வகை  |  odb

குற்ற உணர்ச்சியும் மன்னிப்பும்

“ஹியூமன் யுனிவர்சல்ஸ்” என்ற தனது புத்தகத்தில், மானுடவியலாளர் டொனால்ட் பிரவுன் மனிதகுலத்திற்கு பொதுவான மக்களின் நானுறுக்கும் அதிகமான பழக்கவழக்கங்களை பட்டியலிடுகிறார். பொம்மைகள், நகைச்சுவைகள், நடனங்கள் மற்றும் பழமொழிகள், பாம்புகளின் போர்க்குணம், மற்றும் சரங்களை கட்டுவது போன்றவற்றை அதில் உள்ளடக்கியுள்ளார்! அதேபோல், எல்லா கலாச்சாரங்களிலும் சரி மற்றும் தவறு என்ற கருத்துக்கள் உள்ளன. அங்கு தாராள குணம் பாராட்டப்படுகிறது; வாக்குறுதிகள் மதிக்கப்படுகிறது; மற்றும் கஞ்சத்தனம் மற்றும் கொலை செய்தல் ஆகியவை தவறானவை என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றன. நாம் எங்கிருந்தாலும் நம் அனைவருக்கும் மனசாட்சி உணர்வு இருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இதேபோன்ற கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார். தேவன் யூத ஜனங்களுக்கு சரி தவறுகளை தெளிவுபடுத்த பத்து கட்டளைகளைக் கொடுத்தாலும், புறஜாதியார் தங்கள் மனசாட்சியின்படி நடக்கிறதின் மூலம் சரியானதைச் செய்யமுடியும் என்பதால், தேவனின் நியாயப்பிரமாணங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார் (ரோமர் 2:14-15). அதினால் மக்கள் எப்போதும் சரியானதையே செய்தனர் என்று அர்த்தமல்ல. புறஜாதியார் தங்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள் (1:32), யூதர்கள் நியாயப்பிரமாணத்தை மீறினார்கள் (2:17-24), இருவரும் குற்றவாளிகளாக இருந்தனர். ஆனால் இயேசுவை விசுவாசிப்பதின் மூலம், தேவன் நம்முடைய எல்லா நியாயப்பிரமாண மீறுதலினால் ஏற்பட்ட மரண தண்டனையை நீக்குகிறார் (3:23-26; 6:23).

தேவன் எல்லா மனிதர்களையும் சரி மற்றும் தவறு என்ற உணர்வோடு படைத்ததால், நாம் செய்த ஒரு கெட்ட காரியம் அல்லது நாம் செய்யத் தவறிய ஒரு நல்ல காரியம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சில குற்ற உணர்வை பெறுகிறோம். அந்த பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, தேவன் ஒரு வெள்ளை பலகையை சுத்தமாக துடைப்பது போல அனைத்து பாவங்களையும் துடைக்கிறார். நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவரிடம் கேட்பது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்று. 

பிரகாசிக்கும் சுடர்கள்

நான் கண்களை மூடிக்கொண்டு, நான் வளர்ந்த வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியும். என் தந்தையுடன் நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய தொலை நோக்கியின் உதவியோடு, வானத்தில் புள்ளிகளாய் ஒளிரும் சுடர்களை உற்று நோக்கினோம். வெப்பத்தினாலும் நெருப்பு பிழம்பினாலும் தோன்றும் இந்த ஒளியின் கூறுகள், மென்மையான கருவானத்திற்கு முற்றிலும் நேர்மாறாக ஒளிர்ந்தது.

உங்களை ஒரு பிரகாசிக்கும் சுடராக கருதுகிறீர்களா? நான் மனித சாதனைகளின் உயரத்தை எட்டுவது பற்றி பேசவில்லை, ஆனால் உடைக்கப்பட்டு, தீமைகளின் இருண்ட பின்னணிக்கு முரணாக ஒளிர்வதைக்குறித்து பேசுகிறேன். பவுல் அப்போஸ்தலர் பிலிப்பு சபை விசுவாசிகளிடம், முறுமுறுப்பதையும் தர்க்கிப்பதையும் தவிர்த்து, “ஜீவவசனத்தை பிடித்துக்கொண்டால்,” தேவன் அவர்களினூடாகவும் பிரகாசிப்பார் என்று கூறுகிறார் (பிலிப்பியர் 2:14-16).

மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியம் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கை ஆகியவை நம்மை உலகத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டும். பிரச்சனை என்னவென்றால், இந்த விஷயங்கள் இயற்கையாக வராது. தேவனுடன் நெருங்கிய உறவில் இருக்கவேண்டும் என்பதற்காக, சோதனையை வெல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக இருக்க சுயநலத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம். 

ஆனால் இன்னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. உயிரோடு இருக்கிற ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் செயல்படும் தேவனின் ஆவியானவர் சுய கட்டுப்பாட்டுடனும், கனிவுடனும், உண்மையுமாயிருக்க நமக்கு அதிகாரம் கொடுக்கிறார் (கலாத்தியர் 5:22-23). நம்முடைய இயல்புக்கு அப்பாற்பட்டு நாம் அழைக்கப்பட்டதுபோலவே, தேவனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நமக்கு உதவுகிறார் (பிலிப்பியர் 2:13). ஒவ்வொரு விசுவாசியும் ஆவியின் சக்தியால் ஒரு “பிரகாசிக்கும் நட்சத்திரமாக” மாறினால், தேவனின் ஒளி நம்மைச் சுற்றியுள்ள இருளை எவ்வாறு விரட்டும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!

எடுக்கப்பட்டது

என்னுடைய வயதான நாய் ஒன்று என் பக்கத்தில் அமர்ந்து வெட்டவெளியில் வெறித்துப் பார்க்கிறது. அதின் எண்ணங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால் அவைகளால் மரணத்தை விளங்கிக்கொள்ள முடியாது என்பதினால் அது மரணத்தைக் குறித்து யோசிக்கவில்லை என்பது உறுதி. எதிர்கால விஷயங்களைப் பற்றி அவைகள் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் சிந்திக்கிறோம். நம் வயது அல்லது உடல்நிலை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு கட்டத்தில் இறப்பதைப் பற்றி சிந்திக்கிறோம். சங்கீதம் 49:20-ன் படி, மிருகங்களைப் போலல்லாமல், நமக்கு “புரிதல்” இருக்கிறது. நாம் இறந்துவிடுவோம் என்று நமக்குத் தெரியும், அதை மாற்ற நாம் எதுவும் செய்யமுடியாது. “எவ்விதத்தினாலாவது ஒருவரை மீட்டுக்கொள்ளவும் அல்லது அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்கு கொடுக்கவுங்கூடாதே" (வச.8). தன்னை கல்லறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு போதுமான பணம் யாரிடமும் இல்லை.

ஆனால் மரணத்தின் முடிவில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்” என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார். “அவர் என்னை ஏற்றுக்கொள்வார்” (வச. 15 அதாவது, “அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வார்”) என்றும் கூறுகிறார். “நாம் போகும்போது நம்முடைய உள்ளே அழைத்துக்கொள்வதற்குதான் வீடு என்று பெயர்” என்று ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுகிறார். 

தேவன் தம்முடைய குமாரன் மூலமாக மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார், அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாக தன்னை ஒப்புக்கொடுத்தார்” (1 தீமோத்தேயு 2:6). இவ்வாறு நம்முடைய காலம் வரும்போது, அவர் நம்மை வாழ்த்தி வரவேற்று, நம்மை உள்ளே அழைத்துச் செல்வார் என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 14:3).

என்னுடைய காலம் வரும்போது, என் வாழ்க்கையின் விலைக்கிரயத்தை தேவனுக்குக் கொடுத்த இயேசு என்னைத் திறந்த கரங்களுடன் தம்முடைய பிதாவின் வீட்டிற்கு வரவேற்பார்.

ஏராளமான தண்ணீர்

தீவிர வறட்சி, உஷ்ணம், நெருப்பு என்று “ஒரு மோசமான கதையை” அந்த அறிக்கை சமர்ப்பித்தது. பசபசப்பான செடிகளை காய்ந்த சருகுகளாக மாற்றக்கூடிய, வெகு குறைந்த மழையுடனான ஒரு பயங்கரமான ஆண்டைக் குறித்து அந்த அறிக்கை விவரித்தது. பொங்கி எழுந்த தீ கிராமப்புறங்களை எரித்தது. மீன்கள் உயிரிழந்தது. பயிர்கள் அற்றுபோயிற்று. எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் தண்ணீர் என்னும் ஒரு எளிய ஆதாரம் அவர்களிடம் இல்லாததுதான். நாம் அனைவரும் வாழ தண்ணீர் மிகவும் அவசியம்.

இஸ்ரவேலர்கள் கடினமான ஒரு சூழ்நிலையில் இருந்தனர். ஜனங்கள் தூசி நிறைந்த, தரிசான பாலைவனத்தில் முகாமிட்டபோது, அவர்கள் இப்படியாய் கூறுகிறார்கள்: “அங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது” (யாத்திராகமம் 17:1). மக்கள் பயந்தார்கள். அவர்களின் தொண்டை வறண்டு இருந்தது. மணலின் சூடு அவர்களை தாக்கிற்று. அவர்களின் குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள், தண்ணீர் வேண்டி மோசேயுடன் வாதாடினார்கள் (வச. 2). ஆனால் மோசே என்ன செய்ய முடியும்? அவர் தேவனிடம் மட்டுமே செல்ல முடியும்.

தேவன் மோசேக்கு ஒரு விசித்திரமான அலோசனையைக் கொடுத்தார்: “உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு... நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்” (வச. 5-6). ஆகவே, மோசே கன்மலையை அடித்தான், ஒரு நதி அதிலிருந்து புறப்பட்டது, ஜனங்களுக்கும் அவர்களுடைய கால்நடைகளுக்கும் குடிக்க ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது. தங்கள் தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதை இஸ்ரவேல் அந்நாளிலே அறிந்தார்கள். அவர்களின் தேவன் ஏராளமான தண்ணீரினால் அவர்களை ஆசீர்வதித்தார்.

நீங்கள் வாழ்க்கையில் வறட்சியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலை தேவனுக்கு தெரியும் என்பதையும் அவர் உங்களோடே இருக்கிறார் என்பதையும் அறியுங்கள். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், உங்கள் குறைபாடு எதுவாக இருந்தாலும், அவருடைய ஏராளமான தண்ணீரில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் காணலாம்.

புதுப்பிக்கப்பட்ட பார்வை

எனது இடது கண்ணில் வலி மிகுந்த ஒரு சிறிய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, எனது மருத்துவர் பார்வை பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். நம்பிக்கையுடன், நான் எனது வலது கண்ணை மூடி, விளக்கப் படத்தின் ஒவ்வொரு வரியையும் எளிதாகப் படித்தேன். என் இடது கண்ணை மூடிக்கொண்டு படிக்க முயன்றபோது, நான் திணறினேன். நான் ஒருவிதத்தில் குருடனாக இருந்துள்ளேன் என்பதை எப்படி அறியாமல் போனேன்?

புதிய கண்ணாடியை அணிந்து, என் பார்வையை சரிசெய்யும்போது, தினசரி சோதனைகள் எப்படி என்னை கிட்டப்பார்வையுள்ளவனாய் மாற்றுகிறது என்பதை உணர்ந்தேன். என் கண்ணில்படுகிற என்னுடைய வேதனைகளையே நான் பார்க்க நேரிட்டது. என்னுடைய நித்தியமான தேவனைப்பற்றியும் அவருடைய உண்மைத்துவத்தையும் நான் பார்ப்பதில் நான் குருடனாகவே செயல்பட்டேன். அத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில், நம்பிக்கை என்பது பார்வைக்கு தெளிவாய் புலப்படவில்லை. 

வேதனை, நிச்சயமற்ற தன்மை மற்றும் இழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியதினால் தேவனின் நம்பகத்தன்மையை அங்கீகரிக்கத் தவறிய மற்றொரு பெண்ணின் கதையை 1 சாமுவேல் 1ம் அதிகாரம் சொல்கிறது. அன்னாளுக்கு பிள்ளையில்லாததினாலும் அவளுடைய கணவனின் மற்றொரு மனைவியாகிய பெனின்னாளின் மனமடிவாக்கும் பேச்சினாலும் சொல்லமுடியாத ஆழ்ந்த துயரத்தை சகித்தாள். அன்னாளின் கணவர் அவளை தேற்றினாலும், அவளால் திருப்தியாயிருக்கமுடியவில்லை. ஒரு நாள், அவள் மனகிலேசத்தினால் ஜெபித்தாள். ஆசாரியன் ஏலி அவளிடம் கேள்வி எழுப்பியபோது, அவள் தன்னுடைய நிலைமையை விளக்குகிறாள். அவள் கிளம்பும்போது, “ஏலி, சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்” (1 சாமுவேல் 1:17). அன்னாளின் நிலைமை உடனடியாக மாறவில்லை என்றாலும், அவள் நம்பிக்கையுடன் வெளியேறினாள் (வச.18). 

1சாமுவேல் 2:1-2-ல் அன்னாளின் ஜெபம் அவளுடைய திசைமாற்றப்பட்ட கவனத்தைக் காட்டுகிறது. அவளுடைய பிரச்சனை மாறுவதற்கு முன்னமே, அன்னாளின் புதுப்பிக்கப்பட்ட பார்வை அவளுடைய பார்வையையும் அவளுடைய அணுகுமுறையையும் மாற்றியது. அவளுடைய கன்மலையும் நித்திய நம்பிக்கையுமான தேவனுடைய பிரசன்னத்தில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.