “குளிரூட்டும் வீடுகளை” உருவாக்கியுள்ளது. நெளி அட்டைகளால் செய்யப்பட்ட சுவர்கள் மீது உப்புநீரைத் தூற்றுவதற்கு குளிரூட்டும் வீடுகள் சூரிய விசையியக்கக் குழாய்களைப் (solar pumps) பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பேனலுக்கும் கீழே நீர் செல்லும்போது, ​​அதன் உப்பை பின்னால் விட்டு விடுகிறது. மீதமுள்ள நன்னீர் பெரும்பகுதி கட்டமைப்பிற்குள் ஆவியாகிறது, இது பழம் மற்றும் காய்கறி பயிர்கள் செழிக்கக்கூடிய ஈரப்பதமான இடமாக மாற்றும்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம், பண்டைய இஸ்ரவேலுக்காக “அவாந்தரவெளியிலே ஆறுகளை” வழங்கியதால் தேவன் ஒரு “புதிய காரியத்தை” செய்வதாக வாக்குறுதி அளித்தார் (ஏசா. 43:19). இந்த புதிய காரியம் எகிப்திய இராணுவத்திடமிருந்து தனது மக்களை மீட்பதற்காக அவர் செய்த பழைய காரியத்திற்கு முரணானது. செங்கடல் சம்பவம் நினைவிருக்கிறதா? தம்முடைய மக்கள் கடந்த காலத்தை நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார், ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் அவருடைய தற்போதைய ஈடுபாட்டை மறைக்க விடக்கூடாது (வச. 18). அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியை உண்டாக்குவேன்.” என்று சொன்னார் (வச. 19).

கடந்த காலத்தைப் பார்ப்பது தேவனுடைய சித்தத்தில் நம்முடைய நம்பிக்கையை உயர்த்தும் அதே வேளையில், கடந்த காலங்களில் வாழ்வது இன்று தேவனுடைய ஆவியின் அனைத்து புதிய வேலைகளுக்கும் நம்மை குருடாக்குகிறது. அவருடைய மக்களுக்கு உதவுதல், மறுபடியும் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் அவர் தற்போது எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டும்படி தேவனிடம் நாம் கேட்கலாம். இந்த விழிப்புணர்வு, அருகிலுள்ள மற்றும் தொலைதூர மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவருடன் கூட்டாளராக இருக்கும்படி நம்மைத் தூண்டட்டும்.