பிலிப் யான்சியுடன் இணைந்து எழுதியுள்ள தனது பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டு புத்தகத்தில் டாக்டர் பால் பிராண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஓசனிச்சிட்டின் இதயம் இரத்தாலின் (அவுன்ஸ்) எடையைக் கொண்டு ஒரு நிமிடத்திற்கு எண்ணூறு முறை துடிக்கிறது; ஒரு நீல திமிங்கலத்தின் இதயம் அரை டன் எடையுடையது, நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கிறது, அதை இரண்டு மைல் தொலைவிலேயே கேட்க முடியும். இவ்விரண்டிற்கும் மாறாக, மனித இதயமானது மந்தமாக செயல்படுவதுபோல தோன்றுகிறது, ஆனாலும் அது தனது வேலையைச் சரியாகச் செய்கிறது ஒரு நாளைக்கு 1,00,000 முறை [ஒரு நிமிடத்திற்கு 65-70 முறை] ஓய்வெடுக்க நேரமில்லாமல் துடித்து, நம்மில் பெரும்பாலோரைப் எழுபது ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் வரை கொண்டு செல்கிறது.
ஆச்சரியமான இந்த இதயம் வாழ்க்கையின் ஊடே நிறைவுக்கு நம்மை பெலப்படுத்தி கொண்டுசேர்க்கிறது. இது நமது ஒட்டுமொத்த உள்ளான நல்வாழ்விற்கு ஒரு உருவகமாக மாறியுள்ளது. ஆனாலும், நம்முடைய உண்மையான இருதயமும் சரி உருவக இருதயமும் சரி இரண்டுமே தோல்விக்கு ஆளாகின்றன. நம்மால் என்ன செய்ய முடியும்?

இஸ்ரவேலின் ஆராதனைத் தலைவரான சங்கீதக்காரனாகிய ஆசாப் 73-ஆம் சங்கீதத்தில் உண்மையான வலிமை வேறெங்கிருந்தோ – வேறுயாரிடம் இருந்தோ – வழிகளிலோ வருகிறது என்பதை ஒப்புக் கொண்டார். “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” (வ. 26) என்று எழுதுகிறார். ஆசாப் சொன்னது சரிதான். ஜீவனுள்ள தேவன் நம்முடைய இறுதி மற்றும் நித்திய பெலனானவர். வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்ற முறையில் தேவனுடைய பரிபூரண வல்லமைகளுக்கு அத்தகைய வரம்புகள் எதுவும் கிடையாது என்று அவருக்குத் தெரியாது.

நம்முடைய கடினமான மற்றும் சவாலான காலங்களில் ஆசாப் தனது சொந்த போராட்டங்களின் மூலம் கற்றுக்கொண்டதைக் கண்டறிவோம். தேவனே நம் இருதயங்களின் உண்மையான பெலன். நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பெலனில் ஓய்வெடுக்க முடியும்.