எனது இடது கண்ணில் வலி மிகுந்த ஒரு சிறிய அறுவைசிகிச்சைக்குப் பிறகு, எனது மருத்துவர் பார்வை பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். நம்பிக்கையுடன், நான் எனது வலது கண்ணை மூடி, விளக்கப் படத்தின் ஒவ்வொரு வரியையும் எளிதாகப் படித்தேன். என் இடது கண்ணை மூடிக்கொண்டு படிக்க முயன்றபோது, நான் திணறினேன். நான் ஒருவிதத்தில் குருடனாக இருந்துள்ளேன் என்பதை எப்படி அறியாமல் போனேன்?

புதிய கண்ணாடியை அணிந்து, என் பார்வையை சரிசெய்யும்போது, தினசரி சோதனைகள் எப்படி என்னை கிட்டப்பார்வையுள்ளவனாய் மாற்றுகிறது என்பதை உணர்ந்தேன். என் கண்ணில்படுகிற என்னுடைய வேதனைகளையே நான் பார்க்க நேரிட்டது. என்னுடைய நித்தியமான தேவனைப்பற்றியும் அவருடைய உண்மைத்துவத்தையும் நான் பார்ப்பதில் நான் குருடனாகவே செயல்பட்டேன். அத்தகைய குறுகிய கண்ணோட்டத்தில், நம்பிக்கை என்பது பார்வைக்கு தெளிவாய் புலப்படவில்லை. 

வேதனை, நிச்சயமற்ற தன்மை மற்றும் இழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியதினால் தேவனின் நம்பகத்தன்மையை அங்கீகரிக்கத் தவறிய மற்றொரு பெண்ணின் கதையை 1 சாமுவேல் 1ம் அதிகாரம் சொல்கிறது. அன்னாளுக்கு பிள்ளையில்லாததினாலும் அவளுடைய கணவனின் மற்றொரு மனைவியாகிய பெனின்னாளின் மனமடிவாக்கும் பேச்சினாலும் சொல்லமுடியாத ஆழ்ந்த துயரத்தை சகித்தாள். அன்னாளின் கணவர் அவளை தேற்றினாலும், அவளால் திருப்தியாயிருக்கமுடியவில்லை. ஒரு நாள், அவள் மனகிலேசத்தினால் ஜெபித்தாள். ஆசாரியன் ஏலி அவளிடம் கேள்வி எழுப்பியபோது, அவள் தன்னுடைய நிலைமையை விளக்குகிறாள். அவள் கிளம்பும்போது, “ஏலி, சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்” (1 சாமுவேல் 1:17). அன்னாளின் நிலைமை உடனடியாக மாறவில்லை என்றாலும், அவள் நம்பிக்கையுடன் வெளியேறினாள் (வச.18). 

1சாமுவேல் 2:1-2-ல் அன்னாளின் ஜெபம் அவளுடைய திசைமாற்றப்பட்ட கவனத்தைக் காட்டுகிறது. அவளுடைய பிரச்சனை மாறுவதற்கு முன்னமே, அன்னாளின் புதுப்பிக்கப்பட்ட பார்வை அவளுடைய பார்வையையும் அவளுடைய அணுகுமுறையையும் மாற்றியது. அவளுடைய கன்மலையும் நித்திய நம்பிக்கையுமான தேவனுடைய பிரசன்னத்தில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.